Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிஜங்களையும் தாண்டி...சிறுகதை
#1
<img src='http://www.vaarppu.com/2003/m/mukam_kilithu_jn03.JPG' border='0' alt='user posted image'>

<b>நிஜங்களையும் தாண்டி... </b>

அதிகாலை நான்கு மணியாகிவிட்டது. எழும்ப மனம் இல்லாமல் படுத்துக்கொண்டே இருந்தாள் சந்தியா. உடம்பு முழுவதும் ஒரே அசதியாய் இருந்தது அவளுக்கு. படுத்தபடியே ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊரின் நினைப்புக்கள் அவள் கண்முன்னே நிழற்படங்களாக விரிந்து கொண்டிருந்தது. அவள் ஓடியாடி விளையாடி மகிழ்ந்த ஊர் இப்படி நிலைகுலைந்து போய் இருந்ததை தொலைக்காட்சியில் கண்டபோது துடித்துப்போனாள். அந்த மண்ணை அள்ளி தன் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் போன்றதோர் துடிப்பு அவளுள் எற்படுத்தியிருந்தது.

சுனாமி ஏற்படுத்திவிட்ட தாக்கம் அவள் மனதையும் தாக்கிவிட்டுப் இருந்தது. சுனாமியால் அகதியாகிவிட்ட உறவினர்களின் நிலை, தாய் தந்தையரை இழந்த தன் ஒன்றுவிட்ட அண்ணாவின் மகன் செந்தூரனின் வாழ்க்கை, அவனை எப்பாடு பட்டாவது இந்த நாட்டுக்கு அழைத்துவிட வேண்டும் என்ற ஆவலில் செய்யும் ஆயத்தங்கள், இதற்கும் மேலாக மாதந்த கட்டணத்துக்காக வந்திருக்கும் பில்லுகள்... எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தபோது அவளுக்குள் இருந்த அசதி ஒடி மறைய இயந்திரமாகிவிட்ட வாழ்க்கையை எண்ணியபடியே எப்படியும் எழும்பத்தான் வேண்டும் என்ற நிர்பந்தத்தில் எழுந்திருந்தாள்.

முகத்தை கழுவி விட்டு மதிய உணவுக்கான உணவை தயாரித்துக் கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டே தேனீரையும் ஊற்றிக் குடித்தாள். அதையும் முடித்துவிட்டு சலவை இயந்திரத்திற்குள் உடுப்புகளையும் போட்டு விட்டு நேரத்தைப் பார்த்தாள்

மணி ஆறை எட்டி பிடித்துக் கொண்டிருந்தது.

பிள்ளைகளுக்கும் கணவருக்கும் உரிய காலை உணவையும் அவர்களுக்குறிய பெட்டியில் வைத்துவிட்டு பிள்ளைகளை எழுப்ப அறைக்குச் சென்றாள்.

பொய்த் தூக்கமில்லாத வயது தங்களை மறந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த காலைவேளையில் அவர்களை எழுப்ப அவளுக்கு கொஞ்சமும விருப்பம் இல்லை. ஆனால்... கட்டாயம் எழுப்பித்தான் ஆக வேண்டும் வேலைக்குப்போக வேண்டும் என்ற நிலைமை.

"சகானா… மோகனா... எழும்புங்கோ எழும்புங்கோ ஸ்கூலுக்குப் போக வேண்டும் நேரமாச்சு எழும்புங்கோ..." அவசரமும் அவதியுமாக எழுப்புகின்றாள்..

அவளின் அவசரம் தெரியாமல் "ம்... இன்னும் கொஞ்சநேரம் படுக்கப் போறன் அம்மா" சிணுங்கிக்கொண்டு திரும்பிப் படுக்க முயலும் அவர்களை வலுக்கட்டாயமாக எழுப்புகின்றாள்.

அழுது கொண்டு எழும் அவர்களையும் சமாதானப்படுத்தி முகம் கழுவ பண்ணி போட்டு, கையோடு அவர்களையும் பாடசாலைக்கு போக ஆயத்தம் செய்கின்றாள்.

அவையளின் அலுவல்கள் எல்லாவற்றையும் பார்த்தபின் அவளின் வசதிக்காக அவர்களை சிறிது நேரம் தொலைகாட்சி பார்க்க போட்டு விடுகின்றாள். அந்த சிறிய நேரத்துக்குள் அவள் வெளிக்கிட்டு எழுமணிக்குள் வேலைக்குப் போகவேண்டும்.

