Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தலைப்பும் கருத்தும்
#1
Mathivathanan Wrote:மருத்துவப்பிரிவிலை தலையங்கம் தேங்காயெண்ணெய் யாயிருந்தாலும் ஆசுப்பத்திரி.. வாட்டு.. டாக்குத்தர்மார்.. வருத்தம் பார்க்கிறது.. டாக்குத்தர் விடுப்பு.. டாக்குத்தர்மாரின் விருப்பு வெறுப்பு.. சிங்கள தமிழ் டாக்குதர்மாருடைய கவனிப்புகள்.. இதுகள்பற்றி எழுதவேண்டிவரும்.. அதுதான் எழுதியிருக்காக்கும்..
Idea Idea Idea

Eelavan Wrote:மன்னிக்கவும் இளைஞன் இதில் நானும் தலைப்புக்குச் சம்பந்தமில்லாது கருத்து எழுதியவன் என்ற முறையில் மன்னிப்புக் கேட்கிறேன்.

ஆனாலும் கருத்துத் திசை மாறும் வேளையிலேயே கத்தரித்திருந்தால் இவ்வளவு வளர்ந்திருக்காதல்லவா?

kuruvikal Wrote:இது தலைப்புடன் சம்பந்தப்படாத போதும் எச்சரிக்கை ஒன்று இங்கு வைக்கப்பட்டதால் அது தொடர்பில் எழுந்த எமது எண்ண அலைகளை இங்கு முன்வைக்கின்றோம்....!

-------------------------------

இதென்ன கருத்துக்களமா அல்லது தகவற் தளமா...???! யாழ் டொட் கொம் எனும் ஒரு தகவற் தளத்துள் அடங்கும் ஒரு கருத்துக்களம்...அதிலேயே ஒருவர் இப்படி எழுதாதே அப்படி எழுது என்கிறார் .... மற்றவர் இதற்குமேல் எழுதாதே என்கிறார்....???! :roll:

கருத்துக்களம் என்றால் எதுவிடயமாகவும் ஒரு வாதப்பிரதிவாதம் இருக்க வேண்டும் அதன் போது கருத்துக்கள் திசைமாறிச் செல்வது போல் இருந்தாலும் இலக்கை நோக்கி மீட்டுவர வேண்டியது கருத்தாளர்களின் கடமையே அன்றி...அதை எழுதாதே இதை எழுதாதே என்று எச்சரிப்பதானது கருத்தாடுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு கைங்கரியமாகத் தெரியவில்லை.....! அச்சுறுத்திப் பணிய வைப்பதாகவே தெரிகிறது....! அது சுதந்திரமாக கருத்தாடும் வகையில் கருத்தாளர்களை உள்ளிளுக்க உதவுமா....????! :roll: :?:

சரி... அது இருக்கட்டும்...இந்த மட்டுறுத்தினர்கள் (ஒரு சிலரைத் தவிர) தாங்கள் கருத்தாளர்கள் அல்ல ஏதோ ஒரு தனி வகை என்பது போல பாவனை செய்வதும் சக கருத்தாளர்களுடன் கைகோர்த்து நிற்காமல் தாம் ஒரு நிர்வாகக் கிறுக்கர்கள் போல் பாவனை செய்வதும் மற்றைய கருத்தாளர்கள் மீது குறைந்தது இக்களத்தின் கருத்தாளன் என்ற குறைந்தளவு மதிப்பீடு கூட இல்லாமல் நடப்பதும் ஒன்றும் சிறந்ததாகத் தெரியவில்லை....! Idea

கருத்துச் திசைமாறுகிறது என்று கண்டால் எச்சரிப்பேன் வெட்டுவேன் புடுங்குவேன் என்று நில்லாமல் பதவியை கொஞ்சம் அரக்கி வைத்துவிட்டு களத்தில் இறங்குங்கள்....உங்கள் திறமையைக் காண்பித்து தலைப்புடன் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களால் கருத்தினை திசைப்படுத்துங்கள்...அதுதான் கருத்துக்களத்திற்கும் சக கருத்தாளர்களுக்கும் செய்யும் பெறுமதிமிக்க செயலாக இருக்க முடியும்...அதைவிடுத்து திடீர் திடீர் என்று தோன்றி எச்சரிப்பதும் தணிக்கை செய்வதும் பின் மறைந்து போவதும் ஒன்றும் களக் கருத்தாளர்களை நெறிப்படுத்தும் கைங்கரியமாகத் தெரியவில்லை....! இதெப்படி இருக்கிறது தெரியுமா வகுப்பறை மொனிரரே வெளியில உலாவித் திரிந்து கொண்டு வகுப்புக்கு அடிக்கடி வந்து "டேய் ஒருத்தரும் வெளியில போகக் கூடாகது சரியா" என்பது போல இருக்கிறது....! :twisted:

