Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்ச்சினிமாவின் சிறந்த பத்துப்படங்கள்
#21
கருத்தம்மா மற்றும் பாஞ்சாலம் குறிச்சி இன்னும் பல இனிய தமிழ் திரைப்படங்கள் உள்ளன. கமலின் திரைபடங்கள் என்று பார்த்தால் பாரதிராசா மற்றும் பாலுமகேந்திரா போன்றவர்கலின் இயக்கத்தி வந்த திரைப்படங்களை மிகவும் ரசித்து பார்த்ததுண்டு. ஆனால் இப்போது கமல் குடுக்கும் படங்களோ. ஆர்வக்கோளாறால் அவரையும் மீறிய உணர்வுகலால் வெளிப்படும் இயலாமைகளே. ஆதலால்த்தான் அவர் சொல்லவரும் விடயம் எளிதில் எல்லொரையும் சென்றடைவதில்லை.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#22
iruvizhi Wrote:கருத்தம்மா மற்றும் பாஞ்சாலம் குறிச்சி இன்னும் பல இனிய தமிழ் திரைப்படங்கள் உள்ளன. கமலின் திரைபடங்கள் என்று பார்த்தால் பாரதிராசா மற்றும் பாலுமகேந்திரா போன்றவர்கலின் இயக்கத்தி வந்த திரைப்படங்களை மிகவும் ரசித்து பார்த்ததுண்டு. ஆனால் இப்போது கமல் குடுக்கும் படங்களோ. ஆர்வக்கோளாறால் அவரையும் மீறிய உணர்வுகலால் வெளிப்படும் இயலாமைகளே. ஆதலால்த்தான் அவர் சொல்லவரும் விடயம் எளிதில் எல்லொரையும் சென்றடைவதில்லை.
இருவிழி...கமல் தமிழ் திரைப்படபரிணாமவளர்ச்சி உலக சினிமாவின் வளர்ச்சியோடு ஒத்துபோக வேணுமென்ற ஆர்வ கோளறாலினால் படம் எடுக்கிறார் ...அவர் எடுத்த படங்கள் சில வியாபர ரீதியாக தோல்வியடைந்து இருந்தாலும் தரத்தில் எவ்விதத்தில் குறைந்தில்லை என்பது என் கருத்து

வெறும் நாடகங்களையே தமிழ் சினிமாவாக காலம் காலமாக பார்த்து வந்த தமிழ் ரசிகர்களை சினிமாவின் இலக்கணங்களுக்குமைய சினிமாவை எடுத்து ஒரு ரசனை புரட்சி செய்தவர்கள் பாலசந்தர் பாரதிராஜா போன்றோராகும்...பாலசந்தர் அரங்கேற்றம் படமூலமும் பாரதிராஜா 16 வயதினிலை மூலம் செய்திருந்தார்கள்

அதன் பின் வந்த பாலுமகேந்திரா மகேந்திரன் filim instituteயிலிருந்து வெளியறிய டைரக்டர்கள் நல்ல படங்களை தந்து கொண்டிருந்தார்கள்...துரஸ்டவசமாக மீண்டும் சினிமாவின ரசனை தரம் குறைந்தது.

பாலசந்தரின் படங்களில் உதவி டைரக்சனாக இருந்தவர் அனந்து என்பவர் ..பொதுவுடமை சிந்தனையுள்ளவர் இவர் தான் உலக சினிமாக்களை கமலுக்கு அறிவுறு்த்தியவர் ஆவர் .கமல் உலக சினிமாக்களுக்கு நிகராக தமிழ் சினிமாவை கொண்டு போகும் முயற்ச்சியில் தொடர்வாரென்றும் நம்புகிறேன் தமிழ் சினிமா ரசிகர்ளின் ரசனையும் உயரம் என்று நம்புவோமாக
Reply
#23
இவோன் Wrote:ஓமோம். சந்தேகமேயில்லாமல் தமிழல் மாற்றுச் சினிமாவுக்குரிய நம்பிக்கை கமல்தான். நகைச்சுவைப் படங்களில்கூட மாற்றுப்பாதையைக் கொண்டுவந்தவர். கெளண்டமணி செந்திலுக்கு உதைப்பதையும், விவேக் வாய்கிழிய கருத்துச் சொல்வதையும், வடிவேலுவின் புலம்பலையும்தான் நகைச்சுவையென இன்றும் நம்பிக்கொண்டும் ரசித்துக்கொண்டுமிருக்கும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் மும்பை எக்ஸ்பிரஸ் போல முயற்சிகள் செய்வதற்கு எவனுக்கும் துணிவும் திறமையும் இல்லை.

