Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
நிதர்சனம் தருகின்ற நிஜமான உடனடிச்செய்திகள்.
கருணாவின் கூட்டுக்கட்சி இணைப்பாளர் திடீரென்று காணாமல் போயுள்ளார்.?
ஜ சனிக்கிழமைஇ 27 நவம்பர் 2004 ஸ ஜ கொழும்பிலிருந்து சாந்திதேவி ஸ
கோணல் கருணா என்பவர் அண்மையில் புதிய கட்சியொன்றை உருவாக்கியிருந்தார். அதன் ஒரு படிநிலையாக இந்தியாவின் உத்தரவிற்கு அமைய இந்திய உளவுத்துறை அமைப்பான றோ அமைப்பின் பிரதிநிதிகளான ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினர்களை இணைத்துத் தமிழீழ மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற ஒன்றையும் உருவாக்கியிருந்தார். இந்தக் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளராக மனோ மாஸ்ரர் எனப்படும் இராசரத்தினம் செயற்பட்டு வந்தார். இன்று இராசரத்தினம் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்றில் பெயர் குறிப்பிடாத ஆங்கில இணையத்தளத்தின் செய்தியாக வாசிக்கப்பட்டுள்ளது. முன்பு ஈ.என்,டி,எல்,எவ், அமைப்பின் வானொலியில் கடமையாற்றிய அறிவிப்பாளரே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள்
ஆனந்தசங்கரியுடனான கூட்டுத்தொடர்பினை வைத்திருக்கும் அக்கட்சியின் உறுப்பினர் ஒருவருடன் இச் செய்தி தொடர்பாக மேலதிக தகவல்களை அறியும் பொருட்டு தொலைபேசியுூடாகத் தொடர்பினை ஏற்படுத்த முற்பட்ட போது இவர்களை அணுக முடியவில்லை. இந்த விடயம் தொடர்பாகத் தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டதும் மேலதிக தகவல்களை அறியத்தருவோம். அதுவரை வாசகர்கள் பொறுமை காக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
இன்று தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர் தின உரை மிகவும் உறுதியானதாக இருக்கும்.
ஜ சனிக்கிழமைஇ 27 நவம்பர் 2004 ஸ ஜ கிளிநொச்சியிலிருந்து சொக்கன் ஸ
தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்தின உரை இன்று வெளிவரும் நிலையில் இந்த உரையில் சில மிக முக்கியமான விடயங்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவீரர் தின உரை இராணுவ அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டுவதுடன் சமாதானப் பேச்சு வார்த்தையின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் தொடரப்படவேண்டும். என்பதனையும் நீண்டு செல்லும் சமாதானப் பேச்சுவார்த்தை மாவீரர்களின் தியாகத்திற்கும் போராட்டத்திற்கும் பங்கம் ஏற்படுத்துவதுடன் அதன் பிரதிபலிப்புகளையும் தெளிவாகவும் எடுத்துரைக்கப்படவிருக்கிறது.
இந்தக் கருப்பொருளில் இன்றைய மாவீரர் தின உரை இடம்பெறும் எனவும் தெரிய தெரியவருகிறது.
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
கொழும்பு புறநகர் பகுதியில் 3 தமிழ் பெண்கள் பொலிசாரால் கைது.
ஜ புதன்கிழமைஇ 1 டிசெம்பர் 2004 ஸ ஜ அருள் ஸ
கொழும்பின் புறநகர்ப் பகுதியான பத்திரமுல்ல பகுதியில் மூன்று தமிழ்ப்பெண்கள் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வெளிநாடு செல்வதற்கு வந்து நின்ற இரண்டு பெண்களும் , வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த ஒரு தமிழ்ப் பெண்ணும் பொலிசாரால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. எந்தவிதமான குற்றமும் செய்யாத இந்தப் பெண்கள் மூவரும் விசாரணைக்கென்று பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யபட்டு வருவதாகவும் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
niவாயசளயயெஅ@லயாழழ.உழ.ரம
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
அம்பாறையில் புதிய இராணுவ பொலிஸ் உளவுப்பிரிவு சேவையில் தீவிரம்.
