Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் சிங்கள இராணுவ வாகனம் மோதி மாணவி பலி:
#1
யாழில் சிங்கள இராணுவ வாகனம் மோதி மாணவி பலி: மக்கள் ஆவேசம்! பொலிசார் கண்ணீர் புகை வீச்;சு-தடியடி!!

யாழ். நகரில் இன்று காலை இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி பலியானார். இதையடுத்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்த மாணவ மாணவியர்ää மக்கள் மீது சிறீலங்கா பொலிசார் கண்ணீர் புகையடித்து தடியடிப் பிரயோகம் நடத்தினர். கூடுதலாக இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பலியான மாணவி நல்லூரைச்; சேர்ந்த நாகேந்திரன் துளசிகா வயது 12 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியில் தரம் ஏழில் கல்வி பயின்று வந்தார்.

தனது வீட்டிலிருந்து காலை 8.15 மணியளவில் துவிச்;சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது வைத்தியசாலை வீதியில் வேகமாக வந்த இராணுவ வாகனம் மாணவியின் துவிச்;சக்கர வண்டி மீது மோதியது.

கடுங்காயங்களுக்குள்ளான மாணவி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்; செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில நிமிடங்களிலேயே மாணவி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற நகரிலுள்ள அனைத்து பாடசாலை மாணவää மாணவியர் திரண்டு படையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். படையினரின் வாகனத்தையும் அடித்துச்; சேதப்படுத்தினர். பொது மக்களும் அங்கு திரண்டு இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் சிங்களப் பொலிசார் கண்ணீர் புகையடித்து தடியடிப் பிரயோகமும் செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது அவ் வழியாக வந்த சிங்கள விமானப் படைக்குச்; சொந்தமான வாகனத்திற்கு தீயிடப்பட்டது.

அனைத்து பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் சிங்களப் படையினருக்கு எதிராக வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எமது செய்தியாளரின் தகவலின்படி மக்கள் போராட்டம் தொடர்கின்றது. பதட்டமும் நீடிக்கின்றது. பிரதான வீதிகள் ஊடான போக்குவரவுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டு நகரின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#2
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் ஒருவர் பலி.......
இறந்தவரின் சடலம் பரமேஷ்வரா சந்திக்கு அருகாமையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன......

Sri Lanka army fires on Jaffna protestors, one killed

[TamilNet, March 04, 2005 08:50 GMT]
A man was killed when Sri Lanka army opened fire on students and civilians who were protesting near Jaffna University Friday afternoon around 2.15 Protests sparked in Jaffna town Friday after a twelve year old school girl was killed when a speeding Sri Lanka army truck knocked her down on Hospital Road.
A large number of Sri Lanka army troops were deployed around the Jaffna University in Thinnevely, near Jaffna town.

The dead persons body is lying on the road near Prameswara Junction, sources in the area said.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
யாழில் தொடரும் துப்பாக்கிச்; சூடு- மக்கள் அச்சம்!
<img src='http://www.eelampage.com/images/jeep040305.jpg' border='0' alt='user posted image'>
யாழிலிருந்து கீரன் வெள்ளிக்கிழமை 04 மார்ச் 2005 14:48 ஈழம்
யாழ். குடாநாட்டில் மக்களை இலக்குவைத்து சிறீலங்காப் படையினர் துப்பாக்கிச்;சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை யாழ். வைத்தியசாலை வீதியில் சிறீலங்காப் படை வாகனம் மோதி பாடசாலை மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள் பல இடங்களிலும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் யாழ். ஆலடிச்; சந்திப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினரை வெளியேறுமாறு வற்புறுத்திய மக்கள் அவர்கள் நிலைகொண்டிருந்த காவலரணை அடித்து நொறுக்கினர்.

யாழில் திருநெல்வேலி கலட்டியில் படையினன் புலனாய்வுப் பிரிவினர் அமைத்திருந்த அப்பக் கடையையும் மக்கள் அடித்து நொறுக்கினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவிலான கலகம் அடக்கும் காவல்துறையினரும்ää சிறப்பு அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து காவலரணை அண்டிய பகுதியில் குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் மக்களை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதில் பலர் காயம் அடைந்தததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் முழுமையான காயமடைந்தோர் விபரத்தினை பெறமுடியவில்லை.

யாழ். பரமேஸ்வராச் சந்திப்பகுதியில் மக்கள் மீது சிறீலங்காப் படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.

விற்பனை நிலையங்களுக்குச் சென்ற படையினர் மக்களையும் மக்களது வாகனங்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

விற்பனை நிலையங்களில் நின்றவர்கள் அனைவரையும் அந்தந்த விற்பனை நிலையங்களிற்குள் கட்டாயமாகப் பூட்டி வைத்துள்ளனர்.

இதேவேளை சர்வதேச மாணவர் பேரவைக்குள் புகுந்த படையினர் அங்கிருந்த நான்கு உந்துருளிகளை அடித்துச் சேதப்படுத்தியதுடன் துவிச்சக்கரவண்டிகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

படையினரின் அடாவடிச் செயற்பாடுகள் இன்னமும் அதிகரித்துச் செல்கின்றன.

Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<img src='http://www.yarl.com/news/images/image(279).jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/news/images/image(281).jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/news/images/image(282).jpg' border='0' alt='user posted image'>

படங்கள்: புதினம்
Reply
#5
யாழ்: சிங்கள இராணுவக் காடையரின் துப்பாக்கிச்; சூட்டுக்கு இருவர் பலி!

சிறீலங்காப்படையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளனர்.

