02-23-2005, 11:58 AM
பேசுவதற்கு அரசு தயாராம்!
வடக்கு-கிழக்கு மக்களுக்கான அவசர மனி தாபிமான மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற் கொள்வதற்கான இடைக்கால அதிகாரசபை குறித் தும் இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு குறித் தும் பேசுவதற்கு அரசு தயாராகவுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது இலங்கை அரசு. போர்நிறுத்த உடன்படிக்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவு தினத்தையயாட்டி நேற்று அரசு சார்பில் அரச ஊடகத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்துக் கும் இடையிலான யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவுறு கின்றன.
தொடர்ந்து பாரிய அளவிலான யுத்தம் ஒன்று இல்லாத நிலையில் பல பெறுமதிமிக்க உயிர்கள் காக்கப்பட்டு, பரவலான அழிவுகள் தடுக்கப்பட் டுள்ளன. அதுகுறித்துத் திருப்தியைத் தெரிவிக் கும் அதேவேளையில், தான் சகல முன்னெ டுப்புக்களை மேற்கொண்ட போதிலும் , பேச்சுக்கள் மூலம் பெறப்படும் நிரந்தரத் தீர்வொன்றுக் கான சாதகமான சூழல் இதுவரை உருவாக்கப் படவில்லை என்பதையிட்டு இலங்கை அரசு கவலை கொண்டுள்ளது.
இலங்கை அரசு, அதனைப் பொறுத்தவரை யில் சொல்லிலும் செயலிலும் போர்நிறுத்த ஒப் பந்தத்தைச் செயற்படுத்துவதற்கான அதன் உறுதியான ஈடுபாட்டை வலியுறுத்துகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் அபிவிருத்தித் தேவைகளை நிறைவு செய்வதற்காக இடைக்கால அதிகார சபை யயான்றை அமைப்பது பற்றி புலிகள் இயக்கத் துடன் மீண்டும் நேரடிப் பேச்சை நடத்தவும், இனப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வொன்றைக் காண் பதற்கான பேச்சுக்களை மேற்கொள்ளவும் அரசு தொடர்ந்தும் தயாராகவுள்ளது.
சகல இலங்கையரும் சமாதானத்துடன், ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கு ஏது வாக எமது நாட்டிலிருந்ஸூது யுத்தத்தின் துன்பத்தை யும் அரசியல் வன்செயல்களையும் களைய சம் பந்தப்பட்ட சகலரும் ஒத்துழைப்பை வழங்கு வர் என அரசு நம்பிக்கை கொண்டுள்ளது
உதயன்
வடக்கு-கிழக்கு மக்களுக்கான அவசர மனி தாபிமான மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற் கொள்வதற்கான இடைக்கால அதிகாரசபை குறித் தும் இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு குறித் தும் பேசுவதற்கு அரசு தயாராகவுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது இலங்கை அரசு. போர்நிறுத்த உடன்படிக்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவு தினத்தையயாட்டி நேற்று அரசு சார்பில் அரச ஊடகத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்துக் கும் இடையிலான யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவுறு கின்றன.
தொடர்ந்து பாரிய அளவிலான யுத்தம் ஒன்று இல்லாத நிலையில் பல பெறுமதிமிக்க உயிர்கள் காக்கப்பட்டு, பரவலான அழிவுகள் தடுக்கப்பட் டுள்ளன. அதுகுறித்துத் திருப்தியைத் தெரிவிக் கும் அதேவேளையில், தான் சகல முன்னெ டுப்புக்களை மேற்கொண்ட போதிலும் , பேச்சுக்கள் மூலம் பெறப்படும் நிரந்தரத் தீர்வொன்றுக் கான சாதகமான சூழல் இதுவரை உருவாக்கப் படவில்லை என்பதையிட்டு இலங்கை அரசு கவலை கொண்டுள்ளது.
இலங்கை அரசு, அதனைப் பொறுத்தவரை யில் சொல்லிலும் செயலிலும் போர்நிறுத்த ஒப் பந்தத்தைச் செயற்படுத்துவதற்கான அதன் உறுதியான ஈடுபாட்டை வலியுறுத்துகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் அபிவிருத்தித் தேவைகளை நிறைவு செய்வதற்காக இடைக்கால அதிகார சபை யயான்றை அமைப்பது பற்றி புலிகள் இயக்கத் துடன் மீண்டும் நேரடிப் பேச்சை நடத்தவும், இனப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வொன்றைக் காண் பதற்கான பேச்சுக்களை மேற்கொள்ளவும் அரசு தொடர்ந்தும் தயாராகவுள்ளது.
சகல இலங்கையரும் சமாதானத்துடன், ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கு ஏது வாக எமது நாட்டிலிருந்ஸூது யுத்தத்தின் துன்பத்தை யும் அரசியல் வன்செயல்களையும் களைய சம் பந்தப்பட்ட சகலரும் ஒத்துழைப்பை வழங்கு வர் என அரசு நம்பிக்கை கொண்டுள்ளது
உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