ஜ புதன்கிழமைஇ 1 டிசெம்பர் 2004 ஸ ஜ மட்டக்களப்பிலிருந்து புயல் ஸ
அம்பாறை மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் ஜனாதிபதியின் பணிப்பின் பெயரில் திடீரென்று பொலிஸ் மற்றும் இராணுவ உளவுப்பிரிவினரின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அத்துடன் இப்பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுக் கூட்டங்களை இந்த உளவுப்பிரினரால் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகலாம் என்று கருதும் அரச தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இத்தகைய வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
எதற்காக இந்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
ஜ திங்கட்கிழமைஇ 29 நவம்பர் 2004 ஸ ஜ நாடாளுமன்றம் ஸ
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் காலத்தின் ஒரு கட்டாயமாக 1997ஆம் ஆண்டில் தொடர்ச்சியான ஆலோசனைகள் திட்டமிடல்களின் பின்னணியில் ஆர்வம் மிக்க தமிழ் ஊடகவியலாளர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சர்வதேச ரீதியாக ஊடகத்துறையின் வளர்ச்சி ஜெட் வேகத்தில் காணப்பட்ட அதேவேளையில் தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சி மிக மந்தமானதாகவே அமைந்திருந்தது. மறுபுறத்தில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சர்வதேச சாசனங்கள் பல உலகநாடுகளில் அங்கீகாரத்தைப் பெற்றுவந்த போதிலும் தமிழ் ஊடகவியலாளர் அச்சத்தின் மத்தியிலேயே தமது பணிகளை மேற்கொள் வேண்டிய நிலையும் இந்த நாட்டில் காணப்பட்டது.
அவர்களின் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்தது. தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசாங்கமோ அல்லது தேசிய ரீதியாகவுள்ள சங்கமோ அல்லது தேசிய ரீதியாகவுள்ள ஊடகவியலாளர் அமைப்புக்களோ தமிழ் ஊடகவியலாளர்களின் தேவைகள், பிரச்சினைகள் பற்றிக் கண்டு கொண்டு கொள்வதேயில்லை. இந்த நிலைமைகளுக்கு முடிவைக் காணும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராகக் காணப்படும் அடக்குமுறையில் ஒரு பகுதியாக தமிழர்களின் குரலாக ஒலிக்கும் ஊடகங்களுக்கு வாய்ப்ப10ட்டுப் போடுவதையே அரசாங்கமும் விரும்பியது. இந்த நிலைமையின் உச்சகட்டமாக 1997ஆம் ஆண்டில் ஒரு சம்பவம் இடம் பெற்றது. வீரகேசரி பத்திரிகையில் அலுவலக நிருபர் ஹீகஜனும், வீரகேசரியன் வவுனியா நிருபராகக் கடமையாற்றிய பீ.மாணிக்கவாசகமும் பயங்கரவாதத்துக்கு எதிரான படைப் பிரிவினால் கைது செய்யப்பட்டனர். தனிமையில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் இவர்களைச் சம்பந்தப்படுத்தும் செய்திகள் வெளிவந்த போதிலும் பல மாதகாலமாக குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமலேயே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் மீது நீதி மன்றத்தில் விசாரணைகளும் நடத்தப்படவில்லை. அரச பயங்கரவாதம் கட்டவிழ்ந்து விடப்பட்டிருந்த நிலையில் இது வழமையானதாக இருந்த போதிலும், பிரபலமான தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் கடமையாற்றும் முன்னணி ஊடகவியலாளர்கள் இருவர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவும் இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பது தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அச்சமளிப்பதாகவே இருந்தது.
இதில் குறிப்பிடத்தக்க அச்சம் என்னவென்றால், இரண்டு பத்திரிகையாளர்கள் நீதி விசாரணைகள் ஏதுமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் எந்த ஒரு அமைப்பும் அதற்கெதிராகப் போராடவோ, குரல் கொடுக்கவோ முன்வரவில்லை. சாதாரணமாக ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டாலேயே வீதியில் இறங்கி மறியல் போராட்டங்கள் நடத்தும் தேசிய ரீதியான அமைப்புக்கள், இதனைக் கண்டும் காணதவையாக இருந்தன. இதற்கு அச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், இந்நாட்டின் பெரும்பான்மையின மக்கள் இரத்ததுடன் கலந்துவிட்ட இனவாதமும் இதற்கு ஒரு காரணம், ஆங்கில சிங்களப் பத்திரிகைகளும் எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் கைதான பத்திரிகையாளர்களை பயங்கரவாத சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபடுத்திய செய்திகளையே வெளியிட்டுவந்தன. இந்த நிலையில் சர்வதேச ரீதியாகச் செயற்படும் ஊடக அமைப்புகளும், இந்த விடயத்தை ஊடக சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகக் கருதவில்லை.
