09-20-2005, 10:41 AM
ஆயுதக்குழுக்களை களைந்திடுக: சிறிலங்கா அரசுக்கு உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்தல்!!
[செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2005, 15:16 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
இலங்கையின் வடகிழக்கில் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆயுதக்குழுக்களிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் தலைவர்களினால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழம கூடிய இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் இறுதியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகள், இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலை, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பன உட்பட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.
யுத்த நிறுத்தத்தைப் தொடர இருதரப்பினரும் பல விடயங்களை அமுல்படுத்த வேண்டும் என்று உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்த அறிக்கையில்,
2002 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதுகாப்பதிலேயே சமாதான முயற்சிகள் தங்கியுள்ளன.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளே யுத்த நிறுத்தத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை சரியான வகையில் அமுல்படுத்துவது அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் கடமையாகும். சமாதான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் அக்கறையுடன் பங்களிப்பு வழங்குவதை வெளிப்படுத்தக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.
அரசியல் படுகொலைகள் உட்பட அனைத்து படுகொலைகளையும் அவர்கள் நிறுத்த வேண்டும். சிறுவர்களைப் படையில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.
அத்துடன் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை தொடர்வதற்காக முன்னாள் யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் ட்ரொன்ட் ப்றூஹொவ்டே நோர்வேயின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
[செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2005, 15:16 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
இலங்கையின் வடகிழக்கில் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆயுதக்குழுக்களிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் தலைவர்களினால் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழம கூடிய இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தின் இறுதியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகள், இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் படுகொலை, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பன உட்பட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.
யுத்த நிறுத்தத்தைப் தொடர இருதரப்பினரும் பல விடயங்களை அமுல்படுத்த வேண்டும் என்று உதவி வழங்கும் நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்த அறிக்கையில்,
2002 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதுகாப்பதிலேயே சமாதான முயற்சிகள் தங்கியுள்ளன.
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளே யுத்த நிறுத்தத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை சரியான வகையில் அமுல்படுத்துவது அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் கடமையாகும். சமாதான நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் அக்கறையுடன் பங்களிப்பு வழங்குவதை வெளிப்படுத்தக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.
அரசியல் படுகொலைகள் உட்பட அனைத்து படுகொலைகளையும் அவர்கள் நிறுத்த வேண்டும். சிறுவர்களைப் படையில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.
அத்துடன் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கில் இயங்கும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களைக் களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை தொடர்வதற்காக முன்னாள் யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுத் தலைவர் ட்ரொன்ட் ப்றூஹொவ்டே நோர்வேயின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

