02-01-2006, 01:06 PM
சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!!
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்:
தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர்.
நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரிகிறது என்றார்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலான கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்:
சிறிலங்கா அரசாங்கம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பதைப் பொறுத்தே உதவிகள் அமைய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்குத் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேலான உதவிகள் எனில், அது குறித்து நாம் மேலதிகமாக யோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
ஈழத் தமிழர் பிரச்சனையில் கடும் போக்கை கடைபிடிப்பவர் ஜெயலலிதா என்று இந்து போன்ற ஆங்கில ஊடகங்கள் அவரைச் சுட்டிக்கு ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நசுக்கி நச்சுக்கருத்துகளை பரப்பி வரும் நிலையில் ஈழத் தமிழர்களின் யதார்த்த நிலைமையை புரிந்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய அரசியலில் முக்கியமானவையாக கருதப்படுகிறது என்று சென்னை ஊடகவியலாலர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
<b>இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</b>
www.puthinam.com
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்:
தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர்.
நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரிகிறது என்றார்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பிலான கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்:
சிறிலங்கா அரசாங்கம் என்ன கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பதைப் பொறுத்தே உதவிகள் அமைய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் அவர்களுக்குத் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேலான உதவிகள் எனில், அது குறித்து நாம் மேலதிகமாக யோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
ஈழத் தமிழர் பிரச்சனையில் கடும் போக்கை கடைபிடிப்பவர் ஜெயலலிதா என்று இந்து போன்ற ஆங்கில ஊடகங்கள் அவரைச் சுட்டிக்கு ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நசுக்கி நச்சுக்கருத்துகளை பரப்பி வரும் நிலையில் ஈழத் தமிழர்களின் யதார்த்த நிலைமையை புரிந்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய அரசியலில் முக்கியமானவையாக கருதப்படுகிறது என்று சென்னை ஊடகவியலாலர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
<b>இருப்பினும், மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கவர்ச்சிக்காகவும், வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் கட்சியுடன் இணைப்பதற்கு ஏதுவான தற்காலிக சூழலை உருவாக்குவது போன்ற பிரேமையை ஏற்படுத்தும் இரகசியத் திட்டத்துடனுமே, ஜெயலலிதா இத்தகைய திடீர் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாக, ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</b>
www.puthinam.com

