12-24-2004, 09:22 PM
ஈழ விடுதலைக்காக எனக் கிளம்பி பல அமைப்புகள் தடம்புரண்டு தமிழினத்துக்கு துரோகம் இழைத்தன. இவற்றில் ஒன்றிலிருந்து வெளியேறி பிறகு மற்றொன்றிலிருந்து வெளியேறி கடைசியில் அதிலிருந்து வெளியேறி தனித்து ஒரு நபரானார் அந்த மனிதன். அவர் இந்தியாவில் செய்த பணி ஆட்கடத்தல். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலத்தில் இந்திய உளவுப்படையான ரோவினால் புளொட்டிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பரந்தன் ராஜன் என்பவர் தலைமையிலான தேசவிரோத அமைப்பினருடன் இந்தியாவில் அலைந்து திரிந்த அந்த நபர் தொடர்புகொண்டார். பரந்தன் ராஜனின் தொழில் காட்டிக்கொடுப்பு வெளிநாடுகளுக்கு போதைமருந்து கடத்தல். இந்த பரந்தன் ராஜனுக்கு போதைமருந்து கடத்துவதற்கு ஆள்பிடித்துக் கொடுப்பதையே இந்த நபர் செய்து வருமானமீட்டிக்கொண்டிருந்தார்.
தமிழ்மக்கள் மீது காட்டுமிராண்டித்னத்தை 1990இல் பிரேமதாச அரசு கட்டவிழ்த்துவிட்டது. முதலில் படைகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் புதிதாக ஒரு கும்பல் நுழைக்கப்பட்டது. அந்தக்கும்பல் முதலில் தீவுக்குள்தான் நுழைக்கப்பட்டது. அது ஒரு தமிழ்க்கும்பல்.
ஒரு சில தனது நபர்களுடன் சேர்ந்து பணயக்கைதிகளாக ஆட்களைக் கடத்தி தமிழகத்தில் மிரட்டிய பணம் பறிக்கும் வேலையையும் அவர்செய்துவந்தார். 1990 வரை இந்த நபர் தமிழகத்தில் இந்தத் தொழிலை செய்துவந்தார். இடையில் பரந்தன் ராஜனுடன் ஏற்பட்ட பிணக்கினை அடுத்து அந்த நபருக்கு அவர்செய்த விரோத செயற்பாடுகளால் தமிழகத்திலும் இருக்கமுடியவில்லை. இதனால் அந்த நபர் வேறு தளம் தேடவேண்டி ஏற்பட்டது.
இந்தச்சு10ழலில் சிறிலங்கா அரசுத்தலைவர் பிரேமதாசாவிற்கு நம்பிக்கையான ஒரு தமிழ்க்கைக்கூலிப்படை தேவைப்பட்டத. ஏனைய தமிழ் அமைப்புகள் இந்திய அடிவருடிகளாக இருந்தன. இந்திய இராணுவ வருகையுடன் பிரேமதாசவுக்கு இந்தியா தொடர்பான எதிர்புணர்வு இருந்தது. இதனால் பிரேமதாச இந்தியப்படைகளுடன் இயக்கிய அமைப்புகளை முழுமையாக நம்பத்தயாராக இல்லை. அதனால் தனக்கு முழுதான விசுவாசப்படையை உருவாக்க அவர் விருப்பினார். அந்த வேளையில் அநாதரவாக கொழும்பு வந்திறங்கிய அந்த கொள்ளைக்கும்பல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கியத. தனது சில சகாக்களுடன் உருவாக்கிய அந்தக்கும்பல் சனநாயகத்துக்கு திரும்பிய ஆயுத அமைப்பு என்ற பெயரில் அது லாபமீட்ட முனைந்தது. சனநாயகத்துக்கு திரும்பல் போர்வை ஒரு இராணுவத்தின் சம்பளம் பெறும் கூலிப்படையாக மாறுதலாகும். இந்த வகையில் ஆரம்பத்தில் இந்தக்கும்பலுக்கு பிரேமதாச அரசு ஆதரவளிக்கவில்லை.
ஏனெனில் அதற்கான தேவையை அவர் உணரவில்லை. யாழ் தீவகத்தில் மக்கள் படைகளிடம் பிடிபட்டபின்னர்தான் அந்த மக்களிடம் அரசியல் செய்ய ஒரு கும்பலின்தேவை பிரேமதாசவினால் உணரப்பட்டது. அந்தவேளையில்தான் பிரேமதாச அந்தக்கும்பலுக்கு கைகொடுத்த்தொடங்கினார். அந்தக்கும்பல் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாக மாற்றி புதிய ஒரு அரசியல் தந்திரோபாயத்தை அவர் தொடங்கினார். இது இந்தியா பயன்படுத்திய தந்திரம் முதல்தடiவாயக அதனை சிறிலங்கா அரசு கையாளத்தொடங்கியதெனில் அது இந்தக் கும்பலுடன் யாழ்ப்பாணம் தீவகத்திலாகும்.
தீவகத்தில் அரச நிர்வாகச்சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரச அதிகாரிகளின் பணிகள் மூலம் இந்த அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டது.
1990இன் கடைசியில் அந்தக் கொள்ளைக்கும்பல் சிறிலங்கா கடற்படையினால் தீவகத்தில் கொண்டு வந்து இறக்கப்ட்டது. இந்தக் கும்பல் தமிழகத்தில் அகதிமுகாம்களுக்குச் சென்று அங்கு வதைந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்;களிடம் பரப்புரை செய்து அவர்களுக்கு நல்வாழ்வளிப்பதாக வாக்களித்து அவர்களை திரட்டி தமது அமைப்பில் இணைத்துக்கொண்டது. அந்த நபர்களுடனும்தான் அந்தக்கும்பல் தீவுக்குள் இறக்கிவிடப்பட்டது.
அந்தக்கும்பல் பெயர் ஈ.பி.டி.பி அதன் தலைவரான செயலாளர் டக்ளஸ் தேவானந்தா.
தமிழ்மக்கள் மீது காட்டுமிராண்டித்னத்தை 1990இல் பிரேமதாச அரசு கட்டவிழ்த்துவிட்டது. முதலில் படைகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் புதிதாக ஒரு கும்பல் நுழைக்கப்பட்டது. அந்தக்கும்பல் முதலில் தீவுக்குள்தான் நுழைக்கப்பட்டது. அது ஒரு தமிழ்க்கும்பல்.
ஒரு சில தனது நபர்களுடன் சேர்ந்து பணயக்கைதிகளாக ஆட்களைக் கடத்தி தமிழகத்தில் மிரட்டிய பணம் பறிக்கும் வேலையையும் அவர்செய்துவந்தார். 1990 வரை இந்த நபர் தமிழகத்தில் இந்தத் தொழிலை செய்துவந்தார். இடையில் பரந்தன் ராஜனுடன் ஏற்பட்ட பிணக்கினை அடுத்து அந்த நபருக்கு அவர்செய்த விரோத செயற்பாடுகளால் தமிழகத்திலும் இருக்கமுடியவில்லை. இதனால் அந்த நபர் வேறு தளம் தேடவேண்டி ஏற்பட்டது.
இந்தச்சு10ழலில் சிறிலங்கா அரசுத்தலைவர் பிரேமதாசாவிற்கு நம்பிக்கையான ஒரு தமிழ்க்கைக்கூலிப்படை தேவைப்பட்டத. ஏனைய தமிழ் அமைப்புகள் இந்திய அடிவருடிகளாக இருந்தன. இந்திய இராணுவ வருகையுடன் பிரேமதாசவுக்கு இந்தியா தொடர்பான எதிர்புணர்வு இருந்தது. இதனால் பிரேமதாச இந்தியப்படைகளுடன் இயக்கிய அமைப்புகளை முழுமையாக நம்பத்தயாராக இல்லை. அதனால் தனக்கு முழுதான விசுவாசப்படையை உருவாக்க அவர் விருப்பினார். அந்த வேளையில் அநாதரவாக கொழும்பு வந்திறங்கிய அந்த கொள்ளைக்கும்பல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கியத. தனது சில சகாக்களுடன் உருவாக்கிய அந்தக்கும்பல் சனநாயகத்துக்கு திரும்பிய ஆயுத அமைப்பு என்ற பெயரில் அது லாபமீட்ட முனைந்தது. சனநாயகத்துக்கு திரும்பல் போர்வை ஒரு இராணுவத்தின் சம்பளம் பெறும் கூலிப்படையாக மாறுதலாகும். இந்த வகையில் ஆரம்பத்தில் இந்தக்கும்பலுக்கு பிரேமதாச அரசு ஆதரவளிக்கவில்லை.
ஏனெனில் அதற்கான தேவையை அவர் உணரவில்லை. யாழ் தீவகத்தில் மக்கள் படைகளிடம் பிடிபட்டபின்னர்தான் அந்த மக்களிடம் அரசியல் செய்ய ஒரு கும்பலின்தேவை பிரேமதாசவினால் உணரப்பட்டது. அந்தவேளையில்தான் பிரேமதாச அந்தக்கும்பலுக்கு கைகொடுத்த்தொடங்கினார். அந்தக்கும்பல் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாக மாற்றி புதிய ஒரு அரசியல் தந்திரோபாயத்தை அவர் தொடங்கினார். இது இந்தியா பயன்படுத்திய தந்திரம் முதல்தடiவாயக அதனை சிறிலங்கா அரசு கையாளத்தொடங்கியதெனில் அது இந்தக் கும்பலுடன் யாழ்ப்பாணம் தீவகத்திலாகும்.
தீவகத்தில் அரச நிர்வாகச்சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரச அதிகாரிகளின் பணிகள் மூலம் இந்த அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டது.
1990இன் கடைசியில் அந்தக் கொள்ளைக்கும்பல் சிறிலங்கா கடற்படையினால் தீவகத்தில் கொண்டு வந்து இறக்கப்ட்டது. இந்தக் கும்பல் தமிழகத்தில் அகதிமுகாம்களுக்குச் சென்று அங்கு வதைந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்;களிடம் பரப்புரை செய்து அவர்களுக்கு நல்வாழ்வளிப்பதாக வாக்களித்து அவர்களை திரட்டி தமது அமைப்பில் இணைத்துக்கொண்டது. அந்த நபர்களுடனும்தான் அந்தக்கும்பல் தீவுக்குள் இறக்கிவிடப்பட்டது.
அந்தக்கும்பல் பெயர் ஈ.பி.டி.பி அதன் தலைவரான செயலாளர் டக்ளஸ் தேவானந்தா.
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...


hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->