11-08-2005, 05:54 PM
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் மாணவி மீது பாலியல் வல்லுறவு
வுரநளனயலஇ ழேஎநஅடிநச 08 - 07:51:08
(திருக்கோயில் நிருபர்)
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு முஸ்லிம் பிரதேசத்தில் 14 வயது மாணவி ஒருவர் இரு இளைஞர்களால் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் முஸ்லீம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அக்கரைப்பற்று சிறிலங்கா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான எஸ்.எஸ்.சூரியாராட்சி தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:-
குறித்த மாணவியும், அவரது பெற்றோரும் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் அக்கரைப்பற்று அம்பாறை வீதி 3ம் கட்டையிலுள்ள உறவினர் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருப்பதாகவும் அறியமுடிகிறது.
சம்பவ தினமான கடந்த ஞாயிறு இரவு 7.00 மணியளவில் இந்த மாணவி குடிநீர் எடுப்பதற்காக அருகிலுள்ள வாய்க்காலுக்குச் சென்ற போது அங்கு ஆட்டோவில் வந்த இரு இளைஞர்கள் இவரைக் கடத்திச் சென்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர்.
மாணவியைக் காணாது பதற்றமடைந்த பெற்றோர் அக்கரைப்பற்று சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட போது ஒரு முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டார். மற்றைய நபர் தப்பிச் சென்றுவிட்டார். சந்தேக நபர்கள் இருவரும் அக்கரைபற்று பள்ளிக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி திங்கட்கிழமை வைத்திய பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=3494
வுரநளனயலஇ ழேஎநஅடிநச 08 - 07:51:08
(திருக்கோயில் நிருபர்)
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு முஸ்லிம் பிரதேசத்தில் 14 வயது மாணவி ஒருவர் இரு இளைஞர்களால் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் முஸ்லீம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அக்கரைப்பற்று சிறிலங்கா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான எஸ்.எஸ்.சூரியாராட்சி தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:-
குறித்த மாணவியும், அவரது பெற்றோரும் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இவர்கள் அக்கரைப்பற்று அம்பாறை வீதி 3ம் கட்டையிலுள்ள உறவினர் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருப்பதாகவும் அறியமுடிகிறது.
சம்பவ தினமான கடந்த ஞாயிறு இரவு 7.00 மணியளவில் இந்த மாணவி குடிநீர் எடுப்பதற்காக அருகிலுள்ள வாய்க்காலுக்குச் சென்ற போது அங்கு ஆட்டோவில் வந்த இரு இளைஞர்கள் இவரைக் கடத்திச் சென்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர்.
மாணவியைக் காணாது பதற்றமடைந்த பெற்றோர் அக்கரைப்பற்று சிறிலங்கா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட போது ஒரு முஸ்லீம் இளைஞர் கைது செய்யப்பட்டார். மற்றைய நபர் தப்பிச் சென்றுவிட்டார். சந்தேக நபர்கள் இருவரும் அக்கரைபற்று பள்ளிக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி திங்கட்கிழமை வைத்திய பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=3494
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->