Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை அரசுக்கு தேன்னிலவு அமெரிக்காவுடனா அல்லது..........
#1
தென்னிலங்கை அரசுக்கு தேன்னிலவு அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடன்தானா ?
யாழில் இருந்து குரு


சில வாரங்களாகச் சேது சமுத்திரத்திட்டம் பற்றிää பலர் பேசுவதையும்ää எழுதுவதையும் வாசகர் எல்லோரும் அறிந்ததே. பல ஊடகங்களும் ஆய்வு அமைப்புக்களும்; சேது சமுத்திர திட்டத்தின் வரலாறு பற்றியும்@ பௌதீக காலநிலை மாற்றங்கள் பற்றியும்;@ மற்றும் பொருளாதார அரசியல் தாக்கங்கள் பற்றியும் பலவித ஆய்வுகளையுமää; கட்டுரைகளையும் எழுதியுள்ளன நடாத்தியுள்ளன. அதுமட்டுமல்ல. அறிஞர்கள் என்று சொல்லப்படுவர்கள் பலரும் கருத்தரங்குகளை நடாத்தியும் 'சுஎஸ்" (Suez) கால்வாய் போன்ற கடல் இணைப்புத் திட்டங்களோடு இதை ஒப்பிட்டும் எதிர் காலத்தில் தமிழ்த் தேசம் அனுபவிக்கப்போகும் அனுகூலங்கள் பற்றியும் எதிர்கூறல்களையும் செய்து வருகின்றனர்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளை காலனித்துவ ஆட்சியில் வைத்திருக்கும் போதுதே இங்கிலாந்தானது சேது சமுத்திரத்தை ஆழமாக்குவது என்ற எண்ணக்கருவைக் கொண்டிருந்தது என அறிக்கைகள்; தெரிவிக்கின்றன.

அதேவேளையில் ரணில் விக்கிரமசிங்க அரசு ஆட்சியிலிருந்தபோது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் அமைக்க முற்பட்டிருந்த இந்தியா இப்பொழுது ஏன் சேது சமுத்திரத்தைக் கிண்டி ஆழமாக்கும் திட்டத்திற்குப் பாய்ச்சல் செய்துள்ளது?

இது இந்திய ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட பொருளாதாரத்திட்ட விடயம் மாத்திரம்தானா? அல்லது அரசியல் மாற்றத்தால் ஏற்பட்டவொரு விடயமா?

சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் திட்டமானது ஓரிரு வருடங்களில் முடிக்கக்கூடிய திட்டமும் அல்ல@ பொருளாதார அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அது இடையில் கைவிடப்படக்கூடிய ஒரு திட்டமும் அல்ல.

இந்தநிலையில் சேது சமுத்திரத்தை ஆழமாக்கப் போவதாக இந்தியா இன்று தீவிரமாக நிற்பது ஆராயப்படவேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

இலங்கை அரசுகள் இனப்பிரச்சனை விடயத்தில் தமிழர்களுக்கு இதுவரை நியாயமான தீர்வு எதனையும் கொடுக்கவும் இல்லை@ மறுபுறத்தே தனிநாட்டினை தமிழர்கள் அமைப்பதையும் தனித்துத் தடுக்கவும் வல்லமையற்ற நிலையில்தான் உள்ளன.

அப்படியானால் எந்த நாட்டின் உதவியுடன் தமது குறிக்கோளை இவை அடைவது?

முன்னர் ரணில் அரசுää ஒரு தந்திரோபாயம். இப்போது சந்திரிக்கா அரசு எந்தத் தந்திரோபாயம்? இது ஒரு பக்கம். மறுபக்கத்தில் பொருளாதாரப் பிரச்சனை அரசியல் ஸ்திரமற்ற பிரச்சனை!