இந்த நிலையில்தான் தமிழ் ஊடகவியலாளர்களுக்கெனக் குரல் கொடுப்பதற்கான தனியான அமைப்பு ஒன்று தேவை என்பது உணரப்பட்டது. அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் ஊடகவியலாளர்களாக இருந்தாலும், எமது பிரச்சினைகள் தனித்துவமானவை, தேசிய அமைப்புகள் அதனைப் பிரதிபலிக்கப்போவதில்லை என்பதும் தெளிவாக உணரப்பட்டது. மாணிக்கவாசகமும், சிறீகஜனும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் சில மாத காலத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டபோது பாதுகாப்புத் துறையினரின் சோடிப்புகளும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தேசிய அமைப்புகளும் அம்பலமாகின. ஆக, எமது பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு, எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, எமது நலன்களைப் பேணிக்கொள்வதற்கு தனியான அமைப்பு ஒன்று தேவை என்பது தெளிவாக உணரப்பட்டது. தேசிய அமைப்புகளை நம்பியிருப்பது அர்த்தமில்லை என்பதையும் அப்போதுதான் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் உணர்த்தார்கள்.
இதனை உணர்ந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட சந்திப்புக்கள், கலந்துரையாடல்களின் விளைவாகக் கருக்கட்டியதுதான் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். பின்னர் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உத்தியோகப10ர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. வடக்கு,கிழக்கு, மலையகம் உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 90 வரையிலான ஊடகவியலாளர்கள் இந்த ஆரம்ப வைபத்தில் கலந்து கொண்டார்கள். இந்த ஆரம்ப வைபவத்தில் வைத்தே ஒன்றியத்தின் யாப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. திருமலையைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் எஸ்.குருநாதன் ஒன்றியத்தின் முதலாவது தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார். தினக்குரல் பத்திரிகையில் பணிபுரிந்த ப10.சீவகன் முதலாவது செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதான நோக்கங்களாக பின்வருவன எமது யாப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1. தமிழ் ஊடகவியலாளர்களின் நலன்களுக்காகவும், அவர்களது தொழில் ரீதியான மேம்பாடுகளுக்காகவும் செயற்படுத்தல்.
2. தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளின் போதும், அவர்களின் சார்பில் செயற்படுத்தல்.
3.அரசியல். பாதுகாப்பு முதலான நிலவரங்களில் கீழ் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், அச்சுறுத்தல்கள், சிக்கல்கள் முதலானவற்றின் போது அங்கத்தவர்களின் நலனுக்காகச் செயற்படுதல்.
4. அங்கத்தவர்களின் தொழில் ரீதியான பிணக்குகளின்போதும், தலையிட்டு நடவடிக்கை எடுத்தல்
5. அங்கத்தவர்கள் தொழில் புரியும் நிறுவனங்களில் நிருவாகத்திடமிருந்து எழுகின்ற பிணக்குகளின் போதும், அதிகார துஷ்பிரயோகத்தின் போதும், அங்கத்தவர்கள் சார்பில் செயற்படுதல்.
6. அங்கத்தவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படும் சிக்கல்கள், பிணக்குகளின் போது செயற்படுதல்
7. ஏனைய தனிநபர்கள், அமைப்புகள் முதலானவற்றிலிருந்து எழும் பிரச்சினைகளின்போது, செயற்படுத்தல்.
8. அங்கத்தவர்கள் சகல விதத்திலும் இன ஒதுக்கல் மற்றும் ஏனைய பாராபட்சங்களால் பாதிக்கப்படும் போது, நீதியைப் பெற்றுக்கொடுக்கச் செயற்படுத்தல்.
9. ஊடகவியல் துறை சார்ந்த அநீதிகளுக்கு எதிராகச் செயற்படுத்தல்.
ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக எமது யாப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் இவைதான். இவ்வாறான பிரச்சினைகளில் அங்கத்தவரின் அல்லது அவரது பின் உருத்தாளியின் எழுத்து வடிவிலான விண்ணப்பத்தின் பேரில், செயற்குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு எமது ஒன்றியம் செயற்படும்.
