03-03-2005, 10:48 PM
நான் அனேகமாக எல்லாத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பேன். (சரத்குமார் விஜயகாந்த்?? சத்தியமாய் இல்லை - அஜித் விஜெய் சிம்பு படங்கள் இயக்குனர்கள் கதாநாயகிகளைப் பொறுத்து தெரிவிற்கு வரும்) தரமான படம் எண்டு பேசப்பட வேண்டும் எண்ட கட்டாயம் எனக்கில்லை. உடுப்பு பாட்டு நடிப்பு காட்சியமைப்பு எண்டதுக்காகப் பாப்பதும் உண்டு. வார இறுதி நாட்களில செய்வதற்கு ஒண்டும் இல்லாத பட்சத்தில பல தரமற்ற படங்களை நண்பர்களோட போய்ப் பார்த்திருக்கிறேன்.
திரைப்படம் பாக்கிறது அறிவை வளர்த்துக் கொள்ளுறதுக்கு?? இல்லா விட்டால் நல்ல ஒரு செய்தியைச் சமூகத்திற்குச் சொல்லுது அதைப் பார்ப்பம் எண்டு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை (முக்கியமாக தமிழ் திரைப்படங்கள்) முற்று முழுசா ஒரு பொழுது போக்குக்காக எண்டு எடுத்துக் கொள்ளுறதால திரைப்படங்களின்ர தரம் என்னை ஒரு நாளும் bother பண்ணினது கிடையாது. தரமான திரைப்படங்களைப் பார்க்க வேணும் எண்ட எனது ஆர்வத்தை பல தேடல்களால திரைப்படவிழாக்களிலையும் விடுபடுறதுகள் DVD யிலும் பாத்து ரசித்து அதிர்ந்து நிறைவாய் உணர்ந்து
மன்மதன் திரைப்படம் திரையரங்கில் “பொப்கோன” கோப்பி சகிதம் நண்பர்களுடன் சென்று பார்த்து மகிழ்ந்து வந்தேன் (Jothika is one of my favorite) சிம்புவின் திரைப்படத்தில் சேரன் மணிரத்தினத்திடம் கிடைக்கும் அந்தக் கொஞ்சத்தையேனும் நான் எதிர்பார்த்துப் போயிருந்தேன் எண்டால் தவறு சிம்புவினுடையது (அல்லது சிம்புவை வைத்து இயக்கியவரிடம்) அல்ல. என்னுடையதே. (மிருணாள் சென்னின் படம் அளவிற்கு சிம்புவின் இல்லை என்று அழுதவர்களும் உள்ளார்கள்)
சிம்பு வயதில் இளையவராக இருப்பதால் பாடல் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு bore அடிக்காமல் நடனம் ஆடுகின்றார். அவரின் உடைகளின் தெரிவு நன்றாக உள்ளது. கொஞ்சம் நடிக்கவும் செய்கின்றார். இதை விட ராஜேந்திரனின் மகனிடம் எதைத் தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
“விருமாண்டி” கனடாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட போது பலர் தமது குழந்தைகளுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். (ஒரு வேளை தெனாலி போல் இருக்கும் என்ற எண்ணமோ என்னவோ) நேரடி வெட்டுக் கொத்துக்களைக் காட்டும் இது போன்ற திரைப்படங்களை விட “மன்மதன்” எந்த விதத்தில் குழந்தைகளுக்குப் பாதிப்பைத் தரப்போகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.