வெளிக்கிட்டுவிட்டு கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு… பிள்ளைகளிடமும் விடைபெற்றுக் கொள்ள வந்தபோது கதிரையிலே மோகனா நித்திரையாகி விட்டிருந்தாள். இருவரையும் முத்தமிட்டு விடைபெற்றுக் கொள்ள போகும்போது வழமையாக சகானா கேட்கும் கேள்வி "அம்மா எங்களை நீங்களே ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டு போங்கோ..." கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அவளை அன்புடன் அணைத்துக் கொண்டே "இல்லையம்மா அம்மா வேலைக்கு போக வேண்டும்தானே. ஸ்கூல் முடிய நானே நின்று கூட்டிக்கொண்டு வருவன்தானே வரேக்க சொக்கிலேட்டும் வாங்கிக் கொண்டு வாறன் என்ன" என்று சமாதானம் கூறிவிட்டு இறுக அணைத்து முத்தங்களையும் தந்துவிட்டு வேலைக்குப் போய் விட்டாள் சந்தியா.

அவளின் கணவர் மகேசன் வேலைக்குப் போகும் போது பிள்ளைகளையும் அப்படியே பாடசாலையில் விட்டுவிட்டுப் போவார். சந்தியாவின் வேலை முடிய பிள்ளைகளின் பாடசாலை முடியவும் சரியாகயிருக்கும். அப்படியே அவர்களையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வருவாள்.

பிள்ளைகள் பாடசாலை நேரத்தில்தான் அவளின் வேலைநேரம் அமைந்திருந்தது. இப்படி ஒரு வேலை கிடைத்தது நினைத்து தனது அதிர்ஷ்டம் என்று எண்ணி அவள் அடிக்கடி தனக்குள் பெருமைபட்டுக் கொள்வாள்.

இப்படித்தான் அவள் வாழ்க்கை நித்தமும் சென்று கொண்டிருந்தது.

ஆனால்... சுனாமியின் அழிவுக்குப் பிறகு அவளின் வாழ்க்கையில் சிறு மாற்றம் கண்டு கொள்ள ஆரம்பித்தது. சுனாமியால் அகதியாகிவிட்ட உறவுகளின் மேலதிக பண தேவைக்காக... மேலதிகமாக இரண்டு மூன்று மணித்தியால பகுதிநேர வேலைக்காக அவளின் தேடல் அமைந்து இருந்தது.

அதன் பலன் மாலை நேரங்களில் மூன்று மணிநேர பகுதி வேலை அவளுக்கு கிடைத்தது.

மத்தியாண வேலை முடிந்து வந்த கையுடனே பிள்ளைகளையும் கூட்டிவந்து அவர்களின் அலுவல்களையும் பார்த்து விட்டு, சிறிது நேர ஓய்வுக்குப்பின் மீண்டும் பிள்ளைகளை பக்கத்து வீட்டு நண்பியிடம் விட்டு விட்டு மீண்டும் வேலைக்கு போவதில் சந்தியாவின் ஆர்வம் அதிகமாக இருந்தது.

அவள் உழைத்த பணம் முழுவதும் சுனாமியால் அநாதையாய் அகதியாக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவு செய்து கொண்டிருந்தாள்.

கணவனின் பணம் குடும்பத்துக்காகவும், அவளின் உழைப்பு தாயகத்துக்காகவும் செலவிடப்பட்டுக் கொண்டிருந்தது.

அன்றும் வழக்கம் போல் பாடசாலை முடிந்து பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தபோது... சாகானா தான் கேட்டாள்

"அம்மா... நானும் இங்கே சுனாமியால் அநாதரவாய் மாதிரிதானம்மா இருக்கிறன். இந்தாம்மா இந்த உண்டியல் பணத்தை நீங்களே வைத்துக்கொண்டு எங்களுடன் இருங்கள் அம்மா..." என்றாள்.

ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றாள் சந்தியா

மகள் சாகானாவின் பேச்சுத் தொனி... அவள் கொண்டு வந்த உண்டியலின் பணம் அவள் மனதின் திகைப்பும் கேள்விக்குறியுமாக அமைந்து விட சாகானாவையும் உண்டியலையும மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள்.

"எங்கேயிருந்தம்மா இந்த பணம்.." சந்தியா அன்பாக வினாவினாள்.

"நான் தான் ஸ்கூல்ல சொன்னனான். எங்கட சொந்தக்காரர் கணபேருக்கு வீடில்ல என்டனான். அவையளாத்தான் வகுப்பு பிள்ளைகள் எல்லாம் சேர்த்து தந்திச்சினம்" என்றவள் அழுதபடியே "அம்மா எப்போதும் நீங்களும் அப்பாவும் வேலை வேலை என்டு இருக்கிறீங்கள். எங்களுடனும் இன்று இருங்கோ." என்டு விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள்.

