Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற
#1
பலஸ்தீனத்திலும் தமிழர் தாயகத்திலும் இடம்பெற்ற திட்டமிட்ட குடியேற்றங்கள்

* காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை முன்வைத்து ஒரு ஒப்பீடு

ரூபன் சிவராஜா

உலக வரலாற்றில் தேசிய மக்களி னங்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, இன அழிப்பினை மேற்கொண்ட, மேற் கொள்கின்ற அடக்குமுறை அரசுகள் பல, திட்டமிட்ட குடியேற்றங்களை அதற்கான கருவியாகக் கைக்கொண்டன. திட்டமிட்ட குடியேற்றங்களை மிக நுணுக்கமா கவும், பேரினவாதத்தின் தொலைநோக்கு நலன்களுக்குச் சாதகமாகவும் கையாண்ட அரசுகளில் இஸ்ரேலும் சிறிலங் காவும் முதன்மையானவை. இதன் மூலம் விடுதலைக்காக போராடும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்வது அல்லது இல்லாமற் செய்வது இவர்களின் மூலதந்தி ரமாக இருந்தது. எனவே இதன் அடிப்படை சார்ந்து சில விடயங் களை முதலில் ஆராய்வது பொருத்தமானது.

தமிழர் தாயகப் பிரதேசங்களை துண்டாடும் இலக்கோடு பெரு மெடுப்பில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்ட சிங்கள இனவாத மேலாண்மையின் சூட் சுமங்களையும் காசாவிலிருந்து யூதக்குடியேற்றங்கள் அகற்றப்பட்ட பின்னணியில் காசாவின் எதிர்காலம் பற்றியதான விடயங் களையும் ஆராய்வதே இக்கட்டு ரையின் நோக்கமாகும்.

நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு

உலகிலேயே நிலத்தை அடிப் படையாகக் கொண்ட கோட்பாட்டினை முன்னிறுத்திய வாழ்வினை பின் பற்றுபவர்கள் வரிசையில் முதலில் யூதர்களும், அடுத்ததாக சிங்களவர்க ளும் விளங்குகின்றனர். தமக்காக இறைவனால் "வாக்களிக்கப்பட்ட பூமி" (தேர்ந்தெடுக்கப்பட்ட பூமி) என் பதே அவர்களின் அந்தக்கோட்பாட்டு வியாக்கியானமாக இருக்கின்றது. பௌத்தத்தைப் காப்பதற்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டதே இலங்கைத்தீவு என்ற வலுவான நம்பிக்கை மகாவம் சம் என்ற சிங்கள வரலாற்று (சிங்கள வர்களின் நலனுக்காக திரிக்கப்பட்ட வரலாறு) நூல் மூலம் பெரும் பான்மை சிங்களவர் மனங்களில் ஆழமாய் பதியலாயிற்று.

ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே அரசு, ஒரே நாடு என்ற கோட்பாடே உண்மையான பௌத்தர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்துவதற்கான அதி உன்னதம் என்ற நம்பிக்கை சாதாரண சிங்கள மக்களின் மனங்க ளுக்குள்ளும் மூளைக்குள்ளும் புகுத் தப்பட்ட ஒன்றாகும். இந்நிலையில் இலங்கை முழுவதும் சிங்களவர் களுக்கே உரியது என்ற கருத்துருவாக் கம் சிங்கள மக்களின் மூளைகளை ஆக்கிரமித்த நிலையில், சிங்களவர் கள் மத்தியில் தமிழர் விரோதப்போக்கு வளர்த்தெடுக்கப்பட்டது. சிறு பிராயத்தி லிருந்தே இந்தக் கோட்பாட்டின் அடிப் படை பாடநூல்கள் ஊடாகவும் மிக நுணுக்கமாகப் புகட்டப்படுகின்றது. மகாவம்சத்தினூாடாக சிங்கள மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்பட்ட இந்த உணர்வே இலங்கையின் இன முரண் பாட்டின் தோற்றத்திற்கு அடிகோலியது, தமிழ்மக்கள் மீதான அரச பயங்கரவாத அடக்குமுறைக்கும் வழிகோலியது.

