01-13-2006, 02:02 AM
[size=16][b]மதியண்ணாவின் "கண்ணம்மா"
[size=13]இனிய ஒரு காலை நேரம். என்னை பொருத்த வரைக்கும் நன்றாக தூங்கும் பொன்னான காலம். கவலைகள், யோசனைகள் அற்ற இனிமையான பத்து வயதிற்குள் நான் காலடி எடுத்து வைத்திருந்தேன்.
"கண்ணம்மா..கண்ணம்மா.."
இந்த அம்மாவுக்கு வேலையே இல்லையா? தூங்க விடமா எழுப்புறாங்களே!!
"கண்ணம்மா..."
இது மதி அண்ணாவின் குரல் ஆயிற்றே. மதி அண்ணா என்றாலே எனக்கு ஒரு சந்தோசம் தான்.
எங்கள் வீட்டுக்கு முன்னால் தான் அண்ணாக்களின் முகாம் இருந்தது. நான் பிறந்ததில் இருந்து எனக்கு தெரிந்தது எல்லாம் அண்ணாக்களை தான்.
நாட்டு பிரச்சனையால் உறவுகள் எல்லம் இடம் பெயர்ந்து செல்ல தொடங்கிய கால கட்டம். உறவுகளை விட உயிராய் எமை காக்கும் அண்ணண்களை தான் நான் அதிகம் நேசித்தேன்..நேசிக்கிறேன்.
மதி அண்ணா எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இங்கு தான் இருக்கிறார். நல்ல உயரம், கூர்மையான கண்கள். துவிச்சக்கர வண்டியில் போகும் போதெல்லாம் பார்த்து இருக்கிறேன். கண்கள் நேரே வீதியை பார்த்தாலும் சுற்றிவர நடப்பதை கவனித்து இருப்பர். (நான் வெளியே செய்யும் குளப்படி எல்லம் இப்டி தான் அவருக்கு தெரிய வருவது).
நன்றாக பாடுவார், கவிதை சொல்லுவார். பாரதி கவிதைகள் என்றால் அப்படி ஒரு ஈடுபாடு.
"மதிண்ணாட அம்மா எங்க? அப்பா எங்கே?" என நான் சின்னனிலே கேட்டதுண்டு.
"எனக்கு எல்லாமெ நீ தானே கண்ணம்மா" என பதில் சொல்லுவார். அந்த வயதில் அதற்கு மேல் நானும் கேட்டதில்லை. பின்னர் அம்மா கூற கேட்டு இருக்கிறேன், அண்ணாவிற்கு யாருமே இல்லையாம் எங்களை தவிர.
"கண்ணம்மா இன்னும் நித்திரையால எழும்பலையா அக்கா?" மதிண்ணாதான், அம்மாவிடம் கதைக்கிறார்.
என்னுடைய மதிண்ணாவை விட தூக்கம் பெரிதா என நினைத்ததால், படுக்கையை விட்டு எழுந்து மதிண்ணாவை தேடி முற்றத்துக்கு சென்றேன்.
மதிண்ணாவிடனும் சரி,மற்ற அண்ணக்களும் சரி வீட்டுக்குள் வரமாட்டார்கள். நாங்கள் எவ்வளவே கெஞ்சியும் பயனில்லாமல் போகவே. முற்றத்திலேயெ இருக்கைகள், மேசை அதற்கு ஒரு நிழல் தர குடை என அமைத்து இருந்தார் எனது தந்தை.
வாசல் படியில் நின்று கொண்டு மதிண்ணாவை பார்த்து சிரித்தேன்.
"வணக்கம் கண்ணம்மா" என கூறி அழகாய் புன்னகைத்தார்.
"வணக்கம் மதிண்ணா" என கூறி ஓடி சென்று அவரின் முன் இருந்த மேசையில் ஏறி உர்டார்ந்து கொண்டேன்.
"மதிண்ணா மதிண்ணா மீன் தொட்டி எப்ப செய்து தருவிங்க?" என தூக்க கலக்கத்திலும் எனக்கு வேண்டிய விடயத்தை பற்றி கேட்டேன்.
"அதுக்கு தானே வந்து இருக்கிறேன்" என கூறி ஒரு சின்ன பெட்டியை தூக்கி நான் இருந்த மேசைக்கு மேல் வைத்தார்.