களவிதிகள் எல்லாவற்றையும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் திணிக்க முயலாமல் கொஞ்சம் சில நெகிழ்வுத் தன்மையைக் காண்பிக்கக் கூடிய களவிதிகளில் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கை காண்பிப்பதே கருத்தாளர்கள் தம் கருத்தை சுதந்திரமாக முன்வைக்க உற்சாகளிக்க முடியும்....!

அதேபோல் களவிதியும் பக்கச் சார்பில்லாமல் எல்லோருக்கு எதிராகவும் தேவையான வேளையில் கருத்துக்கள் சிதைந்து சச்சரவுகள் தோன்றாமல் இருக்க பயனபடுத்தப்படுவது அவசியமே....அதனை நட்புடன் செய்யுங்கள் இராணுவம் போல் சர்வாதிகாரம் போல் செய்யாதீர்கள்....அது கருத்தாடுபவர்கள் மனச்சோர்வடையவே வழி செய்யும்....! இது ஆங்கிலக் களமல்ல....தமிழ் களம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்....எனவே குறிப்பிட்ட சில தமிழ் ஆர்வலர்களை மட்டுமே இங்கு கருத்தாட வைக்க முடியும் என்ற வரையறையையும் மனதிற் கொள்வது பயன்தரும்....! Idea


Reply
#2
இந்தக் கருத்துத் திசை பற்றிப் பேசும் போது நீண்ட நாட்களுக்கு முன்னர் BBC ஒரு கட்டுரையிலிருந்து பிரதி செய்து கொண்டுவந்து போட்ட ஒரு கருத்து தான் ஞபகம் வருகிறது.
இணைய அரட்டை மற்றும் கருத்துக்களங்கள் வேலையற்றவர்கள் கூடியிருந்து புலம்பும் இடமாக மாறி வருகிறதா என்ற கேள்வியுடன்

ஒரு கருத்துக்களத்தை எடுத்தால் அங்கு ஒருவர் தமிழைச் செம்மொழியாக்குவது பற்றி விவாதம் ஆரம்பிப்பார் அது அப்படிச் சுற்றி இப்படிச் சுற்றி திரைப்பட நாயகிகளில் வந்து நிற்கும் கடைசியில் தலைப்பு ஒன்றாக இருக்க இன்னொரு கருத்துக்காக சிலர் அடிபட்டுக்கொண்டிருப்பர் ஆக மொத்தத்தில் தமிழைப் பற்றி விவாதிப்பதற்கு ஆளிருக்காது என்ற சாரப்பட அந்த கட்டுரை இருந்தது.

எனக்கென்னவோ நாமும் அதனைத் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகின்றது
\" \"
Reply
#3
மதிவதனன்:
மருத்துவ ரீதியாக தேங்காயெண்ணையை அணுகவேண்டிய இடத்தில், அரசியல் ரீதியாக அணுகியது திசைதிருப்பல்.

ஈழவன்:
ஆமாம் ஈழவன்! நீங்கள் சொல்வது சரி. தாங்களாகவே திருத்திக் கொள்வர்கள் என்று தவறான கணிப்பீடு செய்துவிட்டேன். அதற்காய் வருந்துகிறேன்.

குருவிகள்:
Quote:இது தலைப்புடன் சம்பந்தப்படாத போதும் எச்சரிக்கை ஒன்று இங்கு வைக்கப்பட்டதால் அது தொடர்பில் எழுந்த எமது எண்ண அலைகளை இங்கு முன்வைக்கின்றோம்....!
மீண்டும் மீண்டும் உணர்த்திய பின்பும், உணர்ந்த பின்பும் மறுபடி மறுபடி எழுதுவது _ _ _ _ _ _ _.
"உங்கள் கருத்து" என்கின்ற பிரிவு களம்பற்றிய உங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அடிக்குடி மறந்து போகிறீர்கள்.

