08-20-2004, 06:11 PM
என்னதான் நாகரிகம் வளர்ந்து வந்த போதும், மனித நடத்தைகளில் அது தொற்றிக்கொண்ட போதும் இன்னும் மாறாதுள்ள பெடிகளை என்னவென்பது. அதிகரித்து வரும் திருமணப்போட்டிகளை எண்னும் போது பெரும் வேடிக்கை யாகவும் வேதனையாகவும் உள்ளது. தெருவில் போகும் போதோ, பஸ் தரிப்பு நிலையத்தில் நிற்கும் போதோ பசித்த ஒருவர் வந்து எம்மிடம் கையேந்தினால் முகத்தைச் சுழிக்கின்றோம். 'உனக்கு உழைத்துப் பிழைக்க இயலாதா? என்ற கேள்வி வேறு. ஒருவர் இக்கட்டான நிலையில் பெற்றகடனை மீளச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவன் அவனை மரியாதைக் குறைவாகப் பேசிவிடுகிறான். கடன்பட்டவன் அவமானத்தால் குறுகிப் போகிறான். ஒருவரிடமிருந்து சும்மா காசு வாங்கவேண்டியேற்படும் போது மனம் என்னபாடுபடுகிறது.
ஆனால் திருமணம் என்றபெயரில் லட்சக்கணக்கான சொத்துக்களைக் கேட்கும் ஒரு இளைஞன், வெட்கப்படுவதில்லையே ஏன்? அடுத்தவர் உழைப்பை ஒரு பெண்ணுடன் தான் சேர்ந்து வாழ்வதற்கான கூலியாகவா கேட்கிறான். அப்படித்தான் கொட்டிக்கொடுத்து ஒருவனுக்கு பெண்ணைத்தாரைவார்க்கும் பெற்றோர், பெண்ணை வைத்துக்காப்பாற்றத்தான் சீதனம் கொடுக்கிறோம் என்கிறார்களே அவன் அந்தப் பெண்ணை வைத்துக்காப்பாற்றுகிறான். இல்லையே தாலி கட்டினால் மனைவி, காலையில் தேநீர் கொடுக்க, உணவு சமைத்துப்பரிமாற, உடை தோய்க்க, பாய்விரிக்க என்று ஒரு சம்பளமற்ற வேலையாளாகத்தானே போகிறாள். இன்னும் வீட்டுக்கு உழைக்கும் பெண்களும் கூட சீதனம் கொடுக்கிறார்கள். எல்லாம் சரி, தனக்கு வரும் வாழ்க்கைத்துணையிடம் கை நீட்டிப்பணம் வாங்கி, அந்தப் பணத்தில் தாலிக்கொடி செய்து. அந்தப்பணத்தில் கலியாணவீட்டுச் செலவையும் செய்து 'பஸ்ஸொன்றையே ஒரு ஹையேஸ்" வாகனத்தையோ வாடகை அமர்த்தி நண்பர்கள் உறவினர்களை ஏற்றி விலாசம் காட்டும் போது கொஞ்சம் கூட வெட்கம் ஏற்படுவதில்லையோ?
கணவனைவிட மனைவி கூடப் படித்தால் சரியல்ல, வயசு கூடிற்றால் பெரிய வேலையில் கூடியசம்பளத்தில் இருந்தால் சரியல்ல, சீதனம் வாங்கும் போதுதான் விலைக்கு அவிழ்த்த மாடுதான் என்ற நினைப்பு ஏன் வருவதில்லை. இளைஞன்கள் சமூகமே.... மானமிழந்து போவதுபோலதான் தெரிகிறது.
குருவிகூட தாமாகக் கூடுகட்டியபின்தான் குடும்பம் தொடங்குகிறது. எனக்குத் தெரிந்த விலங்கினங்கள்கூட தமது இடத்தை நிச்சயம் செய்தபின்பே கூடுகின்றன. மனிதன் மட்டும் கலியாணம் செய்யுமுன் வீட் கட்டித்தாறியளோ என்று மாமனாரைக் கேட்கிறான். சீதனம் என்பதே கேவலம். ஆண்மைக்கு விடப்படும் ஏல விற்பனையை வேறெப்படிச் சொல்வது.
திருமணம் முடித்து புதுக்கருக்கழியாத சோடிபட்டு வேட்டி கூறைப்புடவை சகிதம் கோவிலுக்கு வருகிறது. புதிதாக எடுத்த மோட்டார் சைக்கிள் பெண்ணின் கழுத்தில் இன்னும் தொய்யதா வட்டத்தாலிக் கொடி அட்டியல் கைநிறைந்த தங்கவளையல், பத்து விரல் மோதிரம், மார் பதக்க சங்கிலி, முத்துக்குவியல் தோடு, மாப்பிள்ளையும் ஒரேவிரைவிரலில் இரண்டு மோதிரம், சங்கிலி என அட்டகாசமாகத்தான் வருகிறார். அவர்களோடு ஓட்டியவளாக மாமியார்.
பெண்ணின் தாய். 'மாப்பிள்ளை எவடம்" பேச்சுக் கொடுத்தேன். யாழ்ப்பாணம் 'ஆ...." என்றேன். பக்கத்தில் நின்றபெண், 'என்ன முடிஞ்சுது" என்று கேட்டாள். மாமியார் மனம் நோக, மூண்டு லச்சம், காச அஞ்சுலெச்சம், இனி மோட்டார் சைக்கிள், வீடுவளவு, கலியாணச் சிலவு, தரகர்கூலி எல்லாமா ஞாயமா முடிச்சுது. என்றார் கண்கலங்க. மாப்பிள்ளை பெண்ணுடன் கோயிற் பிரகாரம் சுற்றிவருகிறார். பெண்ணின் நகையை, நேர்செய்துவிடுகிறார். ஏதோ அதில் காழ்ப்பவுணாவது அவர் செய்து போட்டது போல அவனைப் பார்க்கும் போது ஒரு கொள்ளைக்காரனைப் பார்க்கும் உணர்வ ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
மாயா - ஈழநாதம்
thanks: sooriyan.com
-------------------------------------------------
இந்த தலைப்பை பற்றி நிறைய கருத்தாடல்கள் நடந்திக்கிறது இருந்தும்....!
