சிரிப்போம் சிறப்போம்
பாவம் யார் பெத்த பிள்ளையோ ?
சிறுமியின் ஆசை
இந்த நேரம் இது தேவையா ?
நம்ம பரிமளம்
பாசம் மரணம் பேசும்
கேட்டு ரசித்தவை
கேட்டு ரசித்தவை
ஒரு பெண் கைக் குழந்தையுடனும் கணவனுடனும் டாக்ட்டரிடம் வருகிறார். அவர் டாக்ட்டரிடம் : சார் இவர்க்கு சரியான மறதி அதுவும் சின்ன சின்ன விடயங்களில் என்றார். உடனே குறுகிடட கணவர் என் திருமண திகதி 14/0/1989 என் முதல் வேலை 5/6/1969..... என் அப்பா பெயர் சுந்தரம் என் தாய் பெயர் செல்லம்மாள் ...இவளுக்கு தான் சரியானமறதி தலையில் எங்காவது அடிபட்டிருக்கும் செக் பண்ணுங்க சார் என்றார்.
டாக்ட்டரும் சரி நீங்கள் சற்று வெளியே அமருங்கள் . என்றுசொல்லி அவரை அனுப்பினால், கதிரையிலிருந்து எழுந்த போது அவர் நீளக் காற் சட்டை (பாண்ட் )போடமறந்து விட்டார் 😃 வெறும் உள்ளாடை (underwear ) உடன் டாக்ட்டரிடம் வந்துள்ளார். டாகடர் திரு திரு என் முழித்தார். இப்போ விளங்கியது யாருக்கு மறதி என்று.
பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!
பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!
ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புபோல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.
‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:
நான் இந்த பாம்பு பண்ணையை 2029-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.பண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தேகுட்டிகளைதந்து உதவுகிறேன்.
இதற்கு ஆகும் செலவு
5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,
25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,
கொட்டாய் செலவு ரூ.10,000,
பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000
ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.
குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:
குட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.
1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றைஇன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.கேட்கவே தலை சுற்றுகிறதா? இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.
ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
அந்தோணிராசு
A12/219, விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின்ரோடு,
துபாய்.
(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. "சதுரங்கவேட்டை"படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க....இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு) 😂
பின்குறிப்பு:
ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும். அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள். 🤣
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
1)கணவன் மனைவி ஒரு கிளாசில் தண்ணீர் குடிப்பதில்லை.இதனால் கிருமி பரவுகிறதாம்.இப்படி பல விடயத்தில் ஒருவர் பாவிப்பதை மற்றவர் பாவிப்பதில்லை.
எனக்கு ஒன்று கேட்க வேணும் போல உள்ளது.ஆனாலும் கேட்க முடியவில்லை என்று கோபி சொல்கிறார்.
2)இருவரும் இளமையான டாக்ரர்கள்.
படுத்தால் கட்டில் மெத்தை போர்வை எதுவுமே கசங்கக் கூடாது என்று மனைவியின் கட்டளை.
ஒருபக்கமாக சரிந்து கூட படுக்க முடியாது.
நீட்டி நிமிர்ந்து தென்னை பனை கற்றி மாதிரி படுக்க வேண்டும்.
இப்படியான ஆசையுள்ளவர்கள் தனியாவே படுத்திருக்கலாமே.
தம்பதிகள் என்றால் கட்டில் ஆடும் முறியும் போர்வையில் இருந்து ஆடைகள் வரை கசங்கும்.
இன்னமும் எப்படி தம்பதிகளாக வாழ்கிறார்கள்?
3)வயது போன தம்பதிகள்.கணவனின் முறைப்பாடு
வெளியே போய்வந்தால் கால்துடைக்க போட்டிருக்கும் மற்றில் கால் துடைக்க கூடாது.அது ஊத்தையாகிவிடும்.
இன்னொன்று ரொம்பரொம்ப சுவாரிசமானது.
மழைக்கு குடை பிடித்து கொண்டு போனால் குடை நனையாமல் பிடிக்க வேண்டும்.
என்ன கொடுமை சரவணா?
இப்படி பல சைக்கோ.
சுத்தம் என்ற பெயரில் கணவன் மனைவியை கொடுமைப் படுத்துவதும்
மனைவி கணவனை கொடுமைப் படுத்துவதும் கெளரவமாக நடக்கிறது.
