12-22-2005, 03:39 PM
<b>புலிகள் இணங்கினால் ஜப்பானில் நாளையே பேச்சு ஜனாதிபதி தெரிவிப்பு </b>
அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தையை ஜப்பான் நாட்டில் நடத்த புலிகள் இயக்கம் விரும்பினால் பேச்சுக்களை நாளைக்கு ஆரம்பிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் புலிகள் இயக்கம் கோரிக்கை விடுக்கும் நோர்வே நாட்டில் அல்ல. பேச்சுவார்த்தைக்கான இடம் முக்கியமல்ல, பேச்சுவார்த்தையே முக்கியம் என நேற்று மாலை இந்திய ஊடகவியலாளர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு இந்திய ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியை அலரி மாளிகையில் வைத்து நேற்று சந்தித்து கலந்துரையாடியது.
அரசு புலிகளுக்கிடையிலான சமரசப் பேச்சுவார்த்தை நோர்வே நாட்டில் நடைபெற வேண்டும் என புலிகள் இயக்கம் விரும்புகிறது. ஆனால், சமரச பேச்சுவார்த்தை ஜப்பான் நாட்டில் நடைபெற வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. அதற்கு புலிகள் இணங்குமானால் பேச்சுவார்த்தையை நாளையே ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.
இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் நாடுகளின் இணை தலைமை நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து கொண்டு இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.இது குறித்து எனது இந்திய விஜயத்தின் போது விரிவாக ஆராயப்படும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.யான தி.மகேஸ்வரன் ஆகியேõரும் தன்னுடன் இந்தியாவுக்கு வருவதாகவும் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தையை ஜப்பான் நாட்டில் நடத்த புலிகள் இயக்கம் விரும்பினால் பேச்சுக்களை நாளைக்கு ஆரம்பிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் புலிகள் இயக்கம் கோரிக்கை விடுக்கும் நோர்வே நாட்டில் அல்ல. பேச்சுவார்த்தைக்கான இடம் முக்கியமல்ல, பேச்சுவார்த்தையே முக்கியம் என நேற்று மாலை இந்திய ஊடகவியலாளர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு இந்திய ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியை அலரி மாளிகையில் வைத்து நேற்று சந்தித்து கலந்துரையாடியது.
அரசு புலிகளுக்கிடையிலான சமரசப் பேச்சுவார்த்தை நோர்வே நாட்டில் நடைபெற வேண்டும் என புலிகள் இயக்கம் விரும்புகிறது. ஆனால், சமரச பேச்சுவார்த்தை ஜப்பான் நாட்டில் நடைபெற வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. அதற்கு புலிகள் இணங்குமானால் பேச்சுவார்த்தையை நாளையே ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.
இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் நாடுகளின் இணை தலைமை நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து கொண்டு இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.இது குறித்து எனது இந்திய விஜயத்தின் போது விரிவாக ஆராயப்படும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.யான தி.மகேஸ்வரன் ஆகியேõரும் தன்னுடன் இந்தியாவுக்கு வருவதாகவும் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
<b> .. .. !!</b>

