Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தயா ஜிப்ரான் கவிதைகள் பதின்மூன்று - தயா ஜிப்ரான்-
#1
நான்
நான்
இன்னமும்
உயிரோடு தானிருக்கிறேன்

உந்தன்
உயிரான நட்பை
இழந்து விட்ட
இற்றை நாட் பொழுதுகளிலும்.

-------------------------------------------

உன்னைக் கண்டறிந்து
மகிழ்வதற்கு
காரணங்கள் ஏதுமில்லைத்தான்

ஆனாலும்
உனக்கான..
உனக்கான எந்தன் கவிதைகளில்
ஒன்றையேனும்
ஒன்றாக அமர்ந்து
படித்துப் பார்க்க வேண்டும்.

-------------------------------------------


கவிதைகளை
வரைய வைத்தாய் - நட்பு
கவிதைககளை
எழுத வைத்தாய் - காதல்
கவிதைகளை
கிறுக்குகின்றேன் - குடும்பம்

-------------------------------------------


காத்திருக்க வைத்து
வருவது காதலென்றால் ...
காத்திருந்து காத்திருந்து
களைத்துப் போனதை
என்ன சொல்ல????

-------------------------------------------


சிநேகிதியே
உன்னை பிரிந்ததை விட
அதிகம்
அதிகமாய் வலிக்கின்றது....
நீ
சொல்லாமல் பிரிந்தது.

-------------------------------------------

நீ
நீ நினைத்துக் கொண்டுதான்
இருப்பாயா?
ஆனாலும்
நான்
தும்மிக் கொள்ளும் போதெல்லாம்
உந்தன்
உந்தன் நினைவுவந்து
சிக்கிக் கொள்கிறது
மழைப் பொழுதின்
மண்வாசம் போல.

-------------------------------------------

ஒரு
நல்ல கவிதை எழுதி
பகிர்வதற்கு கூட
எங்கள்
நட்பின் பொழுதுகள்
அவகாசமின்றி
முடிந்து போயின.

-------------------------------------------

நம் நட்பை பறைசாற்றும்
அந்த
மழைப் பொழுதுகளை
மறக்கடிக்க...

பாவமிந்த
சின்னஞ்சிறு துளிகளுக்கு
ஏது வலிமை.??

-------------------------------------------

விளம்பரங்கள்
என்று
வானொலிகளை அலட்சியம் செய்யாதே!

எந்த வேளையிலும்
ஒலிபரப்பாகலாம்
உனக்கான
எந்தன் கவிதை.

-------------------------------------------

எத்தனை பனித்துளிகளை
வானம்
எனக்குத் தந்தது

அத்தனையையும்
நீயே
அள்ளிக் கொண்டாய்
கதிரவனே.

-------------------------------------------


உன் பெயரை
உரத்து
கத்திப் பார்க்கவேனும்

எனக்கொரு
சுதந்திரப் பொழுது
வேணும்.

-------------------------------------------

நேசிப்பில் குறைவில்லாமல்
எந்த
யாசிப்புகளும் இல்லாமல்

சேர்திருக்கவும்
பிரிந்து போகவும்
நம்
நட்புக்கு மட்டுமே முடிந்ததடி.!

-------------------------------------------

இந்த
பௌதீகத்தை உணர்ந்து கொள்
நீ
மலையுச்சியிலும்
நானோ
மலையடிவாரத்திலுமாய்

அதனால்தான்
நம் நிழல்கள்
நாள் தோறும்
சந்தித்துக் கொள்கின்றன.

நிஜங்கள்
நெருங்க நெருங்க
நிழல்களின் சங்கீதம்
செத்துவிடுகின்றது.

-------------------------------------------
- தயா ஜிப்ரான்-
.
.!!
Reply
#2
அருமையான கவிதை, வாழ்த்துக்கள்.

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
அருமையான கவிதை, வாழ்த்துக்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)