08-08-2005, 03:43 PM
களத்தில் குட்டி கதை பார்த்தபோது ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற அதில் யாழ்கள் உறவுகளின் பெயரையே பாவிக்கின்றேன்.யாருக்காவது மனசங்கடங்கள் ஏற்படின் எனக்கு அறிய தரவும் நீக்கி விடுகிறேன்.(யாழினி கவனிக்க)
இதோ குறு நாடகம்
அங்கம் ஒன்று
திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன்
வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக்
நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த பழம்கஞசியும் சில பச்சை மிளகாய் களையும் கொண்டு வந்து அவருக்கு அருகில் வைத்து வணங்கி விட்டு போகிறாள்.
மன்னர்: ஆகா அருமை காலையில் பழம்கஞ்சியும் பச்சமிளகாயும் குடிப்து எத்தனை இனிமை
(கஞ்சியை எடுத்து வாயருகே கொண்டு போகிறார் அப்போது வாசலில் ஆராச்சி மணி அடிக்கும் சத்தம் கேட்க எல்லோரும் திடுக்கிட்டு வாசலை பார்க்கிறனர் அப்போது இரு இளம் பெண்கள் தலைவிரி கோலமாக உள் நுளைகிறனர்.
ஒருத்தி: மன்னா தங்கள் ஆட்சியில் அநீதி நடக்கிறது நீதி வேண்டும் மன்னா
மன்னர்: என்ன இங்கு மலிவு விலையில் நீதி கிடைக்கும் எண்டு எழுத்திப்போட்டிருக்கா காலங்காத்தாலை வந்திட்டாங்க கஞசியை கூட குடிக்க விடாமல் சே . சரி நீங்கள் யார் என்ன பிரச்சனை
ஒருத்தி : மன்னா எனது பெயர் தமிழினி இதோ இவளது பெயர் அஸ்வினி
மன்னர் : மொத்தத்திலை எனக்கு பிடிச்சிருக்கு சனி பிரச்னையை சொல்லுங்கப்பா
தமிழினி: மன்னா
மன்னர்: என்னா
தமிழினி: நான் எனது கணவர் சிதம்பரத்தாருக்கு காச்சல் எண்டு முகத்தாரின் கடையில் பாண் வாங்கி கொண்டு போய் கொண்டிருக்கும்போது இதோ இந்த அஸ்வினி பாணை பறித்து வைத்துகொண்டு அது தன்னுடைது எண்டு பொய் சொல்லுகிறாள் நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்.
அஸ்வினி: இல்லை மன்னா இல்லை இதோ பாருங்கள் பாண் வாங்கியதற்கான இரசீது என்னிடமுள்ளது இவள்தான் பொய் சொல்கிறாள்(என்று தன்னிடமிருந்த இரசீதை மன்னனிடம் நீட்டுகிறாள்)
தமிழினி: மன்னா என்னிடமும் இரசீது உள்ளது இதோ பாருங்கள்
(மன்னர் இரண்டு இரசீதையும் வாங்கி உற்று பார்த்து விட்டு)
மன்னர்: சே இதற்கு பெயர் இரசீதா? பழைய சீமெந்து பேப்பரில் கிழிச்சு ஏதோகிறுக்கியிருக்கு முதல் வேலையா முகத்தானை தூக்கி உள்ளை போடவேணும்.
தமிழினி: மன்னா உங்கள் தீர்ப்பில்தான் இந்த நாட்டின் பெருமையே தங்கியுள்ளது நல்ல தீர்ப்பாக கூறுங்கள்
மன்னர்: ஆமா இந்த நாட்டுக்கு அரசனா இருக்கிறதை விட பேசாமல் பிச்சையெடுக்க போகலாம். சரி உங்களிற்கு பாண் தானே பிரச்சனை யாரங்கே எமது படையணியில் வெட்டு கொத்து தளபதி மதனை வரச்சொல்லுங்கள்
மதன் வந்து வணங்கிவிட்டு: மன்னா என்ன பிரச்சனை ஆணையிடுங்கள் எந்த நாட்டை பிடிக்க வேண்டும் யாரை வெட்ட வேண்டும். துடிக்கிறது முக்கு முடி(அவருக்குமீசையில்லை)
மன்னர்: அமெரிக்காவை அடிச்சு பிடிக்கவேண்டும் முடியுமா? வயித்தெரிச்சலை கிளப்பாமல் பாரும் நமது நாட்டில் பாணிற்கு அடிபடுகிறார்கள் வெட்ககேடு அந்த பாணை வாங்கி ஆளுக்கு பாதியா வெட்டி கொடுத்து ஆக்களை முதலில் வெளியிலை விடும்
தளபதி மதன்: மன்னா ஒரு பிரச்சனை
மன்னர்; : உமக்குமா என்னய்யா பிரச்சனை
தளபதி மதன் : பலகாலமாக எனது வீரவாளை பாவிக்காததால் துருப்பிடித்து விட்டது அதுதான்.....