இவ்வகையில் கடந்த காலங்களில் நாம் பல சவால்களைச் சந்தித்திருக்கிறோம். எமது ஒன்றியத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த எம்.நிமலராஜனின் படுகொலை எம் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒரு நிகழ்வாக 2000 அக்டோபர் 19ம் திகதி நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்று சில நாட்களிலேயே கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக கவன ஈர்ப்பு மறியல் போராட்டம் ஒன்றை சுதந்திர ஊடக அமைப்புடன் (குசநந ஆநனஐய ஆழஎநஅநயெ) இணைந்து நாம் நடாத்தியிருந்தோம். இதனைவிட ஊடகத்துறை அமைசருடனான சந்திப்புகளின் போதும் இது தொடர்பாக நாம் பலதடவை பிரஸ்தாபித்திருந்ததுடன், நிமலராஜன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இந்தப் படுகொலை நடைபெற்று இன்று நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், இந்தக் கொலை விசாரணை தொடர்பாக எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாதது எமக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துவதாகவேயுள்ளது.
இதனைவிட எமது ஒன்றியத்தின் உப தலைவர்களில் ஒருவராக இருந்த ஜ.நடேசன் இவ்வருடம் மே மாதம் மட்டக்களப்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டமையும் எமக்குப் பேரதிர்ச்சியைத் தரும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்பாடுகளில் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்காற்றிச் செயற்பட்டவர்தான் நடேசன். நிமலராஜனைப் போல தான் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தியமைக்காகவே நடேசன் படுகொலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளின் மத்தியிலும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட்ட நடேசன் அதற்கான பலனாக மரணத்தைத் தழுவிக்கொண்டார்.
நடேசனின் இந்த திடீர் மறைவு எமது ஒன்றியத்துக்கு பேரிழப்பாக இருந்த அதேவேளையில், அவர் மரணமடைந்த தருணத்திலிருந்து நெல்லியடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரையிலும் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமே மேற்கொண்டிருந்தது. அனைத்துச் செலவீனங்களையும் நாமே பொறுப்பேற்றுக் கொண்டோம். அத்துடன், நடேசனின் குடும்பத்தினருக்கும் குறிப்பிடத்தக்கதொரு நிதி உதவியைச் செய்திருந்தோம். அதேவேளையில், நடேசனின் படுகொலை தொடர்பாக பாராபட்சமற்;ற நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தகவல் ஊடகத்துறை அமைச்சரிடம் முன்வைத்திருந்தோம். நிமலராஜன் கொலை வழக்கைப் போலவே நடேசனின் கொலை வழங்கும் முன்னேற்றம் எதுவும் இல்லாதிருப்பது எமக்கு அதிருப்தியைத்தர்ன ஏற்படுத்துகின்றது. இதற்கு சில அரசியல் காரணங்கள் இருக்கின்ற என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் இந்தக் காரணங்கள் தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரத்தை அச்றுத்தும் ஒரு அம்சமாகவே தொடர்ந்தும் இருக்கின்றது என்பதை ஊடக சுதந்திரத்துக்காகப் போராடும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றோம். இவ்வாறான அரசியல் காரணங்கள், அரசியல் பின்னணிகள் இருக்கும் வரையில் தமிழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றொரு விடயத்தையும் குறி;ப்பிட வேண்டிய தேவை இருக்கின்றது. அதாவது. நடேசனின் படுகொலையைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் பணியாற்றிய பல ஊடகவியலாளர்க்ள அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறியிருக்கின்றார்கள். இவர்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியதால் அவர்கள் தாம் நேசித்த, பணிபுரிந்த பகுதிகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இவ்வாறு வெளியேறிய மூன்று பத்திரிகையாளர்கள் அரசியல் தஞ்சம் கோரி ஜரோப்பிய நாடுகளுக்கும் சென்றிருக்கின்றார்கள். இது தமிழ் ஊடகத்துறை எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலைத்தான் வெளிப்படுவதாக இருக்கின்றது.
ஊடகவியலாளர்களுடைய பாதுகாப்பு என்பதற்கு அப்பால் சென்று பின்வரும் நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
1. தமிழ் ஊடகவியலாளர்களின் சமூக, பொருளாதார, கலாசார, கல்வி மேம்பாட்டுக்காக உழைத்தல்.
2. ஊடகவியலாளர்கள் அனைவர் மத்தியிலும் புரிந்துணர்வு, ஒருங்கிணைப்பு, இணக்கப்பாட்டினை ஏற்படுத்தல்.
3. ஏனைய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கங்கள் மத்தியிலும் நட்புறவை ஏற்படுத்தி இணக்கப்பாட்டுடன் செயற்படுத்தல்.
