Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குளக்கோட்டன் படை பிரிவு எச்சரிக்கை
#1
<b> திருகோணமலையில் தமிழ் மக்களை பாதுகாக்க தற்கொலைத் தாக்குதல் - குளக்கோட்டன் படை பிரிவு எச்சரிக்கை </b>


(எஸ்.சசிக்குமார்)
திருமலை மாவட்டத்தில் யூன் 2ம் திகதி நள்ளிரவுக்கு பின் தமிழ் மக்கள் சிறிலங்கா படையினரால் தாக்குதலுக்குள்ளாகுமிடத்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தப் போவதாக குளக்கோட்டன் படைப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக குளக்கோட்டன் படைப் பிரிவு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அன்பான மக்களே! எதிர் வரும் 2ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் பூரண கதவடைப்பு ஒன்று தமிழர்கள் ஏமாற்றப்பட்டதால் நடாத்தப்படவுள்ளதாக நாம் அறிகின்றோம். அந்த வேளையில் சிறிலங்கா கூலிப்படைகள் தமிழ் மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொள்ளவே பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.

எனவே மக்களை காக்கும் பொருட்டு எமது உயிர்களை அர்ப்பணித்து சில தற்கொலைத் தாக்குதல்களை நாம் நடாத்த எண்ணியுள்ளோம். எனவே இராணுவத்தினர் குவியலாக உள்ள இடங்களில் உள்ள மக்கள் சிரமத்தை பராது சற்று பின் நகர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

காற்று நுழையாத இடத்திலும் நாம் நுழைவோம் என்பதை கூலிப் படைகளுக்கு கூறுகின்றோம். கார் மற்றும் மனித வெடி குண்டுத் தாக்குதலில் எமது மக்களுக்கு எதுவும் நடைபெறாத வண்ணம் நாம் நிச்சயமாக பார்த்துக்கொள்வோம். ஒன்றாக, ஐந்தாக உள்ள இராணுவத்தினர் மீது பிஸ்ரல் தாக்குதல் மட்டுமே நடத்தப்படும், வீதிகளில் திரிவதை தவிர்க்கவும் என குளக்கோட்டன் படைப் பிரிவு எச்சரித்துள்ளது.

நன்றி மட்டக்களப்பு ஈழநாதம்
Reply
#2
அப்ப தமிழீழத்தையும் ஒரு ஈராக்காக மாத்தின பெருமை எங்கடை அம்மாவைத்தான் சேரப்போகுது.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)