“மன்மதன்” திரைப்படத்தின் முக்கிய கரு தவறு செய்யும் பெண்கள்??? (கெட்ட) கொலை செய்யப்படுகின்றார்கள். இது நாயகனின் தீர்ப்பு. புலம்பெயர்ந்து வாழும் எமது பிள்ளைகளுக்கு இக் கரு எந்த அளவிற்குப் புரியப் போகின்றது. (ஒரு வேளை இந்தியா போன்ற நாடுகளின் வாழும் குழந்தைகள் உளவியல் ரீதியான கேள்விக்கு ஆளாகலாம்) ஆனால்; புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளின் அகராதியில் “தவறு செய்யும் பெண்கள்?’ என்று ஒன்று இடம்பெறப் போகின்றதா? “This is my mom’s boy friend” என்று அறிமுகம் செய்யும் கலாச்சாரத்தோடு இணைந்து வாழும் எம் குழந்தைகள் “மன்மதன்” திரைப்படத்தில் பார்த்து ரசிக்கப் போவது சிம்பு ஜோதிகாவின் பாடல் காட்சிகளையும் நடனத்தையும் தான்.
கடந்து வந்த தமிழ் சினிமா எமக்குப் புகட்டிப் போனதெல்லாம் என்ன?
ஒரு பெண் பாலியல் வற்புறுத்தலுக்குள்ளானால் அவள் (அவன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும்) தன்னைத் தொட்டவனைத்தான் திருமணம் செய்வாள் இல்லையேல் தற்கொலை செய்து விடுவாள்.
பெண் வீட்டுக்கு அடக்கமாக இருந்து கொண்டு கணவனுக்கு தனது கடமைகளைச் செய்து இன்புறுவாள். கணவன் தவறு செய்தால் பொறுத்துக் கொண்டு அவனைத் திருத்தி நல்லவனாக்குவாள்.
நான் சின்ன வயதில் பார்த்த திரைப்படம் பெயர் மறந்து போனேன். சிவாஜி எஸ்.எஸ் ஆர் விஜயகுமாரி தேவிகா நடித்த திரைப்படம் இது. கண்பார்வை அற்ற பெண்ணிற்கு சிகிச்சை நடக்கின்றது. திருமண நாள் அன்றே அவளை விட்டுச் சென்ற கணவன் விபத்தில் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. சிகிச்சையின் பின்னர் முதல் முதலில் முகம் காணாத தனது கணவனைத் தான் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசையை நிறைவு செய்ய பின் விளைவுகளை யோசிக்காமல். கணவனின் நண்பனை முன்னே நிறுத்துகிறார் பெண்ணின் தந்தை. நண்பன் பல வழிகளில் அவள் தன்னோடு. தனித்திருப்பதைத் தவிர்க்கின்றான். தனது கணவன் அவன் தான் என்று நம்பி இருந்தவளின் கைகளின் திருமணப் புகைப்படம் ஒன்று கிடைக்கின்றது. தான் மனதால் கணவன் என்று வரிந்து வாழ்பவன் உண்மையில் தனது கணவன் இல்லை என்று தெரிந்த போது கன்னி கழியாத அந்தப் பெண் தற்கொலை செய்கின்றாள். இப்படிப் பட்ட திரைப்படங்கள் கூறாத எந்த விதமான கோழைத் தனத்தை “மன்மதன்” கூறிவிட்டான்?
இப்படியான பெண்களின் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரான திரைப்படங்களையும் இன்னும் தவறு செய்தால் தண்டிக்கலாம் கை காலை வெட்டலாம் பாணிப் படங்களை தானே இந்திய தமிழ் சினிமா காலம் காலமாகத் தந்து கொண்டிருக்கின்றது. இவற்றோடு ஒப்பிடும் போது “மன்மதன்” தரமற்ற திரைப்படமாக இருப்பினும் குரூரமான காட்சிகள் இடம் பெறவில்லை. மாறாக அழகியலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது என் கருத்து.
