12-21-2005, 11:21 AM
ரணிலை `குள்ளநரி'யெனக் கூறும் புலிகள் மகிந்தவை நல்ல மனிதரெனக் கூறுவதேன்?
இரகசிய உடன்பாடிருப்பதாக கபீர் காஷிம் கண்டுபிடிப்பு
சமஷ்டிமுறையில் தீர்வுகாண முயன்ற ரணிலை `குள்ளநரி' எனக் கூறி எதிர்த்த புலிகள் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வெனக் கூறும் மகிந்த ராஜபக்ஷவை `நல்ல மனிதர்' எனக் கூறி ஆதரிக்கின்றனர். அவ்வாறெனில் மகிந்தவுக்கும் புலிகளுக்குமிடையில் இரகசிய உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுவதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் கபிர் காஷிம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவினரும் செய்துகொண்ட தேர்தல்கால உடன்படிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கை மீளாய்வு, நோர்வே வெளியேற்றம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது என்ன நடைபெறுகிறது? ஜே.வி.பி., ஹெல உறுமயவின் நிலைப்பாடுகள் என்ன?
ஜே.வி.பி., ஹெல உறுமயவின் வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகள் மட்டும்தானா? நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு பற்றிய இவர்களின் கோஷங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன?
தற்போது யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் வரவு - செலவுத் திட்டம் பற்றிப் பேசிப் பயனில்லை. வரவு -செலவுத் திட்டங்கள் வெறும் இலக்கங்களை மட்டும் கொண்ட வார்த்தை ஜாலங்கள்.
அரச துறைக்கு மட்டும் முன்னுரிமை அளித்துள்ள இந்த வரவு- செலவுத் திட்டத்தில் தனியார் துறை குறித்து எந்தத் திட்டங்களும் இல்லை. அரச முதலீடுகள் தொடர்பான திட்டங்கள் வெறும் கற்பனைகள் மட்டுமே.
உள்ளூர் அரச வங்கிகளிலேயே கடன் பெறப்போகின்றது இந்த அரசாங்கம். இதனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கும். வட்டிவீதங்கள் அதிகரிப்பினால் உள்ளூர் வர்த்தகர்களும் வர்த்தக நிறுவனங்களும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.
Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm
இரகசிய உடன்பாடிருப்பதாக கபீர் காஷிம் கண்டுபிடிப்பு
சமஷ்டிமுறையில் தீர்வுகாண முயன்ற ரணிலை `குள்ளநரி' எனக் கூறி எதிர்த்த புலிகள் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வெனக் கூறும் மகிந்த ராஜபக்ஷவை `நல்ல மனிதர்' எனக் கூறி ஆதரிக்கின்றனர். அவ்வாறெனில் மகிந்தவுக்கும் புலிகளுக்குமிடையில் இரகசிய உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுவதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் கபிர் காஷிம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவினரும் செய்துகொண்ட தேர்தல்கால உடன்படிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கை மீளாய்வு, நோர்வே வெளியேற்றம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது என்ன நடைபெறுகிறது? ஜே.வி.பி., ஹெல உறுமயவின் நிலைப்பாடுகள் என்ன?
ஜே.வி.பி., ஹெல உறுமயவின் வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகள் மட்டும்தானா? நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு பற்றிய இவர்களின் கோஷங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன?
தற்போது யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் வரவு - செலவுத் திட்டம் பற்றிப் பேசிப் பயனில்லை. வரவு -செலவுத் திட்டங்கள் வெறும் இலக்கங்களை மட்டும் கொண்ட வார்த்தை ஜாலங்கள்.
அரச துறைக்கு மட்டும் முன்னுரிமை அளித்துள்ள இந்த வரவு- செலவுத் திட்டத்தில் தனியார் துறை குறித்து எந்தத் திட்டங்களும் இல்லை. அரச முதலீடுகள் தொடர்பான திட்டங்கள் வெறும் கற்பனைகள் மட்டுமே.
உள்ளூர் அரச வங்கிகளிலேயே கடன் பெறப்போகின்றது இந்த அரசாங்கம். இதனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கும். வட்டிவீதங்கள் அதிகரிப்பினால் உள்ளூர் வர்த்தகர்களும் வர்த்தக நிறுவனங்களும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.
Thinakural
http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