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை நான் கசற்றில் பார்த்தேன். அந்த படம் எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை. கமல் வித்தியாசமாக முயற்சித்திருந்த போதிலும் என்னால் ஏனோ அந்த படத்தை ரசிக்க முடியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#24
ஹேராம் நல்ல ஒருபடம்.
.

.
Reply
#25
ஸ்டாலின்,
அனந்து பற்றி நினைவுட்டியமைக்கு நன்றி.
கமல் பல இடங்களில் அனந்து பற்றிச் சொல்லியுள்ளார். வெளிநாட்டவர் மத்தியில் பேசும்போதும் அனந்து பற்றிச் சிலாகித்துச் சொல்லியுள்ளார். அனந்துவுக்குக் கவிதையும் வடித்துள்ளார். அன்பே சிவம் படத்தை அனந்துவுக்குச் சமர்ப்பணம் செய்து ஒரு கவிதையைப் படத்தின் தொடக்கத்தில் படிப்பார் கமல்.
Reply
#26
பழைய சினிமாக்களில் வசனங்கள் தான் கதை சொல்லுவதில் பெரிய பாத்திரம் வகிக்கும்..கமராவால் கதை சொல்லும் பழக்கத்தை முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுக படுத்தியவர் பாலசந்தர்..இவரிடம் உலக புகழ் பெற்ற டைரக்டர் சத்யஜித்ரோயின் தாக்கம் இருந்ததாக கூறுவர்..சத்தியத்ரேயின் பதார் பாஞ்சாலி என்ற வங்களா படம் இன்றும் உலக பிரசித்த பெற்றதாக இருக்கிறது.

உலக புகழ் பெற்ற டைரக்டர் மிருனாள் சென் கூறும் போது கமலைப்போன்ற நல்ல நடிகனை வைத்தப்போட்டு நல்ல ஒரு தமிழ் படத்தை எடுக்கமுடியாமிலிருக்கிறியள் கேட்டது ஞாபகம் வருகிறது...தமிழ் சினிமாவின் ரசனையை மாற்றமால் போர்மிலா கதைகள் அரைச்ச மாவை அரைப்பது ஹீரோயுசம் போன்ற வற்றினால் அப்படியே சிலர் வைச்சிருக்க முயலுகின்றனர் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#27
இவோன் Wrote:சின்னக்குட்டியரே,
எனக்கு நல்லாக் கிட்டவா நிக்கிறியள்.
பாலுமகேந்திராவின்ர <b>வீடு, சந்தியாராகம்</b>
ஜெயகாந்தனின்ர <b>யாருக்காக அழுதான், ஒரு நடிகை நாடகம் பாக்கிறாள்,</b>ருத்ரையாவின்ர <b>அவள் அப்படித்தான்</b>,

இப்படியான படங்களை எடுக்கிறதுக்கு மட்டுமில்ல, முழுக்க பாத்து முடிக்கிறதுக்கே ஒரு திமிர் வேணும்.
நான் <b>வீடு, சந்தியாராகம்</b> எண்ட ரெண்டு படத்தையும் கொஞ்சக்காலமா வைச்சிருந்தன். கொஞ்சப் பேருக்குப் போட்டிக்காட்டினன், நல்ல படம் பாருங்கோ எண்டு. அண்டையோட என்னை விசரன் எண்டு நினைக்கத் தொடங்கீட்டாங்கள்.
<b>'அவள் அப்பிடித்தான்' </b>மாதிரியெல்லாம் இனியெங்க தமிழ்ச்சினிமாவில படங்கள் வரப்போகுது.