4. அங்கத்தவர்களின் கல்வித்தரம் மற்றும் அந்தஸ்த்தை உயர்த்துவதற்காக உதவுதல்
5. இளைய தலைமுறை ஊடகவியலாளர்களை ஊக்குவித்தல்.
6. பிராந்திய ஊடகவியலாளர்கள் மத்தியில் தொடர்புக்கு வழிவகுத்தல்.
7. சகல ஊடத்துறையிலும் ஊடகத்துறை நிறுவனங்களிலும் தமிழ் சிறுபான்மை இனத்தவர்களுக்கு மறுக்கப்படுகின்ற சட்ட முறையிலான உரிமைகளைப் பெற குரல் கொடுத்தல்
8. அங்கத்தவர்களின் நலன்கருதி பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துதல்.
இந்த நோக்கங்களை அடைவதற்காக கடந்த சில காலங்களில் குறிப்பிடத்தக்களவுக்கு எமது செயற்பாடுகள் அமைந்திருந்தாலும், அவை போதுமானவையல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் நலன்களை முன்னிட்டு பல பயிற்சிப் பட்டறைகள் நடைமுறையிலிருக்கின்ற போதிலும்கூட, கடந்த இரண்டு வருட காலத்தில் இது போன்ற பயிற்சிகளை நடந்த முடியாமல் போய்விட்டது. நாட்டில் போர்நிறுத்தம் நடைமுறையிருக்கின்றபோதிலும்கூட, பொதுத் தேர்தல் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் என்பன இவ்வாறான பயிற்சிக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதில் எமக்குச் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. இருந்த போதிலும் சுதந்திர பத்திரிகையாளர் அமைப்பு, பத்திரிகை முரண்பாட்டு ஆணைக்குழு, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் போன்றவற்றுடன் இவ்வாறான கருத்தரங்குகளை நடத்தவது தொடர்பாக நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய ஆதரவுடன் சில கருத்தரங்குகளை எதிர்காலத்தில் நடத்தக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
இது போன்ற விடயத்தில் பத்திரிகை உரிமையாளர்களின் ஆதரவையும் நாம் முக்கியமாக எதிர்பார்க்கின்றோம். பத்திரிகைகள் மேலும் தரமானவையாக வெளிவரவேண்டுமானால் இரண்டு விடயங்கள் அவசியம். ஒன்று ஊடகவியலாளர்களின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும், புதிய நுட்பங்களையும், முறைகளையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும், அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென முறையான நிறுவனம் எதுவும் இதுவரை காலமும் இந்த நாட்டில் இருக்காத காரணத்தால், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக ஊடக அமைப்புகளே உள்ளன. எமது கடமைகளில் ஒன்றாக அதனைத்தான் நாம் மேற்கொள்கின்றோம். இரண்டாவதாக, ஊடக சுதந்திரம் இல்லாத நிலையில் எந்த ஒரு ஊடகமும் தரமானதாக வரப்போவதில்லை. அந்த ஊடக சுதந்திரத்தைப் பெறுவதற்காகவும், பேணுவதற்காகவும் பாடுபடும் ஒரு அமைப்பாகவே எமது அமைப்பு இருக்கின்றது. ஆக, ஏதோ ஒரு வகையில் ஊடகங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதாகவே எமது செயற்பாடுகள் உள்ளன. ஊடகவியலாளர்களுடைய செயற்திறனை மேம்படுத்துவதன் மூலம் ஊடகங்களின் தரத்தை உயர்த்துவதாகவே எமது செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இந்த வகையில்தான் ஊடக நிறுவன உரிமையாளர்களின் தேவைகளையும் நாம் ப10ர்த்தி செய்கின்றோம். ஊடக உரிமையாளர்களும் எம்முடைய தேவைகளை உணர்ந்து அவற்றை செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதற்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இந்நாட்டில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கும் ஊடகவியலாளர்களுடைய மேம்பாட்டுக்குமாக எதனையும் செய்வதாக இருக்கவில்லை. இதனைக் கருத்திற்கொண்டே வருடாந்தம் சுமார் பத்து ஊடகவியலாளர்களைத் தெரிவு செய்து அவர்களைக் கௌரவிப்பதென்ற முடிவை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் எடுத்தது, தமிழ் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக இதனை நாம் மேற்கொள்கின்றோம். தமிழ் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை மட்டுமன்றி, தமிழ் ஆர்வலர்களாக இருக்கின்ற தொழில் அதிபர்கள், சமூகசேவையாளர்கள் சிலரையும் இதற்காக நாம் நாடவேண்டியிருந்தது. அந்த வகையில் மனமுவந்து விருப்பத்துடன் இதற்காக தம்மாலியன்ற உதவிகளை அவர்கள் அனைவரும் வழங்கியிருக்கின்றார்கள். இன்றைய நிகழ்வு சிறப்பாக நடைபெறுகின்றதென்றால் அதற்கு அவர்களுடைய நிதி உதவி எமக்குப் பெரும் பலமாக இருக்கின்றது என்பது உண்மை. அவர்களுக்கு நாம் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கின்றோம். எதிர்வரும் வருடங்களிலும் எம்முடன் இணைந்து செயற்பட அவர்களை அழைக்கின்றோம்.