Quote:இதென்ன கருத்துக்களமா அல்லது தகவற் தளமா...???! யாழ் டொட் கொம் எனும் ஒரு தகவற் தளத்துள் அடங்கும் ஒரு கருத்துக்களம்...அதிலேயே ஒருவர் இப்படி எழுதாதே அப்படி எழுது என்கிறார் .... மற்றவர் இதற்குமேல் எழுதாதே என்கிறார்....???!
கருத்துக்களைக் கருத்துக்களாக எழுதாமல், "கரைதல்"களாக எழுதினால் --> இப்படி எழுதாதே அப்படி எழுது என்றுதான் சொல்வார்கள். சொன்னதன் பிறகும் கரைந்துகொண்டேயிருந்தால் இதற்குமேல் எழுதாதே என்றுதான் சொல்வார்கள். அதன்பின்பும் கரைந்துகொண்டேயிருந்தால் களத்தில் இருந்தே விலக்கப்படுவார்கள். இந்த படிநிலைகள் கருத்துக்களத்தில் மட்டுமல்ல...

Quote:கருத்துக்களம் என்றால் எதுவிடயமாகவும் ஒரு வாதப்பிரதிவாதம் இருக்க வேண்டும் அதன் போது கருத்துக்கள் திசைமாறிச் செல்வது போல் இருந்தாலும் இலக்கை நோக்கி மீட்டுவர வேண்டியது கருத்தாளர்களின் கடமையே அன்றி...அதை எழுதாதே இதை எழுதாதே என்று எச்சரிப்பதானது கருத்தாடுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு கைங்கரியமாகத் தெரியவில்லை.....! அச்சுறுத்திப் பணிய வைப்பதாகவே தெரிகிறது....!

1. திசைமாறிப்போகும் கருத்தாளர்களுக்கு தாம் திசைமாறிப்போகிறோம் என்பது தெரிந்தால் தாமே இலக்கை நோக்கி வருவார்கள்.
2. ஆனால் தாம் திசைமாறிப்போகிறோம் என்பதே தெரியாமல் திசைமாறிப் போகிறவர்களிற்கு, நீங்கள் திசைமாறிப்போகிறீர்கள் என்று அறிவுறுத்த வேண்டிய நிலை எமக்கு உண்டாகிறது.
3. ஒருமுறை திசைமாறிப்போகிறவர்களை அறிவுறுத்தலாம். அறிவுறுத்திய பின்னும் மீண்டும் மீண்டும் கவனமில்லாமல் கருத்துப்போன போக்கிலே திசைமாறுபவர்களை எச்சரித்தால் தான் அடுத்தமுறை கவனமாக இருப்பார்கள்.
4. திசைதிருப்பவேண்டும் என்று அலைகிறவர்களை அறிவுறுத்தியும் பயனில்லை, எச்சரித்தும் பயனில்லை. இவர்களை என்ன செய்யவேண்டும் என்பது தெளிவு.

Quote:அது சுதந்திரமாக கருத்தாடும் வகையில் கருத்தாளர்களை உள்ளிளுக்க உதவுமா....????!
சுதந்திரமாகவும், சுத்தமாகவும் கருத்தாடிய பல கருத்தாளர்கள் தாமாக வெளியேறிய நிகழ்வுகள் நடந்ததாலும், அந்த சூழல் இப்பொழுது இருப்பதாலும் --> அதனை மாற்ற இது உதவும் என்றே நம்புகிறேன்.

Quote:சரி... அது இருக்கட்டும்...இந்த மட்டுறுத்தினர்கள் (ஒரு சிலரைத் தவிர) தாங்கள் கருத்தாளர்கள் அல்ல ஏதோ ஒரு தனி வகை என்பது போல பாவனை செய்வதும் சக கருத்தாளர்களுடன் கைகோர்த்து நிற்காமல் தாம் ஒரு நிர்வாகக் கிறுக்கர்கள் போல் பாவனை செய்வதும் மற்றைய கருத்தாளர்கள் மீது குறைந்தது இக்களத்தின் கருத்தாளன் என்ற குறைந்தளவு மதிப்பீடு கூட இல்லாமல் நடப்பதும் ஒன்றும் சிறந்ததாகத் தெரியவில்லை....!
மட்டுறுத்துனர்கள் கருத்தாளர்களாகவும் இருக்கலாம் அல்லது தனியே மட்டுறுத்துனர்களாகவும் இருக்கலாம். இது கருத்துக்களத்தின் நிர்வாகம் சார்ந்தது. அதுபற்றி இந்தநேரத்தில் நீங்கள் கவலைப்படுவது எதற்கு என்று விளங்கவில்லை. மட்டுறுத்துனர்களும் உங்களோடு கருத்தாடவேண்டும் என்ற உங்களுடைய எதிர்பார்ப்பும் அவசியமற்றது, அர்த்தமற்றது.