"அய்ய்ய் மதிண்ணா என்டா என்னுடைய மதிண்ணா தான், இருங்க கண்ணவை கூட்டி வாறேன்" என கூறி சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள பக்கத்துவீட்டுக்கார
நண்பன் கண்ணண் வீட்டிற்கு செல்ல ஆயுத்தம் ஆனேன்.
மேசையில் இருந்து என்னை இறங்க விடாமல் "அது பிறகு போகலாம் நாங்கள் இப்ப கதைப்பம். இன்டைக்கு கண்ணம்மாவோட தான் மதிண்ணா சாப்பிட போறேன்"
"அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் உண்மையாவா மதிண்ணா??" எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மதிண்ணாவை என்னுடம் சாப்பிட அழைத்த போதெல்லாம் தட்டி கழித்தவர். இன்று தானே சாப்பிடலாம் என கேட்டால் ஆச்சர்யமாக இருக்காதா??
"அம்மா சமைக்கிற வரைக்கும் நாங்கள் கதைச்சு கொண்டு இருப்பம்"
"ஓம் மதிண்ணா இந்த முறை நாங்கள் பட்டத்துக்கு லைற் போடுவமோ? ரவி போட போறானாம், அதைவிட நாங்கள் நல்லா செய்யவேணும்..என்ன?"
"அதுக்கேன்ன செய்திட்டா போச்சு. இதென்ன தலை முடி எல்லம் இப்படி ஓடி போய் சீப்பு எடுத்து வாங்கோ" என மதி அண்ணா கூற, மறுகணமே ஓடி சென்று சீப்போடு நான் வர,
"இன்டைக்கு அண்ணா தலை இழுத்துவிடுறன், ஆனா கண்ணம்ம இனிமேல் நீங்களே பழக வேணும்" என கூறி எனக்கு தலை வாரிவிட்டார்.
நான் பல் துலக்கி முகம் கழுவி வரவும் அம்மா சமைத்துமுடிக்கவும் சரியாக இருந்தது.
"கண்ணம்மா அண்ணாவுக்கு கரைச்சல் குடுக்காம சாப்பிட வேணும்" இது என்னுடைய தாயார். எப்பவும் எதாவது சொன்னால் தானெ அம்மாக்கு சரி!!
ஆனால் அம்மாவை குறை சொல்ல கூடாது. வீட்டுக்கு ஒரு பிள்ளை நான். பெரியம்மாக்களின் பிள்ளைகள் அனைவரும் ஆண்கள் தான். எனக்கு எல்லா இடமும் தனி மரியாதை தான். சின்னனில காய்ச்சல் வந்து கஸ்டபட்டனானாம். எல்லாம் சேர்ந்து எனக்கு சின்னனில இருந்து செல்லம் கூட தான். அதனாலேயே நான் கொஞ்சம்...கொஞ்சமென்ன ? நிறையவே குளப்படி தான். சொல்லு கேக்கிற பழக்கம் என்றாலே எனக்கு என்ன என்று தெரியாது.
"பரவாயில்லை அக்கா" என மதிண்ணா சொல்ல, "வவவவே இப்ப கேட்டிங்களோ அம்மா? மதிண்ணா எப்பவும் என்ட பக்கம் தான்"
"மதி, இவளுக்கு "கண்ணம்மா" என்று நீ பெயர் வைத்து இருக்க கூடாது. "வாயாடி" என்பது தான் நல்ல பொருத்தம். ஏதோ அண்ணணாச்சு தங்கை ஆச்சு" என கூறி அம்ம நகர, அண்ணாவும் நானும் சாப்பிட்டு முடித்தோம்.
ம்ம்ம் சொல்ல மரந்திட்டனே, எனது இயற்பெயர் "காவ்யா". மதியண்ணா வைத்த பெயர் தான் "கண்ணம்மா". பாரதியின் ரசிகன் ஆயிற்றேன். பின்னர் எனது இயற் பெயர் மரந்து போக நான் "கண்ணம்மா" ஆகிவிட்டேன் அனைவருக்கும்.
"மதிண்ணா பிறகு வாறன். இப்ப மீன் தொட்டி காட்ட கண்ணனை கூட்டி வர போறேன்" என நான் கூறவும் "சரி ஆனா போக முதல் ஒரு தடவை எங்கட குடும்ப பாட்டு சரியா?
அதென்ன குடும்ப பாட்டு என்று கேக்கிறீங்களா? சின்னனில மதியண்ணா சொல்லி தந்த ஒரு பாட்டு தான். நாங்க எப்ப கண்டாலும் முதலில் அதை தான் பாடுவது வழக்கம்.
"சரி", என நான் கூற அண்ணாவின் கைகளை பிடித்து கொண்டு...
" I love you
You love me
We are a big family
With a great big hug
and
Kisses me to you
Wont u say you love me too?""
பாடி முடித்துவிட்டு மேசையில் இறங்கி ஓடி போன என்னை "கண்ணம்மா" என மதிண்ணா அழைக்கவும் திரும்பி பார்த்தேன். சிரித்தேன் "ஓம் மதிண்ணா"
"இது போது எனக்கு, நான் போய்ட்டு வாறேன் கண்ணம்மா"
"வேலையோ? மாமாவை பார்க்க போறிங்க்ளோ?" . சின்ன வயசில அண்ணக்களின்ட பொறுப்பளர்களை நான் "மாமா" என்று தான் அழைப்பது வழக்கம்.
"ஓம் அண்ணா போய்ட்டுவாறன்" என மதி அண்ணா சொன்னவுடன், அதற்கு மேல் பொறுமை இல்லாமல் கண்ணணை தேடி போய்விட்டேன்.
அன்று முழுவதும் மதிண்ணாவை காண கிடைக்கவில்லை. ஆனால் என்னிடம் சொல்லி தானெ மாமாவை பார்க்க போனார். அதற்கு மேல் யோசிக்க எனக்கு அன்று
வயசிருக்கவில்லை.
மறு நாள் காலை நான் நித்திரை விட்டு எழும் நேரம், கண்ணணின் அம்மாவின் குரல் "ராஜி ஆமிட படகை அடிச்சிருக்கினம் போல. எங்கட காம்பில இருந்து தான் பெடியள் போனதாம். கூட பழகின பிள்ளையள். மனசு அடைக்குது"
இதே போல அம்மாவும், கண்ணனிண் அம்மாவும் பல தடவைகள் பேசி இருக்கினம். அப்பொழுது கூட எனக்கு அது பெரிதாக தெரியவில்லை.
போராட்டம் என வரும் போது கண்ணீருக்கு இடமில்லை, வீரத்திற்கு தான் இடம் என என் மதியண்ணா எப்பொழுதும் சொல்வதுண்டு. அதை கேட்டு வளர்ந்த எனக்கு அண்ணாக்கள் மாவீரர் ஆகும் போது அழுகை வருவதில்லை.
அன்றும் அப்படி தான், போனது என் மதியண்ணா தான் என தகவல் வந்த போது எனைவரும் அழுதார்கள். எனக்கு ஏனோ அழுகை வரவில்லை. அது எனோ எனக்கு இன்று வரை புரியவுமில்லை.
முதலில் என்ட மதியண்ணா மாவீரர் என நினைத்த போது பெருமை தான் மேலோங்கி நின்றது.
பின்னர் நான் வளர வளர தான் மதியண்ணாவின் பிரிவால் கஸ்டபட்டேன். பல இரவுகள் அழும் என்னை பார்த்து "அண்ணா பார்த்து கொண்டு தானே இருப்பான். கண்ணம்மா அழுவது மதிக்கு பிடிக்கது தானே?" அம்மவின் அரவணைப்பில் சற்றே ஆறுதல் அடைவேன்.
அது தானே நான் எதற்காக அழ வேண்டும்? மாவீரர்கள் எப்பொழுதும் சாவதில்லை. மரணம் அவர்களை நெருங்குவதில்லை. மதியண்ணா கடவுளாகிவிடார். கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் என்னுடம் தான் என்றும் இருப்பார். என்னில் ஒரு நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது.
போரின் தாண்டவத்தில் எத்தனையோ இடங்கள், எத்தனையோ நாடுகள் எங்கு போனாலும் நான் எடுத்து செல்வது மதியண்ணாவின் மீன் தொட்டிதான்.
அன்றிலிருந்து இன்று வரை எங்கட வீட்டு சாமிபடங்களுடம் மதிண்ணாவின் படமும் வந்தாகிவிட்டது. எங்களை காப்பவன் தானே சாமி !!
கதை இங்கு முற்று பெற, மாவீர புகழ் தொடர்கிறது.