கோமதி சொல்லியிருக்கிறதுக்குள்ள <b>அன்பே சிவமும் ஹேராமும்</b> என்ர முதல் பத்துக்குள்ள வரும்.
ஆனா என்ர கருத்து என்னெண்டா, உப்பிடி பட்டியல் போடேக்க, சீரியஸ் படங்கள், பொழுதுபோக்குப் படங்கள் எண்டோ,
நல்ல படங்கள், நகைச்சுவைப் படங்கள் எண்டோ ரெண்டு வகைப்படுத்திப் பாக்கிறது நல்லம். ஏனெண்டா நகைச்சுவைப்படங்கள் கூட மிகப்பிடித்த படங்களுள் வந்துவிடும். ஆனால் அது அப்பட்டியலிலுள்ள மற்றய கருத்தாளமிக்க படங்களைக் குழப்பி விடும்.

பொழுதுபோக்குப் படங்களுள் எனது முதல் ஐந்தைத் தருகிறேன்.
1.மும்பை எக்ஸ்பிரஸ்
2.காதலா காதலா
3.காதலிக்க நேரமில்லை.
4.தெனாலி
5.பஞ்ச தந்திரம்.

குறிப்பு: இவற்றுள் 4 படங்கள் கமலுடையவை. ஓமோம். சந்தேகமேயில்லாமல் தமிழல் மாற்றுச் சினிமாவுக்குரிய நம்பிக்கை கமல்தான். நகைச்சுவைப் படங்களில்கூட மாற்றுப்பாதையைக் கொண்டுவந்தவர். கெளண்டமணி செந்திலுக்கு உதைப்பதையும், விவேக் வாய்கிழிய கருத்துச் சொல்வதையும், வடிவேலுவின் புலம்பலையும்தான் நகைச்சுவையென இன்றும் நம்பிக்கொண்டும் ரசித்துக்கொண்டுமிருக்கும் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் மும்பை எக்ஸ்பிரஸ் போல முயற்சிகள் செய்வதற்கு எவனுக்கும் துணிவும் திறமையும் இல்லை.

-------------------------------------

நகைச்சுவைப் படங்கள் அல்லது பொழுது போக்குப் படங்களுக்கான பட்டியலைத் தனிப்பதிவாக வைத்து வாதிப்பது இன்னும் சிறந்ததென்று நினைக்கிறேன். உங்கள் பதிலென்ன?
இவோன்...ருத்திரய்யா முதலில் அவள் அப்படித்தான் படத்தை போடட போது இரண்டு கிழமைக்கிளை தியேட்டரிலிருந்து எடுதிதுப்போட்டாங்கள்.....சில வருடஙகளின் பின் போட்டபோது மாசகணக்கில் ஓடியது...இப்படித்தான் சினிமா ரசனை கூடும்...இவோன் தொடர்ந்து எழுதுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#28
சின்னக்குட்டியரே, கருத்துக்கு நன்றி.
'அவள் அப்படித்தான்' படத்தில வேறயும் சில விசயங்கள் இருக்கு. கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் மாதிரியும் ருத்ரையா அதைச் செய்திருப்பார். கமல் மைக்கை எடுத்துக்கொண்டு சனங்களிட்ட போய், பாலியற் கல்வி பற்றியும் இன்னபிற விசயங்கள் பற்றியும் கருத்துக்கேப்பார்.
அப்படம் சொல்ல வந்த கதையைத்தாண்டியும் அவசியமான சில விசயங்களைப் பேசியது என்பதுதான் உண்மை.
சிறீபிரியாவின் நடிப்பு அருமை.

தமிழ்ப்படங்களில் சிறந்த பெண் பாத்திரங்கள் என்று சொன்னால் (கவனிக்க சிறந்த நடிகைகள் அல்ல)
ஜெயகாந்தனின் 'சிலநேரங்களில் சில மனிதர்களில்' நடித்த லட்சுமி,
'அவள் அப்படித்தான்' இல் சிறீபிரியா
பாலுவின் 'ஜுலி கணபதி'யில் சரிதா
ஜானகி விஸ்வநாதனின் 'கனவு மெய்ப்பட வேண்டும்' இல் ரம்யாகிருஸ்ணன்.