Quote:கருத்துச் திசைமாறுகிறது என்று கண்டால் எச்சரிப்பேன் வெட்டுவேன் புடுங்குவேன் என்று நில்லாமல் பதவியை கொஞ்சம் அரக்கி வைத்துவிட்டு களத்தில் இறங்குங்கள்....உங்கள் திறமையைக் காண்பித்து தலைப்புடன் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களால் கருத்தினை திசைப்படுத்துங்கள்...அதுதான் கருத்துக்களத்திற்கும் சக கருத்தாளர்களுக்கும் செய்யும் பெறுமதிமிக்க செயலாக இருக்க முடியும்
நீங்கள் _ _ _ _ _ _ _ _ என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். கருத்துக்களத்திற்கு வேண்டியது _ _ _ _ _ _ _ _ அல்ல. மட்டுறுத்தினர்கள் தங்கள் திறமையைக் காட்டவேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் கருத்தைத் திசைமாற்றுகிறீர்களோ. நல்ல விடயம். ஆனால் அதேமாதிரி, மட்டுறுத்துனர்கள் எச்சரிக்காதவாறு, வெட்டாது, புடுங்காது கருத்துக்களை திசைமாறாமல், பொருத்தமானதாக, அர்த்தமுள்ளதாக முன்வைத்து உங்கள் திறமையைக் கொஞ்சம் காண்பியுங்களேன்!

Quote:அதைவிடுத்து திடீர் திடீர் என்று தோன்றி எச்சரிப்பதும் தணிக்கை செய்வதும் பின் மறைந்து போவதும் ஒன்றும் களக் கருத்தாளர்களை நெறிப்படுத்தும் கைங்கரியமாகத் தெரியவில்லை....!
மட்டுறுத்துனர்கள் இங்கு முழுநேரப் பணியாளர்கள் அல்ல. நீங்களும் இங்கே சிறுபிள்ளைகள் அல்ல. மட்டுறுத்துனர்கள் தமக்கு கிடைக்கும் நேரத்தை ஒதுக்கி இங்கே ஒவ்வொரு கருத்தையும் கவனிக்கிறார்கள். சில தவறுப்பட்டுப் போகும்.

Quote:இதெப்படி இருக்கிறது தெரியுமா வகுப்பறை மொனிரரே வெளியில உலாவித் திரிந்து கொண்டு வகுப்புக்கு அடிக்கடி வந்து "டேய் ஒருத்தரும் வெளியில போகக் கூடாகது சரியா" என்பது போல இருக்கிறது....!

உதாரணத்தை தரும்பொழுது பொருத்தமாகத் தரவேண்டும். ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத உதாரணத்தை எழுதுவது _ _ _ _ _ _ _ _ _.
நிற்க, மட்டுறுத்துனர்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறார்கள், எங்கு போகிறார்கள் என்பது ஒரு உண்மையான கருத்தாளனுக்கு அவசியமற்றது. தன்னுடைய கருத்தைக் கருத்தாக முன்வைத்துவிட்டு, அதற்கான பதில் வந்தால் அதற்கு பொருத்தமான பதிலை வைத்து கருத்தாடலைத் தொடர்வது தான் பயனுள்ளது.

Quote:களவிதிகள் எல்லாவற்றையும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் திணிக்க முயலாமல் கொஞ்சம் சில நெகிழ்வுத் தன்மையைக் காண்பிக்கக் கூடிய களவிதிகளில் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கை காண்பிப்பதே கருத்தாளர்கள் தம் கருத்தை சுதந்திரமாக முன்வைக்க உற்சாகளிக்க முடியும்....!
களவிதிகளை முழுமையாகத் திணிக்க முயன்றிருந்தால் சில கருத்தாளர்கள் இங்கே எழுதவே முடியாமல் போயிருக்கும். நெகிழ்வுதன்மையை இங்கே கடைப்பிடித்ததால் தான் தனிப்பட்ட தாக்குதல்களும், மட்டுறுத்துனர்களை விமர்சிப்பதுவும் நடக்கிறது. சுதந்திரத்தைக் கருத்தாளர்கள் சிலர் நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். வாழ்க.

