09-06-2005, 07:07 PM
பெரியார்: புதிய பார்வைக்கான அவசியம்
இரா. திருநாவுக்கரசு
எந்த ஒரு வரலாற்று ஆளுமை மீதான விமர்சனத்திலும் அன்றாட அரசியல் ரீதியான பார்வையில், நேர் அல்லது எதிர்மறையான பண்புகளே பொதுவாக முன்னிறுத்தப்படும். ஆனால் ஒரு வரலாற்று ஆளுமையை அவர் காலச் சமூக, அரசியல், கலாச்சாரச் சூழலோடு பொருத்திப் பார்த்து (நீஷீஸீற்மீஜ்ற்ன்ணீறீவீக்ஷ்மீ) அணுகும்போது நமது விமர்சனங்கள் நல்லது / கெட்டது என்பவற்றுக்குள் அடங்க மறுக்கும்.
பெரியாரை அவர் வாழ்ந்த சமூக, அரசியல், கலாச்சாரச் சூழýல் பொருத்திப் பார்த்தால் மட்டுமே இன்றைய 'அன்றாட அரசியல்' தேவைகளுக்காகவும் வசதிக்காகவும் அவரைப் புகழ்ந்தோ இகழ்ந்தோ மதிப்பிடுவதை விடுத்து விரிவான, ஆழமான புரிதலை அடைய முடியும்.
பெரியாரை ஒரு சர்வரோக நிவாரணியாகப் பார்க்கும் மதிப்பீடு ஒரு புறம். அவரை ஏறக்குறைய ஒரு தýத் விரோதி என்று சித்தரிக்கும் அளவிற்குப் போகும் கருத்தாக்கம் மற்றொரு புறம். பெரியார் தனது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்த ஒரு போý - அவரைப் பெண் விடுதலைக்கு மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் ஆதர்சமாக முன்னிறுத்துவது ஆபத்தானது என்று வழக்கம்போலப் பெரியாரின் அன்றாட அரசியலை மட்டுமே பிரதானப்படுத்தும் தார்மீகக் கண்ணீர். இவை போன்ற வாதங்களும் எதிர்வினைகளும் பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழýன் தன்மையோடு பொருத்திப் பார்க்கும் ஆய்வு நோக்கை முற்றிலும் மழுங்கடிக்கக் கூடியவை.
காலனிய ஆட்சி மூலமாக முதýல் இந்தியாவின் அரசியல்-பொருளாதாரத் தளங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் பின்னர் நிறுவனமயமாக்கத்தால் சமூக, கலாச்சாரத் தளங்களில் அதுவரை நிலவிவந்த மதிப்பீடுகள் பெரும் அதிர்வைச் சந்தித்தன. இதன் பின்புலம் நவீனத்துவமே என்ற சுயபிரக்ஞையுடன் அதை ஒரு சித்தாந்தமாகவே சுவீகரித்துக்கொண்டு பல அறிஞர்கள், தலைவர்கள் சமூக, கலாச்சாரத் தளங்களில் தீவிரமாக இயங்கினர். அதுவரை நிலவிவந்த சாதிக் கொடுமைகள், சாதி அமைப்பிற்கும் இந்து மதத்திற்குமான உறவு பற்றிய புரிதல் ஆகியன நவீனத்துவச் சிந்தனைகள் மூலமே சாத்தியப்பட்டன. சமூகச் சீர்திருத்தம் எனும் பெயரால் நடந்தவை அனைத்துமே சாதி-இந்து மதம் சார்ந்தே அமைந்திருந்தன. சாதி அழிப்பாளர்களுக்கு நவீனத்துவம் தத்துவ நிலைப்பாடு என்பதிýருந்து, சித்தாந்த நிலைப்பாடாக மாறியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச் சூழýல் நவீனத்துவச் சிந்தனைகள் சமூகச் சீர்திருத்தத்திற்கான இயக்கச் சக்தியாகச் செயல்பட்டதோடு, அதன் அடுத்த, மேம்பட்ட எல்லையான தேசியச் சிந்தனையை எட்டவும் உதவியது. இது போன்று நிகழவேண்டுமானால் சமூக, கலாச்சாரத் தளங்களில் அத்தியாவசியமான சில