நினைவுகளில் மூழ்கியபடி
தூயா
[size=13]இனிய ஒரு காலை நேரம். என்னை பொருத்த வரைக்கும் நன்றாக தூங்கும் பொன்னான காலம். கவலைகள், யோசனைகள் அற்ற இனிமையான பத்து வயதிற்குள் நான் காலடி எடுத்து வைத்திருந்தேன்.
"கண்ணம்மா..கண்ணம்மா.."
இந்த அம்மாவுக்கு வேலையே இல்லையா? தூங்க விடமா எழுப்புறாங்களே!!
"கண்ணம்மா..."
இது மதி அண்ணாவின் குரல் ஆயிற்றே. மதி அண்ணா என்றாலே எனக்கு ஒரு சந்தோசம் தான்.
எங்கள் வீட்டுக்கு முன்னால் தான் அண்ணாக்களின் முகாம் இருந்தது. நான் பிறந்ததில் இருந்து எனக்கு தெரிந்தது எல்லாம் அண்ணாக்களை தான்.
நாட்டு பிரச்சனையால் உறவுகள் எல்லம் இடம் பெயர்ந்து செல்ல தொடங்கிய கால கட்டம். உறவுகளை விட உயிராய் எமை காக்கும் அண்ணண்களை தான் நான் அதிகம் நேசித்தேன்..நேசிக்கிறேன்.
மதி அண்ணா எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இங்கு தான் இருக்கிறார். நல்ல உயரம், கூர்மையான கண்கள். துவிச்சக்கர வண்டியில் போகும் போதெல்லாம் பார்த்து இருக்கிறேன். கண்கள் நேரே வீதியை பார்த்தாலும் சுற்றிவர நடப்பதை கவனித்து இருப்பர். (நான் வெளியே செய்யும் குளப்படி எல்லம் இப்டி தான் அவருக்கு தெரிய வருவது).
நன்றாக பாடுவார், கவிதை சொல்லுவார். பாரதி கவிதைகள் என்றால் அப்படி ஒரு ஈடுபாடு.
"மதிண்ணாட அம்மா எங்க? அப்பா எங்கே?" என நான் சின்னனிலே கேட்டதுண்டு.
"எனக்கு எல்லாமெ நீ தானே கண்ணம்மா" என பதில் சொல்லுவார். அந்த வயதில் அதற்கு மேல் நானும் கேட்டதில்லை. பின்னர் அம்மா கூற கேட்டு இருக்கிறேன், அண்ணாவிற்கு யாருமே இல்லையாம் எங்களை தவிர.
"கண்ணம்மா இன்னும் நித்திரையால எழும்பலையா அக்கா?" மதிண்ணாதான், அம்மாவிடம் கதைக்கிறார்.
என்னுடைய மதிண்ணாவை விட தூக்கம் பெரிதா என நினைத்ததால், படுக்கையை விட்டு எழுந்து மதிண்ணாவை தேடி முற்றத்துக்கு சென்றேன்.
மதிண்ணாவிடனும் சரி,மற்ற அண்ணக்களும் சரி வீட்டுக்குள் வரமாட்டார்கள். நாங்கள் எவ்வளவே கெஞ்சியும் பயனில்லாமல் போகவே. முற்றத்திலேயெ இருக்கைகள், மேசை அதற்கு ஒரு நிழல் தர குடை என அமைத்து இருந்தார் எனது தந்தை.
வாசல் படியில் நின்று கொண்டு மதிண்ணாவை பார்த்து சிரித்தேன்.
"வணக்கம் கண்ணம்மா" என கூறி அழகாய் புன்னகைத்தார்.
"வணக்கம் மதிண்ணா" என கூறி ஓடி சென்று அவரின் முன் இருந்த மேசையில் ஏறி உர்டார்ந்து கொண்டேன்.
"மதிண்ணா மதிண்ணா மீன் தொட்டி எப்ப செய்து தருவிங்க?" என தூக்க கலக்கத்திலும் எனக்கு வேண்டிய விடயத்தை பற்றி கேட்டேன்.
"அதுக்கு தானே வந்து இருக்கிறேன்" என கூறி ஒரு சின்ன பெட்டியை தூக்கி நான் இருந்த மேசைக்கு மேல் வைத்தார்.