Quote:அதேபோல் களவிதியும் பக்கச் சார்பில்லாமல் எல்லோருக்கு எதிராகவும் தேவையான வேளையில் கருத்துக்கள் சிதைந்து சச்சரவுகள் தோன்றாமல் இருக்க பயனபடுத்தப்படுவது அவசியமே....அதனை நட்புடன் செய்யுங்கள் இராணுவம் போல் சர்வாதிகாரம் போல் செய்யாதீர்கள்....அது கருத்தாடுபவர்கள் மனச்சோர்வடையவே வழி செய்யும்....! இது ஆங்கிலக் களமல்ல....தமிழ் களம் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்....எனவே குறிப்பிட்ட சில தமிழ் ஆர்வலர்களை மட்டுமே இங்கு கருத்தாட வைக்க முடியும் என்ற வரையறையையும் மனதிற் கொள்வது பயன்தரும்....!
சச்சரவுகளைத் தோற்றுவிப்பதற்கென சிலர் உலவுகிறார்களே அவர்களை என்ன செய்வது? தான் செய்கின்ற பிழைகளை உணராதவர்களிடம் களவிதிகளைச் சொல்லி உணரவைக்கலாம். உணர்ந்தும் ஒத்துக்கொள்ளாதவர்களை என்ன செய்வது? தமிழ் ஆர்வலர் என்பதற்காக அவர் களவிதிகளை மீறினாலோ கருத்துக்களைத் திசைதிருப்பினாலோ வீண் சச்சரவுகளைத் தோற்றுவித்தாலோ பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது!


Reply
#4
நாங்கள் சொல்ல நினைத்ததைச் சொன்னோம்...உங்கள் பதிலில் பல மறுதளிப்புக்களுக்கு இடமளித்த நேரம் ஒன்றைச் சிந்திக்க மறுந்துவிட்டீர்கள்...அதுதான் உங்கள் பக்கத் தவறுகளை...அதுமட்டுமல்ல மட்டுறுத்தினர்கள் என்பவர்களும் கள உறுப்பினர்களே....! அவர்கள் இங்கு எழுதப்படும் கருத்தை கண்காணிக்கலாம் ஆனால் கருத்தாளர்களைக் கண்காணிக்கும் தகுதி இருக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்....! அப்படி எண்ணுவதும் தவறு....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:நாங்கள் சொல்ல நினைத்ததைச் சொன்னோம்...
சொல்ல நினைத்ததை சொல்வது முக்கியமல்ல, சொல்லவேண்டிய இடத்தில் சொல்வது தான் முக்கியம்.

Quote:உங்கள் பதிலில் பல <b>மறுதளிப்புக்களுக்கு இடமளித்த நேரம்</b> ஒன்றைச் சிந்திக்க மறுந்துவிட்டீர்கள்...அதுதான் உங்கள் பக்கத் தவறுகளை...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மறுதளியுங்கோ!
குருவிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? தவறைச் சுட்டிக்காட்ட முற்படும் போதெல்லாம் மட்டுறுத்துனர்கள் மீது அதை திசைதிருப்புவதும், மட்டுறுத்துனர்களோடு முரண்படுவதும் வழமைதானே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:அதுமட்டுமல்ல மட்டுறுத்தினர்கள் என்பவர்களும் கள உறுப்பினர்களே....!

யாராவது இல்லை என்று சொன்னார்களா? மட்டுறுத்துனர்கள் களஉறுப்பினர்கள் தான். ஆனால் கருத்தாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை.

Quote:அவர்கள் இங்கு எழுதப்படும் கருத்தை கண்காணிக்கலாம் ஆனால் கருத்தாளர்களைக் கண்காணிக்கும் தகுதி இருக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்....! அப்படி எண்ணுவதும் தவறு....!
கருத்துக்களையும், கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் செயற்பாட்டையும் கண்காணிக்கலாம். தகுதியில்லா மட்டுறுத்துனர்கள் இருக்கின்ற களத்தில் அறிவாளிகள் கருத்தெழுதுவதென்பது கஸ்ரமான விடயம் தான். என்ன செய்வது குருவிகள். Cry உங்களிற்கு <b>தகுதியான</b> மட்டுறுத்துனர் கிடைக்கவேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். அதுவரை தகதியில்லாதவர்களை தகுதியுள்ளவர்களாக்கு முயற்சித்து உங்கள் திறமையைக் காட்டு ங் கோ.


Reply
#6
உங்கள் பார்வையில் கோளாறுபோலும்.. வந்த கருத்துக்கள் பதிலே தவிர அரசியலல்ல.. அங்கு எதையும் நான் தொடங்கவில்லை.. மீண்டும் கருத்துக்களை ஒருமுறை வாசித்துவிட்டு குற்றச்சாட்டை வையுங்கள். உங்கள் சொதப்பலுக்கு என்னை பலிக்கடாவாக்கவேண்டாம்..
நன்றி..
Truth 'll prevail
Reply
#7
கருத்துக்கள கருத்துக்கள் மீதான மட்டுறுத்தினர்... நண்பர்... இளைஞனுக்கு....

முதலில் என்ன எழுதப்படுகிறது என்பதை சற்று சிந்தித்து நோக்குங்கள்...கருத்தைக் கண்காணிக்கலாம் கருத்தாளரைக் கண்காணிக்க முடியாது என்பதன் பொருள்...இக்களத்திற்கு வந்து கருத்தெழுதும் போதுதான் கருத்தாளர்கள் வருகிறார்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதல்ல அர்த்தம்...இங்கு விலகிச் சென்றதாகக் கருத்தப்படும் அனைவரும் வருகிறார்கள் பார்வையிடுகிறார்கள்....எழுதவில்லைப் போகிறார்கள்....ஆகவே அவர்களுக்குள் உள்ள ஏதோ ஒன்று எழுத விடவில்லை....அதை நீங்கள் கண்காணிக்க முடியுமா அதற்கான தகுதிதான் இருக்குமா என்பதே எமது கருத்தின் தொனியே தவிர நாம் பெரிய அறிவுப் பிரபஞ்சங்கள் என்று சொல்லவரவில்லை...நாம் அப்படியானவர்களும் அல்ல....! ஏதோ பட்டறிந்ததைச் சொல்லும் பாமரங்கள்....!

ஆம் உண்மை...சில மட்டுறுனத்தினர்களின் செயற்பாடுகள் குறித்து நாம் மாத்திரமல்ல இங்கு களத்தில் பலரும் பல தடவைகள் விசனம் தெருவித்திருந்தனர்...அதை நாம் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை...அதை நீங்களே பழைய கருத்துகளைச் சென்று பார்த்தால் புரியும்....!

அடுத்தது மட்டுறுத்தினர்களின் திடீர் வரவும் கருத்தாடப்படும் விடயம் தொடர்பான பலரது கருத்துக்கள் மீதான அவர்களின் பார்வையும்...இது இங்கு முக்கிய விடயம்....நீங்கள் அந்த மருத்தவப் பிரிவில் எச்சரிக்கை செய்ய ஏன் 3 பக்கங்கள் செய்திகள் அல்லது கருத்துக்கள் பரவ இடமளித்தீர்கள்....காரணம் என்னவோ நாம் அறியோம்...ஆனால் நாம் எழுதிய சில கருத்துகளுக்குள் மருத்துவம் சார் குறிப்புக்கள் உள்ளதை எம்மால் காட்ட முடியும்....அதுபோக எந்தத் தலைப்பை எடுத்தாலும் வெறும் மருத்துவமோ அல்லது விஞ்ஞானமோ பேசினால் அந்தத்தலைப்பு போட்ட செய்தியோடு அமைதி கொண்டுவிடும் என்பதற்கு விஞ்ஞானச் செய்திப்பக்கம் சான்று.....! யாரும் தமது சுய கருத்தாக எதுவுமே எழுதமாட்டார்கள்....ஏன்...???!

இந்த நிலை தொடர்ந்தால் எந்தத் தலைப்புத் தொடர்பிலும் பலரும் எழுதவே அஞ்சுவார்கள்...ஆனால் ஒரு அதிகபட்ச வரையறைக்குள்.... அவர்கள் சாதாரணமாக எழுத அனுமதிக்கப்படும் போது (குழப்பகாரர்களை இங்கு கணக்கில் எடுக்கத் தேவையில்லை...அவர்களுக்குத்தானே தணிக்கையும் தண்டனையும் வழங்குகிறீர்களே....) அவர்களை அறியாமலே அவர்களிடம் கிடக்கும் திறமைகளைத் தகவல்களை வெளிப்படுத்த முயல்வர்......விஞ்ஞானம் எழுதென்றால் யாரும் எழுதுவார்களா.....???! ஆனால் விஞ்ஞானம் என்று அறியாமலே பலரும் பல விஞ்ஞானத் தகவல்களைக் தம்மகத்தே கொண்டிருக்கிறார்கள்...அப்படியாயின் அவர்களிடம் இருந்து அவற்றை எப்படிப் பெறுவது....????! அதை அவர்கள் போக்கில் சென்றுதான் பெற வேண்டும்...அதற்குத்தான் கருத்துக்களம்...வாதம் பிரதிவாதம்...சண்டை... சச்சரவு எல்லாம்...ஆனால் அதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் என்பதே கேள்விக்குறி.... Idea