மாற்றங்கள் கட்டாயம் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது, தேசியம், தேசம் பற்றிய பிரக்ஞைக்குத் தேவையான அமைப்பு ரீதியான மாற்றங்கள் தமிழ்ச் சூழýல் ஏற்பட்டிருக்க வேண்டும். சாதி அழிப்பு, பெண் விடுதலை, தனிநபர் உரிமை, மதச் சார்பின்மையாக்கம், குடிமை உரிமை, பின்னர் தேசியப் பிரக்ஞை ஆகிய அனைத்துமே நவீனத்துவத்தைத் தோற்றுவாயாகக் கொண்டவை. தமிழ்ச் சூழýல் நவீனத்துவத்தால் சாதி அழிப்பு இயக்கம் பெற்ற உத்வேகம் அசாதாரணமானது. இதன் தொடக்கப் புள்ளி அயோத்திதாசர் என்று ஐயமின்றிக் கூறலாம். அதே சமயம், இவரது சாதி எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக உருவான சனாதனிகளின் இயக்கத்தை ஆதிக்கம் பெறாமல் செய்தது மட்டுமன்றி ஒரு கட்டத்தில் சிதைந்துபோகும் அளவிற்குக் கொண்டுவந்தது, அயோத்திதாசருக்குப் பிறகு நவீனத்துவக் கருத்துகளைத் தீவிரத்துடன் பரப்பிய பெரியாரின் சிந்தனை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு நவீனத்துவத்தின் மூலமே நிரந்தரத் தீர்வு என்பதில் அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் இருந்த நம்பிக்கை குறைகாண முடியாதது.
எனினும் நவீனத்துவம் பற்றிய பெரியாரின் புரிதல் பொதுப் புத்தியும் தன்னுணர்வும் சார்ந்தது. ஆனால் மானுட விடுதலைக்கு நவீனத்துவத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கை மாசற்றது. தனது சமூகத்தின் வரலாற்றை யாருமே எதிர்பாராதபடியெல்லாம் விமர்சித்தார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றதுகூட இந்தப் பொருளில்தான்; அறிவு (க்ஷீமீணீள்ஷீஸீ) மற்றும் நவீனத்துவக் கருத்துகளை உள்வாங்கும் தன்மை தமிழில் இல்லை என்று அவர் நம்பியதன் விளைவே இது.
நவீனத்துவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து அதைச் சமூகத்தின் அனைத்து எல்லைகளுக்கும் நீட்டிக்க உழைத்த பெரியார் இல்லாத ஒரு தமிழ்ச் சூழல் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும். சாதி இறுக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைய பெரியாரின் நவீனத்துவக் கருத்துகள் காரணம் என்பதை மறுக்க முடியாது.
நவீனத்துவக் கருத்துகளைப் பெரியார் முன்னெடுத்துச் செல்லும்போது, வரலாற்றுக் காரணங்களால் சில வசதிகளோடு முன்வரிசையில் இருந்தவர்கள் அதன் சலுகைகளைச் சற்றே கூடுதலாகப் பெற்றுவிட்டார்கள் என்பதற்காக அவரது நவீனத்துவக் கருத்தே தவறு எனக் கூற முடியுமா? பெரியாரது பணியே ஆதிக்கச் சக்திகளான சாதி இந்துகளைப் பாதுகாக்கவே எனச் சிலர் கூறுவது அசல் திரிபுவாதம். அம்பேத்கரின் இயக்கத்தில்கூட, அதன் பலனைப் பெற்றவர்களில் அன்றைய சூழýல் சில மேம்பட்ட தýத் வகுப்பாளர்களே அதிகம். அதற்காக, 'மஹர்' வகுப்பைத் தவிர ஏனைய தýத்துகளுக்கு அம்பேத்கர் எதிரி என்று சொல்ல முடியுமா?
