12-14-2005, 04:55 PM
பொத்துவிலில் இத்தாலிய துணை வெளிவிவகார அமைச்சரின் உலங்குவானூர்தி மீது துப்பாக்கிச் சூடு!
[புதன்கிழமை, 14 டிசெம்பர் 2005, 17:48 ஈழம்] [அம்பாறை நிருபர்]
இலங்கை வந்துள்ள இத்தாலிய துணை வெளிவிவகார அமைச்சரான மகா றிகா பொனிவர் பயணத்திற்கான உலங்குவானூர்தி துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானது.
சிறிலங்கா விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலங்குவானூர்தி மீது இன்று புதன்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசம் அறுகம்பையில் இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
இலங்கையில் தற்போது தங்கியுள்ள இத்தாலிய துணை வெளிவிவகர அமைச்சர் மகா றிகா பொனிவர் இன்று பொத்துவில் பிரதேசம் அறுகம்பைக்கு உலங்குவானூர்தி மூலம் சென்றிருந்தார்.
அவரை காலையில் இறக்கி விட்டு திரும்பும் வரை காத்திராமல் பாதுகாப்பின் காரணமாக அந்த உலங்குவானூர்தி அம்பாறை விமானப் படைத்தளத்திற்கு திரும்பியது.
மாலையில் இத்தாலிய வெளிவிவகார துணை அமைச்சர் மகா றிகா பொனிவர் உட்பட 22 பேரை ஏற்றி வர உலங்குவானூர்தி சென்ற போது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு 13 வேட்டுகள் தீர்க்கப்பட்டதாகவும் 6 சூடுகள் உலங்குவானூர்தி மீது பட்டதாகவும் சூட்டுக்களோடு உலங்குவானூர்தி பறந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் துணை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோருடன் உலங்குவானூர்தி திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Puthinam
[புதன்கிழமை, 14 டிசெம்பர் 2005, 17:48 ஈழம்] [அம்பாறை நிருபர்]
இலங்கை வந்துள்ள இத்தாலிய துணை வெளிவிவகார அமைச்சரான மகா றிகா பொனிவர் பயணத்திற்கான உலங்குவானூர்தி துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானது.
சிறிலங்கா விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உலங்குவானூர்தி மீது இன்று புதன்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசம் அறுகம்பையில் இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
இலங்கையில் தற்போது தங்கியுள்ள இத்தாலிய துணை வெளிவிவகர அமைச்சர் மகா றிகா பொனிவர் இன்று பொத்துவில் பிரதேசம் அறுகம்பைக்கு உலங்குவானூர்தி மூலம் சென்றிருந்தார்.
அவரை காலையில் இறக்கி விட்டு திரும்பும் வரை காத்திராமல் பாதுகாப்பின் காரணமாக அந்த உலங்குவானூர்தி அம்பாறை விமானப் படைத்தளத்திற்கு திரும்பியது.
மாலையில் இத்தாலிய வெளிவிவகார துணை அமைச்சர் மகா றிகா பொனிவர் உட்பட 22 பேரை ஏற்றி வர உலங்குவானூர்தி சென்ற போது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு 13 வேட்டுகள் தீர்க்கப்பட்டதாகவும் 6 சூடுகள் உலங்குவானூர்தி மீது பட்டதாகவும் சூட்டுக்களோடு உலங்குவானூர்தி பறந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் துணை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோருடன் உலங்குவானூர்தி திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: