06-23-2004, 02:47 PM
நம்மவர்களின் வாழ்க்கையில் வெளிநாட்டுக் காசு என்பது இப்போது பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது. ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளையாவது வெளிநாட்டில் இல்லையென்றால் அவர்களின் சீவியம் கஷ்டம் என்று ஒரு வழமையே தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அநேகமாக, ஒரு குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டில் இல்லாத நிலைமை நம்மவர்களின் மத்தியில் அபூர்வம்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் நம்மவர்கள் என்ன பாடுபடுகின்றார்கள் என்பதைப் பற்றி இங்குள்ள நம்மவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. உண்டியலில் பணம் வருகிறதென்றால் போதும் அவ்வளவுதான். வெளிநாட்டில் அவர்கள் வெயிலில், குளிரில் என்று படும் கஷ்டங்களைப் பற்றி கடிதம் எழுதினாலும் என்ன செய்வது தம்பி வீட்டு நிலைமையை யோசித்து மனதைப் பொறுத்து வாழப்பழக்கொள். சகோதரங்கள் கரைசேர வேண்டுமல்லவா என்று கண்களைக் கலங்க வைக்கக்க் கூடியதாக பதில் கடிதம் எழுதுவதில் நம்மவர்கள் பாண்டித்தியம் பெற்று விட்டார்கள்.
போர் நிலைமைகளினால் வடக்கு,கிழக்கில் ஏற்பட்ட அவலங்களுக்கு மத்தியிலும், நம்மவர்கள் எமது பாசையில் சொல்வதானால் 'ஒருவாறு சரிக் கட்டினார்கள்' என்றால் அதற்கு பெருந்துணை புரிந்து இந்த வெளிநாட்டுக் காசுதான் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்துவரும் நம்மவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்களின் நிலைமைகளின் அவலம் குறித்து எவருமே பெரிதாக அக்கறைப்படுவதாக இல்லை. அவர்கள் எந்த நோக்கத்துக்காக அந்தப் பாலைவன நாடுகளுக்குச் சென்றார்களோ அந்த நோக்கம் நிறைவேறுவதாக இல்லை. மாறாக, முன்னர் இருந்ததையும்விட வாழ்க்கை பெரும் கஷ்டமானதாகப் போயிருப்பதையும் காணமுடிகிறது.
நேற்றுக்கூட சார்ஜாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் இந்தியப் பிரஜையால் கொல்லப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பைகளில் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தியைப் படித்திருப்பீர்கள். இப்படி எத்தனை பேருக்கு நேர்ந்த சதி எமக்குத் தெரியாமல் போனதோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். மானம் மரியாதையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். உயிரைப் போக்கக் துணிச்சல் இல்லாமல் நாடு திரும்பியவர்களை குடும்பத்தவர்கள் திரும்பியும் பார்க்காமல் அநாதை இல்லங்களில் தஞ்சமடைந்தவர்களும் ஏராளம்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைசெய்யும் இலங்கையர்களில் 64 சதவீதமானவர்கள் வெறுங்கையுடன் தான் கட்டுநாயக்கா வந்து இறங்குகிறார்களாம். விமானம் ஏறுவதற்கு முன்னர் தங்களிடம் இருந்தவற்றைக்கூட திரும்பிவரும்போது அவர்களிடம் காணமுடிவதில்லையாம். வீட்டில் விட்டு விட்டுப்போன கணவன்மான், பிள்ளைகளைக் கூட நாடு திரும்பி வந்து தேட வேண்டிய நிலையில் சில பெண்கள்.
இது எனது கண்டுபிடிப்பில்லை. வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் இயக்கம் அண்மையில் கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றில் சிறீஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்வி யசான்ஜலி தேவிகா என்பவர் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் இத்தகவல் வெளியாகியிருக்கிறது.
வெளிநாட்டுக் காசு கையிலை கிடைத்ததும் அது எப்படி வருகிறது போகிறது என்று கொஞ்சமேனும் யோசிக்காமல் ஊதாரித்தனம் பண்ணுகின்றவர்களின் கண்களைத் திறக்க வேண்டும் என்பதற்காக இதை உங்களுடன் பகிர்கிறேன். வேறு ஒன்றுமில்லை.
வெளிநாட்டு வேலைக்குச் செல்கிற 50 பெண்களில் 46பேர்தான் பொருளாதாரக் கஷ்டங்களால் அவ்வாறு செய்கின்றார்கள். எஞ்சியவர்கள் குடும்பப் பிரச்சினையில் இருந்து தப்புவதற்காகத்தான் வெளிநாட்டு வேலைக்குப் போகின்றார்கள்.
பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாட்டு வேலைக்குப் போகிற 46 பெண்களில் 19 பேர் தங்களின் பணவசதியைப் பெருக்குவதற்காகப் போகிறார்கள். 13 பேர் வீடுகள், சொத்துக்களை வாங்குவதற்காகப் பணம் சேர்க்கப் போகின்றார்கள். அதேவேளை, 4பேர் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைக்குப் போகிறார்கள். 50 பணிப்பெண்களில் 25பேர் கடும் வட்டிக்கு கடன் வாங்குகின்றார்கள் என்று தேவிகா தனது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.
இவ்வாறு கடும் வட்டிக்கு கடன் பெற்று வெளிநாடு போகிற பெண்கள் திரும்பி வந்து கடன்களை அடைத்தும் கையில் ஒரு சதமும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். மீண்டும் வெளிநாடு போவதற்காக அவர்கள் கடும் வட்டிக்கு மீண்டும் கடன்படுகின்றார்கள். 13 பேர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் எந்தவிதமான பிணையும் இல்லாமல் கடன் வாங்கிச் செல்கின்ற அதேவேளை, 50 பேரில் 8 பேர் வீடு வாசல்களை அடகுவைத்துச் செல்கின்றார்கள். 50 பேரில் ஒருவருக்குத்தான் கணவனிடம் இருந்து உதவி கிடைக்கிறது.
40 வீதமான கணவர்கள் குடும்பத் தலைவன் என்று பிள்ளைப் பெயர் பதிவுக்குத்தான் இருக்கின்றார்கள். மற்றும்படி, குடும்பத்தின் ஜீவனோபாயத்துக்காக எந்தத் தொழிலையும் செய்வதில்லை. இவர்கள் மனைவிமாரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லுமாறு உற்சாகப்படுத்துகிறார்கள்.
இந்தப் பணிப் பெண்களின் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் பல விதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி நாளடைவில் நாசகாரத்தனமான சிந்தனையுடையவர்களாக சமூகத்தில் பிரவேசிப்பதால் வெளிநாட்டு வேலைக்கு பெண்களை அனுப்பவது எமது நாட்டுக்கு ஒரு சாபக் கேடாக அமைகிறது. இதனால் பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதை அரசாங்கம் ஊக்குவிக்கக் கூடாது.
நாட்டு நீண்ட காலப் போக்கில் ஏற்பட்ப் போகிற பாதிப்புப் பற்றிப் பொருட்படுத்தாமல், வெளிநாட்டு செலாவணிக்காக அரசாங்கம் பெண்களை வெளிநாட்டு வேலைக்கு ஊக்குவிக்கின்றது. மாதம் 2500ரூபா சம்பாதித்துக்கொண்டு பிள்ளைகளைக் கவனிப்பது சிறந்தது. அதைவிட்டு விட்டு மாதம் 8000 ரூபா சம்பாதிப்பதற்காகச் சென்று ஈற்றில் குடும்பம் உட்பட சகலதையும் இழப்பதில் என்ன மிஞ்சப் போகிறது என்று தேவிகா கேட்கிறார்.
பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் 6 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்.
பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதில் இருக்கிற ஆபத்தை உணர்ந்து இந்தியா அதை முற்றுமுழுதாகத் தடை செய்திருக்கிறது. பாகிஸ்தானும் பங்காளதேஷீம் கடுமையான நிபந்தனைகளுடனேயே பெண்களை வேலைக்கு அனுமதிக்கின்றன. பெணகள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதால் சமுதாயத்துக்கு ஏற்படுகிற ஆபத்துக்கள் குறித்து ஆய்வறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டி அந்தச் சாபக்கேட்டை நிறுத்துமாறு வலியுறுத்தினாலும் எமது அரசாங்கம் அவ்வாறு செய்யத் தயாரில்லை. பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதைத் தடை செய்யத்தான் தயக்கம் என்றால், உற்சாகப்படுத்தாமலாவது இருக்கலாமல்லவா? இவ்வாறு விரிவுரையாளர் தேவிகா அந்தக் கருத்தரங்கில் தர்மாவேசத்துடன் விளக்கங்கள் தந்தார்.
உண்மையில் இதை நீங்கள் எத்தனைபேர் அறீந்திர்களோ தெரியாது என்பதால் உங்கள் எல்லோருக்கும் இது தெரியவேண்டுமென்ற அக்கறையில் இதை சொல்லுகிறேன்.
வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தாய்மாரின் பெண் பிள்ளைகளை தந்தைமார் கெடுத்ததாகவும் செய்திகளை நாங்கள் படிக்கின்றோம். வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிட்டு தனது குடும்பம் தான் அனுப்பிய பணத்தில் சந்தோசமாக இருப்பதைப் பாரக்கும் ஆவலில் ஓடோடி வரும் பெண்மணிகள்.
கணவன்மார் ஊதாரித்தனமாக பணத்தைச் செலவு செய்து பிள்ளைகளையும் அப்போ என்று கைவிட்டு, இன்னொருத்தியுடன் உல்லாசம் செய்வதைக் கடண்ட அவல அனுபவங்கள் பற்றி படித்திருப்பீர்கள். தாய்மாரின் முறையான பராமரிப்பில் வாழ வாய்ப்பில்லாமல், தாய் அனுப்புகின்ற காசில் ஊதாரித்தனம் பண்ணும் அப்பன்மார் ஏதோ தாணோ என்று வளர்ந்த ஆண் பிள்ளைகளில் பலர் தான் இன்று பாதாளலோகம் அது இது என்று அடாவடித்தனம் பண்ணுகின்ற கும்பல்களில் பெரும்பாலும் சேருகின்றார்கள்.
இந்தமாதிரியான நிலைமைகளால் தான் சமுதாயம் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது என்பதையும் பணம் மாத்திரம் தான் வாழ்வு என்ற சிந்தனை கொண்டு வந்த தாழ்வு இது என்பதையும் நம்வர்கள் புரிந்து கொள்ளவேணும்.
காசு ஒரு பிரபஞ்சப்பரத்தை என்று யாரோ ஒருமேதை சொன்னதாக எங்கேயோ வாசித்த ஞாபகம் எனக்கு. அந்த மேதை யார் என்று மூளையைப்போட்டுக் குழப்பியும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. அறிந்தால், அறிய முடிந்தால் எனக்கும் அறிவியுங்கள்.
அவர் சொன்னது எவ்வளவு தூரம் சரி என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள உங்களிடம் விட்டு விடுகிறேன் பொறுப்பை.
அண்ணாவியார் தினக்குரல் & sooriyan.com
வெளிநாடுகளில் வேலை செய்யும் நம்மவர்கள் என்ன பாடுபடுகின்றார்கள் என்பதைப் பற்றி இங்குள்ள நம்மவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. உண்டியலில் பணம் வருகிறதென்றால் போதும் அவ்வளவுதான். வெளிநாட்டில் அவர்கள் வெயிலில், குளிரில் என்று படும் கஷ்டங்களைப் பற்றி கடிதம் எழுதினாலும் என்ன செய்வது தம்பி வீட்டு நிலைமையை யோசித்து மனதைப் பொறுத்து வாழப்பழக்கொள். சகோதரங்கள் கரைசேர வேண்டுமல்லவா என்று கண்களைக் கலங்க வைக்கக்க் கூடியதாக பதில் கடிதம் எழுதுவதில் நம்மவர்கள் பாண்டித்தியம் பெற்று விட்டார்கள்.
போர் நிலைமைகளினால் வடக்கு,கிழக்கில் ஏற்பட்ட அவலங்களுக்கு மத்தியிலும், நம்மவர்கள் எமது பாசையில் சொல்வதானால் 'ஒருவாறு சரிக் கட்டினார்கள்' என்றால் அதற்கு பெருந்துணை புரிந்து இந்த வெளிநாட்டுக் காசுதான் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்துவரும் நம்மவர்களில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்களின் நிலைமைகளின் அவலம் குறித்து எவருமே பெரிதாக அக்கறைப்படுவதாக இல்லை. அவர்கள் எந்த நோக்கத்துக்காக அந்தப் பாலைவன நாடுகளுக்குச் சென்றார்களோ அந்த நோக்கம் நிறைவேறுவதாக இல்லை. மாறாக, முன்னர் இருந்ததையும்விட வாழ்க்கை பெரும் கஷ்டமானதாகப் போயிருப்பதையும் காணமுடிகிறது.
நேற்றுக்கூட சார்ஜாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் இந்தியப் பிரஜையால் கொல்லப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பைகளில் போட்டு வைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தியைப் படித்திருப்பீர்கள். இப்படி எத்தனை பேருக்கு நேர்ந்த சதி எமக்குத் தெரியாமல் போனதோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். மானம் மரியாதையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். உயிரைப் போக்கக் துணிச்சல் இல்லாமல் நாடு திரும்பியவர்களை குடும்பத்தவர்கள் திரும்பியும் பார்க்காமல் அநாதை இல்லங்களில் தஞ்சமடைந்தவர்களும் ஏராளம்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைசெய்யும் இலங்கையர்களில் 64 சதவீதமானவர்கள் வெறுங்கையுடன் தான் கட்டுநாயக்கா வந்து இறங்குகிறார்களாம். விமானம் ஏறுவதற்கு முன்னர் தங்களிடம் இருந்தவற்றைக்கூட திரும்பிவரும்போது அவர்களிடம் காணமுடிவதில்லையாம். வீட்டில் விட்டு விட்டுப்போன கணவன்மான், பிள்ளைகளைக் கூட நாடு திரும்பி வந்து தேட வேண்டிய நிலையில் சில பெண்கள்.
இது எனது கண்டுபிடிப்பில்லை. வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கென்று அமைக்கப்பட்டிருக்கும் இயக்கம் அண்மையில் கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றில் சிறீஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் செல்வி யசான்ஜலி தேவிகா என்பவர் சமர்ப்பித்த அறிக்கையொன்றில் இத்தகவல் வெளியாகியிருக்கிறது.
வெளிநாட்டுக் காசு கையிலை கிடைத்ததும் அது எப்படி வருகிறது போகிறது என்று கொஞ்சமேனும் யோசிக்காமல் ஊதாரித்தனம் பண்ணுகின்றவர்களின் கண்களைத் திறக்க வேண்டும் என்பதற்காக இதை உங்களுடன் பகிர்கிறேன். வேறு ஒன்றுமில்லை.
வெளிநாட்டு வேலைக்குச் செல்கிற 50 பெண்களில் 46பேர்தான் பொருளாதாரக் கஷ்டங்களால் அவ்வாறு செய்கின்றார்கள். எஞ்சியவர்கள் குடும்பப் பிரச்சினையில் இருந்து தப்புவதற்காகத்தான் வெளிநாட்டு வேலைக்குப் போகின்றார்கள்.
பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாட்டு வேலைக்குப் போகிற 46 பெண்களில் 19 பேர் தங்களின் பணவசதியைப் பெருக்குவதற்காகப் போகிறார்கள். 13 பேர் வீடுகள், சொத்துக்களை வாங்குவதற்காகப் பணம் சேர்க்கப் போகின்றார்கள். அதேவேளை, 4பேர் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலைக்குப் போகிறார்கள். 50 பணிப்பெண்களில் 25பேர் கடும் வட்டிக்கு கடன் வாங்குகின்றார்கள் என்று தேவிகா தனது ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.
இவ்வாறு கடும் வட்டிக்கு கடன் பெற்று வெளிநாடு போகிற பெண்கள் திரும்பி வந்து கடன்களை அடைத்தும் கையில் ஒரு சதமும் இல்லாமல் அவதிப்படுகின்றார்கள். மீண்டும் வெளிநாடு போவதற்காக அவர்கள் கடும் வட்டிக்கு மீண்டும் கடன்படுகின்றார்கள். 13 பேர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் எந்தவிதமான பிணையும் இல்லாமல் கடன் வாங்கிச் செல்கின்ற அதேவேளை, 50 பேரில் 8 பேர் வீடு வாசல்களை அடகுவைத்துச் செல்கின்றார்கள். 50 பேரில் ஒருவருக்குத்தான் கணவனிடம் இருந்து உதவி கிடைக்கிறது.
40 வீதமான கணவர்கள் குடும்பத் தலைவன் என்று பிள்ளைப் பெயர் பதிவுக்குத்தான் இருக்கின்றார்கள். மற்றும்படி, குடும்பத்தின் ஜீவனோபாயத்துக்காக எந்தத் தொழிலையும் செய்வதில்லை. இவர்கள் மனைவிமாரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லுமாறு உற்சாகப்படுத்துகிறார்கள்.
இந்தப் பணிப் பெண்களின் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் பல விதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி நாளடைவில் நாசகாரத்தனமான சிந்தனையுடையவர்களாக சமூகத்தில் பிரவேசிப்பதால் வெளிநாட்டு வேலைக்கு பெண்களை அனுப்பவது எமது நாட்டுக்கு ஒரு சாபக் கேடாக அமைகிறது. இதனால் பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதை அரசாங்கம் ஊக்குவிக்கக் கூடாது.
