Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணவனாக இருப்பவர்களே..கணவனாக போகிறவர்களே..
#1
<b>கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள் இவை தான்</b>

ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்....? விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா....? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸ§ம் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?

இல்லவே இல்லை...! மனைவியின் எதிர்பார்ப்பே வேறு விதமானது. அவள் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்று கணவன் தெரிந்து கொண்டாலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை இன்னும் அன்னியோன்யம் கூடியதாக அமையும்!

இதோ ஆண்களே... உங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்....

அன்பாக பிரியமாக இருங்கள்... அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.

மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூட சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.

சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!

எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோ, மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.

உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாக தோன்றச் செய்யும்.

எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

மனைவி சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.

மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நிறைய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மனைவி வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசித்துப் பாராட்டுங்கள்.

மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.

பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொண்டு உதவி செய்யுங்கள். அப்படிச் செய்தால் மனைவிக்கு இன்னும் உங்கள் மீதுள்ள காதலை அதிகப்படுத்தும்.

இரவு விழித்து அழும் குழந்தையைப் பார்ப்பதில் உங்களுக்கு இருக்கும் அதே கஷ்டம் போலத்தான் உங்கள் மனைவிக்கும் இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

மனைவி உடல்நலம் இல்லாமல் இருக்கும் பொழுது அக்கறையுடன் உடன் இருந்து கவனியுங்கள். அவளுடைய சின்னச்சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்து சிறு சிறு உதவிகள் செய்தாலே அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்டுங்கள். தாயளவுக்கு தாரமும் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்தான்!

எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.

மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.

ரொம்ப முக்கியமான விஷயம் இது... மனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.

கடைசியாக... கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.

_ கீதா நாகராஜன், சேலம்

நன்றி குமுதம்
" "
" "

Reply
#2
இவற்றை எத்தனை கணவன்மார் புரிந்து கொண்டு வாழ்கின்றார்கள்?மனைவியின் உணர்வுகளை அலட்சியம் செய்வதும் தானே எல்லாம் தெரிந்தவன் போல் நடந்து கொள்வதும் தானே கூடுதலாக இன்றைய கணவன்மாரின் நிலை! ஆணாதிக்கமுள்ள இந்த சமுதாயம் மாறும் மட்டும் மேலேயுள்ள விடயங்கள் ஒரு சிலருக்கு மாத்திரமே வாய்க்கக் கூடியவை! அந்த அதிஸ்டசாலிகளுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
!!
Reply
#3
நிச்சயமா இருப்பாங்க சில பேர்..ஆனா அது பல பேர் ஆகினா நல்லது....இதை படிச்சிட்டு ஒரு மனிதன் மாறினால் கூட பெரிய விசயம்ங்க... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#4
மொத்தத்தில் நீங்கள் நீங்களாய் இருக்காதீர்கள்.

!
Reply
#5
சரி.. சரி.. பெண்களே.. நீங்கள் எப்படி கணவனை எதிர்பார்க்கிறீர்களோ.. அப்படி சில எதிர்பார்ப்புகள் ஆண்களுக்கும் இருக்குமே.. அவற்றையும் நீங்களும் புரிந்து கொண்டு நடந்தால்.. ஆனந்தப்பு}ந்தோட்டம் தான் வாழ்வு... :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
என்ன சொல்றிங்க நீங்க?
" "
" "

Reply
#7
Quote:என்ன சொல்றிங்க நீங்க?
நானா தமிழினியா?

!
Reply
#8
நீங்க தான் இமயமலை வாசனே :wink:
" "
" "

Reply
#9
Quote:சரி.. சரி.. பெண்களே.. நீங்கள் எப்படி கணவனை எதிர்பார்க்கிறீர்களோ.. அப்படி சில எதிர்பார்ப்புகள் ஆண்களுக்கும் இருக்குமே.. அவற்றையும் நீங்களும் புரிந்து கொண்டு நடந்தால்.. ஆனந்தப்பு}ந்தோட்டம் தான் வாழ்வு...
அட நீங்க வேற அக்கா....புரிந்து கொண்டு நடப்பம் என்டா விட மாட்டாங்களாம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#10
நீங்க சொல்லியிருக்கிற மாதிரி பெண்களுக்கு எது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தா எங்கட வாழ்க்கைய எப்பங்க வாழ்றது??

!
Reply
#11
Quote:அட நீங்க வேற அக்கா....புரிந்து கொண்டு நடப்பம் என்டா விட மாட்டாங்களாம்...
மழலை.. மனைவி மார் செய்யவேண்டிய புரிதலை நீங்கள் செய்தால் யார் விடிவினம் ஆஆஆஆ :wink: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
Quote:நீங்க சொல்லியிருக்கிற மாதிரி பெண்களுக்கு எது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தா எங்கட வாழ்க்கைய எப்பங்க வாழ்றது??
_________________
அது தாங்க வாழ்க்கை.. உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று அவங்க செய்வாங்க.. இதைவிட என்ன வேணும் வாழ என்று புறிம்பாக..?? :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
Quote:நீங்க சொல்லியிருக்கிற மாதிரி பெண்களுக்கு எது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தா எங்கட வாழ்க்கைய எப்பங்க வாழ்றது??
கணவன் மனைவி பந்தத்திற்குள் என்ன அவற்றை வாழ்க்கை என்னுடைய வாழ்க்கை என்ற பிரிவினை..அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் வாழும்போது தான் முழுமையான சந்தோசத்தை அடைய முடியும் ...உங்கட வாழ்க்கையை கல்யாணத்துக்கு முன்னம் வாழுங்க... :wink:
" "
" "

Reply
#14
Quote:மழலை.. மனைவி மார் செய்யவேண்டிய புரிதலை நீங்கள் செய்தால் யார் விடிவினம் ஆஆஆஆ
கவுத்திட்டியலே அக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#15
Quote:கணவன் மனைவி பந்தத்திற்குள் என்ன அவற்றை வாழ்க்கை என்னுடைய வாழ்க்கை என்ற பிரிவினை..அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் வாழும்போது தான் முழுமையான சந்தோசத்தை அடைய முடியும் ...உங்கட வாழ்க்கையை கல்யாணத்துக்கு முன்னம் வாழுங்க...
_________________
அதென்ன கலியாணத்திற்கு முதல் ஒரு வாழ்க்கை.. :mrgreen: :mrgreen: :evil:

Quote:கவுத்திட்டியலே அக்கா...
_________________
உண்மை சில நேரத்தில கவுக்கிற மாதிரியும் தெரியுமோ..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
Quote:அதென்ன கலியாணத்திற்கு முதல் ஒரு வாழ்க்கை..
தனக்குரிய வாழ்க்கை எங்கையாம் என்று இமயமலை சன்னியாசி கேட்டார் அது தான் அப்படி சொன்னான்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#17
Quote:உண்மை சில நேரத்தில கவுக்கிற மாதிரியும் தெரியுமோ..??
அப்ப நாங்க புரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லங்கிறிங்க.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#18
யார் சொன்ன. அவசியம் இல்லை என்று.. காலம் வர புரியவேணும்.. மழலைக்கு இப்ப அவை அதிகம் என்றம்.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
அப்ப சரிக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->இப்ப தானே மழலையா பிறந்து இருக்கிறன் அந்தக் கவிதையில போட்ட மாதிரி.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#20
1500 கருத்து தாண்டிட்டுது. இனியென்ன மழழை. குமரி எண்டு மாத்தவேணும்.

!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)