மன்னர்: யோவ் நாம் இப்ப சண்டை தான் பிடிக்கிறேல்லலை இடைக்கிடை அதை தீட்டி இளனியாவது சீவவேண்டியதுதானே எதாவது செய்து தொலையும் ஆனால் அந்த இரு பெண்மணிகளையும் இடத்தை விட்டு காலி பண்ண சொல்லும்(மன்னர் மீண்டும் கஞ்சி குடிக்க கிண்ணத்தை தூக்குகிறார்)
;தளபதி மதன்:ஆகட்டும் மன்னா( வெற்றிவேல் வீர வேல்என்ற கத்தியவாறு பாணை வெட்டுவதற்காக வாளை ஓங்குகிறார்)
(வாசல் பக்கமாக ஒருவர் நிறுத்துங்கள் மன்னா நிறுத்துங்கள் என்றவாறு ஒருவர் ஓடி வருகிறார்)
மன்னன்: யாரய்யா அது புதிசா திறந்த வீட்டிற்கை சே கோட்டைக்கை டண்ணின்ரை நாய் புகுந்த மாதிரி.நான் கஞ்சி குடிக்கிறதை ஏன் நிறுத்த வேண்டும்
வந்தவர்:மன்னா நான்தான் கடை வைத்திருக்கும் முகத்தார் எனது கடை பாணை நீங்கள் வெட்ட கட்டளையிட்டதாக அறிந்து அதை நிறுத்த ஓடோடிவந்தேன்
மன்னர்: கொஞ்சம் முதல் வந்திருந்தால் எனக்கு வேலை மிச்சமாக போயிருக்கும் சரி பாணை வெட்டவில்லை இந்த இரு பெண்மணிகளில் யார் உமது கடையில் பாணை வாங்கியவர் என்றாவது அடையாளம் காட்டும் அவரிடமே அதை ஒப்படைக்கலாம்
முகத்தார் : மன்னிக்கவும் மன்னா நான் ஏக பத்தினி விரதன் நான் எனது மனைவி பொன்னம்மாளை தவிர வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை தலை குனிந்த படிதான் வியாபாரம் செய்வேன் அதனால் யாரெண்று என்னால்: அடையாளம் காட்ட முடியாது. ஆனால் பாணை மட்டும் வெட்ட சொல்லாதீர்கள் அதை வெட்டினால் இந்த மங்களா புரிக்கே ஆபத்து
மன்னர்: கிழிஞ்சுது போ அடையாளமும் காட்ட முடியாது எண்டுறீர் ஏன் பாணை வெட்ட கூடாது எண்டாவது சொல்லும்
முகத்தார்: மன்னா ஒருமுறை தேவ லோகத்திலிருந்து நாரதர் என்கடைக்கு வந்திருந்தார்
மன்னர் ஆச்சரியமாக : நாரதரா உமது கடைக்கா உண்மையாகவா எதற்கு?
முகத்தார் : பீடி வாங்கத்தான் மன்னா இழுக்க இழுக்க இன்பம் தரும் எனது கடை பீடியை ஊதிய நாரதர் மன மகிழ்ந்து எனக்கு ஒரு வரம் தந்தார் என்து கடை பாணை வாங்கி அப்படியே வெட்டாமல் உண்பவர்கள் நோய் நொடியின்றி கனகாலம் இப்புவியில் வாழ்வார்கள் மீறி வெட்டினால் இந்த நாட்டிற்கும் எமக்கும் எமது மன்னருக்கும் கெட்ட காலம் வரும் என்றார் அதை தடுக்கதான் ஓடோடி வந்தேன்
மன்னர் : காலங்காத்தாலை என்னது வில்லங்கம் என்ன செய்யலாம் (திடீரென ஒரு யேசனை தோன்ற மன்னர் விறு விறுவென வந்து பாணை பறித்து தனது வாயில் அடைகிறார் பாண் தொண்டையில் சிக்கி முச்சு விட முடியாமல் மன்னர் மயங்கி விழுகிறார்)திரையும் விழுகிறது
இதோ குறு நாடகம்
அங்கம் ஒன்று
திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன்
வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக்
நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த பழம்கஞசியும் சில பச்சை மிளகாய் களையும் கொண்டு வந்து அவருக்கு அருகில் வைத்து வணங்கி விட்டு போகிறாள்.