தமிழர் தாயகப்பிரதேசங்களை விழுங்கிய சிங்களக் குடியேற்றங்கள்

தமிழர் தாயகப்பிரதேசங்களில் 1940 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தமிழர்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிப்பதன் மூலம், இலங்கைத் தீவில் சிங்களவர்களின் பரம்பலை அதிகரிக்கச் செய்து, தமிழ்மக்கள் சிறுபான்மையினர் என்ற கருத்தை வேரூன்றச் செய்வதே பௌத்த - சிங்களப் பேரினவாத அரச இயந்திரத் தின் நோக்கமாகும். வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம் பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து, வடக்கினையும் கிழக்கி னையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு குடி யேற்றம் கருவியாய் கைகொடுத்தது.

இந்த அடிப்படையில் மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்குமிடையி லுள்ள நிலத்தொடர்பு, திருகோண மலைக்கும் முல்லைத்தீவுக்குமிடை யிலுள்ள நிலத்தொடர்பு ஆகியவற்றை துண்டிப்பதன் மூலம் தமிழர் தாயகத் தினை துண்டாடும் தொலைநோக்கு டன் சிங்களம் செயற்பட்டது. அதே போல் அம்பாறை - மட்டக்களப்பி னைப் துண்டாடும் சூழ்ச்சியுடன் பற் பல குடியேற்றத்திட்டங்களை அமைத்தது. போராளிகளுக்கும் மக்களுக்கு மிடையிலான தொடர்புகளை வேரறுப் பதற்கும் குடியேற்றம் துணைநின்றது.

குளங்கள் புனரமைப்புத் திட்டம், நீர்ப்பாசனத்திட்டம், விவசாய அபிவி ருத்தித் திட்டம் என்ற போர்வைகளில் குடியேற்றத்திட்டங்களே அபிவிருத்தி செய்யப்பட்டன. தமிழர்கள் மீது தாக்கு தல் நடாத்துவதற்கு சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு ஆயுதப்பயிற்சியும் ஆயு தங்களும் வழங்கப்பட்டன. இதற்கு நில மற்ற வறிய சிங்கள மக்கள் கடும் போக்கு சிங்கள மேலாண்மையாளர்க ளுக்கு பயன்பட்டனர். தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த இடங்க ளிலிருந்து விரட்டப்பட்டு, அவ்விடங்க ளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்ட தோடு தமிழ்ப்பிரதேசங்களுக்கு சிங்க ளப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, படிப்படியாக சிங்கள மயமாக்கல் விரி வாக்கம் கண்டது. குடியேற்றப் பிரதே சங்களில் புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்கி சிங்களவர்களின் சனத் தொகை பரம்பலை அதிகரிப்பதற் கான திட்டமிட்ட சதிகள் அரங்கேற்றப் பட்டன.

தமிழ் மக்கள் மீதான படுகொலைகள்

இதன் ஒரு அங்கமாகவே கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக் களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் கட்டவிழ்த்துவிட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைக ளையும் நோக்கவேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலையில் 200 வரை யிலான தமிழ் மக்கள் படுகொலை, அம்பாறை மாவட்டத்தில் வீரமுனைப் படுகொலை மற்றும் திருகோணமலை தென்னமரவாடி படுகொலை என தமிழர்கள் மீதான படுகொலைப் பட்டியல் நீண்டு செல்கின்றது. மட்டக் களப்பில் மட்டும் 20க்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற் றுள்ளன. கிழக்கில் தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்குமி டையில் சூழ்ச்சிகள் மூலம் படு கொலைகளைத் தூண்டியும் சிங்களம் வேடிக்கை பார்த்தது.