ஊடகவியலாளர்களின் பணி ஒர சமூகக் கடமை என்ற வகையில்தான் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்தும் அமைந்திருக்கும். இந்த வகையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அமைந்திருக்கும். இந்த வகையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரும் எமது செயற்பாடுகளில் தீவிர ஆர்வத்துடன் பங்குகொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆர். புhரதி
செயலாளர்
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
என்னடாப்பா? பாடை, சுடலை, சயந்தன், NYPD?,CIA? ........ ஒரு பெரிய கூட்டமே உது டமிழோ றிபிழோ எண்டு ஓடி ஓடி அடிச்சு விழுந்து எழுதினாங்கள்!!!!!!!! இப்ப எங்கே ஓடி ஒழிந்திட்டாங்கள்???????? "இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்தான்". சும்மா சவுண்ட் கூட்டம்தான்?????? டோக்ஸ், கண்றி புறுட்ஸ்.......
onionkarunaa@hotmail.com
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
கலோ ஒனியன் கறுணா ! நீங்கள் விடாத வெடியா பாடை , பீடை , சயந்தன் , இவோனு உதுங்கெல்லாம் யு யுூ பி அம்மான்.
அதுசரி அம்மான் என்ன கேரளத்திலை நன்றாத்தான் சல்லாபிக்கிறியள் போலையிருக்கு ! நல்லாத்தான் வயக்கெட்டுப்போய் இருக்கிறயள்.
எதுக்கும் கவனம் அம்மான். உது தொப்பிகல காடில்லை நைனா. புள்ளிராசா வந்தானெண்டா பிறவு கட்சியுமில்லை , கதிரையுமில்லை அம்போ தான். எதுக்கும் ஜாக்கிரதையாவ இருந்திடு நைனா.
ஓ கே பாய் அதோ இதோ ஒனியன்ஸ் கறுணா :twisted:
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
அவ÷ அண்ணணுக்கே (அ)றை கொடுத்தவரல்லவா..
<b> </b>
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
அகதி அந்தஸ்து நிராகரிப்பு துன்னாலை இளைஞர் தற்கொலை.
ஜ வெள்ளிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2004 ஸ ஜ பா.சிவரஞ்சன் ஸ
பிரான்சில் அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட துன்னாலை மேற்கைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கிருமிநாசினியினை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டள்ளார். துன்னாலை மேற்கைச் சேர்ந்த பாலஜோதி பவிதரன் (வயது 25) என்பவரே தற்கொலை செய்து கொண்டவராவார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பிரான்சிலிருந்து நாடு திரும்பிய இவ் இளைஞன் தொழில் தேடி அலைந்ததாகவும் பொருத்தமான வேலை கிடைக்காமையினால் பெரும் விரக்தியடைந்த நிலையில் இருந்தாகவும் தெரிய வந்துள்ளது. இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
தி.மகேஸ்வரனை கொலை செய்வதற்காகப் போடப்பட்ட திட்டம் அம்பலம்.
