05-28-2004, 08:15 PM
<b>நிஜங்களாய்....
தாயகத்தில் நெருடிய நிஜங்கள்
புலத்தில் புகுந்துவிட்ட வேதனைகள்
நெருப்பாகிப்போன உணர்வுகள்
நெஞ்சைப் பிளந்து குரல்வளையில்
வெடிக்கத்துடிக்கின்ற வார்த்தைகளை...
கண்ணீரால் கரை துடைத்திடத்தான் முடியுமோ..
சுடுநீருக்குள் சுட்டிடும் உடலாய்
கடும்குளிர்தனில் குளிர்மலராய் உறைந்துபோக
புடைக்கின்ற நரம்பினைக் கீறி
பீரிட்டு பாயும் செந்நீராய்
ரத்தத்தின் வேகந்தனை அனுபவிக்கத்
துடித்திடும் மனங்கள்தான் எத்தனை..
வாசம் செய்யும் புலத்தில்
சுவாசக்காற்றுகூட சுகந்தமில்லா தேடலாய்
வாழ்க்கை தொலைந்து போகிறது
இன்றைய நேற்றைய தேடல்களில் வாழ்க்கை
என்றோ தொலைத்துவிட்ட இதயத்தில்
மரணம் வாழ்வை வழிமறித்தாட்டாலும்
தகிக்கும் ரணங்கள் தணலுக்குள் சமாதிதான்.</b>
தாயகத்தில் நெருடிய நிஜங்கள்
புலத்தில் புகுந்துவிட்ட வேதனைகள்
நெருப்பாகிப்போன உணர்வுகள்
நெஞ்சைப் பிளந்து குரல்வளையில்
வெடிக்கத்துடிக்கின்ற வார்த்தைகளை...
கண்ணீரால் கரை துடைத்திடத்தான் முடியுமோ..
சுடுநீருக்குள் சுட்டிடும் உடலாய்
கடும்குளிர்தனில் குளிர்மலராய் உறைந்துபோக
புடைக்கின்ற நரம்பினைக் கீறி
பீரிட்டு பாயும் செந்நீராய்
ரத்தத்தின் வேகந்தனை அனுபவிக்கத்
துடித்திடும் மனங்கள்தான் எத்தனை..
வாசம் செய்யும் புலத்தில்
சுவாசக்காற்றுகூட சுகந்தமில்லா தேடலாய்
வாழ்க்கை தொலைந்து போகிறது
இன்றைய நேற்றைய தேடல்களில் வாழ்க்கை
என்றோ தொலைத்துவிட்ட இதயத்தில்
மரணம் வாழ்வை வழிமறித்தாட்டாலும்
தகிக்கும் ரணங்கள் தணலுக்குள் சமாதிதான்.</b>