நீங்கள் சிலநேரங்களில் சில மனிதர்கள் பார்த்திருக்கிறீர்களா?
-------------------------------------------------------------

கோமதி, நீங்கள் முகம் பற்றிச் சொன்னபிறகும், அதுபற்றின விமர்சனத்தைப் போட்ட பிறகும் நேற்றிரவு அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தேன்.
நான் தவறவிட்ட முக்கியமான படம். மிகமிக அருமையான படம். கலைப்புலி தாணு தான் தயாரிப்பாளர் என்றாலும் குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருப்பார் போல.
இன்னும் தொழிநுட்ப வசதிகளை அதிகரித்து எடுத்திருக்கலாம். குறிப்பாக முகமூடி பற்றின காட்சிகளை ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருந்தால் நிச்சயம் வரலாற்றில் பேசப்படும் படமாக இருந்திருக்கும். என்றாலும் சந்தேகமேயில்லாமல் மிகச்சிறந்த படம்தான். பாடல்கள் தான் இசையமைப்பு என்ற நிலையிலிருக்கும் எங்கட தமிழ்ச்சினிமாவில் பாடல்களில்லாமல் படம். இளையராசதான் இசை. பின்னணி இசையில் பின்னியெடுத்திருக்கிறார்.

தமிழ்ச்சினிமாவோடு ஒப்பிடும்போது முகம், பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான்.

சின்னக்குட்டியரே, நீங்கள் முகம் பார்க்கவில்லையா?
Reply
#29
சிலநேரங்களில் சிலமனிதர்கள் நாவலையும் வாசிச்சு இருக்கிறன்....படத்தையும் பார்த்திரிக்கிறேன் ..நாவலில் இருந்த முழுமை திரைப்படத்தில் இருக்கவில்லை என்பது எனது அபிப்பிராயம்

முகம் திரைபடம் இன்னும் பார்க்கவில்லை..கோமதி போட்ட விமர்சனத்தை பார்த்த பின்னும் இவோனின் விமர்சனத்தை பார்த்தபின்னும் அந்த படத்தை விரைவில் பார்க்கோணும் போலிருக்கிறது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#30
சின்னக்குட்டியண்ணே,
சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில இருந்து படம் கொஞ்சம் மாறித்தான் இருந்திச்சு. குறிப்பா நாவலின்ர முடிவு படத்தில இருக்கேல. எல்லாம் சுபம் எண்ட மாதிரி கதையையே மாத்தி முடிச்சுப்போட்டினம். நாவலின்ர முடிவை எதிர்கொள்ளப் பயம்தான். ஜெயகாந்தன் பிறகொரு கட்டத்தில அந்தப் படத்தில முடிவை மாற்ற தான் சம்மதித்திருக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார். நாவல் அளவுக்கு இல்லைத்தானெண்டாலும் தரமான படம். லட்சுமியும் நாகேசும் அந்தமாதிரி செய்திருந்தீச்சினம்.
-------------------------------------------------------
ஜெயகாந்தனின்ர சினிமாவுக்குப் போன சித்தாளு என்றொரு அருமையான நாவல் வந்தது. எனக்குப் பிடித்த நாவல். அது படமாக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். தலைவாசல் விஜய்தான் நாயகன். ஆனால் அதை எவ்வளவு தேடியும் என்னால் பெற முடியவில்லை. நீங்கள் அப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
Reply
#31
சினிமாவுக்கு போன சித்தாளு எனக்கும் பிடித்த நாவல்...அதிலை பிடிச்ச காட்சி

சித்தாளு வாத்தியார் ரசிகை.அவளுடைய கணவன் ரிக்ஸாக்காரணும் வாத்தியார் ரசிகன்...அவன் எப்பவும் வாத்தியார் படம் போட்ட பெனியன் போட்டிருப்பான் அவள் சித்தாளு வெத்திலை பாக்கு போட்டு வாய் எப்பவும் சிவப்பாக இருக்கும்
வாத்தியார் படம் பார்த்தன்று அந்தநாள் அந்த இரவு அவள் நல்ல மூட்டில் என்றுமே இல்லாத அளவுக்கு அவனோடை ஒத்துழைத்து கொண்டிருந்தாள் அவனுக்கோ ஆச்சரியம் அவனுக்கு அளவு கடந்த சந்தோசம்