இலங்கையின் இன்றைய அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பயன்படுத்தி தத்தமது பொருளாதார மற்றும் இலாபங்களைத் தேடும் அமெரிக்கா மற்றும் கைத்தொழில் நாடுகள் இலங்கைக்கு உதவுவது போல் காட்டித் தமக்கு தேவையான காரியங்களை ஆற்றிக்கொண்டு இருக்கின்றன. இந்தியாவும் அதனது “செல்வாக்கைச் செலுத்தி” அதனது பங்கு இலாபங்களைப் பெறத்தானே வேண்டும்? முன்னைய காலப்பகுதிகளில் (ராஜீவ் மரணத்திற்கு முன்) தமிழர்களின் விடுதலைக ;குழுக்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கை அரசை மிரட்டி இந்தியா தன்னுடைய நலனைக் பேணிவந்துள்ளது. ஆனால் இன்று அப்படியான சந்தர்ப்பங்கள் அருகிவிட்டன. இந்தநிலையில் இந்தியா கைத்தொழில் நாடுகளுடன் போட்டிபோட்டுப் பண உதவி செய்யமுடியாது. அது வேறு வழிகளையே கையாளவேண்டும். இங்குதான் பாதுகாப்பு ஒப்பந்தம் இந்திய - இலங்கை கிழக்குப் பகுதிக் கூட்டு றோந்து ஏனையவைகள் உதவுகின்றன.

தென்னாசியப் பிராந்தியத்தியமூடாக அமெரிக்கா அதனுடைய பூகோள வல்லாதிக்கத்தை இன்றைய தொழில் நுட்ப முன்னேற்ற நிலையிலும் பூகோள அரசியல் நிலையிலும் பேணுவதற்கு இலங்கை போன்று வாய்ப்பான வேறு நாடு கிடைக்கமாட்டாது. அந்த வகையில் அமெரிக்கா தன்னுடைய நலன்களுக்காக இன்றைய திகதி வரை பல வேலைத்திட்டங்களை இலங்கையில் மேற்கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் இலங்கை மீதான தலையீடு அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பது திஸ்ஸமஹறவில் உள்ள அப்புஹாமியும் அறிந்த விடயமாகும். இலங்கையில் அமெரிக்காவின் தலையீட்டை தற்காலிக முறையில் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியாவிடம் இருக்கின்ற ஒரேயொரு நவீன மிரட்டல் ஆயுதம்தான் சேது சமுத்திரத்திட்டம்!

இந்தநிலையில் தமிழர் பிரச்சனையை ஏதோவொரு வகையில் முடிவுற்றால்; தென்னிலங்கை அரசுகளுக்கு இந்தியா அதிகம் பயனானதல்ல.

இலங்கைக்கு அமெரிக்கா உதவலாம் வேறு நாடுகளும் உதவலாம். ஆனால் இந்தியா சேது சமுத்திரத்திட்டத்தை அமுல்படுத்தினால் எதிர்காலத்தில் இலங்கையின் தென்பகுதித் துறைமுகங்களுடாகவும் நவீன மயப்படுத்தப்படும் கொழும்பு துறைமுகமூடாகவும் கப்பல் போக்குவரத்து வருமானமும் ஏனைய சேவைகள் ஊடாகப் பெறப்படும் வருமானமும் பெருமளவிற்குக் குறையவே செய்யும். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை அடுத்த மாதத்தில் இலங்கை அரசு ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சேது சமுத்திரத்திட்டமானது இலங்கையின் தென்பகுதி மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக: jvP யின் ஆதரவுப் பகுதி மக்கள். ஆகவே சேது சமுத்திர திட்டமானதுää இலங்கை அரசுக்கு JVP ஊடாக அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு திட்டமுமாகும்.

அமெரிக்கவோ அல்லது எந்த ஐரோப்பிய நாடோ தங்களுடைய நாட்டிற்கு நீண்டகால இலாபமும் இல்லாமல் தங்களுடைய மக்களின் வரிப் பணத்தை இலங்கைக்கு வாரி வழங்கமாட்டாது. இதற்கு உதாரணமாக அண்மையில் அமெரிக்காவுக்கு இலங்கை கொடுக்கவேண்டியிருந்த சில மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக இலங்கையின் வனங்களைப் பராமரிப்பதற்கு அமெரிக்கா இலங்கை அரசிடம் உத்தியோக பூர்வமாக எழுதித்தரும்படி கேட்டிருந்தது!

இன்று உள்ள அரசியல் நெருக்கடியுடன் சந்திரிக்கா அரசானது பண மற்றும் நெருக்கடிகளுக்கு என்ன செய்யப்போகின்றது என்பதை பார்த்திருப்பது இரசனை கலந்த விடயமாகும். அமெரிக்காவின் எண்ணத்திற்கு நடந்து நாட்டையே முழுமையாக அமெரிக்காவிடம் கொடுப்பதா? இல்லை இந்தியாவுடன் மாத்திரம் நட்பை பேணி நாடு எதிர்நோக்கிவரும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதா?