ஜ வெள்ளிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2004 ஸ ஜ கொழும்பிலிருந்து நிதர்சனா ஸ
ஐ.தே.க. சிறீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு எவ்வித முன்னறிவித்தலுமின்றி திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன் அவர் வசிக்கும் பிரதேசத்தில் ஆயதம் தாங்கிய சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் தெரியவருகிறது. சிறீலங்கா ஜனாதிபதியின் செயலகத்திலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையொன்றின் பெயரில் மகேஸ்வரனின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அம்மையாரின் இரகசிய உத்தரவுக்கமைய எதிர்வரும் சில காலத்திற்குள் மகேஸ்வரனைத் தீர்த்துக்கட்டுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சகாவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த விடயத்தை மகேஸ்வரனுக்கு நம்பிக்கையானவர்கள் சிலர் உறுதிபடுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது. கடந்த பொதுத்தேர்தலில் கொழும்புத் தொகுதியில் மகேஸ்வரன் சந்திரிக்கா அம்மையாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கொலைசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உயிர்தப்பியமை இங்கு நினைவுபடுத்தப்படுகிறது. குமார் பொன்னம்பலத்தின் பாதுகாப்பு விலக்கப்பட்டு அவர் அம்மையாரின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டதுடன் அவருக்கான இரங்கல் கடிதமும் மரணத்தின் முன்பு அனுப்பி வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'>இலண்டனில் புதிய தமிழ் வானொலி மிகவிரைவில்.
ஜ வெள்ளிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2004 ஸ ஜ பாரிஸ் செல்வி ஸ </span>
இலண்டனில் புதிதாக சர்வதேச தமிழ் வானொலி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட தமிழ் வானொலியொன்று உருவாகி வருகிறது. இந்த வானொலிக்கான அனுமதிப்பத்திரத்தை பிரத்தானிய வானொலி அனுமதிபத்திரக் கட்டுபாட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த வானொலிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை வானொலிக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வருட முடிவுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானொலியின் உருவாக்கம் இதன் நிர்வாக உறுப்பினர்களின் தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில் இந்த வானொலி மகவிரைவில் ஜ.ஆர்.ரி என்ற பெயரில் இயங்க இருப்பதாகத் தெரியவருகிறது.
இதேநேரம் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக செயற்படுவதாகக் கூறிக்கொண்டு வியாபார நோக்குடன் இயங்கிவந்த வானொலியொன்று மறைமுகமாகத் தனது வானொலியின் 40 வீதமான பங்குகளை தொலைபேசி அட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு விற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர் மாற்று தமிழ் தேசவிரோதக் கும்பலொன்றின் ஆரம்பகால உறுப்பினர் எனவும் அவர்களுடன் இன்றும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருபவர் என்பதும் ஆதாரபுூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வானொலி நிர்வாகம் மிகவும் இரகசியமாகப் பேணிவருவதாகவும் , இதுதொடர்பாக நேயர்களுக்கு மறைத்து நேயர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் பெறுவதற்கான முயற்சிகளிலும் வானொலி இறங்கியிருப்பதாகவும் இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இந்த வானொலி விற்கப்படவுமில்லை வாங்கப்படவும் இல்லை....
<b> </b>
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இது வானொலிக்கு தேவையற்ற விடயம்.
வானொலி விற்கப்படவில்லை. அப்படி விற்கப்பட்டால் நீங்கள் ஆதாரத்துடன் வெளியிடுங்கள்.
<b> </b>
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
சேது :?: :?: :!: :!:
இவ்வளவு காலமும் நீர் சங்கமம் தொடர்பாக பல கதைகளைக் இங்கு எழுதி வந்தீர் ................ :!:
1) சங்கமம் துரோகிகளுக்கு விற்கப்பட்டு விட்டது :?:
2) சங்கமத்தை வாங்கியவர் முன்னால் சுளிபுர புளொட் பொறுப்பாளர் :?:
3) சங்கமத்தை வாங்கியவர் கூலி ராமராசின் கூட்டாளி :?:
4) ..... :?:
5) ........ :?:
இறுதியாக) சங்கமத்தை வாங்கியவர் வொயிஸ் ரெலிகொம் பிறேம் :?:
நீர் எழுதத் தொடங்கும்போது ஏதோ பல உண்மைகளை அவிழ்க்கப்போவதாக நினைத்தேன் :!: :!: ஆனால் ....... :?: :?: :?:
நீர் எழுதிய
1) சுளிபுர புளொட் பொறுப்பாளரும், கூலி ராமராசின் நண்பரும்தானா இந்த "வொயிஸ் பிறேம்" :?:
2) உமக்கு "வொயிஸ் பிறேம்" என்பவரைப்பற்றி எவ்வளவு தெரியும் :?:
3) "வொயிஸ் பிறேம்" இற்கும் துரோகக் கும்பல்களுக்குமிடையேயுள்ள தொடர்பை எழுதும் பார்ப்போம் :?: ,
உமது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைத் தீர்க்கவுமோ :?: செவிவழி வந்த வதந்திகலுக்கு கை, கால், தலை கண், மூக்கு, ... வைத்து உம்முடைய நாடகத்தை அரங்கேற்றவுமோ :?: இல்லை முன்பு பலர் கூறியதுபோல புலத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முற்படுகிறீர் :?:
நீர் சில நல்ல விசயங்களைச் செய்கிறீரென நினைத்தால் :?: காலப்போக்கில் உம்மீது சந்தேகங்கள்தான் வலுப்பெறுகின்றது :?: நீர் மட்டுமல்ல நீர் சார்ந்த இணையமான "நிதர்சனமும்" ஒரு மர்மப்பொதிதான் :!: :!: :!: :!: :!: :!: :!: :?: :?: :?: :?: :?:
"
"
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
http://sundar.freewebspace.com
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
சுந்தர் சொன்னாராம் ஒருவருக்கு லண்டனில் தமிழ் தேசிய பாடலை ஒரு வானொலியிலையும் போடாமல் பன்னுறன் பார் என்டு அதற்காகதான் தான் சட்டத்தையும் மிறி போடுவதாகவும் விசாரனை வரும்போது மற்ற ஊடகங்களையும் காட்டி கொடுப்பன் என்டாராம்.