தமிழின் பழமை பற்றி அளவிற்கதிகமான பெருமிதமும் சகிக்க முடியாத உயர்வு நவிற்சியும் கொண்டிருந்த தி.மு.க. பெரியாரின் நவீனத்துவச் சிந்தனைகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தவறியதோடு, வாக்கு அரசியலுக்கு முக்கியத்துவம் தரத் துவங்கியதால் பெரியாரின் இயக்கமே 'சாதி எதிர்ப்பு இயக்கமல்ல, வெறும் பிராமண எதிர்ப்பு இயக்கமே' எனும் பெயரைப் பெறக் காரணமாகிவிட்டது. ஆக, ஒரு ஆக்கபூர்வமான சிவில் சமூகம் உருவாவதை இவர்கள் யாருமே விரும்பவில்லை எனத் தெரிகிறது.
தமிழகச் சூழýல் நவீனத்துவக் கருத்துகளைப் பெரியாருக்குப் பிறகு தர்க்கரீதியாக அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு சாதி பற்றிய புரிந்துணர்வு கொண்ட மார்க்சியவாதிகளான நக்சல் அமைப்பினரிடமும் தýத் இயக்கங்களிடமுமே உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் பெரியாரின் நவீனத்துவச் சிந்தனைகளின் தொடர்ச்சியே முக்கியப் பங்காற்றும். மாறாக, பெரியாரின் சிந்தனைகள் எதிர்மறையானவை என்பது புரட்டல்வாதமே.
பெரியாரை அழித்தே தýத் விடுதலை என்பது நவீனத்துவத்தை மறுத்தே தýத் விடுதலை என்பதற்கு ஒப்பாகும். அன்றாட அரசியல் குறைகளை முன்னிறுத்திப் பெரியாரை, நவீனத்துவத்தை மறுதýப்பதால் ஏற்படும் வெற்றிடம் தýத் விடுதலைக்கு, பெண் விடுதலைக்கு எப்படி உதவும் என்று தெரியவில்லை.
மேலும் கழகங்கள் இந்துத்வ சக்திகளோடு கூட்டணி சேர்ந்ததற்குப் பெரியார் பொறுப்பாக மாட்டார்; அதேபோல் குலதெய்வத்தைக் கும்பிட்டு, ஜார்ஜ் பெர்னாண்டஸ÷டன் கூட்டுச் சேர்ந்தால் அது அம்பேத்கரின் தவறல்ல. இதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் அன்றாட அரசியýன் ஒரு பரிமாணம். இவற்றை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி இகழ்ந்தோ, புகழ்ந்தோ பேசுவது சாதாரணப் பத்திரிகை நிருபர் செய்யும் வேலை. ஆகையால் அன்றாட அரசியலையும் அதன் நிறை, குறைகளையும் பின்தள்ளி, வரலாற்று ரீதியாக, ஆய்வு நோக்கில், ஓர் இயக்கத்தின் முற்போக்குச் சிந்தனைகள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எப்படி உருமாற வேண்டும் என்ற புதிய கருத்தாக்கங்களை உருவாக்க வேண்டும்.
சுருங்கக் கூறின், சாதி அழிப்பு, பெண் விடுதலை, மதச் சார்பின்மையாக்கம் போன்ற உயர்ந்த விழுமியங்களுக்கு நவீனத்துவமே தோற்றுவாய். தமிழ்ச் சூழýல் இந்த நவீனத்துவச் சிந்தனைகளை முதன்மைப்படுத்தியோரில் முதýரண்டு இடங்கள் அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் உரியவை. இச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இவ்விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய பணியே. எனினும் மார்க்சிய - லெனினிய இயக்கங்களும் தýத் அமைப்புகளும் இப்பணியைச் செய்யச் சித்தாந்த பலம் பெற்றவை.
கட்டுரையாசிரியர் புதுதில்ý ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை ஆய்வு மாணவர்.
http://tamil.sify.com/kalachuvadu/april05/...php?id=13710510
இரா. திருநாவுக்கரசு
எந்த ஒரு வரலாற்று ஆளுமை மீதான விமர்சனத்திலும் அன்றாட அரசியல் ரீதியான பார்வையில், நேர் அல்லது எதிர்மறையான பண்புகளே பொதுவாக முன்னிறுத்தப்படும். ஆனால் ஒரு வரலாற்று ஆளுமையை அவர் காலச் சமூக, அரசியல், கலாச்சாரச் சூழலோடு பொருத்திப் பார்த்து (நீஷீஸீற்மீஜ்ற்ன்ணீறீவீக்ஷ்மீ) அணுகும்போது நமது விமர்சனங்கள் நல்லது / கெட்டது என்பவற்றுக்குள் அடங்க மறுக்கும்.
பெரியாரை அவர் வாழ்ந்த சமூக, அரசியல், கலாச்சாரச் சூழýல் பொருத்திப் பார்த்தால் மட்டுமே இன்றைய 'அன்றாட அரசியல்' தேவைகளுக்காகவும் வசதிக்காகவும் அவரைப் புகழ்ந்தோ இகழ்ந்தோ மதிப்பிடுவதை விடுத்து விரிவான, ஆழமான புரிதலை அடைய முடியும்.
பெரியாரை ஒரு சர்வரோக நிவாரணியாகப் பார்க்கும் மதிப்பீடு ஒரு புறம். அவரை ஏறக்குறைய ஒரு தýத் விரோதி என்று சித்தரிக்கும் அளவிற்குப் போகும் கருத்தாக்கம் மற்றொரு புறம். பெரியார் தனது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்த ஒரு போý - அவரைப் பெண் விடுதலைக்கு மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் ஆதர்சமாக முன்னிறுத்துவது ஆபத்தானது என்று வழக்கம்போலப் பெரியாரின் அன்றாட அரசியலை மட்டுமே பிரதானப்படுத்தும் தார்மீகக் கண்ணீர். இவை போன்ற வாதங்களும் எதிர்வினைகளும் பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் சூழýன் தன்மையோடு பொருத்திப் பார்க்கும் ஆய்வு நோக்கை முற்றிலும் மழுங்கடிக்கக் கூடியவை.
காலனிய ஆட்சி மூலமாக முதýல் இந்தியாவின் அரசியல்-பொருளாதாரத் தளங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் பின்னர் நிறுவனமயமாக்கத்தால் சமூக, கலாச்சாரத் தளங்களில் அதுவரை நிலவிவந்த மதிப்பீடுகள் பெரும் அதிர்வைச் சந்தித்தன. இதன் பின்புலம் நவீனத்துவமே என்ற சுயபிரக்ஞையுடன் அதை ஒரு சித்தாந்தமாகவே சுவீகரித்துக்கொண்டு பல அறிஞர்கள், தலைவர்கள் சமூக, கலாச்சாரத் தளங்களில் தீவிரமாக இயங்கினர். அதுவரை நிலவிவந்த சாதிக் கொடுமைகள், சாதி அமைப்பிற்கும் இந்து மதத்திற்குமான உறவு பற்றிய புரிதல் ஆகியன நவீனத்துவச் சிந்தனைகள் மூலமே சாத்தியப்பட்டன. சமூகச் சீர்திருத்தம் எனும் பெயரால் நடந்தவை அனைத்துமே சாதி-இந்து மதம் சார்ந்தே அமைந்திருந்தன. சாதி அழிப்பாளர்களுக்கு நவீனத்துவம் தத்துவ நிலைப்பாடு என்பதிýருந்து, சித்தாந்த நிலைப்பாடாக மாறியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச் சூழýல் நவீனத்துவச் சிந்தனைகள் சமூகச் சீர்திருத்தத்திற்கான இயக்கச் சக்தியாகச் செயல்பட்டதோடு, அதன் அடுத்த, மேம்பட்ட எல்லையான தேசியச் சிந்தனையை எட்டவும் உதவியது. இது போன்று நிகழவேண்டுமானால் சமூக, கலாச்சாரத் தளங்களில் அத்தியாவசியமான சில மாற்றங்கள் கட்டாயம் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது, தேசியம், தேசம் பற்றிய பிரக்ஞைக்குத் தேவையான அமைப்பு ரீதியான மாற்றங்கள் தமிழ்ச் சூழýல் ஏற்பட்டிருக்க வேண்டும். சாதி அழிப்பு, பெண் விடுதலை, தனிநபர் உரிமை, மதச் சார்பின்மையாக்கம், குடிமை உரிமை, பின்னர் தேசியப் பிரக்ஞை ஆகிய அனைத்துமே நவீனத்துவத்தைத் தோற்றுவாயாகக் கொண்டவை. தமிழ்ச் சூழýல் நவீனத்துவத்தால் சாதி அழிப்பு இயக்கம் பெற்ற உத்வேகம் அசாதாரணமானது. இதன் தொடக்கப் புள்ளி அயோத்திதாசர் என்று ஐயமின்றிக் கூறலாம். அதே சமயம், இவரது சாதி எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக உருவான சனாதனிகளின் இயக்கத்தை ஆதிக்கம் பெறாமல் செய்தது மட்டுமன்றி ஒரு கட்டத்தில் சிதைந்துபோகும் அளவிற்குக் கொண்டுவந்தது, அயோத்திதாசருக்குப் பிறகு நவீனத்துவக் கருத்துகளைத் தீவிரத்துடன் பரப்பிய பெரியாரின் சிந்தனை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு நவீனத்துவத்தின் மூலமே நிரந்தரத் தீர்வு என்பதில் அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் இருந்த நம்பிக்கை குறைகாண முடியாதது.
எனினும் நவீனத்துவம் பற்றிய பெரியாரின் புரிதல் பொதுப் புத்தியும் தன்னுணர்வும் சார்ந்தது. ஆனால் மானுட விடுதலைக்கு நவீனத்துவத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கை மாசற்றது. தனது சமூகத்தின் வரலாற்றை யாருமே எதிர்பாராதபடியெல்லாம் விமர்சித்தார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றதுகூட இந்தப் பொருளில்தான்; அறிவு (க்ஷீமீணீள்ஷீஸீ) மற்றும் நவீனத்துவக் கருத்துகளை உள்வாங்கும் தன்மை தமிழில் இல்லை என்று அவர் நம்பியதன் விளைவே இது.
நவீனத்துவத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து அதைச் சமூகத்தின் அனைத்து எல்லைகளுக்கும் நீட்டிக்க உழைத்த பெரியார் இல்லாத ஒரு தமிழ்ச் சூழல் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும். சாதி இறுக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைய பெரியாரின் நவீனத்துவக் கருத்துகள் காரணம் என்பதை மறுக்க முடியாது.
நவீனத்துவக் கருத்துகளைப் பெரியார் முன்னெடுத்துச் செல்லும்போது, வரலாற்றுக் காரணங்களால் சில வசதிகளோடு முன்வரிசையில் இருந்தவர்கள் அதன் சலுகைகளைச் சற்றே கூடுதலாகப் பெற்றுவிட்டார்கள் என்பதற்காக அவரது நவீனத்துவக் கருத்தே தவறு எனக் கூற முடியுமா? பெரியாரது பணியே ஆதிக்கச் சக்திகளான சாதி இந்துகளைப் பாதுகாக்கவே எனச் சிலர் கூறுவது அசல் திரிபுவாதம். அம்பேத்கரின் இயக்கத்தில்கூட, அதன் பலனைப் பெற்றவர்களில் அன்றைய சூழýல் சில மேம்பட்ட தýத் வகுப்பாளர்களே அதிகம். அதற்காக, 'மஹர்' வகுப்பைத் தவிர ஏனைய தýத்துகளுக்கு அம்பேத்கர் எதிரி என்று சொல்ல முடியுமா?
தமிழின் பழமை பற்றி அளவிற்கதிகமான பெருமிதமும் சகிக்க முடியாத உயர்வு நவிற்சியும் கொண்டிருந்த தி.மு.க. பெரியாரின் நவீனத்துவச் சிந்தனைகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தவறியதோடு, வாக்கு அரசியலுக்கு முக்கியத்துவம் தரத் துவங்கியதால் பெரியாரின் இயக்கமே 'சாதி எதிர்ப்பு இயக்கமல்ல, வெறும் பிராமண எதிர்ப்பு இயக்கமே' எனும் பெயரைப் பெறக் காரணமாகிவிட்டது. ஆக, ஒரு ஆக்கபூர்வமான சிவில் சமூகம் உருவாவதை இவர்கள் யாருமே விரும்பவில்லை எனத் தெரிகிறது.
தமிழகச் சூழýல் நவீனத்துவக் கருத்துகளைப் பெரியாருக்குப் பிறகு தர்க்கரீதியாக அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு சாதி பற்றிய புரிந்துணர்வு கொண்ட மார்க்சியவாதிகளான நக்சல் அமைப்பினரிடமும் தýத் இயக்கங்களிடமுமே உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் பெரியாரின் நவீனத்துவச் சிந்தனைகளின் தொடர்ச்சியே முக்கியப் பங்காற்றும். மாறாக, பெரியாரின் சிந்தனைகள் எதிர்மறையானவை என்பது புரட்டல்வாதமே.
பெரியாரை அழித்தே தýத் விடுதலை என்பது நவீனத்துவத்தை மறுத்தே தýத் விடுதலை என்பதற்கு ஒப்பாகும். அன்றாட அரசியல் குறைகளை முன்னிறுத்திப் பெரியாரை, நவீனத்துவத்தை மறுதýப்பதால் ஏற்படும் வெற்றிடம் தýத் விடுதலைக்கு, பெண் விடுதலைக்கு எப்படி உதவும் என்று தெரியவில்லை.
மேலும் கழகங்கள் இந்துத்வ சக்திகளோடு கூட்டணி சேர்ந்ததற்குப் பெரியார் பொறுப்பாக மாட்டார்; அதேபோல் குலதெய்வத்தைக் கும்பிட்டு, ஜார்ஜ் பெர்னாண்டஸ÷டன் கூட்டுச் சேர்ந்தால் அது அம்பேத்கரின் தவறல்ல. இதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் அன்றாட அரசியýன் ஒரு பரிமாணம். இவற்றை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தி இகழ்ந்தோ, புகழ்ந்தோ பேசுவது சாதாரணப் பத்திரிகை நிருபர் செய்யும் வேலை. ஆகையால் அன்றாட அரசியலையும் அதன் நிறை, குறைகளையும் பின்தள்ளி, வரலாற்று ரீதியாக, ஆய்வு நோக்கில், ஓர் இயக்கத்தின் முற்போக்குச் சிந்தனைகள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எப்படி உருமாற வேண்டும் என்ற புதிய கருத்தாக்கங்களை உருவாக்க வேண்டும்.
சுருங்கக் கூறின், சாதி அழிப்பு, பெண் விடுதலை, மதச் சார்பின்மையாக்கம் போன்ற உயர்ந்த விழுமியங்களுக்கு நவீனத்துவமே தோற்றுவாய். தமிழ்ச் சூழýல் இந்த நவீனத்துவச் சிந்தனைகளை முதன்மைப்படுத்தியோரில் முதýரண்டு இடங்கள் அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் உரியவை. இச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இவ்விழுமியங்களில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் இணைந்து செய்ய வேண்டிய பணியே. எனினும் மார்க்சிய - லெனினிய இயக்கங்களும் தýத் அமைப்புகளும் இப்பணியைச் செய்யச் சித்தாந்த பலம் பெற்றவை.
கட்டுரையாசிரியர் புதுதில்ý ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை ஆய்வு மாணவர்.
http://tamil.sify.com/kalachuvadu/april05/...php?id=13710510

