Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழரும் திருமணமும்
#1
தமிழராகிய நாம் இன்று புலத்திலும் திருமணங்களை பொருத்தம் பார்த்து சடங்கு வைத்து தாலி கட்டி ( அக்னி)நெருப்பை சுற்றி அம்மி மிதித்து அருந்ததி(ஒரு நட்சத்திரம் )பாத்து சீதனம் வாங்கி செய்வதை ஏற்று கௌ;கிறீர்களா???
; ;
Reply
#2
எனக்கு தெரிஞ்ச வரையில் என்ன நடக்குதோ இல்லையோ, சீதனம் மட்டும் மறக்காம எல்லாரும் வாங்கினம்....

சியாம் - உங்கட கேள்விக்கு பதில் கிடைக்க முதல் வேற கேள்வி கேட்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம்...இந்த அம்மி மிதித்தல்..அருந்ததி பார்த்தல்..இவை பற்றி விளக்கமாக கூற இயலுமா?
[size=16][b].
Reply
#3
புலத்திலென்ன தாய்நிலத்திலும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டி மணவாழ்கையில் தமிழர்கள் இணைவதை எற்றுக் கொள்ள முடியாது.
காரணம்: இது தமிழனின் திருமணமல்ல. வைதீகத் திருமணம்.
<b>
?
- . - .</b>
Reply
#4
தமிழர் திருமணம் என்பது பற்றி ஒருவருக்கும் சரியான தெளிவில்லை
எப்போதும் கலாசாரம் என்பது இயங்கிக்கொண்டு இருப்பது
ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த கலாசாரம் வேறு இனி வரப்போகின்ற ஐம்பது வருடத்திற்கு பின்னர் இருக்கப்போகின்ற கலாவாரம் வேறு என்ற யதார்த்தை எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

ஆனால் தமிழர்களுடைய பண்பாடு என்பது வேறு..
இப்போதைய திருமண வைபவங்களில் கேக் வெட்டுவது எந்தக்கலாசாரம்?
பாட்டி கொடுப்பது எந்தக்கலாசாரம்?

தமிழர்கள் தாம் வாழ்வில் அறிந்து உணர்ந்தவற்றை மிக இலகுவாக எல்லோரும் விளங்க கூடியவகையில் திருக்குறலில் இருக்கு பாருங்கோ...
படியுங்கோ
முதலில் தமிழராக குணங்களில் (வேஷத்தில் அல்ல) இருக்கப்பாருங்கோ..

நான் 1100 வருடங்களுக்கு முன்பு வந்து போது தமிழர்களைப் பார்த்தேன்.
அவர்களில் பலர் இன்னும் வன்னியில் இருப்பதையும் கண்டேன்..

வெளிநாடுகளுக்கு வரவில்லை வந்தால் அங்கும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்...
every one will die one day
Reply
#5
tsunami Wrote:ஆனால் தமிழர்களுடைய பண்பாடு என்பது வேறு..
இப்போதைய திருமண வைபவங்களில் கேக் வெட்டுவது எந்தக்கலாசாரம்?
பாட்டி கொடுப்பது எந்தக்கலாசாரம்?
தமிழர்கள் செய்வது தமிழ்த் திருமண மல்ல.
இதில் கேக் வெட்டினால் என்ன? பாட்டி கொண்டாடினால் என்ன?
<b>
?
- . - .</b>
Reply
#6
தமிழ் நிலா தெரியாததை கேட்பதில் தவறில்லை..அதாகப்பட்டது அம்மி மிதிப்பது அகலிகை கதை படித்திருப்பீரகள். இந்திரனால் பாலியல் வன்முறைக்கு உட்பட் அகலிகையை கணவர் கவுதம முனிவர் கல்லாக போகுமாறு சபிக்கிறார் . அதனால்தான் கல்லாக இருக்கும் அம்மியை மிதிப்பதன் மூலம் மணப்பெண்ணை நீயும் கற்பிழந்தால்(இல்லா ஒண்டு)நீயும் கலாகபோவாய் எனவே நீயும் கற்பில் கல்லாய் உறுதியாய் இரு என்பதை அடையாளப்படுத்தவே அம்மி மிதித்தல்.உதாரணத்திற்கு கலியாணத்திற்கு பிறகு அப்பிடி இப்பிடி நடக்கக் கூடாது எண்டு முதலே சத்தியம் வாங்குதல்.கேவலமாக இல்லையா????.அடுத்தது அருந்ததி பார்த்தல் அருந்ததி என்பது வசிட்டரின் மனைவி அதுவும் ஒரு முனிவர்தான்.அவர் கற்புகரசியாய் திகழ்ந்து மும்மூர்த்திகளின் சோதனையையும் வென்றதால் அவரை வானத்தில ஒரு நட்சத்திரமாக வாழ மும்மூர்த்திகளும் அருள் கொடுக்கிறார்கள்.(இந்த கதைகளெல்லாம் ஆணாதிக்க பிராமணிகளால் புனையப்பட்ட வக்கிரங்கள்)அதேபோல் நீயும் கற்புகரசியாக இரு எனபற்காக காட்டுவது அதைவிட அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாத ஏழு நட்சத்திர கூட்டத்தில் உள்ளது அதை நடு சாமத்திலேயே வடிவா பார்க்க இயலாது அதை பிராமணி பகலில் காட்டுவார் அதுவும் அய்ரோப்பாவில் கலியாண மண்டபத்திலருந்தே அண்ணாந்து பார்க்க சொல்லுவார்(மேலே உள்ள கூரைதான் தெரியும்)இப்படி ஏன் செய்கிறேம் எதற்கு செய்கிறோம் பிராமணி என்ன சொல்கிறார் எண்டு விளங்காமலேயே காலம் காலமாய் செய்து கொண்டிமுக்கிறார்கள் எம் மக்காள்
; ;
Reply
#7
shiyam Wrote:அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாத ஏழு நட்சத்திர கூட்டத்தில் உள்ளது அதை நடு சாமத்திலேயே வடிவா பார்க்க இயலாது அதை பிராமணி பகலில் காட்டுவார் அதுவும் அய்ரோப்பாவில் கலியாண மண்டபத்திலருந்தே அண்ணாந்து பார்க்க சொல்லுவார்(மேலே உள்ள கூரைதான் தெரியும்)

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
Shiyam Wrote:அதைவிட அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாத ஏழு நட்சத்திர கூட்டத்தில் உள்ளது அதை நடு சாமத்திலேயே வடிவா பார்க்க இயலாது
என்ன சியாம் புதுக்கதை சொல்லுறீங்கள்.
யாரையா இந்த அருந்ததி நட்சத்திரத்தை ஏழு நட்சத்திரக் கூட்டத்தில் கண்டு பிடித்தது???
உண்மையில் அருத்ததி நட்சத்திரம் என்று ஒன்று இல்லை இது முற்று முழுதான கற்பனை நட்சத்திரம் மாத்திரமே. இதை ஏழு நட்சத்திரக் கூட்டத்தில் சேர்த்து பார்ப்பனங்களின் மூடநம்பிக்கைக்கு வலுச் சேர்க்காதீர்கள்.
<b>
?
- . - .</b>
Reply
#9
என்ன சாத்திரம் சம்பிரதாயம் பார்த்து மணமுடித்தாலும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகள் நிறையவே இருக்கும்.

பெண்ணும் ஆணுக்கு நிகராக உழைப்பதனால் ஆண் சொல்லவதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டியதில்லை. என்றாலும் ஆணாதிக்கம் நிறையவே எம் சமூகத்தில் உள்ளது.
<b> . .</b>
Reply
#10
அதென்ன ஆணாதிக்கம் என்பது...???! இது பற்றி உச்சரிக்கிறார்களே தவிர விளக்கிறார்கள் இல்லை எவரும்...உலகில் பெண்கள் நிலை பேசுவோரும் கூட....!

ஆண் பெண்ணை விட உடல் ரீதியில் பொதுவாகப் பலம் மிக்கவன் தான்...அதனால் தான் பொதுவா உயிரினச் சமூகங்களில் ஆண் தலைமைத்துவம் முதன்மை பெறுகிறது..! இப்போ யானைக் கூட்டத்தை எடுத்தால் அங்கு ஆண் தான் தலைமைத்துவம் பெறுகிறது...மான் அப்படி...சிங்கம் புலி...என்று பொதுவாக எல்லாமே அப்படித்தான்..மனிதனும் அந்த வகையினன் தான்...!

இருந்தாலும் மனிதன் தனக்குள்ள பகுத்தறிவை விருத்தி செய்து இயற்கையை ஆளப்பழகியதால் தனக்கான பாதுகாப்பு வாய்ப்பு அதிகரிக்க தேவை கூட பெண்ணுக்கும் சமூகத்தில் சம பங்களிப்பு வழங்க விளைந்தான்...அது ஒன்றும் பெண்களால் இயற்கையில் இயல்பாய் பெறப்பட்டவையல்ல...ஒட்டுமொத்த மனித சமூக மாற்றம் தந்தவையே அவை..! ஆண் இயற்கையாகவே கொண்டிருந்த விலங்குக் கூட்டத்துக்கு ஒத்த தலைமைத்துவத்தைத் துறந்து இன்று பெண்ணுக்கும் அதில் பங்களிப்புச் செய்ய சம சந்தர்ப்பம் அளித்திருப்பது ஒன்றும் இலகுவான மாற்றம் அல்ல...! அவை தனியே பெண்களால் தேடிப் பெறப்பட்டவையும் அல்ல...! ஆண்களின் உயரிய சிந்தனைப் போக்கு தந்த விளைவுகள் தான் அவை....!

எனினும் இன்னும் ஆண் தலைமைத்துவச் சிந்தனைகள் எங்கள் சமூகத்தில் மட்டும் இன்றி உயிரினச் சமூகங்களில் நிழவுவதற்கு ஒப்ப மனித சமூகத்தில் சிதறுண்டுதான் இருக்கின்றன...! காரணம் மனிதன் இன்னும் இயற்கையின் படைப்பாக இருப்பதால்...அவன் செயற்கையை உருவாக்கினும் இயற்கையை ஆளினும்...இயற்கை அளித்த பண்புகள் முற்றாக இழந்து விடவில்லை...இழக்கப் போவதும் இல்லை...அப்படி எதிர்பார்க்கவும் முடியாது...!

எனவே அந்த இயற்கைப் பண்புகளை வெளிக்காட்டும் ஆண்களை ஆதிக்க சகதிகள் என்று வரையறுக்க முடியாது...! ஒரு அளவுக்கு மிஞ்சி விட்டுக்கொடுக்க ஒரு மனிதனைக் கோரவும் முடியாது...விட்டுக்கொடுக்கும் பண்பு கூட ஆளுக்கு ஆள் வேறுபடும்....! ஆனால் ஒன்று நிச்சயம் பெண்களை விட ஆண்கள் விரைந்த புரிந்துணர்வு உடையவர்கள்...! அவர்கள் நிலைமைகளைச் சாதுரியமாகச் சமாளிக்கும் பண்பை வளர்த்துக் கொண்டால் சமூக விருத்திக்கி பகுத்தறிவின் பால் பலவற்றைச் செய்யலாம்...!

அதைச் செய்யத் தூண்டாமல் எமது சமூகத்தை ஆணாதிக்க சமூகம் என்று விளிப்பதைத் தவிருங்கள்...அது ஆண்கள் தங்கள் இயற்கைக்குரிய பண்புகளை விட்டுக்கொடுத்து பெண்களை சமத்துவத்துடன் அழைத்துச் செல்வதை கேலி செய்வதற்கு ஒத்ததாகும்...! அது பெண்களின் மேலாண்மை வெறியைத் தூண்ட வழி செய்யும்...! : <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> idea:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
குருவி சொன்னது மெத்தச் சரி

!
Reply
#12
குருவிகளே நீங்கள் நடைமுறையை பேசுகிறீர்கள் நான் புராணகதைகளில் எம்மக்கள் இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் பிராமணியத்தின் ஆணாதிக்கத்தின் அதாவது பெண்களை தங்களின் வெறும்போக பொருட்களாகவே நினைத்து பல கதைகளை எழுதியுள்ளனர்.அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.மகா பாரதத்தில் நல்லவர்களாக சித்திகரிக்கப்பட்ட பாண்டவர்க்கு தனித்தனியே ஒவ்வொரு பெண்டாட்டி அதைவிட 5 பேருக்கும் ஒருபெண்டாட்டி..ராமாயணத்தில் தசரதனுக்கு 6000 பெண்டாட்டி ராமருக்கு ஒண்டு அதிலையும் சந்தேகம் வந்து நெருப்பிலை குதிக்க சொன்னவர். கிருஸ்ணருக்கு உhரெல்லாம் பெண்டாட்டி அவர் செய்வதெல்லாம் கிருஸ்ண லீலை இராவணன் செய்தால் வன்முறை.அகலிகையை இந்திரன் கெடுத்தால் அகலிகைக்கே தண்டனை ஆனால் மும்மூர்த்திக்கும் உடம்பில் ஒரு துணியுமில்லாமல் சாப்பாடு போட்டால் கற்புகரசி வானத்தில் வெள்ளி என்ன நியாயம் குருவிகளே??????
; ;
Reply
#13
சிறீ ரமணன் விடி வெள்ளிக்கு கீழே ஒரு நட்சத்திரகூட்த்தில் ஏழுநட்சத்திரங்கள் உள்ளன அதை;தான் உந்த பிராமணியள் ஒவ்வெண்டுக்கு ஒவ்வொரு பேர்வைத்தவை அவை வைத்தபேர் சப்த ரிசி மண்டலம் அப்படி சொன்னால் தான் எங்கட கன சனத்திறகு விழங்கும் மற்றபடி அவைக்கு வலு சேர்க்கேல்லை
; ;
Reply
#14
Quote:...சிங்கம் புலி...என்று பொதுவாக எல்லாமே அப்படித்தான்..மனிதனும் அந்த வகையினன் தான்...!


பெண் சிங்கம் தானாம் பலமானது என்று கேள்விப்பட்டேன்.. :roll: :?:
[b][size=18]
Reply
#15
அப்படி இருக்க...வாய்ப்பில்லை..ஆனால் சிங்கக் கூட்டத்தில் பெண் சிங்கமே இரை தேடும்...ஆண் சும்மா காவல் காக்கிறதும்...வேறு கூட்டச் சிங்கங்கள் வந்தால் அடிபடுறதும்...அதற்கேற்ப அதன் பலமும் பெண் சிங்கத்தை விட அதிகம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
kuruvikal Wrote:அப்படி இருக்க...வாய்ப்பில்லை..ஆனால் சிங்கக் கூட்டத்தில் பெண் சிங்கமே இரை தேடும்...ஆண் சும்மா காவல் காக்கிறதும்...வேறு கூட்டச் சிங்கங்கள் வந்தால் அடிபடுறதும்...அதற்கேற்ப அதன் பலமும் பெண் சிங்கத்தை விட அதிகம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

ஓ அப்ப சமையல் பொறுப்பு அங்காலையோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி
[b][size=18]
Reply
#17
சியாம் அண்ணா..தகவலுக்கு மிக்க நன்றி..நல்ல அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[size=16][b].
Reply
#18
kuruvikal Wrote:அதென்ன ஆணாதிக்கம் என்பது...???! இது பற்றி உச்சரிக்கிறார்களே தவிர விளக்கிறார்கள் இல்லை எவரும்...உலகில் பெண்கள் நிலை பேசுவோரும் கூட....!

ஆண் பெண்ணை விட உடல் ரீதியில் பொதுவாகப் பலம் மிக்கவன் தான்...அதனால் தான் பொதுவா உயிரினச் சமூகங்களில் ஆண் தலைமைத்துவம் முதன்மை பெறுகிறது..! இப்போ யானைக் கூட்டத்தை எடுத்தால் அங்கு ஆண் தான் தலைமைத்துவம் பெறுகிறது...மான் அப்படி...சிங்கம் புலி...என்று பொதுவாக எல்லாமே அப்படித்தான்..மனிதனும் அந்த வகையினன் தான்...!

இருந்தாலும் மனிதன் தனக்குள்ள பகுத்தறிவை விருத்தி செய்து இயற்கையை ஆளப்பழகியதால் தனக்கான பாதுகாப்பு வாய்ப்பு அதிகரிக்க தேவை கூட பெண்ணுக்கும் சமூகத்தில் சம பங்களிப்பு வழங்க விளைந்தான்...அது ஒன்றும் பெண்களால் இயற்கையில் இயல்பாய் பெறப்பட்டவையல்ல...ஒட்டுமொத்த மனித சமூக மாற்றம் தந்தவையே அவை..! ஆண் இயற்கையாகவே கொண்டிருந்த விலங்குக் கூட்டத்துக்கு ஒத்த தலைமைத்துவத்தைத் துறந்து இன்று பெண்ணுக்கும் அதில் பங்களிப்புச் செய்ய சம சந்தர்ப்பம் அளித்திருப்பது ஒன்றும் இலகுவான மாற்றம் அல்ல...! அவை தனியே பெண்களால் தேடிப் பெறப்பட்டவையும் அல்ல...! ஆண்களின் உயரிய சிந்தனைப் போக்கு தந்த விளைவுகள் தான் அவை....!

எனினும் இன்னும் ஆண் தலைமைத்துவச் சிந்தனைகள் எங்கள் சமூகத்தில் மட்டும் இன்றி உயிரினச் சமூகங்களில் நிழவுவதற்கு ஒப்ப மனித சமூகத்தில் சிதறுண்டுதான் இருக்கின்றன...! காரணம் மனிதன் இன்னும் இயற்கையின் படைப்பாக இருப்பதால்...அவன் செயற்கையை உருவாக்கினும் இயற்கையை ஆளினும்...இயற்கை அளித்த பண்புகள் முற்றாக இழந்து விடவில்லை...இழக்கப் போவதும் இல்லை...அப்படி எதிர்பார்க்கவும் முடியாது...!

எனவே அந்த இயற்கைப் பண்புகளை வெளிக்காட்டும் ஆண்களை ஆதிக்க சகதிகள் என்று வரையறுக்க முடியாது...! ஒரு அளவுக்கு மிஞ்சி விட்டுக்கொடுக்க ஒரு மனிதனைக் கோரவும் முடியாது...விட்டுக்கொடுக்கும் பண்பு கூட ஆளுக்கு ஆள் வேறுபடும்....! ஆனால் ஒன்று நிச்சயம் பெண்களை விட ஆண்கள் விரைந்த புரிந்துணர்வு உடையவர்கள்...! அவர்கள் நிலைமைகளைச் சாதுரியமாகச் சமாளிக்கும் பண்பை வளர்த்துக் கொண்டால் சமூக விருத்திக்கி பகுத்தறிவின் பால் பலவற்றைச் செய்யலாம்...!

அதைச் செய்யத் தூண்டாமல் எமது சமூகத்தை ஆணாதிக்க சமூகம் என்று விளிப்பதைத் தவிருங்கள்...அது ஆண்கள் தங்கள் இயற்கைக்குரிய பண்புகளை விட்டுக்கொடுத்து பெண்களை சமத்துவத்துடன் அழைத்துச் செல்வதை கேலி செய்வதற்கு ஒத்ததாகும்...! அது பெண்களின் மேலாண்மை வெறியைத் தூண்ட வழி செய்யும்...! : <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> idea:
இதுதான் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. எம்மிடம் நிறையவே உள்ளது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. எமது சமூகத்தில் உள்ள குடும்பங்களில் உள்ள ஆண்களில் எத்தனை வீதமானோர் பெண்களுடன் ஆலோசித்து முக்கியமான முடிவுகள் எடுக்கின்றனர்?
<b> . .</b>
Reply
#19
இது ஆணாதிக்கம் அல்ல...இதுதான் மனித உயிரின இயல்பு....ஆனா மனித ஆண் அந்த இயல்பைக் கடந்துதான் இன்று பெண்ணிற்கு சமூகத்தில் சமபங்களிப்பு அளிக்கின்றான்...!

ஏங்க கலந்துதானே குழந்தை குட்டி பெத்துக்கிறீங்க...அப்ப எங்க போனது ஆணாதிக்கம்....ஏன் கருத்துக்களால் மட்டும் கலக்கிறீங்க இல்ல...! குழந்தை குட்டிகளையும் வைச்சுக் கொண்டுதான் விவாகரத்துக்குப் போறீங்க...இன்னொரு துணை தேட முற்படுறீங்க...இதை ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்ய அதற்கு சம உரிமை வேண்டும் என்று கோசம் போடுறீங்க..! சம உரிமை தாராளமாத்தான் இருக்கு...அதை எடுத்துக்கிற வழிகள் பிரயோகிக்க வேண்டிய இடங்கள் என்று எதுவும் தெரியாம ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று வார்த்தைகளில் வங்காளம் போறது எந்த நல்ல சமூக விளைவையும் தரப்போறதில்லை...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
எல்லாம் சரி மீண்டும் தமிழர் திருமணத்திற்கே வருவோம் ஏனெனில் தமிழ் நிலா அறிய ஆர்வமாய் இருக்கிறார்..திருமணச்சடங்கில முக்கியமான அடுத்த கட்டம் .(பெயரை நன்றாக கவனிக்கவும)கன்னிகாதானம்(எம்மவர் சிலர் இதை தெத்தம் பண்ணி கொடுத்தல் என்பார்கள்) நாட்டில் முன்பு மணமகளை தந்தை மடியிலேயோ சில இடங்களில் தாய்மாமன் மடியிலேயோ இருத்தி இந்த சடங்கை செய்வார்கள் புலத்தில் இரண்டும் இல்லாதவர்கள் வேறு யாராவது உறவினரை வைத்து செய்வார்கள்.வேறு உறவினர்கள் என்றால் மடியில் இருத்துவது இங்கு குறைவு.அப்போது புரோகிதர் ஓரு மந்திரம் சொல்லுவார்.(இனிவருங்காலங்களில் புரோகிதர் செய்யும்திருமணங்களிற்கு போவபர்கள் நன்றாக கவனிக்கவும்)ஸோம.ஹ. ப்ரதமோதிவிதே கந்தர்வோ.
விவித உத்தர.ஹ
த்ருதியோ அக்நிஷ்டே பதி....ஹ
துரீயஸ்யே மனுஸ்யக
என்று முடிப்பார் அதன் அர்த்தம் .முதலில் சோமன்(சந்திரன்) உன்னை அனுபவித்தான் பின்னர்கந்தருவன் அதன்பின்னர் அக்கினி பின்னர் முறையே இந்த மனிதனிற்கு தானமாய் கொடுக்கிறேன்.என்பதே பொருள்.இதனை அப்படியே தமழில் மொழிபொயர்து திருமண சடங்கில சொன்னால் என்ன நடக்கும்??(அதே நேரம் சோமன் எண்ட பெயரிலோ சந்திரன் எண்ட பெயரிலோ யாரும் அங்கிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்)தொடரும் Arrow
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)