சம்போகம் முடிந்தது
அவன் குனிந்து பெனியனிலுள்ள வாத்தியார் படத்தை பார்த்தபோது

வாத்தியார் படம் முழுவதும் வெத்திலைப்பார்க்குபோட்ட சிவத்த கறை .அவனுக்கு விளங்கியது யாரை நினைச்சு அவள் மாவரைச்சிருக்கிறாளென்று

கண்ணீர்சிந்திக்கொண்டு சொன்னான்

வாத்தியாரே...எல்லாருக்கும் hero வாக இருந்திட்டு எனக்கு மட்டும் வில்லனாயிட்டியேன்று

இந்த நாவல் திரைபடமாக வந்ததாக நான்அறியவில்லை

அப்படி படம் வந்திருந்தால் எந்த ஆண்டு என்று அறிய தருவீங்களா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#32
இல்லை. படம் வந்தது உண்மை. ஏதோ விருதுகூட அப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது. திரையரங்குகளுக்கு வந்திருக்குமோ தெரியாது. ஆனால் தலைவாசல் விஜய் நடித்து அப்படம் வெளிவந்தது உண்மை. சரியான ஆண்டு தெரியவில்லை. நான் இது பற்றி அறிந்தது 1998 இல் என்று நினைக்கிறேன்.
-----------------------------------------------------
ஜெயகாந்தனின் 'ஊருக்கு 100 பேர்" நாவலை தொகுப்பாளர் லெனின் படமாக்கித் தேசிய விருதும் வாங்கியது தெரியும்தானே. இப்படங்கள் திரையரங்குக்கு வரவில்லை. அம்சன்குமாரின் ஒருத்தியும் திரையரங்குக்கு வரவில்லை. அப்படித்தான் சினிமாவுக்குப் போன சித்தாளும் கலைவிழாக்களில் மட்டும் போடப்பட்ட படமாயிருந்திருக்கலாம்.
Reply
#33
ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். பாலச்சந்தரும் ஒரு நல்ல இயக்குனர்தான்.எனக்கு அவரின் பலதிரைப்படங்கள் பார்பதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்காது விட்டாலும். உன்னால் முடியும் தம்பி போன்ற சிறந்த படங்களை அவரும் கொடுத்திருக்கின்றார் என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை. ஆனால் பாலச்சந்தரிடம் இருக்கும் திறமையை அவர் எவ்வாறு சமூகத்திற்கு பயன் படுத்தினார் என்பதே எனது கேள்வி. ஒருமனிதன் அடுத்தவர்களை அடிமைபடுத்தும் எண்ணம் கொண்டிருப்பானாக இருப்பின் அவனது ஆக்கங்களும் அவ்வாறே அமையும். ஒருவன் எவ்வாறு ஒரு பொருளை சமோகத்துக்கு கொடுத்தான் என்பதில் அல்ல விடயம். என்னத்தை கொடுக்கின்றான் என்பதே விடயம். மேலாண்மை போக்குடயவர்களால் ஒருபோதும் நியாஜமான நீதியான சமோகத்து பயன் படும்படியான ஆக்கங்களை கொடுக்க முடியாது என்பதே எனது வாதம். அந்த வகையில்த்தான் சுயாத்தாவிம் கதைகளும் அமைகின்றன. நஞ்சின் மேல் இனிப்பை தடவி கொழந்தையிடம் கொடுப்பதுதான் திறமை என்றால். அதனை நீங்கள் யாரவது புத்திசாலித்தம் என கருதுகின்றீர்கள் என்றால். அது உங்களின் பார்வையினைப் பொறுத்தது. ஆனால் எது பார்வை என்பது மக்களுக்கு சொல்லப்படும் விடஜம்தான் முக்கியமே ஒளிய. அது எந்த முறையில் சொல்லப்பட்டதில் என்பதில் அல்ல. எனவே நீங்கள் எந்த தளத்தில் இருந்தி சிந்திக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் பார்வை அமையும் என கூறி முடிக்கின்றேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#34
அதுசரி இருவிழி,
என்னத்துக்கு ரெண்டுதரம் பதியிறியள்?
Reply
#35
வணக்கம் கோமதி!

