Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை!
#1
[b]அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை!
[ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 16:06 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
அமெரிக்க புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24.01.06) கொழும்பு வரவுள்ளது.


இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் அபாயம் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு நடடிவடிக்கை எடுக்கக்கோரி அண்மையில் அமெரிக்காவுக்கு நேரடியாக சென்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இக்குழுவினரின் வருகை அமையவுள்ளது என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படிக்குழுவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சு அதிகாரிகள் சிலரும் இடம்பெறவுள்ளனர் எனத் தெரிகிறது.

தாம் தேடி அழித்தொழித்து வரும் பயங்கரவாதிகளுடன் இலங்கையில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா? அந்த அமைப்புக்களின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் என்ன போன்ற விடயங்களும் இந்த குழு கொழும்பில் மேற்கொள்ளவுள்ள உயர்மட்டப்பேச்சுக்களில் இடம்பெறும் என தெரியவருகிறது.

இதேவேளை, இக்குழுவினர் வருகை தரும் அதே தினம் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அரசியல் விவகார அமைச்சர் நிக்கலஸ் பேர்ன்ஸ் தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்பு வரவுள்ளனர்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசவுள்ள இவர்கள், சந்திப்பை முடித்துக்கொண்டு இந்தியா செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அங்கு, இம்மாத இறுதியில் செல்லவுள்ள அமெரிக்க அரச தலைவரின் விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மையும் சந்தித்து இலங்கை நிலவரம் பற்றி பேசுவர் என்று அறியவருகிறது.

தகவல் மூலம்- புதினம் .கொம்
"
"
Reply
#2
இவர்கள் எல்லாம் ஏன் வருகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் சார்பில் யாரும் போய் பார்க்கப்போவதில்லையா? தமிழ்ச்செல்வனும் ஏன் அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டார்.எமது மக்களின் பிரச்சனைகளை யார் இப்போது சர்வதேசாPதியில் எடுத்துரைக்கிறார்கள். யாராவது எழுதுங்களேன்.
Reply
#3
aathipan Wrote:இவர்கள் எல்லாம் ஏன் வருகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் சார்பில் யாரும் போய் பார்க்கப்போவதில்லையா? தமிழ்ச்செல்வனும் ஏன் அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டார்.எமது மக்களின் பிரச்சனைகளை யார் இப்போது சர்வதேசாPதியில் எடுத்துரைக்கிறார்கள். யாராவது எழுதுங்களேன்.

<b>"இவர்கள் எல்லாம் ஏன் வருகிறார்கள். "</b>

அவர்கள் ஏன் வருகிறார்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு கூட தெரியாது- ஒன்லி அவர்களுக்கு மட்டுமே தெரியும்!


<b>இவர்களை தமிழ் மக்கள் சார்பில் யாரும் போய் பார்க்கப்போவதில்லையா</b>

போய் பார்த்தும் என்ன ஆக போகுது??

<b>தமிழ்ச்செல்வனும் ஏன் அறிக்கைவிடுவதை நிறுத்திவிட்டார்</b>

அறிக்கைகள் மட்டும் விட்டு கண்ட பயன் ஒண்ணுமில்ல என்றதனாலயோ என்னமோ :roll:

<b>யார் இப்போது சர்வதேசாPதியில் எடுத்துரைக்கிறார்கள்.</b>

யாரும் செய்ய மாட்டார்கள் -நாங்களா நினைச்சு செய்தாதான் ஏதும் உண்டு!
-!
!
Reply
#4
உங்கள் ஆதங்களிற்கு பாலகுமார் அண்ண நல்ல விளக்கம் தந்திருக்கிறார்.
http://www.tamilnaatham.com/audio/2006/jan...la20060115.smil
Reply
#5
ஆனையிறவில் நின்ற 55ம் படையணிக்கு பயிற்சி கொடுத்தவர்கள் அவர்கள் தானே. எம் பயிற்சியை எவராலும் வெல்லமுடியாது என்று அறிக்கை விட்டவை. கடைசியில் ஆமி தப்பி ஓடும் போதாவது தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் மீண்டும் வருகினம்.

எனவே ஈழம் வாழ் மக்களே!!
உசார்.
உங்களை விலைக்கு வாங்க வருகின்றார்கள். அவர்களின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள்.
[size=14] ' '
Reply
#6
எங்கட சனத்தை அழிக்க இன்னும் யார் யார் எல்லாம் வரப்போகினமோ..
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)