Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்காவில் இராணுவப் புரட்சி: ஜே.வி.பி. ஆட்சியில்
#1
<b>சிறிலங்காவில் இராணுவப் புரட்சி: ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியது! தலைவர்கள் சிறையிலடைப்பு!! </b>

அரச தலைவர் பொறுப்பு வகித்த மகிந்த ராஜபக்சஇ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஇ முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார். அவரது கதி என்ன என்று தெரியவில்லை.

ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கஇ சுற்றுலாத் துறை அமைச்சுப் பொறுப்பு வகித்த அனுரா பண்டாரநாயக்கஇ சுகாதாரத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக சில செய்திகளும் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மற்றொரு தரப்புத் தகவலும் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் முக்கிய ஊடகங்களான டெய்லி மிர்ரர் மற்றும் கொழும்புத் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் பலரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அடைக்கலமாகி உள்ளனர்.

மலையகத்தில் புதிய ஆயுதக் குழு ஒன்று உருவாகி இருப்பதாகவும் இராணுவத்தினருக்கும் அந்த ஆயுதக் குழுவினருக்கும் இடையே பல மோதல்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து விடுதலைப் புலிகளின் தங்களது நிலைகளைப் பலப்படுத்தியுள்ளனர்.

யாழ். குடா நாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் பலர் தென்னிலங்கைப் பகுதிக்குச் சென்றுவிட்டதாகவும் எஞ்சியுள்ளோர் எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே பல இடங்களில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எந்த நேரத்திலும் இராணுவத்தினர் மீது எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடைபெறக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
Reply
#2
மோகன் ..ஏப்ரல் பூலுக்கு முன்னோட்டமோ....
Reply
#3
செய்திக்கு நன்றி
ஆனால் இன்றய திகதி
ஏப்பிரல் 1 என ஞாபகம்
Reply
#4
நான் நம்பீட்டன்............! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#5
மகிந்தர் நாட்டில் இல்லாத நேரம் பார்த்து செய்திருக்கிறார்கள்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஜே.வி.பி. தோற்றதனால் விரக்தியின் விளிம்பில் நின்று செய்த வேலையாக இருக்கும்.

இந்த செய்தியை முதலில் தெரிவித்த யாழுக்கு எமது நன்றி.

இப்படியெல்லாம் கூற ஆசை. அப்படி கூறினால்... முட்டாள்கள் தினத்தில் நானும் ஒரு முட்டாள் அல்லவா?

என்ன இருந்தாலும் இப்படியொரு செய்தி நிஜமாகாதா என்கிற நப்பாசை எனக்கு உண்டு.

அப்படியொரு காலம் வரும் வரவேண்டும்.
S.Nirmalan
Reply
#6
நிர்மலன் அடுத்த சித்திரை ஒன்றில் நிச்சயமாக இது நடைபெறும்.
Quote:மகிந்தர் நாட்டில் இல்லாத நேரம் பார்த்து செய்திருக்கிறார்கள்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஜே.வி.பி. தோற்றதனால் விரக்தியின் விளிம்பில் நின்று செய்த வேலையாக இருக்கும்.

இந்த செய்தியை முதலில் தெரிவித்த யாழுக்கு எமது நன்றி.

இப்படியெல்லாம் கூற ஆசை. அப்படி கூறினால்... முட்டாள்கள் தினத்தில் நானும் ஒரு முட்டாள் அல்லவா?

என்ன இருந்தாலும் இப்படியொரு செய்தி நிஜமாகாதா என்கிற நப்பாசை எனக்கு உண்டு.

அப்படியொரு காலம் வரும் வரவேண்டும்.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)