நாட்டு நீண்ட காலப் போக்கில் ஏற்பட்ப் போகிற பாதிப்புப் பற்றிப் பொருட்படுத்தாமல், வெளிநாட்டு செலாவணிக்காக அரசாங்கம் பெண்களை வெளிநாட்டு வேலைக்கு ஊக்குவிக்கின்றது. மாதம் 2500ரூபா சம்பாதித்துக்கொண்டு பிள்ளைகளைக் கவனிப்பது சிறந்தது. அதைவிட்டு விட்டு மாதம் 8000 ரூபா சம்பாதிப்பதற்காகச் சென்று ஈற்றில் குடும்பம் உட்பட சகலதையும் இழப்பதில் என்ன மிஞ்சப் போகிறது என்று தேவிகா கேட்கிறார்.
பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் 6 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்.
பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதில் இருக்கிற ஆபத்தை உணர்ந்து இந்தியா அதை முற்றுமுழுதாகத் தடை செய்திருக்கிறது. பாகிஸ்தானும் பங்காளதேஷீம் கடுமையான நிபந்தனைகளுடனேயே பெண்களை வேலைக்கு அனுமதிக்கின்றன. பெணகள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதால் சமுதாயத்துக்கு ஏற்படுகிற ஆபத்துக்கள் குறித்து ஆய்வறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டி அந்தச் சாபக்கேட்டை நிறுத்துமாறு வலியுறுத்தினாலும் எமது அரசாங்கம் அவ்வாறு செய்யத் தயாரில்லை. பெண்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதைத் தடை செய்யத்தான் தயக்கம் என்றால், உற்சாகப்படுத்தாமலாவது இருக்கலாமல்லவா? இவ்வாறு விரிவுரையாளர் தேவிகா அந்தக் கருத்தரங்கில் தர்மாவேசத்துடன் விளக்கங்கள் தந்தார்.
உண்மையில் இதை நீங்கள் எத்தனைபேர் அறீந்திர்களோ தெரியாது என்பதால் உங்கள் எல்லோருக்கும் இது தெரியவேண்டுமென்ற அக்கறையில் இதை சொல்லுகிறேன்.
வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தாய்மாரின் பெண் பிள்ளைகளை தந்தைமார் கெடுத்ததாகவும் செய்திகளை நாங்கள் படிக்கின்றோம். வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிட்டு தனது குடும்பம் தான் அனுப்பிய பணத்தில் சந்தோசமாக இருப்பதைப் பாரக்கும் ஆவலில் ஓடோடி வரும் பெண்மணிகள்.
கணவன்மார் ஊதாரித்தனமாக பணத்தைச் செலவு செய்து பிள்ளைகளையும் அப்போ என்று கைவிட்டு, இன்னொருத்தியுடன் உல்லாசம் செய்வதைக் கடண்ட அவல அனுபவங்கள் பற்றி படித்திருப்பீர்கள். தாய்மாரின் முறையான பராமரிப்பில் வாழ வாய்ப்பில்லாமல், தாய் அனுப்புகின்ற காசில் ஊதாரித்தனம் பண்ணும் அப்பன்மார் ஏதோ தாணோ என்று வளர்ந்த ஆண் பிள்ளைகளில் பலர் தான் இன்று பாதாளலோகம் அது இது என்று அடாவடித்தனம் பண்ணுகின்ற கும்பல்களில் பெரும்பாலும் சேருகின்றார்கள்.
இந்தமாதிரியான நிலைமைகளால் தான் சமுதாயம் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது என்பதையும் பணம் மாத்திரம் தான் வாழ்வு என்ற சிந்தனை கொண்டு வந்த தாழ்வு இது என்பதையும் நம்வர்கள் புரிந்து கொள்ளவேணும்.
காசு ஒரு பிரபஞ்சப்பரத்தை என்று யாரோ ஒருமேதை சொன்னதாக எங்கேயோ வாசித்த ஞாபகம் எனக்கு. அந்த மேதை யார் என்று மூளையைப்போட்டுக் குழப்பியும் எனக்கு உடனடியாக நினைவுக்கு வரவில்லை. அறிந்தால், அறிய முடிந்தால் எனக்கும் அறிவியுங்கள்.
அவர் சொன்னது எவ்வளவு தூரம் சரி என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள உங்களிடம் விட்டு விடுகிறேன் பொறுப்பை.
அண்ணாவியார் தினக்குரல் & sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->