11-27-2005, 08:22 AM
<b>ஆருக்குச் சொல்லி அழ........</b>
சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்திகள் தொடர்பில் அந்த ஊடகத்தின் நிருவாகத்தினர் கரிசனைகாட்டி -உறுதிப்படுத்திய- சரியான தகவல்களை வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து நான் எழுதிய மை காயமுன்னரே இன்னொரு சம்பவம்.
இப்போது நான் இங்கு குறிப்பிட விளையும் சம்பவம் வித்தியாசமானது.
எமது தமிழ்மக்களால் அதிகளவில் விரும்பி வாசிக்கப்படும், மதிக்கப்படும் ஒரு இணையத்தள செய்தி ஊடகம் 'புதினம்'. இத்தளத்தில் கூறப்படும் செய்திகளில் , கண்ணோட்டங்களில் எதுவித மாற்றமும் செய்யாது இலங்கைத்தீவில் வெளியாகும் தமிழ்த் தினசரிகள் அப்படியே தமது பதிப்புகளில் வெளியிட்டுவருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி.
தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான கட்டுரைகள் செய்திகளுடன் வெளியாகும் இத்தளத்தில் நேற்றையதினம் (26-11-2005) பிரசுரமான செய்தி ஒன்று எனது கவனத்தைக் கவர்ந்தது.
http://www.eelampage.com/?cn=22055
அச்செய்தி வருமாறு,
<b>நன்றி;</b> புதினம்.கொம்
<img src='http://img516.imageshack.us/img516/5024/untitled0bj.th.png' border='0' alt='user posted image'>
இச்செய்தியில் <b><span style='color:red'>''தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை 1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.''என்று குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு நான் அந்த ஊடகத்தின் ஆசிரியருக்கு ஒரு சிறுகுறிப்பினை உடனடியாகவே அனுப்பிவைத்திருந்தேன்.
அது வருமாறு,</span>
<span style='color:red'>ஆனால் அந்தக் குறிப்பினை நான் அனுப்பிவைத்த பிற்பாடு மேற்படி செய்தியில் நிருபரது பெயர் , செய்தி இடப்பட்ட நேரம் ஆகியன மாற்றப்பட்டதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் நான்
காணவில்லை
<img src='http://img516.imageshack.us/img516/2687/untitled25ix.th.png' border='0' alt='user posted image'>
[size=18]ஆக, ஒரு முக்கியமான- தமிழர்களது வாழ்வின் இன்றியமையாத ஒரு வரலாற்று நிகழ்வு தொடர்பான- விடயத்திற்கு இந்த இணையத்தளத்தினர் கொடுக்கும்[b]முன்னுரிமை</b> இவ்வளவுதானா?
நான் ஆசிரியருக்குக் குறிப்பினை அனுப்பி <b>ஏறத்தாள 08 மணித்தியாலங்களுக்கு மேலாகியும்</b>இதுகுறித்து கருத்தினைச் செலுத்த ஆசிரியருக்கு நேரம் போதவில்லையா??
நான் இதுவிடயமாகத் தேடிப் பெற்ற தகவல் வருமாறு,</span>
[quote]<b>'விடுதலைப் புலிகள்</b>
குரல் 18 <b>கார்த்திகை 1990
எமது இலட்சிய உறுதிக்கு உரமூட்டிய தியாகிகள்
மாவீரர்களைக் கௌரவித்து தலைவர் பிரபாகரன் அஞ்சலிச் செய்தி,
'நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்தபோதெல்லாம் எனது இதயம் வெடிக்கும், ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கிறது." இவ்வாறு தமிழீழத்தின் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் [b]இரண்டாவது மாவீரர் நாளையொட்டி </b>
இந்த எட்டுமணிநேரத்திற்குள் எனது மனப்பதிவிலிருந்த விடயத்தைத் தேடி ஆதாரத்துடன் உறுதிப்படுத்திக்கொண்டேனாயின், ஏன் அதனை இந்த இணையத்தள ஆசிரியரால் செய்யமுடியாது போய்விட்டது?
தமிழர் மத்தியில் மதிக்கப்படும் -பொறுப்புடன் செயற்படவேண்டிய -ஒரு ஊடகமே இவ்வாறு அசிரத்தையைக் காண்பித்தால் இதை 'ஆருக்குச் சொல்லி அழ?'
<b>வேதனையுடன் திருமகள்</b>
சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்திகள் தொடர்பில் அந்த ஊடகத்தின் நிருவாகத்தினர் கரிசனைகாட்டி -உறுதிப்படுத்திய- சரியான தகவல்களை வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து நான் எழுதிய மை காயமுன்னரே இன்னொரு சம்பவம்.
இப்போது நான் இங்கு குறிப்பிட விளையும் சம்பவம் வித்தியாசமானது.
எமது தமிழ்மக்களால் அதிகளவில் விரும்பி வாசிக்கப்படும், மதிக்கப்படும் ஒரு இணையத்தள செய்தி ஊடகம் 'புதினம்'. இத்தளத்தில் கூறப்படும் செய்திகளில் , கண்ணோட்டங்களில் எதுவித மாற்றமும் செய்யாது இலங்கைத்தீவில் வெளியாகும் தமிழ்த் தினசரிகள் அப்படியே தமது பதிப்புகளில் வெளியிட்டுவருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி.
தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான கட்டுரைகள் செய்திகளுடன் வெளியாகும் இத்தளத்தில் நேற்றையதினம் (26-11-2005) பிரசுரமான செய்தி ஒன்று எனது கவனத்தைக் கவர்ந்தது.
http://www.eelampage.com/?cn=22055
அச்செய்தி வருமாறு,
Quote:தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர் ஈந்த மாவீரார்களின் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழீழத் தாயகங்கள் எங்கும், உலகத் தமிழர் வாழுமிடங்களிலும் பேரெழுச்சியுடன் நாளை நடைபெற உள்ளன.
தமிழீழம் எங்கும் உள்ள 21 துயிலும் இல்லங்களிலும் தாயக நேரம் 6.05 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றலுடன் மற்றும் ஆலயங்களில் மணிகள் ஒலிப்பதுடன் அகவணக்க நிகழ்வுகள் நடைபெறும்.
1982 ஆம் ஆண்டு முதலாவது மரவீரர் லெப். சங்கர் (சுரேஸ்) செ.சத்தியநாதன், சிங்கள இராணுவ சுற்றிவளைப்பின் போது நடைபெற்ற நேரடிச் சமரில் காயம் அடைந்து சுமார் இரண்டு மைல்கள் வயிற்றில் காயத்துடன் தப்பி ஓடி நண்பர்களைச் சென்றடைந்தார்.
எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற புலிகளின் மரபிற்கேற்ப இவரும் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியினால் எதிரியை முறியடித்து ஆயுதத்தையும் காப்பாற்றி தனது நண்பர்களிடம் கையளித்தார்.
வயிற்றில் காயம் பட்ட நிலையிலும் உடனடியாக சிகிச்சை பெற முடியாதநிலமை அப்போது இருந்தது.
இன்றைய காலத்தைப் போன்று உடனடியாக சிகிச்சை பெற முடியாத நிலையில் இராணுவத்தினரின் தேடுதல்கள் மற்றும் காட்டிக் கொடுப்புக்கள் என பலவிதமான இடையூறுகளும் இருந்தன.
ஆனாலும் ஏனைய போராளிகளின் முயற்சியும் சங்கரின் உறுதியும் காரணமாக இவர் ஒருவார காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அதிக இரத்தப்பெருக்கு மற்றும் நாள் சென்ற காரணத்தினால் தலைவரின் மடியில் தமிழ் மக்களுக்காக தனது இன்னுயிரை ஈர்ந்தார்.