இன்று சமாதானத்திற்கான காலத் திலும் தொடர்கின்ற புத்தர் சிலை விவகாரங்களையும் நாம் இதன் பின் னணியிலேயே நோக்க வேண்டும். இனக்கலவரத்தை தூண்டுமளவிற்கு இந்த விவகாரம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது பலரும் அறிந் ததே. திருமலை, வவுனியா, யாழ்ப் பாணம் ஆகிய தமிழர் தாயகப்பிர தேசங்களில் புதிது புதிதாய் தோன்றும் புத்தர் சிலைகள், தமிழ்த்தேசிய எழுச்சியின் உச்சத்தை சகிக்க முடியாத சிங்கள இனவாதத்தின் குரூர மன நிலையை கோடிட்டுக்காட்டு கின்றது. இவ்வாறாக தமிழ் மக்களின் போராட்டத்திற் கான நியாயங்களை வலு விழக்கச் செய்யவும், இலங்கை முழுவதும் சிங்கள வர்களுக்குச் சொந்தமானது என்ற கற்பனைக் கோட் பாட்டுக்கு வலுச்சேர்க்கவும், தமிழ்மக்க ளின் தாயகக் கோட்பாட்டினையும் தன்னாட்சியுரிமையையும் நிராகரிப் பதற்கும், பௌத்த சிங்கள மேலாண்மை ஆட்சியாளர்கள் திட்டங் களை வகுத்து செயற்பட்டனர் - செயற்பட்டு வருகின்றனர்.

குடியேற்றம்- பலஸ்தீனமும் தமிழர் தாயகமும்

போராட்டத்திற்கான நியாயப்பாடு கள் என்ற அடிப்படையில் பலஸ்தீனர்களினதும் தமிழர்களினதும் போராட்டம் பல ஒத்த தன்மைகளைக் கொண் டது. அதேபோல் போராடும் இனத் திற்கெதிரான அடக்குமுறையைப் பிரயோகித்த முறைகளிலும் பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும் இஸ்ரேலின் யூதப் பேரினவாதத்திற்கும் ஒத்த தன்மைகளுண்டு. அந்த நோக்கு நிலையில் காசா வெளியேற்றத்தை ஆராயும்போது பல உண்மைகளைத் தெளிய முடியும். பலஸ்தீனர்களுக் கெதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரலாற்றில் திட்டமிட்ட குடியேற்ற மையங்களை இஸ்ரேல் அகற்றுவது இதுவே முதற்தடைவ என்பதால் இந் நிகழ்வு அனைத்துலக அளவில் முக்கியத்துவம் பெறுகின்றது.

கடந்த முப்பது ஆண்டுகளாக பலஸ் தீன மக்கள் தமது விடுதலைக்கான அனைத்துலக ஆதரவினைப் பெற்று வந்திருக்கின்றனர். உண்மையில் ஆதரவு என்பதை விட அனுதாபம் என்பதே பொருத்தமான சொல்லாடலா கும். அனுதாபத்தினை அள்ளிப் பொழிந்தே அம்மக்களுக்கான தீர்வு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டி ருக்கின்றது. (இது தனியாக ஆராய வேண்டிய விடயம்). முதலில் இங்கே காசா வெளியேற்றத்தினை ஊடகங் கள் சித்திரித்த விதத்தினைப் பார்ப் போம்.