ஆனால் திருமணம் என்றபெயரில் லட்சக்கணக்கான சொத்துக்களைக் கேட்கும் ஒரு இளைஞன், வெட்கப்படுவதில்லையே ஏன்? அடுத்தவர் உழைப்பை ஒரு பெண்ணுடன் தான் சேர்ந்து வாழ்வதற்கான கூலியாகவா கேட்கிறான். அப்படித்தான் கொட்டிக்கொடுத்து ஒருவனுக்கு பெண்ணைத்தாரைவார்க்கும் பெற்றோர், பெண்ணை வைத்துக்காப்பாற்றத்தான் சீதனம் கொடுக்கிறோம் என்கிறார்களே அவன் அந்தப் பெண்ணை வைத்துக்காப்பாற்றுகிறான். இல்லையே தாலி கட்டினால் மனைவி, காலையில் தேநீர் கொடுக்க, உணவு சமைத்துப்பரிமாற, உடை தோய்க்க, பாய்விரிக்க என்று ஒரு சம்பளமற்ற வேலையாளாகத்தானே போகிறாள். இன்னும் வீட்டுக்கு உழைக்கும் பெண்களும் கூட சீதனம் கொடுக்கிறார்கள். எல்லாம் சரி, தனக்கு வரும் வாழ்க்கைத்துணையிடம் கை நீட்டிப்பணம் வாங்கி, அந்தப் பணத்தில் தாலிக்கொடி செய்து. அந்தப்பணத்தில் கலியாணவீட்டுச் செலவையும் செய்து 'பஸ்ஸொன்றையே ஒரு ஹையேஸ்" வாகனத்தையோ வாடகை அமர்த்தி நண்பர்கள் உறவினர்களை ஏற்றி விலாசம் காட்டும் போது கொஞ்சம் கூட வெட்கம் ஏற்படுவதில்லையோ?
கணவனைவிட மனைவி கூடப் படித்தால் சரியல்ல, வயசு கூடிற்றால் பெரிய வேலையில் கூடியசம்பளத்தில் இருந்தால் சரியல்ல, சீதனம் வாங்கும் போதுதான் விலைக்கு அவிழ்த்த மாடுதான் என்ற நினைப்பு ஏன் வருவதில்லை. இளைஞன்கள் சமூகமே.... மானமிழந்து போவதுபோலதான் தெரிகிறது.
குருவிகூட தாமாகக் கூடுகட்டியபின்தான் குடும்பம் தொடங்குகிறது. எனக்குத் தெரிந்த விலங்கினங்கள்கூட தமது இடத்தை நிச்சயம் செய்தபின்பே கூடுகின்றன. மனிதன் மட்டும் கலியாணம் செய்யுமுன் வீட் கட்டித்தாறியளோ என்று மாமனாரைக் கேட்கிறான். சீதனம் என்பதே கேவலம். ஆண்மைக்கு விடப்படும் ஏல விற்பனையை வேறெப்படிச் சொல்வது.
திருமணம் முடித்து புதுக்கருக்கழியாத சோடிபட்டு வேட்டி கூறைப்புடவை சகிதம் கோவிலுக்கு வருகிறது. புதிதாக எடுத்த மோட்டார் சைக்கிள் பெண்ணின் கழுத்தில் இன்னும் தொய்யதா வட்டத்தாலிக் கொடி அட்டியல் கைநிறைந்த தங்கவளையல், பத்து விரல் மோதிரம், மார் பதக்க சங்கிலி, முத்துக்குவியல் தோடு, மாப்பிள்ளையும் ஒரேவிரைவிரலில் இரண்டு மோதிரம், சங்கிலி என அட்டகாசமாகத்தான் வருகிறார். அவர்களோடு ஓட்டியவளாக மாமியார்.
பெண்ணின் தாய். 'மாப்பிள்ளை எவடம்" பேச்சுக் கொடுத்தேன். யாழ்ப்பாணம் 'ஆ...." என்றேன். பக்கத்தில் நின்றபெண், 'என்ன முடிஞ்சுது" என்று கேட்டாள். மாமியார் மனம் நோக, மூண்டு லச்சம், காச அஞ்சுலெச்சம், இனி மோட்டார் சைக்கிள், வீடுவளவு, கலியாணச் சிலவு, தரகர்கூலி எல்லாமா ஞாயமா முடிச்சுது. என்றார் கண்கலங்க. மாப்பிள்ளை பெண்ணுடன் கோயிற் பிரகாரம் சுற்றிவருகிறார். பெண்ணின் நகையை, நேர்செய்துவிடுகிறார். ஏதோ அதில் காழ்ப்பவுணாவது அவர் செய்து போட்டது போல அவனைப் பார்க்கும் போது ஒரு கொள்ளைக்காரனைப் பார்க்கும் உணர்வ ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.
மாயா - ஈழநாதம்
thanks: sooriyan.com
-------------------------------------------------
இந்த தலைப்பை பற்றி நிறைய கருத்தாடல்கள் நடந்திக்கிறது இருந்தும்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: