Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இட்லி செய்யும் இன்னுமொருமுறை
உழுந்தை ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். (ஏறத்தாழ 7-8 மணித்தியாலங்கள். குளிர் பிரதேசங்களில் ஊறுவதற்கு ஊரை விடக் கூடிய நேரம் தேவைப் படுகிறது.) பின்னர் கழுவிச் சுத்தம் செய்து, பசுந்தாக அரைத்தெடுங்கள்.
1கப் உழுந்துக்கு 2கப் ரவை என்ற அளவில் எடுத்து, ரவையை ஆவியில் 20 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.
அவிந்த ரவை நகச்சூட்டுக்கு வந்ததும் அரைத்த உழுந்துடன் சேர்த்து சிறிதளவு உப்பும் போட்டு இட்லியாக ஊற்றக் கூடிய தன்மை வருமளவுக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கலந்து 10-12மணித்தியாலங்களுக்கு மூடி வையுங்கள்.
பின்னர் அவித்துப் பாருங்கள். கண்டிப்பாகப் பூப் போல வரும்.
நன்றி - சந்திரவதனா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
தேவையான பொருட்கள்
ரவா 4 கப்
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுந்து இரண்டு தேக்கரண்டி
கடலைப்பருப்பு இரண்டு தேக்கரண்டி
அப்பச்சோடா கால்த்தேக்கரண்டி
உப்பு அரைத்தேக்கரண்டி
முந்திரிப்ருப்பு (விரும்பினால்) எட்டு
கருவேப்பிலை தேவையான அளவு
எண்ணெய் 2 தேக்கரண்டி
தயிர் ஒரு கப்
இரும்புச்சட்டியில் எண்ணெய்விட்டு கடுகைப்போட்டு தாளிக்கவும்.கடுகு வெடிக்க உளுந்து மற்றும் கடலைப்பருப்பைபோட்டு வாசம் வரும்வரை வறுக்கவும். அதன்பின் ரவா உப்பு அப்பச்சோடாவைக்கொட்டி ரவா பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். இதை காற்றுப்புகாதபடி டின்னில் அடைத்து வையுங்கள். தேவையான போது தயிர் ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து. இட்லிமா பதத்திற்கு ஏற்ப சிறிது நீர் சேர்த்து இட்லித்தட்டுகளில் ஊற்றி ஆவியில் அவியவைக்கவும். இரவா இட்லிமேல் சிறிது கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம். நெய் சேர்த்து செட்டிநாடு இட்லியாகவும் உண்ணலாம். சட்னி மற்றும் சாம்பாருடன் ஒரு பிடி பிடியுங்கள்;. எங்கள் ஊர் இஞ்சி சம்பலுக்கும் சுவையாக இருக்கும்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆண்கள் சமையலில பிச்சு உதறீங்க.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
tamilini Wrote:ஆண்கள் சமையலில பிச்சு உதறீங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் போட்டது சுட்ட இட்லி, எனக்கு இட்லி சுட தெரியாது, சந்திரவதானா அக்காவின் குறிப்பை இங்கே போட்டேன் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
இட்லி செய்முறை தந்ததுக்கு நன்றி மதன் அண்ணா ஆதிபன் அண்ணா
அக்கா அவை சொல்லட்டும் விடுங்கோ நாளைக்கு அண்ணியாக்களுக்கு செய்யோணும் அதுதான் இப்பவே பழகினம் போல :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
thamizh.nila Wrote:Quote:தேவையான பொருட்கள்
ரவா 4 கப்
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுந்து இரண்டு தேக்கரண்டி
கடலைப்பருப்பு இரண்டு தேக்கரண்டி
அப்பச்சோடா கால்த்தேக்கரண்டி
உப்பு அரைத்தேக்கரண்டி
முந்திரிப்ருப்பு (விரும்பினால்) எட்டு
கருவேப்பிலை தேவையான அளவு
எண்ணெய் 2 தேக்கரண்டி
தயிர் ஒரு கப்
இரும்புச்சட்டியில் எண்ணெய்விட்டு கடுகைப்போட்டு தாளிக்கவும்.கடுகு வெடிக்க உளுந்து மற்றும் கடலைப்பருப்பைபோட்டு வாசம் வரும்வரை வறுக்கவும். அதன்பின் ரவா உப்பு அப்பச்சோடாவைக்கொட்டி ரவா பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். இதை காற்றுப்புகாதபடி டின்னில் அடைத்து வையுங்கள். தேவையான போது தயிர் ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து. இட்லிமா பதத்திற்கு ஏற்ப சிறிது நீர் சேர்த்து இட்லித்தட்டுகளில் ஊற்றி ஆவியில் அவியவைக்கவும். இரவா இட்லிமேல் சிறிது கொத்தமல்லி தூவி அலங்கரிக்கலாம். நெய் சேர்த்து செட்டிநாடு இட்லியாகவும் உண்ணலாம். சட்னி மற்றும் சாம்பாருடன் ஒரு பிடி பிடியுங்கள்;. எங்கள் ஊர் இஞ்சி சம்பலுக்கும் சுவையாக இருக்கும்
இந்த இட்லிக்கு என்ன பெயர்?? உடனே செய்வதற்கு அருமையான யோசனை.நன்றி.
ரவா இட்டலி............ :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
கு.க.அண்ணா - இத நான் செய்து பார்த்தேன். நல்ல ருசியாக இருந்தது..ஆனால் பொங்கி வரவேயில்லை...என்ட அண்ணாக்கள் என்ன செய்யிறது என்று சாப்பிட்டார்கள்..கொஞ்சம் களித்தண்மையாக இருந்தது..ஏன்?
[size=16][b].
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அடப்பாவி தமிழ்நிலா :evil: பாவம் உங்கட அண்ணாக்கள்..
அவர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவியுங்கள். :roll: 8)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
பேசாம அவையள் சமைத்தால் இப்படி ஆகுமா..நான் தெரிவிக்க தேவையில்ல, இங்க சுத்துவினம் இடை இடையே.. :mrgreen:
[size=16][b].
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
தமிழ்நிலா நீங்கள் சரியாக வேகவைக்காத காரணத்தால் கூட அப்படி பசைத்தன்மையுடன் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் வேகவையுங்கள். உள்ளே வெந்துள்ளதா என பார்க்க ஈக்கால் குத்திப்பார்கலாம். இல்லை என்;றால் தண்ணீரை சேர்ப்பதை தவிருங்கள். சரி அப்படியும் இட்லி சரியாக வரவில்லையா அதை தோசைக்கல்லில் ஊத்தி தோசையாக குடுங்கள்.
அண்ணாமார் அடிக்க வந்தால் என்னைக்காட்டிக்கொடுக்க வேண்டாம்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இட்லி ஓக்கே...இட்லிக்கு தொட்டுக்க பரும்பு சாம்பார் செய்வது எப்படி என்று தெரியுமா...தெரிஞ்சதச் சொல்லுறர்..
எங்களுக்கு இந்த தேக்கரண்டி மேசைக்கரண்டி எல்லாம் எடுத்து நிறுத்துச் செய்ய நேரமில்லை...இதோ இலகு வழி... (ஒரு மூன்று நாலு பேருக்குகந்தது)
சில்வர் கப்பால ஒரு கப் மைசூர் பருப்பை எடுத்துக் கழுவி பாத்திரத்தில் இட்டு ஓரளவு நசிபடக் கூடிய வரை அவிய விடுங்கள்...தேவையானால் ஒன்று இரண்டு உருளைக்கிழங்குகளை. கரட்களை சிறிதாக வெட்டி பருப்புடன் சேர்த்து அவிய விடலாம் (உப்புச் சேர்க்க வேண்டாம்)
அதேவேளை... செத்தல் மிளகாய் ( நாலைந்து) சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்..தேவையான அளவு வெங்காயம், ஒரு சில பூடு...பிறம்பாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்...சிறிதளவு மஞ்சள் பொடி...மிளகாய்ப்பொடி...சிறிதளவு தாழிப்புக் கலவை...(கடுகு சீரகம் அதுகள் கலந்தது...கடையில விக்குது)...சிறிதளவு சாம்பார் மசாலாத் தூள்.. ஆகியவற்றையும் எடுத்து தயாராக வைத்து விட்டு...