காசா வெளியேற்றம் - ஊடகங்களின் சித்திரிப்பு

யூதர்கள் ஏதோ தமது சொந்த தாயகத்தை விட்டு வெளியேறுவது போன்ற தோற்றப்பாட்டினையே ஊடகங்கள் தந்தன. கண்ணீரும் கம் பலையுமான யூத மக்களின் தவிப்புணர்வே ஊடகங்களை ஆக்கிரமித்தன. ஆனால் அந்த எதிர்ப்பும் தவிப்பும் யூத அடிப்படைவாத கடும்போக்காளர்கள் அரங்கேற்றிய நாடகம் என்பதையும் ஊடகங்கள் சில விளக்கத் தவற வில்லை. ஊடகம் என்பது சக்தி வாய்ந்தது. இன்றைய பல்லூடகச் சூழல் இன்னும் அதி சக்தியுடையது. கருத்துருவாக்கம் சார்ந்து மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தக்கூடிய அச்சக்தி, சில சமயங்களில் அநியாயத்தை நியாயப்படுத்தவும், நியாயத்தை அநியாயமாக சித்திரிக்க வும் பயன்பட்டு வருவது வேதனைக்குரியது.

ஊடகர்கள் காசா குடியேற்றப் பகுதி யில் நின்றிருந்த வேளைகளிலும், ஒளிப்படக்கருவிகள் இயங்கு நிலை யில் இருந்த போதுமே யூதர்கள் உருக் கமான முறையில் கண்ணீர் வெள்ளத்தை மடைதிறந்து விட்டனர் என்றும் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. கடும்போக்கு மத அடிப்படை வாதிகள் வெளியேற மறுத்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர். சில பலஸ்தீனர்களை படுகொலையும் செய்தனர். இந் நிலையில் வலுக்கட்டயமாகவே இஸ்ரேலியப் படைகள் யூதர் களை வெளியேற்றவும் நேர்ந் தது.

பலஸ்தீன மக்களின் உணர்வு

காசாவிலிருந்து யூதர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பலஸ்தீனர்கள் தமது சொந்த நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட சுதந்திர உணர்வுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை யும் ஊடகங்கள் பதிவுசெய்யத் தவறவில்லை. இளைஞர்கள் தேசியக்கொடிகளை ஏந்திய வாறு மகிழ்ச்சி பொங்க ஓடித் திரிந்தனர். நாற்பது ஆண்டு கால ஆக்கிரமிப்பு, சொந்த வாழ் விடங்களை இழந்து நம்பக்கை யீனங்களுடனும் ஏக்கங்களுடனும் ஏமாற்றங்களுடனும் இருந்த மக்களுக்கு இது பெருத்த மகிழ்ச்சியை தந்திருக்கின்ற தென்றால் அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வே யாகும். எத்தனை தசாப்தங்கள் சென்றாலும் சொந்த வீடு, சொந்த நிலம், சொந்த தேசம் மீதான பற்றுறுதி இம்மியளவும் தணி யாது என்பதற்கு பலஸ்தீன மக்களின் உளவெளிப்பாடு கட்டியம் கூறுகின்றது.

பறிக்கப்பட்ட நிலங்களை மீளப் பெறுவதென்பது அரசியல் ரீதியிலும் உணர்வு ரீதியிலும் பெறுமதி மிக்க நிகழ்வு எனலாம்.

இது காசா பிரதேசத்தினை சொந்த வாழ்விடமாகக் கொண்டிருந்த மக்க ளுக்கு மாத்திரம் மகிழ்ச்சி தரும் நிகழ் வல்ல. காசாவில் யூதக்குடியேற்றப் பகுதிகளில் மட்டுமல்லாமல், அதனை அண்டிய பகுதி மக்களும் எல்லைப்புற மக்களும் இஸ்ரேல் படைகளின் தாக்கு தல்களுக்கு முகம் கொடுத்தனர். எனவே இனி அந்தத் தொல்லையும் நீங்கியதென்ற மகிழ்ச்சி பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இங்கு கோடிட்டுக் காட்டவேண்டிய விடயம் என்னவெனில், இஸ்ரேல் தேசத்தின் உச்சநிலைத் தொழில்நுட் பத்தையும் படை பலத்தையும் நம்பியே காசா குடியேற்றம் அகற்றப்படுகின்றது (படைகள் உள்ளடங்கலாக) என்று இஸ்ரேல் தலைமையமைச்சர் ஏரியல் சரோன் ஆரம்பத்தில் கூறினார். எனவே மீண்டும் தேவையேற்படின் இந்த இடங்களைப் பிடிப்போம் என் பதே சரோனின் கூற்றில் புதைந்துள்ள எண்ணக்கருவாகும். மீண்டும் இந்த இடங்களில் பலஸ்தீன மக்கள் குடிய மர்த்தப்பட்டால் மாத்திரமே அரை நூற் றாண்டு காலத்திற்கும் மேலாக தமது சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட் டப்பட்டு ஏதிலி வாழ்வில் வாடிய பாலஸ்தீன மக்களுக்கு இது பூரண வெற்றியாக நிலைக்கும்.

