12-29-2004, 04:00 AM
ஊடகத் துரோகம்.
கடந்த இருநாட்களாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(BBC) மீது பயங்கர எரிச்சலுற்றிருக்கிறேன்.ஆகக்குறைந்த மனிதாபிமானம் கூட இல்லாமல் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் ஏற்பட்ட இழப்பை மூடி மறைத்து வருகின்றது அந்த ஊடகம்.
இதுவரை வெளிவந்த விவரணப்படங்கள்,செய்திகள் எவற்றிலுமே யாழ்ப்பாணம் முல்லைத்தீவு,திருகோணமலை ஏன் மட்டக்களப்பு பாதிக்கப்பட்டதாக சிறு செய்திகூட வெளிவரவில்லை.செய்தியில் என்ன, சொன்னால் சொல்கிறார்கள் சொல்லாவிட்டால் போகட்டும் என்று விட்டுவிடலாம்தான்,ஆனால் வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகள் எல்லாமே இந்த ஊடகங்களினால் குறிப்பிடப்படும் இடங்களுக்குப் போய்ச்சேர்கின்றன என்பதுதான் வேதனை.
இலங்கையில் எந்த எந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என அறியவிரும்பும் வெளிநாட்டிலிருக்கும் ஒருவர் முதலில் எடுத்துப் பார்ப்பது BBC போன்ற ஊடகங்களைத்தான்.இன் செய்தியைப் பார்க்கும் ஒருவர் இலங்கையில் காலி,மாத்தறை மற்றும் கொழும்பின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவே முடிவுக்கு வருவார்.
இது எந்தவிதத்திலும் தென்னிலங்கையில் ஏற்பட்ட இழப்புகளை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது இழப்பே இல்லையென்று சொல்வதற்கோ அல்ல உண்மையைக் கூற BBC ஊடகம் தவறிவிட்டது.
சராசரி ஊடகத் தர்மத்துடன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை மனிதாபிமானத்துடனாவது வடக்கு கிழக்கில் இதுவரை 8000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பதை செய்தியாகவாவது சொல்லியிருக்கலாம் சொல்லவில்லை.இற்கு அவ்வாறு சொல்லவேண்டிய தேவை ஏனோ இருக்கவில்லை.
ஒரே ஒரு வரி போராளிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தகவல்கள் கிடைக்கவில்லை.இதைத்தான் நாள் முழுவதும் BBC சொல்லிக்கொண்டிருக்கிறது.
இதே BBC தான் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறப் போகிறேன் என்று அறிவித்தவுடன் பலத்த சிரமங்களுக்கும் உயிராபத்துக்கும் மத்தியில் மட்டக்களப்பில் அவரது முகாமுக்குப் போய் பேட்டியொன்றை எடுத்து வெளியிட்டது.அதே BBC இற்கு இப்போது மட்டக்களப்புக்குப் போய் ஒரு சிறு செய்தியோ ஒளிப்படமோ எடுத்து வெளியிட முடியவில்லை.
இதே BBC தான் பலத்த உயிராபத்துகளுக்கு மத்தியில் பிரபாகரனைப் பேட்டியெடுத்து வெளியிட்டது.இதே BBC தான் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்கு கிளிநொச்சி போய் நாட்கணக்கில் தவமிருந்தது.
இப்போது என்னவென்றால் முல்லைத்தீவோ கிளிநொச்சியோ தனக்குத் தெரியாதமாதிரி நடந்துகொள்கிறது ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி என்னைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
நன்றி - ஈழநாதன்
கடந்த இருநாட்களாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(BBC) மீது பயங்கர எரிச்சலுற்றிருக்கிறேன்.ஆகக்குறைந்த மனிதாபிமானம் கூட இல்லாமல் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் ஏற்பட்ட இழப்பை மூடி மறைத்து வருகின்றது அந்த ஊடகம்.
இதுவரை வெளிவந்த விவரணப்படங்கள்,செய்திகள் எவற்றிலுமே யாழ்ப்பாணம் முல்லைத்தீவு,திருகோணமலை ஏன் மட்டக்களப்பு பாதிக்கப்பட்டதாக சிறு செய்திகூட வெளிவரவில்லை.செய்தியில் என்ன, சொன்னால் சொல்கிறார்கள் சொல்லாவிட்டால் போகட்டும் என்று விட்டுவிடலாம்தான்,ஆனால் வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகள் எல்லாமே இந்த ஊடகங்களினால் குறிப்பிடப்படும் இடங்களுக்குப் போய்ச்சேர்கின்றன என்பதுதான் வேதனை.
இலங்கையில் எந்த எந்த இடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என அறியவிரும்பும் வெளிநாட்டிலிருக்கும் ஒருவர் முதலில் எடுத்துப் பார்ப்பது BBC போன்ற ஊடகங்களைத்தான்.இன் செய்தியைப் பார்க்கும் ஒருவர் இலங்கையில் காலி,மாத்தறை மற்றும் கொழும்பின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவே முடிவுக்கு வருவார்.
இது எந்தவிதத்திலும் தென்னிலங்கையில் ஏற்பட்ட இழப்புகளை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது இழப்பே இல்லையென்று சொல்வதற்கோ அல்ல உண்மையைக் கூற BBC ஊடகம் தவறிவிட்டது.
சராசரி ஊடகத் தர்மத்துடன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை மனிதாபிமானத்துடனாவது வடக்கு கிழக்கில் இதுவரை 8000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள் 5 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்பதை செய்தியாகவாவது சொல்லியிருக்கலாம் சொல்லவில்லை.இற்கு அவ்வாறு சொல்லவேண்டிய தேவை ஏனோ இருக்கவில்லை.
ஒரே ஒரு வரி போராளிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தகவல்கள் கிடைக்கவில்லை.இதைத்தான் நாள் முழுவதும் BBC சொல்லிக்கொண்டிருக்கிறது.
இதே BBC தான் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறப் போகிறேன் என்று அறிவித்தவுடன் பலத்த சிரமங்களுக்கும் உயிராபத்துக்கும் மத்தியில் மட்டக்களப்பில் அவரது முகாமுக்குப் போய் பேட்டியொன்றை எடுத்து வெளியிட்டது.அதே BBC இற்கு இப்போது மட்டக்களப்புக்குப் போய் ஒரு சிறு செய்தியோ ஒளிப்படமோ எடுத்து வெளியிட முடியவில்லை.
இதே BBC தான் பலத்த உயிராபத்துகளுக்கு மத்தியில் பிரபாகரனைப் பேட்டியெடுத்து வெளியிட்டது.இதே BBC தான் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்கு கிளிநொச்சி போய் நாட்கணக்கில் தவமிருந்தது.
இப்போது என்னவென்றால் முல்லைத்தீவோ கிளிநொச்சியோ தனக்குத் தெரியாதமாதிரி நடந்துகொள்கிறது ஏன் ஏன் ஏன் என்ற கேள்வி என்னைப் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

