![]() |
|
தயா ஜிப்ரான் கவிதைகள் பதின்மூன்று - தயா ஜிப்ரான்- - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தயா ஜிப்ரான் கவிதைகள் பதின்மூன்று - தயா ஜிப்ரான்- (/showthread.php?tid=4594) |
தயா ஜிப்ரான் கவிதைகள் பதின்மூன்று - தயா ஜிப்ரான்- - Thaya Jibbrahn - 04-02-2005 நான் நான் இன்னமும் உயிரோடு தானிருக்கிறேன் உந்தன் உயிரான நட்பை இழந்து விட்ட இற்றை நாட் பொழுதுகளிலும். ------------------------------------------- உன்னைக் கண்டறிந்து மகிழ்வதற்கு காரணங்கள் ஏதுமில்லைத்தான் ஆனாலும் உனக்கான.. உனக்கான எந்தன் கவிதைகளில் ஒன்றையேனும் ஒன்றாக அமர்ந்து படித்துப் பார்க்க வேண்டும். ------------------------------------------- கவிதைகளை வரைய வைத்தாய் - நட்பு கவிதைககளை எழுத வைத்தாய் - காதல் கவிதைகளை கிறுக்குகின்றேன் - குடும்பம் ------------------------------------------- காத்திருக்க வைத்து வருவது காதலென்றால் ... காத்திருந்து காத்திருந்து களைத்துப் போனதை என்ன சொல்ல???? ------------------------------------------- சிநேகிதியே உன்னை பிரிந்ததை விட அதிகம் அதிகமாய் வலிக்கின்றது.... நீ சொல்லாமல் பிரிந்தது. ------------------------------------------- நீ நீ நினைத்துக் கொண்டுதான் இருப்பாயா? ஆனாலும் நான் தும்மிக் கொள்ளும் போதெல்லாம் உந்தன் உந்தன் நினைவுவந்து சிக்கிக் கொள்கிறது மழைப் பொழுதின் மண்வாசம் போல. ------------------------------------------- ஒரு நல்ல கவிதை எழுதி பகிர்வதற்கு கூட எங்கள் நட்பின் பொழுதுகள் அவகாசமின்றி முடிந்து போயின. ------------------------------------------- நம் நட்பை பறைசாற்றும் அந்த மழைப் பொழுதுகளை மறக்கடிக்க... பாவமிந்த சின்னஞ்சிறு துளிகளுக்கு ஏது வலிமை.?? ------------------------------------------- விளம்பரங்கள் என்று வானொலிகளை அலட்சியம் செய்யாதே! எந்த வேளையிலும் ஒலிபரப்பாகலாம் உனக்கான எந்தன் கவிதை. ------------------------------------------- எத்தனை பனித்துளிகளை வானம் எனக்குத் தந்தது அத்தனையையும் நீயே அள்ளிக் கொண்டாய் கதிரவனே. ------------------------------------------- உன் பெயரை உரத்து கத்திப் பார்க்கவேனும் எனக்கொரு சுதந்திரப் பொழுது வேணும். ------------------------------------------- நேசிப்பில் குறைவில்லாமல் எந்த யாசிப்புகளும் இல்லாமல் சேர்திருக்கவும் பிரிந்து போகவும் நம் நட்புக்கு மட்டுமே முடிந்ததடி.! ------------------------------------------- இந்த பௌதீகத்தை உணர்ந்து கொள் நீ மலையுச்சியிலும் நானோ மலையடிவாரத்திலுமாய் அதனால்தான் நம் நிழல்கள் நாள் தோறும் சந்தித்துக் கொள்கின்றன. நிஜங்கள் நெருங்க நெருங்க நிழல்களின் சங்கீதம் செத்துவிடுகின்றது. ------------------------------------------- - தயா ஜிப்ரான்- - ragavaa - 04-02-2005 அருமையான கவிதை, வாழ்த்துக்கள். - hari - 04-02-2005 அருமையான கவிதை, வாழ்த்துக்கள். |