காசா பிரதேசமானது நிலப்பரப்பில் மிகவும் சிறிய பிரதேசமாகும். இது 45 கி.மீ நீளத்தினையும் 5௭ கி.மீ அக லத்தினையும் கொண்ட பரப்பாகும். எனவே இலகுவில் மீளக்கைப்பற்ற முடியும். தவிர எகிப்தின் எல்லையை அண்டிய கரையோரங்கள் மற்றும் காசாவின் துறைமுகங்களும் தொடர்ந் தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில், பலஸ்தீனர்க ளின் மீள்குடியேற்றமும் இயல்புவாழ் வும் தொடர்ந்தும் கேள்விக்குரியதா கவே இருக்கின்றது. காசாவிற்கும் மேற்குக்கரைக்குமிடையிலானதும், காசாவிற்கும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலானதுமான வாணிப நடவடிக்கைகள், போக்குவரத் துக்கள் பாதிக்கப்படும். இது பலஸ் தீனத்தில் மீளக்குடியேறும் மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துவ தோடு காசாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும்.

காலச்சக்கரத்தினை மூன்று தசாப்தங்கள் பின்னகர்த்தி மீள்பார்வை செய்வதன் மூலம் யூதர்களின் திட்டமிட்ட குடியேற்றம் பற்றிய ஆக்கிரமிப்பு வரலாற்றினை அறியமுடியும்.

1967களில் பலஸ்தீன மக்கள் பாரம்பரிய மாக வாழ்ந்துவந்த காசா பள்ளத்தாக்கு மற்றும் மேற்குக்கரை ஆகிய பிரதேசங்களி லிருந்து விரட்டப்பட்டு அங்கெல்லாம் யூதர்கள் குடியேற்றப்பட்டனர். இஸ்ரேல் படைகள் எகிப்திலிருந்து படையெடுத்து காசா பள் ளத்தாக்கையும் ஜோர்டானிலிருந்து படை யெடுத்து மேற்குக்கரையையும் ஆக்கிரமித் தன. காசாவில் 22 யூதக்குடியேற்ற மையங்க ளும் மேற்குக் கரையில் 120 யூதக்குடியேற்ற மையங்களும் அமைக்கப்பட்டன.

கேள்விக்குள்ளான மேற்குக்கரை வெளியேற்றம்

காசாவில் 22 குடியேற்ற மையங்களில் 9000 யூதர்கள் வரையில் வசித்தனர். மேற்குக்கரை யில் 120 குடியேற்ற மையங்களில் 240,000 யூதர்கள் வசிக்கின்றனர். காசாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே என்பதால் வெளியேற் றம் சாத்தியமானது. ஆனால் மேற்குக்கரை யில் இரண்டரை லட்சம் பேர் வரையில் இருப் பதால் வெளியேற்றமென்பது கடினமானதா கவே அமையும்.

தொடர்ந்து மேற்குக்கரை உட்பட பலஸ் தீனப் பகுதிகளின் ஏனைய குடியேற்றங்க ளும் படிப்படியாக அகற்றப்படும் என்ற நம் பிக்கை பலஸ்தீன மக்கள் மத்தியில் ஏற்பட்டி ருக்கின்றது. ஆனால் அந்த நம்பிக்கை ஈடே றுவதற்கான சாத்தியக்கூறுகள் கேள்விக்குரி யனவே.