இந்த நாளே தமிழ் மக்கள் தமது மாவீரர் செல்வங்களை நினைவு கூரும் ஒரு உணர்ச்சி பூர்வ நாளாக நினைவுகூரும் நாளும் ஆகும். இந்த நாளே மாவீரர் நாளாகவும் நடைபெறுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை 1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.
<b>நன்றி;</b> புதினம்.கொம்
<img src='http://img516.imageshack.us/img516/5024/untitled0bj.th.png' border='0' alt='user posted image'>
இச்செய்தியில் <b><span style='color:red'>''தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை 1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.''என்று குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு நான் அந்த ஊடகத்தின் ஆசிரியருக்கு ஒரு சிறுகுறிப்பினை உடனடியாகவே அனுப்பிவைத்திருந்தேன்.
அது வருமாறு,</span>
Quote:ஆசிரியருக்கு
இந்தச் செய்தியில் தமிழீழ மாவீரர் நாள் முதன்முதலாக 1990ல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனது மனத்திலுள்ள நினைவுப்படிமங்களின் பிரகாரம் இது 1989ல் ஆரம்பமானதாக எண்ணுகிறேன்.
இதுகுறித்துத் தங்களது ஆவணங்களில் சரிபார்த்துக்கொள்ளப்
பணிவுடன் வேண்டுகிறேன்;.
பணிவுடன் திருமகள்
<span style='color:red'>ஆனால் அந்தக் குறிப்பினை நான் அனுப்பிவைத்த பிற்பாடு மேற்படி செய்தியில் நிருபரது பெயர் , செய்தி இடப்பட்ட நேரம் ஆகியன மாற்றப்பட்டதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் நான்
காணவில்லை
<img src='http://img516.imageshack.us/img516/2687/untitled25ix.th.png' border='0' alt='user posted image'>
[size=18]ஆக, ஒரு முக்கியமான- தமிழர்களது வாழ்வின் இன்றியமையாத ஒரு வரலாற்று நிகழ்வு தொடர்பான- விடயத்திற்கு இந்த இணையத்தளத்தினர் கொடுக்கும்[b]முன்னுரிமை</b> இவ்வளவுதானா?
நான் ஆசிரியருக்குக் குறிப்பினை அனுப்பி <b>ஏறத்தாள 08 மணித்தியாலங்களுக்கு மேலாகியும்</b>இதுகுறித்து கருத்தினைச் செலுத்த ஆசிரியருக்கு நேரம் போதவில்லையா??
நான் இதுவிடயமாகத் தேடிப் பெற்ற தகவல் வருமாறு,</span>
[quote]<b>'விடுதலைப் புலிகள்</b>
குரல் 18 <b>கார்த்திகை 1990
எமது இலட்சிய உறுதிக்கு உரமூட்டிய தியாகிகள்
மாவீரர்களைக் கௌரவித்து தலைவர் பிரபாகரன் அஞ்சலிச் செய்தி,
'நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்தபோதெல்லாம் எனது இதயம் வெடிக்கும், ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கிறது." இவ்வாறு தமிழீழத்தின் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் [b]இரண்டாவது மாவீரர் நாளையொட்டி </b>
இந்த எட்டுமணிநேரத்திற்குள் எனது மனப்பதிவிலிருந்த விடயத்தைத் தேடி ஆதாரத்துடன் உறுதிப்படுத்திக்கொண்டேனாயின், ஏன் அதனை இந்த இணையத்தள ஆசிரியரால் செய்யமுடியாது போய்விட்டது?
தமிழர் மத்தியில் மதிக்கப்படும் -பொறுப்புடன் செயற்படவேண்டிய -ஒரு ஊடகமே இவ்வாறு அசிரத்தையைக் காண்பித்தால் இதை 'ஆருக்குச் சொல்லி அழ?'
<b>வேதனையுடன் திருமகள்</b>