பரமேஸ்வராச்; சந்தியை நோக்கி பல்கலைக்கழக வீதியூடாக பயணித்த மக்கள் மீது சிறீலங்கா இராணுவப்படையினர் துப்பாக்கிச்; சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்; சூட்டில் 55 அகவை மதிக்கதக்க முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைகத்துக்கு அருகே கொட்டடிச் சந்தியில் மற்றொரு நபர் துப்பாக்கிச்; சூட்டில் பலியானார்.

இருவரது சடலங்களும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இருவரும் அடையாளம் காணப்படவில்லை.

பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் இராணுவக் காடையரின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் மாணவர்களின் உந்துருளிகள் உள்ளிட்ட உடமைகளை இராணுவ காடையர்கள் சேதமாக்கினர் என்று சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் நமது புதினம் தளத்திற்குத் தெரிவித்தார்.

தொடர்ந்து யாழில் சிங்கள இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
அப்ப தொடங்கிட்டங்கள்......... :evil: :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
:evil: :evil:
Reply
#8
அவை எதை நினைத்தினமோ அதை சாதிக்கத்தொடங்கிவிட்டினம். தலைவரின் மெளனம் கலையும்வரை ஆடுவினம்.
பட்டம் ஏற்றும்போது பட்டம் இழுக்கும்போது நுாலைவிட்டுக்கொடுப்பதும் பின் பட்டம் இறங்கும்போது நுாலைவலிப்பதும் இயற்கைதானே நாங்கள் நுாலை வலிக்க பட்டம் கைக்கு வரும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
<img src='http://img235.exs.cx/img235/4392/jaffnaprot040305013fm.th.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#10
என்னதான் நடக்குது ஊரில சிங்களவனின் அட்டூழியத்திற்கு எப்பதான் முற்றுப் புள்ளி விழுமோ :x :evil: :evil:
. .
.
Reply
#11
Cry Cry Cry Cry :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
நான் மேலே இணைத்த செய்தியில் இருந்து போல் இருவர் அல்ல ஒருவர் சூட்டுக்கு பலி என்று புதினம் செய்தி திருத்தம் வெளியிட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#13
சிறீலங்காப்படையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

பரமேஸ்வராச்; சந்தியை நோக்கி பல்கலைக்கழக வீதியூடாக பயணித்த மக்கள் மீது சிறீலங்கா இராணுவப்படையினர் துப்பாக்கிச்; சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்; சூட்டில் 55 வயது மதிக்கதக்க முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் இராணுவக் காடையரின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் மாணவர்களின் உந்துருளிகள் உள்ளிட்ட உடமைகளை இராணுவ காடையர்கள் சேதமாக்கினர் என்று சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் நமது புதினம் தளத்திற்குத் தெரிவித்தார்.

தொடர்ந்து யாழில் சிங்கள இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

நன்றி புதினம்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#14
வணக்கம் மதுரன்,

செய்தியை இணைத்தமைக்கு மிக்க நன்றி, இரண்டு விடய்ங்களும் ஒன்று என்பதால் கருத்துக்களை இணைத்துள்ளேன்.

மதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/jaffna_prot_04_03_05_04.jpg' border='0' alt='user posted image'>
Reply
#16
நன்றி மதன் நான் தகவலை கொடுக்க வேண்டும் என்ற வேகத்தில் தகவலை கொடுத்துவிட்டேன். தங்களின் சேவைக்கு எனது நன்றிகள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#17
தற்ஸ் மதன் அப்படித்தானே'
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#18
Troops assault journalist, scores injured in Jaffna clashes

[TamilNet, March 04, 2005 12:09 GMT]
Sri Lanka army troops Friday severely assaulted a journalist working for the state run Lake House Newspapers as restive crowds in the northern town set fire to six military points and smashed up President Chandrika Kumaratunga’s Sri Lanka Freedom Party (SLFP) office. One person was injured when army opened fire on a crowd at Kottadi. Scores of students and civilians were asaulted by SLA troops and riot Police in several parts of the town. Four persons injured in army and Police assault and firing were admitted to Jaffna hospital Friday afternoon.

All roads leading to Jaffna were blocked by rioters with burning tires and logs. The northern town was deserted. Hundreds of SLA troops and riot Police patrolled its empty streets.

Mr. Vincent L Jeyan, the Lake House journalist who was assaulted and injured by the military was also admitted to Jaffna Hospital for treatment. Several computers at an internet cafe where he sought refuge were smashed by soldiers who pursued him for taking photos of the fracas in Jaffna town.

The motorbike of Mr. Ratnam Thayaparan, Jaffna correspondent for the Tamil daily Thinakkural was damaged by troops.

Police and military arrested ten civilians in several parts of the town, sources said. Soldiers who assaulted civilians and students in Thinnevely attacked the main office of the International Federation of Thamil Eelam Students at the Parameswara Junction.

The man who was shot dead by troops near Jaffna University was identified as Mr. M. Kathirgamu, 65.
Reply
#19
இப்படி இரணுவத்தினரின் கொடுமைகளால் பல சமயங்களில் பள்ளி மாணவர்களும் சிறுவர்களும் கொல்லப்படுவதனை ஒலறா ஒட்டுண்ணு கவனத்தில் எடுப்பாரா? இச்சம்பவத்துடன் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஏனய பள்ளிமாணவர்களையும் நாகர்கோவில் பள்ளிமாணவர்களையும் நினைவில் நிறுத்துகின்றோம்.

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#20
அவரே ஒட்டுண்ணி என்னசெய்வார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)