இன்று 38 ஆண்டுகள் கடந்த நிலையில் காசாப்பிரதேசத்தின் யூதக்குடியேற்ற மையங் கள் அகற்றப்பட்டு, இஸ்ரேல் படைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளன. இம்மாதம் (செப்.) 13ஆம் நாள் இஸ்ரேல் படையினர் காசாவிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளன.

ஓகஸ்ட் 15ஆம் நாளிலிருந்து இஸ்ரேல் படைகளும் காவல் துறையினரும் பெருமள வில் குவிக்கப்பட்டு தொடர்ச்சியாக இரு வாரங்கள் வெயியேற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. எதிர்ப்பின்றி இஸ்ரேல் அரசின் முடிவினை ஏற்று வெளியேறியவர் களின் புனர்வாழ்வுக்கான பொருளாதார இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. வெளியேற மறுத்தோருக்கு ஓகஸ்ட் 15இற்குப் பின்னர் 48 மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டு, காலக் கெடுவின் பின்பும் வெளியேற மறுத்தோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் என்பது கடந்த வாரங்களில் பல்லூடகங் களை ஆக்கிரமித்த முக்கிய செய்திகளில் ஒன்று.

வரலாறு சொல்லும் பாடம்

வரலாறு எவ்வாறு நகர்கின்றது என்று பாருங்கள். யூதக்குடியேற்றங்களை அமைப்பதில் முன்னின்று செயற்பட்டவர் கடும்போக் காளரான ஏரியல் சரோன். இன்று அவற்றை காலக்கெடு விதித்து அகற்றி குடியேற்றவாசிக ளால் துரோகிப் பட்டமும் சூட்டப்பெற்றிருக் கின்றார். இது வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனும் முதுமொழிக்கு பொருள் தருகின்றது. யூத மக்களுக்கு இனவெறியை யும் மத அடிப்படை வாதத்தினையும் ஊட்டி பெருமைப்பட்டு, அந்த மக்களையும் பெருமைப்படவைத்த ஒருவர், அந்த மக்களாலேயே துரோகியாக வஞ்சிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

காசாவிலிருந்து யூதர்களின் வெளியேற்ற மானது இரண்டு யதார்த்தங்களை வரலாற் றின் முகத்தில் அறைந்து சொல்கின்றது. எத்தனை காலங்கள் கழிந்தாலும் ஒரு மக்க ளினத்தின் பூர்வீக பூமி அந்த மக்களுக்கே சொந்தமென்பது ஒரு யதார்த்தம். சிங்கள ஆட் சியாளர்களால் திட்டமிட்ட முறையில் அபக ரிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சொந்த நிலங் களும் அவர்களிடம் வந்து சேரும் என்ற நம் பிக்கையையும் தருகின்றது. மேற்குக் கரையிலிருந்து கண் துடைப்பிற்காக நான்கு குடியேற்ற மையங்கள் மாத்திரமே அகற்றப்பட் டுள்ளன. எனவே, இந்த நிகழ்வு ஈழத்தமிழர்கள் மேலும் விழிப்பாக இருப்பதற்கான பாடமாகவும் (சிங்களவர்களால் எங்கள் தேசம் இனியும் விழுங்கப்படுவதை அனும திக்க முடியாது என்ற பாடத்தினைத் தருகின் றது) அமைகின்றது என்பதே இரண்டாவது யதார்த்தமாகும்.
நன்றி தமிழ் நாதம்
....
Reply
#2
குடியேற்றங்கள்
....
Reply
#3
இந்தக் கட்டுரை இங்கேயும் இருக்கு.. :roll:

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=6696
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஒ மன்னிக்கவும் நான் இங்கே பார்க்கவில்லை.தமிழ் நாதத்தில் படித்தேன் வசி ,இங்கே போடலாமே என்று நினைத்தேன்
....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)