இப்படிப்பல முரண்பாடுகளை உங்கள் பதிலில் நாம் கொண்டிருப்பினும்... இது உங்கள் களம் நீங்கள் எதையும் செய்யுங்கள் அதைத்தடுக்க நாம் யார்...????! :twisted:

இந்த விளக்கங்கள் எங்கள் கருத்தின் மீதும் எங்கள் மீதும் நீங்கள் கொண்டுள்ள நேரடியான தவரான பார்வையை சுட்டிக்காட்டவே...மேற்கொண்டு உங்களை நாம் எது தொடர்பிலும் மாற்றங்களையோ அல்லது வலியுறுத்தல்களையோ கோரவில்லை....எமது அபிப்பிராயத்தையே வெளியிட்டோம்.....ஏதோ எமக்குப்பட்டதைச் சொன்னோம்...சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று பார்த்தால் நீங்களும் உண்ர்ச்சிக்குத்தான் வேலை கொடுக்கிறீர்கள் அறிவுக்கல்ல என்பது புலனாகிறது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
வணக்கம் மீண்டும்...

நன்றிகள் குருவிகள்.

1. நீங்கள் எழுதிய மூன்று பதில்களின் மூலமும் அவற்றில் குறிப்பிடப்பட்டவை மூலமும் கருத்தைத் திசைதிருப்பியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.

2. உணர்ச்சிக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லாதது போல குறிப்பிட்டிருக்கிறீர்கள். எதுவாக இருப்பினும் உணர்ச்சிவசப்பட்டதால் தான் வழங்கப்பட்ட எச்சரிக்கையை அறிவுபூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் இவ்வளவு எழுதுகிறீர்கள்.

3. உண்மையில் நீங்கள் கருத்தைத் திசைதிருப்பியவராக அல்லாமல் இருந்திருந்தால் எச்சரிக்கையை உங்களுக்கு வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளாமல் "அந்தத் தலைப்பின்" கீழான உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்திருக்கவேண்டும்.

4. திசைதிருப்பியவர் நீங்கள் அல்லாத பட்சத்தில், வழங்கப்பட்ட எச்சரிக்கையை உங்களுக்கு வழங்கப்பட்டாதாக நீங்கள் ஏடுத்துக்கொண்டால் அது உங்களின் _ _ _ _ _ _ _ _ _ யைக் குறிக்கிறது.

5. கருத்தைக் கண்காணிப்பது கருத்தாளரைக் கண்காணிப்பது என்று உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அல்லது மற்றவர்களைக் குழப்ப நினைத்தால் - மன்னிக்கவும். நோக்கர்கள், அங்கத்துவர்கள், கருத்தாளர்கள் - இம்மூன்று நிலைகளும் அந்தந்த நேரங்களில் மாறுபடும்.

6. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் நீங்கள் பாதைமாறிப் போகிறீர்கள் என்று சொன்னால், நீங்கள் "வாகனம் மாறிப்போனால் என்ன இலக்கை அடைஞ்சால் சரிதானே" என்று எழுதுகிறீர்கள்.

7. மூன்று பக்கம் போனபிறகு வந்து சொல்கிறீர்கள், நான்னு பக்கம் போனபிறகு சொல்கிறீர்கள் என்று வருத்தப்படுவது நியாயம் தான் குருவிகள். *மூன்றுபக்கத்திலும் எப்போது கருத்துத் திசைமாறியது என்று நான் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லையே! யார் திசைமாற்றினார்கள் என்றும் நான் குறிப்பிடவில்லை.

8. மற்றையது நீங்கள் எழுதிய கருத்தில் மருத்துவக்குறிப்பு இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். அறிவியல்பூர்வமாக இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் குறிப்பிட்டது திசைமாற்றுகிற கருத்துக்களைப் பற்றியது. அவை எல்லாமே உங்களுடையதுதான் என்று அளவில்லாத தொப்பியைப் போட்டுக்கொண்டு அளவில்லை அளவில்லை என்றால் நான் என்ன செய்வது.

* எப்பொழுது கருத்து திசைமாறியது, யாரால் திசைமாற்றப்பட்டது என்று நான் குறிப்பிடவில்லை. காரணம், நீங்கள் எவரும் சிறுபிள்ளைகள் அல்ல என்பதாலும் அது அவசியமற்றது என்பாதாலும்- திசைமாறியவர்கள், திசைமாற்றியவர்கள் எல்லோரும் கருத்துக்குள் மீண்டும் வரவேண்டும் என்பதாலேயே எச்சரிக்கை செய்யப்பட்டது.