தவறுதலாக இருதரம் பதிந்துவிட்டேன். நீக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஆதலால் மட்டுறுத்தினர்கள் கவனத்தில் எடுத்து அவற்றினை சரிப்படுத்துமாறு அவர்கலிடம் எனது தாழ்மையான வேண்டு கோளினை முன் வைக்கின்றேன்.

நன்றி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#36
இருதடவை பதியப்பட்டதை நீக்கியுள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#37
<b>ஹேராம்.</b>

இதுவும் கமலகாசனின் படம்தான்.
கமலகாசனே திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என்பதோடு கதாநாயகனாக நடித்துமுள்ளார்.

கிட்டத்தட்ட உண்மைச்சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படம். அதனால்தான் இப்படம் தயாரிப்பில் இருந்தபோதே பலத்த எதிர்ப்புக்களும் சர்ச்சைகளும் எழுந்தன.
ஆனால் அவற்றையும் மீறி அருமையான படமொன்றைத் தந்ததுக்கு கமலுக்கு நன்றி.

படத்தின் கதை இதுதான்.
தன் காதலி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதுட்பட பல சம்பவங்களுக்குக் காரணம் மகாத்மா காந்தி தான் என உறுதியாக நம்பவைக்கப்படும் ஓர் இந்து வாலிபன், காந்தியைக் கொல்லத் தீர்மானிக்கிறான். இதற்குள் அவனுக்கு இரண்டாவது திருமணமும் வற்புறுத்திச் செய்யப்படுகிறது.
புது மனைவியுடன் தன் இலக்கு நோக்கிச் செல்கிறான். இடையில் இந்து முஸ்லீம் கலவரங்கள். காந்தியைக் கொல்வதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்குகிறான். தன் மனைவியை விட்டுவிட்டு தன் நோக்கத்துக்காக வீட்டைவிட்டுப் புறப்படுகிறான்.
பின் காந்தியின் உண்மை முகத்தைக் கண்டு மனம் மாறுகிறான். காந்தியின் மீது தீராப் பற்றுக் கொள்கிறான். ஆனால் அவன் முன்னாலேயே வேறொருவன் (கோட்சே) காந்தியைச் சுட்டுக்கொல்கிறான்.

சாகக்கிடக்கும் கிழவரொருவரை (சாகீத் ராம்)மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுடன் கறுப்பு வெள்ளையாகப் படம் தொடங்குகிறது. அந்தக் கிழவர் தான் மேற்சொன்ன பத்தியில் காந்தியைக் கொல்லப் புறப்பட்ட கதாநாயகன். அக்கிழவர் கொண்டுசெல்லப்படும் வழியில் மதக்கலவரம். அதனால் கிழவரைக் கிடங்கொன்றினுள் பத்திரமாகி இறக்கிவைக்கின்றனர். கிழவரின் ஞாபகங்கள் விரிகிறது நிறக்காட்சிகளாக. கிழவரின் இளமைப்பாத்திரம் தான் கமலகாசன். அனைத்துச் சம்பவங்களும் சொல்லப்பட்டு காந்தியின் இறப்பின் பின் அவர் தீவிர காந்திப் பக்தனானன். கிழவன் இறந்தபின் காந்தியின் பேரனை அழைத்துவந்து அவர் சேகரித்து வைத்த நிறையப் பொருட்களைக் கொடுக்கிறார் அக்கிழவரின் மகன். இப்பாத்திரத்தில் காந்தியின் பேரனாக நடித்தவர் உண்மையிலேயே காந்தியின் பேரன்தான்.

<img src='http://www.thenisai.com/img/mov/heyram2.jpg' border='0' alt='user posted image'>
இப்படத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளம். எந்த இந்தியப்படத்திலும் இவ்வளவுக்கு முன்னணி நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்காது என்பது திண்ணம்.
கமலகாசன், அப்பாஸ், நாசர், செளகார் ஜானகி, டெல்லி கணேஸ், கவிஞர் வாலி, இந்தி நடிகர் சாருக்கான், மூத்த நடிகை ஹேமமாலினி, ஓம்பூரி, ராணி முகர்ஜி, நசூரிதின் ஷா, வசுந்துராதாஸ், குல்கர்னி இன்னும் எனக்குப் பெயர் தெரியாத தமிழ், இந்தி நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்திலுண்டு. கமலின் மனைவியாக வரும் வசுந்துராதாசுக்கு இதுதான் முதற்படம். முதற்படத்திலயே கமலுக்கு ஈடுகொடுத்து வெளுத்தி வாங்கியிருக்கிறா.