இதற்குள் பிள்ளைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
முறைப்பாடுகளை செய்தாலும் சேர்ந்தே வாழ்கிறார்கள்.
டேய் மச்சான் புட்டின்...😎
புட்டின் :- ஹலோ! குட் ஈவினிங் மிஸ்டர் பிரசிடன்ட் ரம்ப்.🙂
ரம்ப் :- ஹாய் ஹலோ மச்சான் புட்டின்...😎
புட்டின் :-கண்டு கனகாலம் எப்பிடி சுகம்?
ரம்ப் :- என்ரை சுகத்தை சீச்சி என் என் டெய்லி சொல்லிக்கொண்டு தானே இருக்குது...பாக்கேல்லையோ.
புட்டின் :-நான் அந்தப்பக்கம் போறதுமில்லை...போய் விளங்கப்போறதுமில்லை
ரம்ப் :- அது கிடக்கட்டும் உவன் செலென்ஸ்கிய என்ன செய்யலாம்..
புட்டின் :- அது நீ முதலே விட்ட பிழை மச்சான்.
ரம்ப் :- என்னப்பா சொல்லுறாய்.அவனை உன்ரை பொறுப்பிலையெல்லே விட்டனான்
புட்டின் :- அவனை என்ர பொறுப்பிலை விட்டாய் மச்சான்.... ஆனால் உவங்கள் அதுதான் உன்ரை ஆக்கள் ஐரோப்பிய ஒன்றியம் எண்ட கூத்தாடியள் பெரிய கரைச்சல் குடுத்துக்கொண்டெல்லே இருக்கிறாங்கள்.
ரம்ப் :- அவங்கள விடு....அவங்கள அடக்க எனக்கு ஒரு செக்கண்ட் காணும் கண்டியோ
புட்டின் :- மச்சான் அவங்கள அடக்க ஒரு செக்கண்ட்....எனக்கு அதுவே கூட..
ரம்ப் :- எனக்கு தெரியும் எனக்கு தெரியும் எங்கை வாறாய் எண்டு
புட்டின் :- இப்ப நான் சொல்ல வாறது என்னெண்டால்...
ரம்ப் :- செலென்ஸ்கி...அவன் ரொம்ப தொல்லை குடுக்கிறான்.ரெஞ்சன் ஆக்குறான்....கெப்பர் காட்டுறான் அவ்வளவு தானே...?
புட்டின் :- சீச்சீ செலென்ஸ்கி எனக்கு பிள்ளையார்ர எலி மாதிரி....
ரம்ப் :- அப்ப பிள்ளையார் ஆரப்பா?
புட்டின் :-ஜேர்மனி....ஜெர்மானியா
ரம்ப் :- மச்சான் புட்டின் உந்த ஜேர்மனி விசயத்திலை நீயும் நானும் ஒண்டுக்கை ஒண்டு
புட்டின் :- அவங்கள் என்ரை அடி மடியிலை கை வைச்சிட்டாங்கள்
ரம்ப் :- ஓமோம் தெரியும்....தெரியும்
புட்டின் :- மச்சான் ரம்ப் நீயும் அதுக்கு ஒரு குற்றவாளி....அதை நினைச்சு எனக்கு சரியான கவலை கண்டியோ..
ரம்ப் :- அது...அது... நீயும் அந்த ரைம்மில கொஞ்சம் ஓவராய் போனாய்.....நானும் என்ர சனத்துக்கு பில்டப் காட்டேணுமெல்லோ?
புட்டின் :- சரி இப்ப விடு...இதைப்பற்றி பிறகு கதைப்பம்..
ரம்ப் :- அது சரி இப்ப என்ன கோதாரிக்கு ரெலிபோன் எடுத்தனி?
புட்டின் :- ஜேர்மனி எண்டால் எனக்கு ரத்தம் கொதிக்குது
ரம்ப் : என்ர உடம்பிலை ஜேர்மன் இரத்தம் தான் ஓடுது....எனக்கும் கொதிக்குது
புட்டின் :எனக்கு ஆதரவாய் அங்கை அஞ்சாறு சனமாவது இருக்குது...உனக்கு?
ரம்ப் : எனக்கும் இருக்குது பேரை சொல்லவா மிஸ்டர் புடின்?
தொடரவோ தொந்தரவோ? 😂