"அய்ய்ய் மதிண்ணா என்டா என்னுடைய மதிண்ணா தான், இருங்க கண்ணவை கூட்டி வாறேன்" என கூறி சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள பக்கத்துவீட்டுக்கார
நண்பன் கண்ணண் வீட்டிற்கு செல்ல ஆயுத்தம் ஆனேன்.
மேசையில் இருந்து என்னை இறங்க விடாமல் "அது பிறகு போகலாம் நாங்கள் இப்ப கதைப்பம். இன்டைக்கு கண்ணம்மாவோட தான் மதிண்ணா சாப்பிட போறேன்"
"அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் உண்மையாவா மதிண்ணா??" எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மதிண்ணாவை என்னுடம் சாப்பிட அழைத்த போதெல்லாம் தட்டி கழித்தவர். இன்று தானே சாப்பிடலாம் என கேட்டால் ஆச்சர்யமாக இருக்காதா??
"அம்மா சமைக்கிற வரைக்கும் நாங்கள் கதைச்சு கொண்டு இருப்பம்"
"ஓம் மதிண்ணா இந்த முறை நாங்கள் பட்டத்துக்கு லைற் போடுவமோ? ரவி போட போறானாம், அதைவிட நாங்கள் நல்லா செய்யவேணும்..என்ன?"
"அதுக்கேன்ன செய்திட்டா போச்சு. இதென்ன தலை முடி எல்லம் இப்படி ஓடி போய் சீப்பு எடுத்து வாங்கோ" என மதி அண்ணா கூற, மறுகணமே ஓடி சென்று சீப்போடு நான் வர,
"இன்டைக்கு அண்ணா தலை இழுத்துவிடுறன், ஆனா கண்ணம்ம இனிமேல் நீங்களே பழக வேணும்" என கூறி எனக்கு தலை வாரிவிட்டார்.
நான் பல் துலக்கி முகம் கழுவி வரவும் அம்மா சமைத்துமுடிக்கவும் சரியாக இருந்தது.
"கண்ணம்மா அண்ணாவுக்கு கரைச்சல் குடுக்காம சாப்பிட வேணும்" இது என்னுடைய தாயார். எப்பவும் எதாவது சொன்னால் தானெ அம்மாக்கு சரி!!
ஆனால் அம்மாவை குறை சொல்ல கூடாது. வீட்டுக்கு ஒரு பிள்ளை நான். பெரியம்மாக்களின் பிள்ளைகள் அனைவரும் ஆண்கள் தான். எனக்கு எல்லா இடமும் தனி மரியாதை தான். சின்னனில காய்ச்சல் வந்து கஸ்டபட்டனானாம். எல்லாம் சேர்ந்து எனக்கு சின்னனில இருந்து செல்லம் கூட தான். அதனாலேயே நான் கொஞ்சம்...கொஞ்சமென்ன ? நிறையவே குளப்படி தான். சொல்லு கேக்கிற பழக்கம் என்றாலே எனக்கு என்ன என்று தெரியாது.
"பரவாயில்லை அக்கா" என மதிண்ணா சொல்ல, "வவவவே இப்ப கேட்டிங்களோ அம்மா? மதிண்ணா எப்பவும் என்ட பக்கம் தான்"
"மதி, இவளுக்கு "கண்ணம்மா" என்று நீ பெயர் வைத்து இருக்க கூடாது. "வாயாடி" என்பது தான் நல்ல பொருத்தம். ஏதோ அண்ணணாச்சு தங்கை ஆச்சு" என கூறி அம்ம நகர, அண்ணாவும் நானும் சாப்பிட்டு முடித்தோம்.
ம்ம்ம் சொல்ல மரந்திட்டனே, எனது இயற்பெயர் "காவ்யா". மதியண்ணா வைத்த பெயர் தான் "கண்ணம்மா". பாரதியின் ரசிகன் ஆயிற்றேன். பின்னர் எனது இயற் பெயர் மரந்து போக நான் "கண்ணம்மா" ஆகிவிட்டேன் அனைவருக்கும்.
"மதிண்ணா பிறகு வாறன். இப்ப மீன் தொட்டி காட்ட கண்ணனை கூட்டி வர போறேன்" என நான் கூறவும் "சரி ஆனா போக முதல் ஒரு தடவை எங்கட குடும்ப பாட்டு சரியா?
