கவிதைக் களம்
"முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும்
"முதல் - முடிவு கவிதை" / முதல்- தர்மம் & முடிவு- தலை காக்கும்
"தர்மம் வகுத்த வழியில் நின்று
கர்வம் மறந்து ஆசை துறந்து
ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி
அர்த்தம் உள்ள உதவி செய்யின்
ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!"
"தாய் தந்தை இருவரையும் மதித்து
வாய்மை என்னும் பண்பு கொண்டு
ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல்
மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால்
செய்த நன்மை தலை காக்கும்!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" / "The corpse that oppose the 'Genocide' is asking"
அத்தியடி, யாழ்ப்பாணம்
Athiady, Jaffna]
"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!" [எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்]
"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!"
[எசப்பாட்டாக நாட்டுப்புறப் பாடல்]
"ஆலமரக் கிளியே ! அத்தானப் பாரடியே!
நீலக் கருங்குயிலே! அருகில் வாராயோ
காலம் கடத்தாமல் நெற்றியிலே பொட்டுவைக்கவா?"
"வேகாத வெயிலுக்குள்ளே குந்தி இருப்பவனே
தகாத உன்னுறவு எனக்கு வேண்டாம்
ஆகாச கோட்டை பொடிப்பொடியாகப் போகட்டும்!"
"மண்டை பெருத்தவளே வீறாப்புநீ பேசாதேடி
கண்டகண்ட பயல்கள்தான் உனக்குத் தேவையோ
வண்ணக்குயிலே நெருங்கிநிண்ணு நான் பேசவாடி"
"கால்ரூபாய்க்கு விறகுவிற்று காலம் கழிப்பவனே
அல்லும்பகலும் திண்ணை திண்ணையாத் தாண்டுபவனே
கல்லுநெஞ்சம் எனக்கில்லை கண்டவனுக்கும் தலைகொடுக்க!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"தாய்" [12 மே 2024]
"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!"
"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது...!"
"தோழனாய் நீயிருக்கத் துன்பமேது அன்பே
ஆழமான உன்இதயத்தில் நானே இருப்பேனே!
அழகான என்னுடலும் உனக்கே தருவேனே
அழலாக பாசம் நெஞ்சில் சுடர்விடுகிறதே
ஈழம் தந்த வீரனே வாழ்கவாழ்கவே!"
"காதலர் தினம் ஆண்டுக்கு ஒன்றல்ல
காலம் முழுவதும் அன்பின் நாளே!
காமம் ஒருபக்கம் நட்பு மறுபக்கம்
காத்திருப்பேன் என்றென்றும் எந்தன் பாதிக்கு
கார்த்திகை தீபத்தின் நாயகன் நீயே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்"
புதுக் கவிதை / நவீன கவிதை: "பெருவெடிப்புச் சித்திரம்"
அத்தியடி, யாழ்ப்பாணம்
புதுக் கவிதை / நவீன கவிதை: "விடுதலையின் வித்து"
"மனித மனம் திருப்தி அடையாது"
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"தளிராடும் தூறலில்"
"தளிராடும் தூறலில்"
"தளிராடும் தூறலில் தாங்காத மோகத்தில்
துளிர்விடும் இன்பக் காதல் நினைவில்
ஒளிவீசும் உன் ஈர்ப்பு விழிகளில்
எளிமை கொண்ட வீரநடை காண்கிறேன்!
குளிர் காய்கிறேன் ஈரமாய் நனைகிறேன்!"
"எண்ண முடியா உடல் கவர்ச்சியும்
எண்ணம் புரியா மௌனத்தின் அழகும்
வண்ணம் போடும் ஆகாயத்தின் எழிலும்
மண்ணில் விழும் துளிகள் சொல்கின்றனவே!
விண்ணில் உன் முகம் தெரிகிறதே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
"அன்பே ஆருயிரே"
கண்ணீர்க் கோலம்.
தடம்புரண்டோடும் மனித வாழ்வில்
தடம்புரளா வண்டி போல் அவன்
தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில்
தபுதாரனற்ற ஒருத்தன்
தவிப்பில் அவள்
தவிர்க்க முடியாது
தவித்த அவன் விழிகள்
தத்தை அவள்
தகிக்கும் வதனம் காண......
தண்ணீர் போல் கண்ணீர்
தத்தளிக்கும் துளிகள்
தரவரிசையாய் சரிகின்றன.