மன்னர்: ஆகா அருமை காலையில் பழம்கஞ்சியும் பச்சமிளகாயும் குடிப்து எத்தனை இனிமை
(கஞ்சியை எடுத்து வாயருகே கொண்டு போகிறார் அப்போது வாசலில் ஆராச்சி மணி அடிக்கும் சத்தம் கேட்க எல்லோரும் திடுக்கிட்டு வாசலை பார்க்கிறனர் அப்போது இரு இளம் பெண்கள் தலைவிரி கோலமாக உள் நுளைகிறனர்.
ஒருத்தி: மன்னா தங்கள் ஆட்சியில் அநீதி நடக்கிறது நீதி வேண்டும் மன்னா
மன்னர்: என்ன இங்கு மலிவு விலையில் நீதி கிடைக்கும் எண்டு எழுத்திப்போட்டிருக்கா காலங்காத்தாலை வந்திட்டாங்க கஞசியை கூட குடிக்க விடாமல் சே . சரி நீங்கள் யார் என்ன பிரச்சனை
ஒருத்தி : மன்னா எனது பெயர் தமிழினி இதோ இவளது பெயர் அஸ்வினி
மன்னர் : மொத்தத்திலை எனக்கு பிடிச்சிருக்கு சனி பிரச்னையை சொல்லுங்கப்பா
தமிழினி: மன்னா
மன்னர்: என்னா
தமிழினி: நான் எனது கணவர் சிதம்பரத்தாருக்கு காச்சல் எண்டு முகத்தாரின் கடையில் பாண் வாங்கி கொண்டு போய் கொண்டிருக்கும்போது இதோ இந்த அஸ்வினி பாணை பறித்து வைத்துகொண்டு அது தன்னுடைது எண்டு பொய் சொல்லுகிறாள் நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்.
அஸ்வினி: இல்லை மன்னா இல்லை இதோ பாருங்கள் பாண் வாங்கியதற்கான இரசீது என்னிடமுள்ளது இவள்தான் பொய் சொல்கிறாள்(என்று தன்னிடமிருந்த இரசீதை மன்னனிடம் நீட்டுகிறாள்)
தமிழினி: மன்னா என்னிடமும் இரசீது உள்ளது இதோ பாருங்கள்
(மன்னர் இரண்டு இரசீதையும் வாங்கி உற்று பார்த்து விட்டு)
மன்னர்: சே இதற்கு பெயர் இரசீதா? பழைய சீமெந்து பேப்பரில் கிழிச்சு ஏதோகிறுக்கியிருக்கு முதல் வேலையா முகத்தானை தூக்கி உள்ளை போடவேணும்.
தமிழினி: மன்னா உங்கள் தீர்ப்பில்தான் இந்த நாட்டின் பெருமையே தங்கியுள்ளது நல்ல தீர்ப்பாக கூறுங்கள்
மன்னர்: ஆமா இந்த நாட்டுக்கு அரசனா இருக்கிறதை விட பேசாமல் பிச்சையெடுக்க போகலாம். சரி உங்களிற்கு பாண் தானே பிரச்சனை யாரங்கே எமது படையணியில் வெட்டு கொத்து தளபதி மதனை வரச்சொல்லுங்கள்
மதன் வந்து வணங்கிவிட்டு: மன்னா என்ன பிரச்சனை ஆணையிடுங்கள் எந்த நாட்டை பிடிக்க வேண்டும் யாரை வெட்ட வேண்டும். துடிக்கிறது முக்கு முடி(அவருக்குமீசையில்லை)
மன்னர்: அமெரிக்காவை அடிச்சு பிடிக்கவேண்டும் முடியுமா? வயித்தெரிச்சலை கிளப்பாமல் பாரும் நமது நாட்டில் பாணிற்கு அடிபடுகிறார்கள் வெட்ககேடு அந்த பாணை வாங்கி ஆளுக்கு பாதியா வெட்டி கொடுத்து ஆக்களை முதலில் வெளியிலை விடும்
தளபதி மதன்: மன்னா ஒரு பிரச்சனை
மன்னர்; : உமக்குமா என்னய்யா பிரச்சனை
தளபதி மதன் : பலகாலமாக எனது வீரவாளை பாவிக்காததால் துருப்பிடித்து விட்டது அதுதான்.....