அதென்ன குடும்ப பாட்டு என்று கேக்கிறீங்களா? சின்னனில மதியண்ணா சொல்லி தந்த ஒரு பாட்டு தான். நாங்க எப்ப கண்டாலும் முதலில் அதை தான் பாடுவது வழக்கம்.
"சரி", என நான் கூற அண்ணாவின் கைகளை பிடித்து கொண்டு...
" I love you
You love me
We are a big family
With a great big hug
and
Kisses me to you
Wont u say you love me too?""
பாடி முடித்துவிட்டு மேசையில் இறங்கி ஓடி போன என்னை "கண்ணம்மா" என மதிண்ணா அழைக்கவும் திரும்பி பார்த்தேன். சிரித்தேன் "ஓம் மதிண்ணா"
"இது போது எனக்கு, நான் போய்ட்டு வாறேன் கண்ணம்மா"
"வேலையோ? மாமாவை பார்க்க போறிங்க்ளோ?" . சின்ன வயசில அண்ணக்களின்ட பொறுப்பளர்களை நான் "மாமா" என்று தான் அழைப்பது வழக்கம்.
"ஓம் அண்ணா போய்ட்டுவாறன்" என மதி அண்ணா சொன்னவுடன், அதற்கு மேல் பொறுமை இல்லாமல் கண்ணணை தேடி போய்விட்டேன்.
அன்று முழுவதும் மதிண்ணாவை காண கிடைக்கவில்லை. ஆனால் என்னிடம் சொல்லி தானெ மாமாவை பார்க்க போனார். அதற்கு மேல் யோசிக்க எனக்கு அன்று
வயசிருக்கவில்லை.
மறு நாள் காலை நான் நித்திரை விட்டு எழும் நேரம், கண்ணணின் அம்மாவின் குரல் "ராஜி ஆமிட படகை அடிச்சிருக்கினம் போல. எங்கட காம்பில இருந்து தான் பெடியள் போனதாம். கூட பழகின பிள்ளையள். மனசு அடைக்குது"
இதே போல அம்மாவும், கண்ணனிண் அம்மாவும் பல தடவைகள் பேசி இருக்கினம். அப்பொழுது கூட எனக்கு அது பெரிதாக தெரியவில்லை.
போராட்டம் என வரும் போது கண்ணீருக்கு இடமில்லை, வீரத்திற்கு தான் இடம் என என் மதியண்ணா எப்பொழுதும் சொல்வதுண்டு. அதை கேட்டு வளர்ந்த எனக்கு அண்ணாக்கள் மாவீரர் ஆகும் போது அழுகை வருவதில்லை.
அன்றும் அப்படி தான், போனது என் மதியண்ணா தான் என தகவல் வந்த போது எனைவரும் அழுதார்கள். எனக்கு ஏனோ அழுகை வரவில்லை. அது எனோ எனக்கு இன்று வரை புரியவுமில்லை.
முதலில் என்ட மதியண்ணா மாவீரர் என நினைத்த போது பெருமை தான் மேலோங்கி நின்றது.
பின்னர் நான் வளர வளர தான் மதியண்ணாவின் பிரிவால் கஸ்டபட்டேன். பல இரவுகள் அழும் என்னை பார்த்து "அண்ணா பார்த்து கொண்டு தானே இருப்பான். கண்ணம்மா அழுவது மதிக்கு பிடிக்கது தானே?" அம்மவின் அரவணைப்பில் சற்றே ஆறுதல் அடைவேன்.
அது தானே நான் எதற்காக அழ வேண்டும்? மாவீரர்கள் எப்பொழுதும் சாவதில்லை. மரணம் அவர்களை நெருங்குவதில்லை. மதியண்ணா கடவுளாகிவிடார். கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் என்னுடம் தான் என்றும் இருப்பார். என்னில் ஒரு நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது.
போரின் தாண்டவத்தில் எத்தனையோ இடங்கள், எத்தனையோ நாடுகள் எங்கு போனாலும் நான் எடுத்து செல்வது மதியண்ணாவின் மீன் தொட்டிதான்.
அன்றிலிருந்து இன்று வரை எங்கட வீட்டு சாமிபடங்களுடம் மதிண்ணாவின் படமும் வந்தாகிவிட்டது. எங்களை காப்பவன் தானே சாமி !!
கதை இங்கு முற்று பெற, மாவீர புகழ் தொடர்கிறது.
நினைவுகளில் மூழ்கியபடி
தூயா
[b][size=15]
..
..


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->