ஒரு பானில் மரக்கறி எண்ணெய் சிறிதளவு எடுத்து சூடிகாட்டிய பின் தாழிப்புக் கலவையை இட்டு பொன்னிறம் வரும் வரை தாழிக்கவும்
(கடுகு வெடிக்கும் கவனம் - இது சிறிது நேரத்துக்குள் நடந்திடும்) உடனவே வெட்டிய மிளகாய் வெங்காயம் பூடு போன்றவற்றைப் போட்டு வதக்குங்கள்...ஓரளவு வதங்கியதும் சிறிதளவு மிளகாய்த்தூள்...அதைவிடக் குறைய மஞ்சள் தூள்...சாம்பார் மசாலாத்தூள் இட்டு கலவுங்கள்...சிறிது நேரத்துக்கு அவற்றைக் கிளறிய(மிளகாய்த்தூள் மணம் போகும் வரை) பின்னர்... அவற்றை அவியவிட்ட பருப்பு, உருளைக்கிழங்கு...கரட் கொண்ட கலவையுள் சேருங்கள்...( அவை அவிந்த நீரோடேயே) பின் இந்த தாழிப்புக் கலவை பருப்புக் கலவையை நன்கு கலக்கி ஒன்று சேர்த்த பின் தேவையான அளவு உப்பை இட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு வேகவிடுங்கள்....அப்பப்ப ருசி பாத்துக்கங்க...சரியான ருசி வந்ததும் இறக்கி..இட்லியோட தொட்டுக்கங்க...!
இது...இட்லிக்கு மட்டுமல்ல...சோறு பாண் பிட்டு என்று எல்லாத்துக்கும் உதவும்...செய்வதும் இலகு...ஒரு 20 நிமிடம் போதும்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
குருவி அண்ணா - நல்ல செய்முறை...வித்தியாசமா இருக்கு..செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி.
[size=16][b].
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kuruvikal Wrote:இட்லி ஓக்கே...இட்லிக்கு தொட்டுக்க பரும்பு சாம்பார் செய்வது எப்படி என்று தெரியுமா...தெரிஞ்சதச் சொல்லுறர்..
எங்களுக்கு இந்த தேக்கரண்டி மேசைக்கரண்டி எல்லாம் எடுத்து நிறுத்துச் செய்ய நேரமில்லை...இதோ இலகு வழி... (ஒரு மூன்று நாலு பேருக்குகந்தது)
சில்வர் கப்பால ஒரு கப் மைசூர் பருப்பை எடுத்துக் கழுவி பாத்திரத்தில் இட்டு ஓரளவு நசிபடக் கூடிய வரை அவிய விடுங்கள்...தேவையானால் ஒன்று இரண்டு உருளைக்கிழங்குகளை. கரட்களை சிறிதாக வெட்டி பருப்புடன் சேர்த்து அவிய விடலாம் (உப்புச் சேர்க்க வேண்டாம்)
அதேவேளை... செத்தல் மிளகாய் ( நாலைந்து) சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்..தேவையான அளவு வெங்காயம், ஒரு சில பூடு...பிறம்பாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்...சிறிதளவு மஞ்சள் பொடி...மிளகாய்ப்பொடி...சிறிதளவு தாழிப்புக் கலவை...(கடுகு சீரகம் அதுகள் கலந்தது...கடையில விக்குது)...சிறிதளவு சாம்பார் மசாலாத் தூள்.. ஆகியவற்றையும் எடுத்து தயாராக வைத்து விட்டு...