மன்னர்: யோவ் நாம் இப்ப சண்டை தான் பிடிக்கிறேல்லலை இடைக்கிடை அதை தீட்டி இளனியாவது சீவவேண்டியதுதானே எதாவது செய்து தொலையும் ஆனால் அந்த இரு பெண்மணிகளையும் இடத்தை விட்டு காலி பண்ண சொல்லும்(மன்னர் மீண்டும் கஞ்சி குடிக்க கிண்ணத்தை தூக்குகிறார்)
;தளபதி மதன்:ஆகட்டும் மன்னா( வெற்றிவேல் வீர வேல்என்ற கத்தியவாறு பாணை வெட்டுவதற்காக வாளை ஓங்குகிறார்)
(வாசல் பக்கமாக ஒருவர் நிறுத்துங்கள் மன்னா நிறுத்துங்கள் என்றவாறு ஒருவர் ஓடி வருகிறார்)
மன்னன்: யாரய்யா அது புதிசா திறந்த வீட்டிற்கை சே கோட்டைக்கை டண்ணின்ரை நாய் புகுந்த மாதிரி.நான் கஞ்சி குடிக்கிறதை ஏன் நிறுத்த வேண்டும்
வந்தவர்:மன்னா நான்தான் கடை வைத்திருக்கும் முகத்தார் எனது கடை பாணை நீங்கள் வெட்ட கட்டளையிட்டதாக அறிந்து அதை நிறுத்த ஓடோடிவந்தேன்
மன்னர்: கொஞ்சம் முதல் வந்திருந்தால் எனக்கு வேலை மிச்சமாக போயிருக்கும் சரி பாணை வெட்டவில்லை இந்த இரு பெண்மணிகளில் யார் உமது கடையில் பாணை வாங்கியவர் என்றாவது அடையாளம் காட்டும் அவரிடமே அதை ஒப்படைக்கலாம்
முகத்தார் : மன்னிக்கவும் மன்னா நான் ஏக பத்தினி விரதன் நான் எனது மனைவி பொன்னம்மாளை தவிர வேறெந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை தலை குனிந்த படிதான் வியாபாரம் செய்வேன் அதனால் யாரெண்று என்னால்: அடையாளம் காட்ட முடியாது. ஆனால் பாணை மட்டும் வெட்ட சொல்லாதீர்கள் அதை வெட்டினால் இந்த மங்களா புரிக்கே ஆபத்து
மன்னர்: கிழிஞ்சுது போ அடையாளமும் காட்ட முடியாது எண்டுறீர் ஏன் பாணை வெட்ட கூடாது எண்டாவது சொல்லும்
முகத்தார்: மன்னா ஒருமுறை தேவ லோகத்திலிருந்து நாரதர் என்கடைக்கு வந்திருந்தார்
மன்னர் ஆச்சரியமாக : நாரதரா உமது கடைக்கா உண்மையாகவா எதற்கு?
முகத்தார் : பீடி வாங்கத்தான் மன்னா இழுக்க இழுக்க இன்பம் தரும் எனது கடை பீடியை ஊதிய நாரதர் மன மகிழ்ந்து எனக்கு ஒரு வரம் தந்தார் என்து கடை பாணை வாங்கி அப்படியே வெட்டாமல் உண்பவர்கள் நோய் நொடியின்றி கனகாலம் இப்புவியில் வாழ்வார்கள் மீறி வெட்டினால் இந்த நாட்டிற்கும் எமக்கும் எமது மன்னருக்கும் கெட்ட காலம் வரும் என்றார் அதை தடுக்கதான் ஓடோடி வந்தேன்
மன்னர் : காலங்காத்தாலை என்னது வில்லங்கம் என்ன செய்யலாம் (திடீரென ஒரு யேசனை தோன்ற மன்னர் விறு விறுவென வந்து பாணை பறித்து தனது வாயில் அடைகிறார் பாண் தொண்டையில் சிக்கி முச்சு விட முடியாமல் மன்னர் மயங்கி விழுகிறார்)திரையும் விழுகிறது
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
