'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"எந்தன் உயிரே"
"அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து
ஆரத் தழுவி ஆசை தூண்டி
இதயம் மகிழ்ந்து இதழைப் பதித்து
ஈரமான நெஞ்சம் ஈர்த்துப் பிணைத்து
எழுச்சி கொள்ளும் எந்தன் உயிரே!"
"அக்கறையாய் பேசி அன்பு ஊட்டி
ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி
இடுப்பு வளைவு இன்பம் சொரிய
ஈவு இரக்கத்துடன் ஈருடல் ஓருயிராக
உரிமை நாட்டும் உத்தம உயிரே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"தேடும் கண்களே"
"தேடும் கண்களே
ஓடும் உலகில் நீயோ
நாடும் நங்கையின் அழகை அனுபவிக்கிறாயே!
காடும் மலையும் பெரிதல்ல
வாடும் கொக்காய் இரவும் பகலும்
ஆடும் நெஞ்சே பெரிது!
சிறுத்த இடையும் செவ்விதழும்
உறுத்தும் பார்வையும்
அறுத்து எடுக்குதே என் இதயத்தை!
கருத்த கூந்தல் காற்றில் ஆட
ஒருத்தி அருகில் வந்தால்
குருத்து ஆசை விழிகளில் மலருதே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு
கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது. உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.
"போனால் போகட்டும் போடா"
"போனால் போகட்டும் போடா மனிதா
போதை போனதும் தெரியுது உலகமடா
ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே
ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!"
"ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே
ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே
ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே
இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!"
"ஊடல் கொண்டு சென்ற மனைவியை
கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல்
தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே
ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!"
"உண்மை இல்லா பற்றில் பாசத்தில்
உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி
உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து
ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்]
காலை:
"கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான்
முந்தைய கடனை பேசி வாங்கிறான்
சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான்
சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான்
செந்தணல் சூரியன் மேலே எழுகிறான்
பந்தி பந்தியாய் பறவை பறக்குது
மந்த வெயில் மெல்ல சுடுகுது
எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!"
நண்பகல் [மத்தியானம்]:
"சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான்
கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள்
சந்தனப் பொட்டு பள பளக்குது
சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான்
செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள்
வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது
சிந்திய முத்துகள் பொறுக்கி எடுத்து
எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!"
மாலை:
"தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு
வந்தனம் கூறி வசந்தி போறாள்
பிந்திய பகலில் சூரியன் மறைகிறான்
சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள்
பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள்
சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம்
உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி
எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!"
இரவு:
"சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள்
கந்தப்பு விராந்தையில் பாய் விரிக்கிறான்
வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள்
சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான்
செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள்
அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள்
தந்தன தந்தன தாளம் போட்டு
எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!!
சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
திங்க ள் வேலைக்கு லீவு வேணும்..
சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா..
அடிச்சது லக்கு…
சூரிய கிரகணம்
சனிதோசம்…உள்ளவை
கட்டாயம் பார்க்க வேணும்..இது
செல்வகணபதி ..அய்யர்
கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்…
கண்ட தோசமும் ஓடிடும்..இது
அம்மன் கோயில் அய்யர்….
அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ
பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும்
அய்யப்பன் அய்யர்..
சனியனை
சாட்டுச் சா ட்டாக சொல்லி
சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு..
எனி பிளான் இரண்டு…
மச்சுமுடிய இரண்டு மணியாகும்
கிரகணம் மூன்று மணிக்கு…
காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே..
பிளான் மூன்றும் ரெடி…
நடைபயிற்சி பொய்சொல்லி..
தமிழ் கடையில்..
கொடுவாமீனும்…காரல்மீனும்
கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு…
முழுகிவிட்டு…
முழுச்சமையல்..நான்..
மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று
நான் தெற்கு சமையல்
அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு.
மச்சும் தொடங்கியிட்டுது…
தோனிவர..கைதட்டி
மரியாதை செய்துவிட்டு
மனம் விட்டு
மச்சை ரசித்தால்
நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது..
கிரகணம் வரப் போகுது..
கிங்சும் வெண்டுட்டுது..
சந்தோசத்தில் சமையல்
நாலு அடுப்பிலும்
நடக்குது..
கிரகணத்தை பார்க்க
பின்புற காணியில்..
பொடியன் கமராவுடன்
மனிசி போனுடன்..
நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி..
குழம்பு,காரல் தீயல்
கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி..
பொடியன்
அப்பா வாங்கோ வாங்கோ..
கண்ணடி போட்டு
கிரகணம் காண
புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது..
கைகூப்பி கண்மூடி
மனுசியையும் மூடவைத்து
கும்பிட்டவுடன்
என்னை மறந்தவுடன்..
வித்தியாசமான வாசனை
அடுப்படில் இருந்து
அடித்துப் பிடித்து
ஓடிப்போய் பார்த்தால்..
கீரையும் அடிப்பிடித்து
காரல் தீயலும் தண்ணியின்றி
என்னைப் பார்த்து சிரிக்குது..
அய்டியா ஆறுமுகம் எனக்கு..
அடுக்களை வேலயென்ன கொக்கா..
தீயலக்கு…புளியும்
கீரைக்கு பாலும் விட்டு..
சமையல் முடித்தாயிற்று..
கிரகணம் பார்த்த
கிரகங்கள் இரண்டும்
குசினிக்குள் வர
எனக்கு..
கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது
பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்..
தெற்குச் சமையலை
சாப்பிட்ட மனுசியின்
முகம்பார்க்க..அஞ்சி
நானும் ரிம்கோட்டனுக்கு ..
பறந்திட்டன்…
இனி
இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்..
சுப்பர் கிங்க்ஸ் மச் பார்க்கு மட்டும்
தோனி தலைவா
என்னை நீயே காப்பாற்று..
(சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)