படத்தின் மூலக்கதை ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தைத் தழுவியது. அதாவது கோட்சேக்கு முன்பே காந்தியைக்கொல்ல தமிழன் ஒருவன் முயன்றான் என்ற தகவல்தான் படத்தின் மூலக்கதை. அதை வைத்து அருமையான திரைக்கதையை இழைத்திருக்கிறார் கமல்.
கதை நடப்பது நாற்பதுகளில். படத்தில் அக்காலப்பகுதியை அப்படியே கொண்டு வருகிறார். அந்தக் கால கார், வாகனங்கள், வீடுகள், பாதைகள், கட்டடங்கள், மனிதர்கள் என்று அனைத்துமே அப்படியே காலத்தோடு பொருந்துகிறது. மிகுந்த பொருட்செலவு இருந்திருக்குமென்து திண்ணம்.
மேலும் கமராவின் வர்ணஜாலங்கள் பாராட்டத்தக்கது. அதிலும் கமலை விதவிதமான நிறங்களில காட்டும்போது நிறங்கள் உணர்வைப் பிரதிபலிக்கின்றன். கமல் துப்பாக்கி சுட்டுப் பயிற்சியெடுக்கும்போதும் சரி, மனைவியுடனும் காதலியுடனும் களிக்கும்போதும் சரி, காட்சிகள் அருமையாக இருக்கிறது.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்தப் பாட்டுமில்லை. அதுதான் படத்தின் வெற்றியும்கூட. பின்னணி இசையின் உச்சப் பயன்பாட்டைப் பற்றி உதாரணம் காட்டிப் பேச வேண்டுமானால் ஹேராம் தான் அதியுச்ச உதாரணம். வேற ஆர்? எங்கட இளையராசா தான்.
மதக் கலவரக் காட்சிகள் அருமை. இவ்வளவு யதார்த்தமாக உண்மைச் சம்பவத்தை திரையில் கொண்டு வந்துள்ளார்.
<img src='http://www.rediff.com/entertai/1999/nov/18hey1a.jpg' border='0' alt='user posted image'>

சரித்திரப் படமோ, உண்மைச் சம்பவத்தைத் தழுவிய படமோ எங்கள் தமிழ்ச்சினிமாவில் குறைவு. அதுவும் இப்படி சீரியசான பிரச்சினைகளைப் படமாக்குவது அறவேயில்லை. சிறைச்சாலை போன்று ஓரிரு படங்கள் வந்திருந்தாலும் ஹேராம் அளவுக்கு எவையும் இயக்கத்திறன் வாய்ந்தவையில்லை.
முதன் முதல் ஆங்கிலப் படங்களுக்கிணையான ஒரு சரித்திரப் படம் தமிழ் வந்துள்ளதாகவே நான் நினைக்கிறேன்.

----------------------------------------------------------------
இப்படத்தில் முதன்மையாகப் பலரால் சுட்டிக்காட்டப்பட்ட குறை, ஆபாசமான காட்சிகள் அதிகம் என்பதுதான். என்னைப்பொறுத்தவரை அவை ஆபாசமான காட்சிகளல்ல. இன்று படங்களில் வரும் குலுக்கல் நடனங்களிலோ இரட்டை அர்த்த வசன பாட்டுக்களிலோ, அரைகுறை ஆடைகளின் ஆட்டங்களிலோ இருக்கும் ஆபாசம் அப்படத்தின் காட்சிகளில்லை.
இக்காட்சிகள் அனைத்தையும் வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் நிலையில் ஹேராமை பாலியற்படம் என்று விமர்சிப்பது சுத்த கயமைத்தனம். ஹேராமில் வரும் காட்சிகள் நிச்சயமாகக் கதையோடு சேர்ந்தது தான். நாயகன் தன் காதலியோடு மென்மையான அணுகுமுறையையும் கட்டாயப் படுத்தித் திருமணம் செய்தவளோடு வன்மையான அணுகுமுறையையும் கொண்டிருப்பதும், காந்தியைக் கொல் சில சக்திகளால் உருவேற்றிவிடப்பட்ட நிலையில் அவன் கொள்ளும் உறவு அப்படியே காந்தியின் மீதான அவனது வெறியின் வெளிப்பாடு.
ஆனால் வயது வந்தவர்கள் மட்டும் பார்ப்பதற்கு இப்படம் சிறந்தது. குழந்தைகளுக்கோ சிறுவர்களுக்கோ இப்படம் புரியப்போவதுமில்லை. அவர்கள் விரும்பும் சண்டைக்காட்சிகளோ நகைச்சுவைக்காட்சிகளோ இப்படத்திலில்லை. மேலும் வன்முறைக் காட்சிளும் உள்ளபடியால் இப்படம் நிச்சயமாக வயதுவந்தவர்களுக்கு மட்டுமே. இச்சந்தர்ப்பத்தில் இப்படத்தில் கதைக்கு அவசியமாக வரும் பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் குற்றம் சொல்லத் தேவையில்லை.
-----------------------------------------------------------------
இப்படத் தயாரிப்பிலிருந்தபோது ஏகக்பட்ட எதிர்ப்புக்கள், மிரட்டல்கள் கமலுக்கு. இவற்றுக்கிடையில் முக்கிய பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த இந்தி நடிகரொருவர் இறந்துவிட்டார். பின் வேறொருவரைப் போட்டு அத்தனைக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் உருவான அருமையான படம் தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்தியிலும் இப்படம் வெளிவந்தது, ஆனால் இந்தியில் நிலைமை தெரியவில்லை. ஆனால் சிறந்ததொரு படமாகச் சிலாகிக்கப்பட்டதைக் காணும்போது சந்தோசம் வருகிறது.

இயக்குநர் பாலாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. சேதுவுக்குச் சிறந்தபடத்துக்கான விருது கிடைக்கவில்லையென்ற வருத்தமுண்டா?
அதுக்கு பாலா சொன்னார், "அட போங்க சார், ஹேராமான ஹேராமுக்கே கிடைக்கவில்லையாம், சேதுவுக்கெங்கே கிடைக்கப்போகுது. ஹெராமுக்குக் கிடைக்காதது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார். இதே ஆண்டு தமிழக அரசின் சிறந்த பட விருது எதற்குக் கிடைத்தது தெரியுமா? அந்த ஆண்டு வெளிவந்த சேதுவுக்குக் கிடைக்கவில்லை. அதேயாண்டு வெளிவந்த ஹேராமுக்குக் கிடைக்கவில்லை. மாறாக படையப்பாவுக்குக் கிடைத்தது. இந்த அரசியலுக்குள் சிறந்தபடமாவது மண்ணாங்கட்டியாவது. அரசே இப்படிக் கோமாளிக்கூத்து ஆடும்போது மக்களை நொந்து என்ன பயன்?
----------------------------
ஆங்கில விமர்சனமொன்று.
http://www.thenisai.com/tamil/movies/heyram.htm
Reply
#38
விமர்சனத்தில் கூறப்பட்டது மூலக்கதை பற்றி...முன்பு கல்கியில் வெளியான ரா.சு நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் என்ற நாவலின் அடிப்படையானது தான் ஹேராம் என்று கூறுவோரும் உண்டு..படம் வெளிவந்த போது இது பற்றி சர்ச்சை இருந்தது....
Reply
#39
ம்.
ஹேராம் நல்ல படம்.
ஆனந்தவிகடன் விமர்சனக்குழு இப்படத்துக்கு 60 மதிப்பெண்கள் கொடுத்தது என்று கேள்விப்பட்டேன். பொதுவாக ஆனந்தவிகடன் விமர்சனம் 50 இற்கு மேல் கொடுத்து நான் பார்த்ததில்லை.

தனியே விகடன் புள்ளியை வைத்து மட்டுமல்ல, என் பார்வையிலும் ஹேராம் மிகச்சிறந்த படமே.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)