செயற்கைக்கோளின் உதவியுடன் நாசா (NASA) எடுத்தாக கூறி வெளியிட்ட இராமர் அணை படம் பற்றி அனைத்து வாசகர்களும் அறிந்திருபார்கள். இப்படியான சற்றலைற் படமானது உண்மையில் ஒருசில வருடங்களுக்கு முன்னரே நாசாவினால் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த இராமர் அணைப் படமானது இந்துக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப்படத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் இந்துத்திவிரவாதிகள் கிறீஸ்த்துவிற்கு முன் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வடஇந்திய ஆரிய இராமன் இலங்கையில் தனது ஆதிகத்தினை செலுத்தியதாக கூறி இலங்கை மீதான இந்திய ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அன்று வாஜ்பாய் அரசு சேது சமுத்திரத்திட்டத்தை மேற்கொள்ளாது ரணில் விக்கிரமசிங்க அரசுடன் பாரதி கனவுகண்ட சிங்களத்தீவிற்குப் பாலம் அமைக்க முற்பட்டிருந்தது. இத்திட்டத்தை தமிழகத்தின் ஜெயலலிதா அரசு தீவிரமாக எதிர்த்தும் இருந்தது.

சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் திட்டமானது இந்தியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் பொருளாதார இலாபத்தினைக் குறுகியகால நீண்டகால கண்ணேட்டங்களில் கொடுக்கும். ஆனால் சேது பாலத்திட்டம் மாத்திரம் இலங்கைக்கே கூடிய இலாபத்தைக் கொடுக்கும். இந்தியா இன்னும் கூடிய இலாபத்தினை எடுப்பதாயின் சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் திட்டம் இலங்கை - இந்திய பாலத்திட்டம் ஆகிய இரண்டையும் செய்யவேண்டும்.

இப்படி இரண்டு திட்டங்களையும் நடைமுறைப்படுத்துமேயாயின் இலங்கை நீண்டகாலக்கண்ணோட்டத்தில் பாரிய பொருளாதாரப்பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டியும் இருக்கும்@ இலங்கையின் இறைமை பற்றியும் சிந்திக்கவேண்டியிருக்கும்.

கைத்தொழில் நாடுகள் தமக்கு இலாபங்களை நீண்டகாலக்கண்ணேட்டத்தில் எடுப்பதில் தான் ஈடுபடுகின்றன. தொடர்ந்தும் இலங்கைக்கு பெருமளவு நிதியுதவிகளைச் செய்வது அவர்களின் நோக்கமல்ல.

இப்பொழுது சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முற்பட்டு இருக்கும் இந்தியா எதிர்காலத்தில் இந்திய - இலங்கை பாலத்திட்டத்தையும் அமுல்படுத்தபோவதாகக் கூறலாம்!

இவைகள் அனைத்தையும் பார்க்கும்போது சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் இந்தியத் திட்ட அறிவிப்பானது உண்மையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிராந்திய பூகோள வல்லரசுகளுக்கிடையில் பெரும் அரசியல் - தந்திரோபாயப் போர் ஆரம்ப அறிவிப்பாகவே உள்ளது.

இந்த நிலையில் இலங்கையினதும் இந்து சமுத்திரத்தினதும் எதிர்காலமானது இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டம் தொடர்பாக எப்படியான நிலைப்பாட்டை கொள்ளவுள்ளனர் என்பதில் தான் பெரிதும் தங்கியுள்ளது. ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்.

யாழில் இருந்து குரு

சுட்டபழம்

இதுபோன்ற பல கட்டுரைகள் கீழேயுள்ள இணையத்திலிருக்கின்றது.

http://www.tamilresearchandnews.com/
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
என்ன இது தேன்னிலவு எதுக்கு எதுக்கெல்லாம் வைக்கிறது என்று விவஸ்தையே இல்லையா..?? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நான் அப்படியே அந்த இணைப்பில் இருந்ததை இணைத்தேன். ஏன் தேன்நிலவு என்றவுடன்......................... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
சின்ன பிள்ளையள் வாற இடம்........
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)