10-28-2005, 08:57 PM
உடலில் கொழுப்புச்சத்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தேவைப்படுகிறது, இந்த லிமிட்டை தாண்டும்போது உடலில் பல நோய்கள் உற்பத்தியாக வழி வகுக்கிறது. சராசாpயாக, ஆண்கள் உடலில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகவும், பெண்களில் 30 சதவிகிதத்துக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமான கொழுப்பு இருந்தால் பிரச்சினை தான். கொழுப்பு அதிகமானால் சுமார் 15 வகையான நோய்கள் ஏற்படுவதாக மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய், வாதம். பித்தப்பை கோளாறுகள், சிறுநீரகக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். மேலும் இவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். எனவே அளவுக்கு அதிகமான கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதைக் குறைப்பதுவே சிறந்தது.
நன்றி
தினகரன்.கொம்
நன்றி
தினகரன்.கொம்