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
MEERA Wrote:இது வானொலிக்கு தேவையற்ற விடயம்.
வானொலி விற்கப்படவில்லை. அப்படி விற்கப்பட்டால் நீங்கள் ஆதாரத்துடன் வெளியிடுங்கள். உந்த றேடியோப்பிரச்சனையை ஒரு பக்கத்திலை வைச்சிட்டு தமிழ்ப்பகுதியளிலை வரப்போற சண்டையிலை நீங்கள் பட்டம்குடுத்து அனுப்பின கருணாதரப்பு யாரோடை சண்டைபிடிப்பாங்கள் எண்டு சொல்லுங்கோ..? *****
Truth 'll prevail
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
Quote:இணைந்தது: 14 சித்திரை 2003
கருத்துக்கள்: 3211
வதிவிடம்: Colombo
எழுதப்பட்டது: வெள்ளி மார்கழி 10, 2004 10:05 pm Post subject:
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
http://sundar.freewebspace.com
_________________
http://www.oslovoice.com
.................................தமிழ் தேசியத்திற்காக வானலையில் கதைத்த குற்றத்திற்காக வெளியேற்றம்
சின்னப்பிள்ளைத்தனமாக ஏன் இப்பவும் இருக்கிறீ÷கள்?
ETBC ஆரம்பத்தில் சுந்த÷ ஜெயக்குமா÷ இணைவில் உருவாக்கப்பட்டது. அப்போது 50% மாலதியின் பெயரிலிருந்தது. ஆனால் ஏன் இதை இப்பேது கொண்டு வந்து செருகுகிறீ÷கள்.
சரி மாலதியின் பெயரில் 50% பங்கு இருந்திருந்தால் ஏன் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறவன் என்று கூறிக்கொண்டு தேசத்துரோகியின் 50% பங்கில் இயங்கிய வானொலியில் நிகழ்ச்சி நடத்தினீ÷கள்?
அப்போது நீங்கள் யா÷?
நீங்கள் இங்கே எழுதலாம் சேது துரோகியா இல்லையா என்பதை உரியவ÷கள் தீ÷மானிக்கட்டும் என்று.
அதையேதான் நான் சொல்லுகிறேன் சங்கமம் துரோகியா இல்லையா என்பதை உரியவ÷கள் தீ÷மானிக்கட்டும். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் .
<b> </b>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
Quote:சுந்தர் சொன்னாராம் ஒருவருக்கு லண்டனில் தமிழ் தேசிய பாடலை ஒரு வானொலியிலையும் போடாமல் பன்னுறன் பார் என்டு அதற்காகதான் தான் சட்டத்தையும் மிறி போடுவதாகவும் விசாரனை வரும்போது மற்ற ஊடகங்களையும் காட்டி கொடுப்பன் என்டாராம்
பாட்டு போட்டாலும் பிரச்சனை போடாட்டாலும் பிரச்சனை.
என்ன சேது வானொலியில பாடு போடவேண்டாம் என்று சொல்லுகிறீரா?
அப்படி என்றால் நீ÷ தான் தேசதுரோகி.....
<b> </b>
|