தவிக்கிறது அவன் மனசு
தரமறியாது
தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க..
தவிர்த்த விழிகள்
தகர்ந்து போகின்றன
தகரடப்பா போல் போனுக்கு
தத்தை அவள் கண்ணீர் கோலம்
தரவாகிறது
தகவலாய் மறுமுனை தாவ
தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...!
தகர்கிறது
தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில்
தகரும் அவள் வதனப் பூச்சொடு
தத்தை மேல் வைத்த காருணியம்.
தவித்தே போகிறது அவன் மனம்
தரணியில் மனிதக் கோலங்கள் கண்டே...!
"உயிரின் உயிரே!"
ஒரு நுட்பமான வார்த்தை விளையாட்டு
"வசந்தகால தொடக்கத்தில் எழுதிய வரிகள்" / "Lines Written in Early Spring"
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]"
அத்தியடி, யாழ்ப்பாணம்]
Athiady, Jaffna]
"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை]
"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை]
"காதல் தந்தாய்
காத்திருந்தேன் நாள் முழுவதும்!
வேதனை படுத்தி
சோதனை செய்யவா
எங்கு சென்றாய்?"
"அழகிய உடல்
ஆனந்தம் தந்தது!
அருகில் இல்லாமல்
தூர விலகினாயே
எங்கு சென்றாய்?"
"கொஞ்சும் பேச்சில்
நெஞ்சைப் பறித்தவளே!
வஞ்சக மனத்துடன்
கஞ்சத்தனம் வேண்டாம்
எங்கு சென்றாய்?"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!"
"எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!"
"கொடூரமாக இருக்காதே
திமிர் பிடிக்காதே
உரிமைகளை மதி
குரல்களை மதி"
"இங்கு வேலையாட்கள் இல்லை
இங்கு முதலாளிகள் இல்லை
இங்கு குடும்பமே உண்டு
இனி நட்பாகக் கவனி"
"கஷ்டங்களைக் கேளு
துயரங்களைக் கேளு
கடவுள் சிவாவாக இரு
இயேசு கிறிஸ்துவாக இரு"
"ஆதாயத்தைப் பகிரு
லாபத்தைப் பகிரு
ஒரு தந்தையைப் போல
ஒரு தாயைப் போல"
"அடிமை ஆக்காதே
ஏழைகளை உருவாக்காதே
ரோமாக இருக்காதே
நீரோவாக இருக்காதே"
"எல்லோரையும் இணை
தொழிலாளர்கள் பங்கேற்கட்டும்
அனைவரையும் உள்ளடக்கு
முடிவெடுப்பதில் கலந்தாலோசி"
"ஆர்வத்தைக் கொடு
நம்பகத்தன்மை வளரட்டும்
ஒரு கணவனைப் போல
ஒரு மனைவியைப் போல"
"ஒழுக்கத்தைக் கடைப்பிடி
நீதியைக் கடைப்பிடி
நல்ல குருவாக
நல்ல அரசனாக "
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"MY MAY DAY SLOGANS!"
"DON'T BE CRUEL
DON'T BE ARROGANT
RESPECT THE RIGHTS
RESPECT THE VOICES"
"NO MORE WORKERS
NO MORE BOSSES
CARE AS FAMILY
CARE AS FRIENDS"
"LISTEN THEIR PLIGHTS
LISTEN THEIR SORROWS
BE A GOD SIVA
BE A JESUS CHRIST"
"SHARE THE BENIFIT
SHARE THE PROFIT
LIKE A FATHER
LIKE A MOTHER"
"MAKE NO SLAVE
MAKE NO POOR
DON'T BE ROME
DON'T BE NERO"
"KEEP QUALITY CIRCLE IN MANAGEMENT
KEEP WORKERS PARTICIPATION IN MANAGEMENT
INCLUDE EVERYONE IN MANAGEMENT
INCLUDE EVERYONE IN DECISION MAKING"
"CULTIVATE INTEREST IN WORK
MOTIVATE DEPENDABLE BEHAVIORS
LIKE A HUSBAND
LIKE A WIFE"
"KEEP THE DISCIPLINE
KEEP THE JUSTICE
BE A GOOD GURU
BE A GOOD KING"
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'
அத்தியடி, யாழ்ப்பாணம்]