03-09-2006, 03:02 PM
இன்று யாழ்ப்பாணம் பரியோவான் - மத்திய கல்லு}ரிகளுக்கிடையில் நிகழும் துடுப்பெடுத்தாட்டத்தை எண்ணியதும் நான் முன்னார் எழுதிய இக்கவிதை நினைவுக்கு வந்தது.
படித்துப்பாருங்கள்.
[size=18]துடுப்பெடுத்தாட்டம்
ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு
ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு
"கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு
துடுப்பு எனசொல்வார் தமிழில்.
பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச
தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில்
பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே
முக்கி முக்கி அடித்தவர்.
கையை மடிக்காது வீசவேண்டும் அதனை
கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில்
தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால்
உயர்த்திக் காட்டுவார் விரல்.
நடுவர் இருவர் நட்ட தடிக்குள் அடித்துவிட்டு
ஓடுவர் இருவர் வட்டத்தைவிட்டு - தரையில்
முட்டிச்சென்றால் நான்கும் முட்டாமல் சென்றால்புள்ளி
கட்டாயம் பெறுவார் ஆறு.
காலுக்கும் தலைக்கும் கைகள் இரண்டிற்கும்
நாலுபுறமும் இடுவார் காவல் - இல்லையெனில்
துள்ளும் பந்துவந்து தோலோடு என்புடைக்கும்
பல்லும் போகும் பறந்து.
சுழல்ப்பந்து வீச்சென்றால் துரிதாக விளையாடார்
மழைவந்து குழப்பாதோ எனநினைப்பார் - வளைபந்தும்
வரும் ஒருகரையால் விழுந்து சுருண்டுபின்
விரையும் மறுகரையால் ஒழிந்து.
ஒருநாள் என்றால் உற்சாகம் இடைவிடாது
ஐந்துநாள் என்றால் சிறுது}க்கம் - ஒருநாளும்
தவறாது வர்ணனையை வானலையில் கேட்பார்
பாரெங்கும் மக்கள் பரந்து.
ஒருநு}று அரைநு}று அடித்துவிட்டால் புகழ்மாலை
ஒருபந்தில் அகன்றுவிட்டால் பொன்வாத்து - குறிபார்த்து
எறிபவர்க்கும் கோணாமல் பிடிப்பவர்க்கும்
பரிவாரம் பலநாளாய் தொடரும்.
வெள்ளையுடை போட்டு வெயிலில் விளையாடும்
நல்லகுணம் கொண்டோர் விளையாட்டென்பார் - இந்நாளில்
சிறுதொகைக்காய் சுூதாட்டம் குழறுபடி ஏமாற்றம்
வெறுவெறுப்பை ஊட்டுவார் வீணோர்.
முன்னை மாமரத்தில் கோடுகள் மூன்றிடுவோம்
தென்னைமட்டை துடுப்பொன்று செய்திடுவோம் - அண்ணன்
வீசும்பந்தை அடித்துவிட்டு அடுத்தவீட்டு அக்காவுடன்
மூசிமூசி வலம்வருவோம் வீட்டை.
படித்துப்பாருங்கள்.
[size=18]துடுப்பெடுத்தாட்டம்
ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு
ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு
"கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு
துடுப்பு எனசொல்வார் தமிழில்.
பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச
தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில்
பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே
முக்கி முக்கி அடித்தவர்.
கையை மடிக்காது வீசவேண்டும் அதனை
கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில்
தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால்
உயர்த்திக் காட்டுவார் விரல்.
நடுவர் இருவர் நட்ட தடிக்குள் அடித்துவிட்டு
ஓடுவர் இருவர் வட்டத்தைவிட்டு - தரையில்
முட்டிச்சென்றால் நான்கும் முட்டாமல் சென்றால்புள்ளி
கட்டாயம் பெறுவார் ஆறு.
காலுக்கும் தலைக்கும் கைகள் இரண்டிற்கும்
நாலுபுறமும் இடுவார் காவல் - இல்லையெனில்
துள்ளும் பந்துவந்து தோலோடு என்புடைக்கும்
பல்லும் போகும் பறந்து.
சுழல்ப்பந்து வீச்சென்றால் துரிதாக விளையாடார்
மழைவந்து குழப்பாதோ எனநினைப்பார் - வளைபந்தும்
வரும் ஒருகரையால் விழுந்து சுருண்டுபின்
விரையும் மறுகரையால் ஒழிந்து.
ஒருநாள் என்றால் உற்சாகம் இடைவிடாது
ஐந்துநாள் என்றால் சிறுது}க்கம் - ஒருநாளும்
தவறாது வர்ணனையை வானலையில் கேட்பார்
பாரெங்கும் மக்கள் பரந்து.
ஒருநு}று அரைநு}று அடித்துவிட்டால் புகழ்மாலை
ஒருபந்தில் அகன்றுவிட்டால் பொன்வாத்து - குறிபார்த்து
எறிபவர்க்கும் கோணாமல் பிடிப்பவர்க்கும்
பரிவாரம் பலநாளாய் தொடரும்.
வெள்ளையுடை போட்டு வெயிலில் விளையாடும்
நல்லகுணம் கொண்டோர் விளையாட்டென்பார் - இந்நாளில்
சிறுதொகைக்காய் சுூதாட்டம் குழறுபடி ஏமாற்றம்
வெறுவெறுப்பை ஊட்டுவார் வீணோர்.
முன்னை மாமரத்தில் கோடுகள் மூன்றிடுவோம்
தென்னைமட்டை துடுப்பொன்று செய்திடுவோம் - அண்ணன்
வீசும்பந்தை அடித்துவிட்டு அடுத்தவீட்டு அக்காவுடன்
மூசிமூசி வலம்வருவோம் வீட்டை.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->