ஒரு பானில் மரக்கறி எண்ணெய் சிறிதளவு எடுத்து சூடிகாட்டிய பின் தாழிப்புக் கலவையை இட்டு பொன்னிறம் வரும் வரை தாழிக்கவும்
(கடுகு வெடிக்கும் கவனம் - இது சிறிது நேரத்துக்குள் நடந்திடும்) உடனவே வெட்டிய மிளகாய் வெங்காயம் பூடு போன்றவற்றைப் போட்டு வதக்குங்கள்...ஓரளவு வதங்கியதும் சிறிதளவு மிளகாய்த்தூள்...அதைவிடக் குறைய மஞ்சள் தூள்...சாம்பார் மசாலாத்தூள் இட்டு கலவுங்கள்...சிறிது நேரத்துக்கு அவற்றைக் கிளறிய(மிளகாய்த்தூள் மணம் போகும் வரை) பின்னர்... அவற்றை அவியவிட்ட பருப்பு, உருளைக்கிழங்கு...கரட் கொண்ட கலவையுள் சேருங்கள்...( அவை அவிந்த நீரோடேயே) பின் இந்த தாழிப்புக் கலவை பருப்புக் கலவையை நன்கு கலக்கி ஒன்று சேர்த்த பின் தேவையான அளவு உப்பை இட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு வேகவிடுங்கள்....அப்பப்ப ருசி பாத்துக்கங்க...சரியான ருசி வந்ததும் இறக்கி..இட்லியோட தொட்டுக்கங்க...!
இது...இட்லிக்கு மட்டுமல்ல...சோறு பாண் பிட்டு என்று எல்லாத்துக்கும் உதவும்...செய்வதும் இலகு...ஒரு 20 நிமிடம் போதும்...! :wink: 
பல்நோக்கு கலவை.......... :wink:
ஆமா பாலை காணேல்ல...............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பால் தேவையில்ல...செய்து சாப்பிட்டுப் பாருங்க அப்புறம் ருசி தெரியும் விடமாட்டீங்க...பால் கொழுப்பில்லா...கொலஸ்ரோல் வராம சின்னனிலையே பாதுக்கத்திட்டா பின்னாடி அவஸ்தப்படத் தேவையில்லை இல்லா...! அதோட உடம்ப மெல்லிசா வைச்சிருக்கவும் உதவும்...! (கடையில விக்கிற பசுப்பால் விடலாம்...ஆனா சிலநேரம் திரைஞ்சிடும்...அதுதான் தவிர்க்கிறம்...அவ்வளவு உறைப்புன்னா...தயிர் இருந்தா சிறிது கலந்து அடியுங்க...சோக்கா இருக்கும்...!) :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
kuruvikal Wrote:பால் தேவையில்ல...செய்து சாப்பிட்டுப் பாருங்க அப்புறம் ருசி தெரியும் விடமாட்டீங்க...பால் கொழுப்பில்லா...கொலஸ்ரோல் வராம சின்னனிலையே பாதுக்கத்திட்டா பின்னாடி அவஸ்தப்படத் தேவையில்லை இல்லா...! அதோட உடம்ப மெல்லிசா வைச்சிருக்கவும் உதவும்...! (கடையில விக்கிற பசுப்பால் விடலாம்...ஆனா சிலநேரம் திரைஞ்சிடும்...அதுதான் தவிர்க்கிறம்...அவ்வளவு உறைப்புன்னா...தயிர் இருந்தா சிறிது கலந்து அடியுங்க...சோக்கா இருக்கும்...!) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏனுங்கோ ஆடை நீக்கின பாலில்லயோ................
பச்சதண்ணீயா கிடக்கு பால்விடாம சமைக்க............. :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>