Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புற்றுநோயாளிகளை மீன் எண்ணெய் காப்பாற்றும்
#1
[size=14] [b]மரண வாசலில் நிற்கும் புற்றுநோயாளிகளை
மீன் எண்ணெய் காப்பாற்றும்..*
<img src='http://www.dinakaran.com/health/daily/2005/nov/17/fish.jpg' border='0' alt='user posted image'>
புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து விட்டால், குணப்படுத்த முடியும். முற்றிய கட்டத்தில் ஒன்றுமே செய்ய முடியாது.
இதுதான் இன்றுவரை உள்ள நிலைமை. ஆனால் அமெரிக்காவின் நவேடா மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரான் பார்தினி, ஒமேகா-3 அமிலம் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் 78 வயது முதியவர், நுரையீரல் புற்றுநோயாளி. மரண வாசலில் நின்று கொண்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் நாள் குறித்து விட்டனர்.
அதிகம் போனால் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று தொpவித்து விட்டனர்.

இது நடந்தது 2000ம் ஆண்டில். இந்நிலையில் டாக்டர் ரான் பார்தினி, 78 வயது முதியவருக்கு ஒமேகா-3 அமிலத்தை கொடுத்து சோதனை செய்தார்.

கிட்டத்தட்ட 4 வருட சிகிச்சைக்குப் பின், கடந்த ஆண்டு ஸ்கேன் எடுத்த போது, புற்றுநோய் கட்டிகளின் அளவு 10 சதவீதம் சுருங்கி இருந்தது தெரிய வந்தது. இதனால் ஏற்கனவே தேதி குறிக்கப்பட்ட அந்த முதியவர் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டுள்ளார்.

வழக்கமாக கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே புற்றுநேயாளி களுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நிலைமையை இதன்மூலம் மாற்றி, யோசிக்க வைத்துள்ளார் டாக்டர் ரான் பார்தினி. அவர் தற்போது மேற்கொண்டு விரிவான ஆய்வுகளை செய்து வருகிறார்.

ஒமேகா-3 அமிலம், மீன் எண்ணெய் மற்றும் ஆல்கே என்ற ஒருவகை கடற்பாசி ஆகியவற்றில் நிறைய உள்ளது.

அதே சமயம் சோளத்தில் ஒமேகா 6 என்ற அமிலம் இருக்கிறது. இது வேலைக்கு ஆகாது. ஏனெனில் புற்றுநோய் கட்டிகளை நன்றாக வளர்த்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)