Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லு சொல்லு!
#1
<b>மழை வரும்போதுதான்
குடையை தேடுவான்!
மூச்சு முட்டும்போதுதான்
யன்னல் இருப்பதை நினைப்பான்!

நாளை எப்பிடி- சிரிக்க
வழியென்று எண்ணி
இன்றைய பொழுதை
அழுதே- தொலைப்பான்!

உழைக்கும் காலத்தில்
சேமிக்க நினையான்!
உதிரம் செத்து போனதொரு
காலத்தில்- காசை எண்ணி
தேம்பி தேம்பி அழுவான்!

படிக்கும் காலத்தில்
சீ என்ன வாழ்க்கை
என்று சினப்பான்!
காலம் முடிந்தால்
ஐயோ இனி என்னாகுமோ
என் வாழ்க்கை என்று அழுவான்!

அடை மழை பெய்யும் நாளில் -
நீரை சேர்த்து வைக்க நினைக்கான்!
அனல் வீசும் கோடை வந்தால்
குடத்தை தூக்கி கொண்டு
ஊர் ஊராய் திரிவான்!

போர் செய்யும் வீரருக்கு
ஐந்து சதம் கொடுக்கான்!
ஊரெலாம் - குண்டுவீச்சில்
ஒருமூலை சென்றொதுங்கினால்
தமிழர்புனர்வாழ்வு கழகம்
தனக்கு ஒன்றும் செய்யலையென்று
தரைமண்ணை அள்ளி
தூற்றி சபிப்பான்!

இவன் சரியில்லை !
அவன் சரியில்லை !
என்றே பேசி காலம் கழிப்பான்!

நீ -சரியில்லை என்று யாரும் சொன்னால்
நீட்டி முழக்கி -வியாக்கியானம் சொல்வான்!
தவறுகளிருந்து தப்பித்து கொள்வான்!

யாரிவனோ?
உனக்கு தெரியுமா?
என்னை நானே கேட்கிறேன்
எனக்கு தெரியுமா?

உனக்கு தெரிந்ததை சொல்லு சொல்லு!
கேட்கிறேன் - அதில்
நீயும் இருப்பாய் - நானும் இருப்பேன்! 8) </b>
-!
!
Reply
#2
நிதர்சனமான வரிகள் வர்ணன்
பாராட்டுக்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#3
வர்ணன் அண்ணா காதல் கவிதை மட்டும் தான் எழுதுவீங்கள் எண்டு நினைத்தன் இனிய ஏமாற்றம்

நல்ல கவிதை சுயநலம் பிடித்தவர்களை மற்றவர்களில தேடாமல் நம்மிலயே இக்குணங்களும் இருக்கு எண்டு சொல்ல உங்களுக்கு தைரியம் கூடத்தான் போல இருக்கு
. .
.
Reply
#4
அருமை வர்ணன், வாழ்த்துக்கள்!
Reply
#5
நல்ல கவிதை வர்ணன் வாழ்த்துக்கள்
Reply
#6
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உண்மையை சொல்லும் கவி ஒன்று..வர்ணன்..
தொடருங்கள்.. Arrow
..
....
..!
Reply
#7
வித்தியாசமாக சொல்லி இருக்கின்றீர்கள். உங்கள் எண்ண ஓட்டம் இனிதே இலக்க்னை அடைய வாழ்த்துக்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#8
நன்றி அருவி -நித்திலா- ஹரி- செந்தாமரை-ப்ரியசகி-மதுரன்! 8)
-!
!
Reply
#9
யதார்த்தம் பேசும் உங்கள் கவிதை அருமை.. வாழ்த்துக்கள்:
<b> .. .. !!</b>
Reply
#10
வர்ணன் கவிதை அருமை. எல்லோருமே ஓரு சமயத்தில் சுயநலம் உள்ளவர்களாய் தான் இருக்கின்றோம். உண்மையான வரிகள். வாழ்த்துக்கள்

Reply
#11
வர்ணன் அண்ணா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு....எனக்கும் காதல் கவிதை நல்லா பிடிக்கும்......
nee ninaikum neram enn ithayam thudikkum...enn ithayam thudikum neeram ellam nee ennai ninaikirai enru ninaithu kolven....
Reply
#12
ஃஉஒடெ="Kஅல்கி"]வர்ணன் அண்ணா இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு....எனக்கும் காதல் கவிதை நல்லா பிடிக்கும்......[/ஃஉஒடெ]

மன்னிக்கவும்.....
nee ninaikum neram enn ithayam thudikkum...enn ithayam thudikum neeram ellam nee ennai ninaikirai enru ninaithu kolven....
Reply
#13
நன்றாகவுள்ளது உங்கள் கவி வர்ணன் !

வாழ்த்துக்கள் பலகோடி.

நன்றி

வணக்கம்
Reply
#14
நன்றாக உள்ளது.குறிப்பாக நாளை எப்படி சிரிக்க வழியென்று என்னி இன்றைய பொழுதை அழுதே தொலைப்பான்.என்ற வரிகள் யதார்தமானது.பாராட்டுகள்.வர்னன்.தொடர்ந்து எழுதுங்கள்.
Reply
#15
வர்ணன் கவிதை மிக நன்றாக இருக்கின்றது யதார்த்தமாகவும் வித்தியாசமாகவும் இருக்கின்றது வாழ்த்துக்கள்
[b][size=18]
Reply
#16
வர்ணன் கவிதை நல்லா எழுதுறீங்க ,இந்த கவிதையும் நன்று, இப்ப யாழ்ல உங்க கவிதைகளை கூட பாக்க கூடியதா இருக்கு ... தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள் ... ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#17
நன்றி ரசிகை-ரமா- கல்கி- (சகோதரம் - காதல் கவிதை எழுத ஆசைதான் - பட் - வையுறாங்களே - உனக்கு வேற வேலையே இல்லையா என்கிறமாதிரி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

நன்றி- தாரணி-சஜீவன் -கவிதன் - அனிதா! 8)
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)