எழுதப்பட்ட எச்சரிக்கையை பலரும் சரியாகவே விளங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். அப்படி, எச்சரிக்கையை நண்பர் "குருவிகள்" தவிர மற்றவர்களும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையென்றால் எழுதுங்கள்.


Reply
#9
அங்கு கருத்தை உண்மையில் திசை திருப்பியது நீங்களே....என்பதே எமது நிலைப்பாடு...ஒருவரும் கருத்தை திசை திருப்பவில்லை என்றால் ஏன் அந்த எச்சரிக்கைச் செய்தியை அங்கு தந்தீர்கள்...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வேறொரு இடத்தில்..ஏன் இங்கேயே புதிய தலைப்பில் தந்திருக்கலாமே....???! அதனால்தான்.... இப்படி வசமாக மாட்டிக் கொள்ளும் வேளைகளில் தப்பித்துக் கொள்வீர்கள் என்பதற்காக... எச்சரிக்கை என்றால் ஏன் எதற்காக எதுகருதி எவருக்கு எதிராக தரப்படுகிறது என்று கூறும்படி பலரும் பல மட்டுறுத்தினர்களை வலியுறுத்தியும் அதை எவரும் தொடர்ந்து கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை....! :twisted:

அதுபோக பாதிக்கப்பட்ட பிந்தான் குரல்தர வேண்டும் என்பது போல எண்ணுவது தவறு பாதிக்கப்படாத ஆயிரம் ஆயிரம் பேர் போர்க்களம் சென்றதில்லையோ....மடியவில்லையோ...ஒரே இலட்சியத்திற்காக.....! மற்றவர்கள் மெளனிகளாக இருக்க விரும்பின் அதற்காக நாமும் அவர்களையே பின்பற்ற வேண்டும் என்று எண்ணின் அநியாயங்களும் நியாயங்கள் ஆக்கப்படும்....! Idea

எமக்குத்தேவை இங்கு கருத்துக்கள் மீது மறைமுகமாக நடக்கும் பக்கச்சார்பான விடயங்கள் சிலவற்றை... மற்றவர்கள் சொல்ல மறைக்க விரும்புவதை வெளியே சொல்வதுதான்....அதைச் சொல்வதால் நீங்கள் என்ன எவர் எது கொண்டு எம்மை துன்புறுத்த நினைத்தாலும் உண்மை உறங்க நாம் அனுமதியோம்....! Idea

நிச்சயமாக அதே மருத்துவக் குறிப்பில் எழுதுவோம்...ஆனால் முந்திரிக் கொட்டைபோல் நடுவே நுழைந்திருக்கும் அந்த முக்கிய... கருத்துத் திசைமாற்றி... எச்சரிக்கையை அங்கிருந்து அகற்றி வேறிடத்தில் வைக்க வேண்டும்....இன்றேல் அதில் கருத்தெழுதுவது எமக்கு தனிப்பட்ட முயற்சிகளை அவமதிப்பது போன்றதாக அமையும்....! இது எமது தனிப்பட்ட முடிவு இதை யாருக்காகவும் நாம் மாற்ற வேண்டியதில்லை....!அதே போல் நீங்களும் மாற்றாமல் விடலாம்....???! அது உங்கள் விருப்பம்....!

உணர்ச்சி அறிவு....இப்படி மிகுதி எல்லாம் ஏன் எமக்கே நீங்கள் மீண்டும் எழுதினீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம்...விலங்குகள் ஆளப்படுவது உணர்ச்சியின் கீழ் பகுத்தறிவு மனிதன் ஆளப்படுவது அறிவின் கீழ் என ஒரு ஞானி சொன்னதாக ஞாபகம்....ஆனால் இறுதியாக ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறோம் இது உங்களுடனான எமது கருத்துப்பரிமாற்றமே அன்றி வேறில்லை....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
<img src='http://smileys.smileycentral.com/cat/12/12_2_1.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
:roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
ஏன் வசி எல்லோரும் சென்றி போடுறதிலையே குறியா நிக்கிறியள்....! STOP ஓட...உந்த STOP கண்டால ஆமிக்காரன் உருவந்தான் முன்னால நிக்குது வசி உருவமில்ல.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
சரியான லொள்ளுக் குருவி நீங்கள் :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)