![]() |
|
கல்லறைக்கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கல்லறைக்கவிதைகள் (/showthread.php?tid=2658) |
கல்லறைக்கவிதைகள் - Vaanampaadi - 11-01-2005 <b>அரசியல்வாதியின் கல்லறை</b> ஆட்சி கவிழுமோ என்ற அச்சமில்லாமல் உறங்குவது இதுதான் முதல்முறை <b>வக்கீலின் கல்லறை</b> பாவம் ஜாமீனில் எடுக்க யாருமில்லை <b>கண்டக்டரின் கல்லறை</b> எல்லோருக்கும் டிக்கெட் வழங்கியவருக்கு இறைவன் கொடுத்த நிரந்தர டிக்கெட். <b>டிரைவரின் கல்லறை</b> பஸ் இல்லாமலையே பரலோகம் வரை சென்றுவிட்டார் <b>மாணவனின் கல்லறை</b> இதயக் கல்லூரிக்கு ஸ்டிரைக் அடித்துவிட்டான் <b>காதலனின் கல்லறை</b> இங்கும் இவன் மௌனமாகத்தான் உறங்குகின்றான். <b>நீதிபதியின் கல்லறை</b> ஆண்டவன் அளித்த அப்பீல் இல்லாத ஆயுள் தண்டனை <b>நடிகனின் கல்லறை</b> மேக்கப் இல்லாமல் இங்குதான் முதன்முறையாக நடிக்கின்றான் <b>விபச்சாரியின் கல்லறை</b> தயவுசெய்து இவளை துணியோடு புதையுங்கள்- கலையை கட்டெறும்புக்குக் கூட கற்றுக்கொடுத்துவிடுவாள் <b>டிவி ஊழியரின் கல்லறை</b> தடங்கலுக்கு வருந்துகிறோம் <b>கவர்மெண்ட் அதிகாரியின் கல்லறை</b> எமனுக்கு லஞ்சம் கொடுக்க முடியாமல் செத்துப்போனான் <b>என்னவளின் கல்லறை</b> வேறு எவனையோ நினைத்தாள் கொலைசெய்துவிட்டேன். <b>இந்தியனின் கல்லறை</b> இங்குதான் இவன் மதவெறியில்லாமல் உறங்குகின்றான் <b>நிருபரின் கல்லறை</b> இறைவனிடம் பேட்டி எடுக்கச் சென்றுள்ளான் <b>வீரப்பனின் கல்லறை</b> தேவாரம் வந்தாலும் தேட முடியாத காடு <b>கணிப்பொறி மென்பொருளாளரின் கல்லறை</b> If Condition முடிக்காமலையே இறந்து விட்டான். <b>கவிஞனின் கல்லறை</b> கவலைப்படாதீர்கள் இனி பொய்சொல்ல மாட்டான் <b>நகைச்சுவை நடிகரின் கல்லறை</b> இவனைச்சுற்றி அழுதுகொண்டே அத்தனைபேரும் <b>பெண்சிசுவின் கல்லறை</b> மனிதர்களே! இனிமேல் கொசுவைக் கூட கொல்லாதீர்கள் <b>எழுத்தாளனின் கல்லறை</b> முற்றும் <b>விவசாயியின் கல்லறை</b> அறுவடைக்கு ஆளில்லையே..? <b>கிரிக்கெட் வீரனின் கல்லறை</b> இவன் இறந்துவிட்டதை ரீபிளே (Replay) செய்தெல்லாம் பார்க்க முடியாது <b>தமிழனின் கல்லறை</b> எமனிடம் ஆங்கிலம் பேசி அகப்பட்டுக்கொண்டான் <b>காந்தியின் கல்லறை</b> ஆறடிக்குள் ஒரு தேசம் <b>பாரதியின் கல்லறை</b> கத்திப்பேசாதீரகள் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான். <b>நேருவின் கல்லறை</b> எப்படி வந்தது இந்தக்கல்லறையிலிலிருந்து மட்டும் ரோஜா வாசம்..? <b>அன்னை தெரசாவின் கல்லறை</b> ஒரு மனிதநேயம் இங்கே மௌனம் அனுஷ்டிக்கிறது. யாரும் அழுதுவிடாதீரகள் அரவணைக்க வந்திடுவாள் <b>டயானாவின் கல்லறை</b> டோடியோடு சென்று வாடிப்போய்விட்டாள் <b>ராணுவவீரனின் கல்லறை</b> எதிரிநாட்டுப்பெயரை யாரும் உச்சரித்துவிடாதீர்கள் எழுந்துவிடப்போகிறான் <b>குடிகாரனின் கல்லறை</b> பட்டை அடித்தவன் பாடையில் போகிறான் <b>பால் வியாபாரியின் கல்லறை</b> இவன் வாயில் ஊற்றிய கடைசி நேர பாலில் கலப்படம் இல்லை <b>செய்தி வாசிப்பாளரின் கல்லறை</b> வாழ்க்கை இத்துடன் முடிவடைகிறது வணக்கம் நன்றி- ரசிகவ் ஞானியார் - Vishnu - 11-01-2005 நல்ல இருக்கு.. நன்றி அண்ணா.. - Birundan - 11-02-2005 சூப்பர் வானம்பாடி வாழ்த்துக்கள். தொடர்ந்து போடுங்கள். - வெண்ணிலா - 11-02-2005 Quote:விபச்சாரியின் கல்லறை இங்குதான் இவள் பணம் வாங்காமல் பள்ளி கொள்கிறாள் தயவுசெய்து எழுப்பாதீங்க :roll: - வெண்ணிலா - 11-02-2005 Quote:விபச்சாரியின் கல்லறை இங்குதான் இவள் பணம் வாங்காமல் பள்ளி கொள்கிறாள் தயவுசெய்து எழுப்பாதீங்க :roll: |