கூடவே வயதில் சிறியவளான மோகனாவும் அதைப்பார்த்து விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள்.

ஒருகணம் சந்தியா ஆடிப்போய் விட்டாள். சுனாமி என்ற பேரலை எங்கள் நாட்டை மட்டுமா தாக்கி விட்டுப்போனது...? இல்லை இல்லை அதன் தாக்கம் புலம் பெயர் நாட்டினில் மெல்லிய மறைமுகமாக தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை முதன் முதலாக உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். வேலை, பணம், பிள்ளைகளுக்கு விரும்புவதை நினைத்தவுடன் வாங்கித்தருவது இது இல்லை வாழ்க்கை. பொம்மையும் பள்ளிக்கூடமும் சொல்லக் கொடுத்தவற்றை மனப்பாடம் செய்யும் கள்ளமில்லா வயதில் அன்புக்காக ஏங்கும் அந்த பிஞ்சு உள்ளங்களை தவிக்க விட்டு விட்டேனே..?

வெங்காயத் தோலிகளைப் போல ஒன்றன் மேல் ஒன்றாக வந்து விழும் உறைகளாக... வந்து குவியும் சுமைகளுக்கு நடுவில் இளம் பச்சைக்குருத்துக்களுக்கு அன்பு என்ற அரவணைப்பை கொடுக்க தவறியது பெற்றோர்களாகிய தங்கள் பிழை என்பதை அவள் மெதுவாக உணரத் தொடங்கி... தன் வாழ்வியல் முறையினை மாற்ற மனத்திடமாக முடிவுசெய்து கொண்டாள்.

சுனாமி நடந்தது நிஜம். அந்த நிஜங்களைத் தாண்டி... இந்த புலம்பெயர்ந்த மண்ணில் வேலை வேலை என்று நாமும் அதில் முழ்கி எம் சிறுவர்களையும் அநாதரவான நிலைக்கு தள்ளத்தான் வேண்டுமா...!

தன்னை சுதாகரித்துக் கொண்டவள் "என்ட செல்லக்குஞ்சுகளே" வார்த்தைகள் வர மறுக்க முதன் முறையாக முத்தங்களை பொழிவது போன்ற உணர்வுகள் மேலிட... இருவரையும் மாறி மாறி இருக அணைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வடிய முத்தங்களைப் பொழிந்தாள்.

ஓவ்வொருவரின் வாழ்க்கையிலும் என்னதான் அமைதியாக, ஆனந்தமாக இருப்பது போல் தோன்றினாலும்... மேலே சலசலத்தோடுவது போல் தோன்றும் ஆழநீர்ப்பரப்பின் அடிமட்டத்தில் பாறைகளைப் பிளந்து மண்ணை அறுத்துச்செல்லும் வேகம் இருக்குமே... அது போன்ற ஒரு வேகம்... குறையாக கறையாக பரிணமிக்கத்தான் செய்கின்றது. அந்த வேகமே கண்களை மறைக்கின்ற கறுப்பு கண்ணடிகளாகவும், மூகமுடிகளாகவும் அமைந்துவிடவும் செய்கின்றது.

(யாவும் கற்பனை )
Reply
#2
அக்கா கதையை ஏற்கனவே வாசித்துவிட்டேன்..............நல்லாயிருக்கு.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
ம். இது சுனாமி வரமுதலும் இந்த நிலை கனவீடுவழிய இருக்கு.. அளவுகடந்த அன்பிருந்தாலும்.. அதை பரிமாறிக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை.. பாவம் பிள்ளைகளுக்கும் தான் இதனால் பாதிப்பு.. :? Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நன்றியக்கா கதையை இணைச்சதற்கு.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
குளக்காட்டன், தமிழினியின் கருத்துக்களுக்கு நன்றிகள்...
Reply
#5
நன்றியக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#6
இந்த கதை முற்றம் பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது

http://www.yarl.com/?itemid=1019[/size]

குடும்பதிற்காக உழைப்பதாக சொல்லும் பலரும் அவர்களுடன் நேரத்தை செலவிடவோ அன்பை பரிமாறவோ நினைப்பதில்லை. இதுவே பல குடும்பங்களில் மனவேறுபாட்டை ஏற்படுத்துவதுடன் பிள்ளைகள் தவறான வழியில் செல்ல வாய்ப்பளிக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)