Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கல்லறைக்கவிதைகள்
#1
<b>அரசியல்வாதியின் கல்லறை</b>


ஆட்சி கவிழுமோ என்ற
அச்சமில்லாமல் உறங்குவது
இதுதான் முதல்முறை


<b>வக்கீலின் கல்லறை</b>

பாவம்
ஜாமீனில் எடுக்க
யாருமில்லை

<b>கண்டக்டரின் கல்லறை</b>

எல்லோருக்கும்
டிக்கெட் வழங்கியவருக்கு
இறைவன் கொடுத்த
நிரந்தர டிக்கெட்.



<b>டிரைவரின் கல்லறை</b>

பஸ் இல்லாமலையே
பரலோகம் வரை
சென்றுவிட்டார்



<b>மாணவனின் கல்லறை</b>

இதயக் கல்லூரிக்கு
ஸ்டிரைக் அடித்துவிட்டான்

<b>காதலனின் கல்லறை</b>

இங்கும் இவன்
மௌனமாகத்தான்
உறங்குகின்றான்.


<b>நீதிபதியின் கல்லறை</b>

ஆண்டவன் அளித்த
அப்பீல் இல்லாத
ஆயுள் தண்டனை

<b>நடிகனின் கல்லறை</b>

மேக்கப் இல்லாமல்
இங்குதான் முதன்முறையாக
நடிக்கின்றான்



<b>விபச்சாரியின் கல்லறை</b>

தயவுசெய்து இவளை
துணியோடு புதையுங்கள்- கலையை
கட்டெறும்புக்குக் கூட
கற்றுக்கொடுத்துவிடுவாள்

<b>டிவி ஊழியரின் கல்லறை</b>

தடங்கலுக்கு
வருந்துகிறோம்

<b>கவர்மெண்ட் அதிகாரியின் கல்லறை</b>

எமனுக்கு
லஞ்சம் கொடுக்க முடியாமல்
செத்துப்போனான்

<b>என்னவளின் கல்லறை</b>

வேறு எவனையோ
நினைத்தாள்
கொலைசெய்துவிட்டேன்.

<b>இந்தியனின் கல்லறை</b>

இங்குதான் இவன்
மதவெறியில்லாமல்
உறங்குகின்றான்

<b>நிருபரின் கல்லறை</b>

இறைவனிடம்
பேட்டி எடுக்கச்
சென்றுள்ளான்

<b>வீரப்பனின் கல்லறை</b>

தேவாரம் வந்தாலும்
தேட முடியாத காடு


<b>கணிப்பொறி மென்பொருளாளரின் கல்லறை</b>

If Condition முடிக்காமலையே
இறந்து விட்டான்.


<b>கவிஞனின் கல்லறை</b>

கவலைப்படாதீர்கள்
இனி
பொய்சொல்ல மாட்டான்


<b>நகைச்சுவை நடிகரின் கல்லறை</b>

இவனைச்சுற்றி
அழுதுகொண்டே
அத்தனைபேரும்


<b>பெண்சிசுவின் கல்லறை</b>

மனிதர்களே! இனிமேல்
கொசுவைக் கூட
கொல்லாதீர்கள்


<b>எழுத்தாளனின் கல்லறை</b>

முற்றும்


<b>விவசாயியின் கல்லறை</b>

அறுவடைக்கு
ஆளில்லையே..?


<b>கிரிக்கெட் வீரனின் கல்லறை</b>

இவன் இறந்துவிட்டதை
ரீபிளே (Replay) செய்தெல்லாம்
பார்க்க முடியாது

<b>தமிழனின் கல்லறை</b>

எமனிடம்
ஆங்கிலம் பேசி
அகப்பட்டுக்கொண்டான்

<b>காந்தியின் கல்லறை</b>

ஆறடிக்குள்
ஒரு தேசம்


<b>பாரதியின் கல்லறை</b>

கத்திப்பேசாதீரகள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறான்.


<b>நேருவின் கல்லறை</b>

எப்படி வந்தது
இந்தக்கல்லறையிலிலிருந்து மட்டும்
ரோஜா வாசம்..?

<b>அன்னை தெரசாவின் கல்லறை</b>

ஒரு
மனிதநேயம் இங்கே
மௌனம் அனுஷ்டிக்கிறது.
யாரும் அழுதுவிடாதீரகள்
அரவணைக்க வந்திடுவாள்

<b>டயானாவின் கல்லறை</b>

டோடியோடு சென்று
வாடிப்போய்விட்டாள்


<b>ராணுவவீரனின் கல்லறை</b>

எதிரிநாட்டுப்பெயரை யாரும்
உச்சரித்துவிடாதீர்கள்
எழுந்துவிடப்போகிறான்

<b>குடிகாரனின் கல்லறை</b>

பட்டை அடித்தவன்
பாடையில் போகிறான்

<b>பால் வியாபாரியின் கல்லறை</b>

இவன் வாயில் ஊற்றிய
கடைசி நேர பாலில்
கலப்படம் இல்லை


<b>செய்தி வாசிப்பாளரின் கல்லறை</b>

வாழ்க்கை இத்துடன்
முடிவடைகிறது
வணக்கம்






நன்றி- ரசிகவ் ஞானியார்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நல்ல இருக்கு.. நன்றி அண்ணா..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
சூப்பர் வானம்பாடி வாழ்த்துக்கள். தொடர்ந்து போடுங்கள்.
.

.
Reply
#4
Quote:விபச்சாரியின் கல்லறை

தயவுசெய்து இவளை
துணியோடு புதையுங்கள்- கலையை
கட்டெறும்புக்குக் கூட
கற்றுக்கொடுத்துவிடுவாள்


இங்குதான் இவள் பணம் வாங்காமல்
பள்ளி கொள்கிறாள்
தயவுசெய்து எழுப்பாதீங்க


:roll:
----------
Reply
#5
Quote:விபச்சாரியின் கல்லறை

தயவுசெய்து இவளை
துணியோடு புதையுங்கள்- கலையை
கட்டெறும்புக்குக் கூட
கற்றுக்கொடுத்துவிடுவாள்


இங்குதான் இவள் பணம் வாங்காமல்
பள்ளி கொள்கிறாள்
தயவுசெய்து எழுப்பாதீங்க


:roll:
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)