<span style='font-size:25pt;line-height:100%'>நாம் இப்போது – அதாவது ஈழத்தமிழர்களாகிய புலம்பெயர்ந்த நாம் இப்போது இங்கே வாழும் எமது எதிர்காலச் சந்ததிக்காக முக்கியமாக சிந்திக்க வேண்டியது என்னவெனின் பகைவரை அழிப்போம், துப்பாக்கி தூக்குவோம், எதிரிகளை வெட்டுவோம், கொத்துவோம் போன்ற எமது ஈழத்துப் போராட்டப் பாடல்களை முக்கியமாகத் தடைசெய்ய முயற்சித்தல் வேண்டும். – அதிலும் இப்படியான பாடல்களை தமது குழந்தைகளுக்குப் மனனம் செய்யப் பண்ணி அதனைப் பெருமையாக கலை நிகழ்ச்சிகளிலும் வானொலிகளிலும் பாட வைப்பதும். இப்படியான பாடல்களுக்குச் சிறுமியர் நடனம் ஆடுவதும். (ஒரு வேளை மொழி தெரிந்திருப்பின் கனேடிய சட்டம் இவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கும்) தடை செய்யப்படல் வேண்டும். எவ்வளவு தான் நாட்டுப் பிரச்சனையை எமது குழந்தைகளுக்கு ஊட்டினாலும் அவர்கள் வாழும் தளம் இங்குதான். பெற்றோர்கள் துவக்குத் தூக்கக் கற்றுக்கொள் எனின் அவர்கள் தூக்கப் போவது இங்குதான் ஊரில் அல்ல </span>
நன்றி கறுப்பி........
தங்கள் கருத்து......
திரைப்படம் பாக்கிறது அறிவை வளர்த்துக் கொள்ளுறதுக்கு?? இல்லா விட்டால் நல்ல ஒரு செய்தியைச் சமூகத்திற்குச் சொல்லுது அதைப் பார்ப்பம் எண்டு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை (முக்கியமாக தமிழ் திரைப்படங்கள்) முற்று முழுசா ஒரு பொழுது போக்குக்காக எண்டு எடுத்துக் கொள்ளுறதால திரைப்படங்களின்ர தரம் என்னை ஒரு நாளும் bother பண்ணினது கிடையாது. தரமான திரைப்படங்களைப் பார்க்க வேணும் எண்ட எனது ஆர்வத்தை பல தேடல்களால திரைப்படவிழாக்களிலையும் விடுபடுறதுகள் DVD யிலும் பாத்து ரசித்து அதிர்ந்து நிறைவாய் உணர்ந்து
மன்மதன் திரைப்படம் திரையரங்கில் “பொப்கோன” கோப்பி சகிதம் நண்பர்களுடன் சென்று பார்த்து மகிழ்ந்து வந்தேன் (Jothika is one of my favorite) சிம்புவின் திரைப்படத்தில் சேரன் மணிரத்தினத்திடம் கிடைக்கும் அந்தக் கொஞ்சத்தையேனும் நான் எதிர்பார்த்துப் போயிருந்தேன் எண்டால் தவறு சிம்புவினுடையது (அல்லது சிம்புவை வைத்து இயக்கியவரிடம்) அல்ல. என்னுடையதே. (மிருணாள் சென்னின் படம் அளவிற்கு சிம்புவின் இல்லை என்று அழுதவர்களும் உள்ளார்கள்)
சிம்பு வயதில் இளையவராக இருப்பதால் பாடல் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு bore அடிக்காமல் நடனம் ஆடுகின்றார். அவரின் உடைகளின் தெரிவு நன்றாக உள்ளது. கொஞ்சம் நடிக்கவும் செய்கின்றார். இதை விட ராஜேந்திரனின் மகனிடம் எதைத் தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
“விருமாண்டி” கனடாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட போது பலர் தமது குழந்தைகளுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். (ஒரு வேளை தெனாலி போல் இருக்கும் என்ற எண்ணமோ என்னவோ) நேரடி வெட்டுக் கொத்துக்களைக் காட்டும் இது போன்ற திரைப்படங்களை விட “மன்மதன்” எந்த விதத்தில் குழந்தைகளுக்குப் பாதிப்பைத் தரப்போகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.
“மன்மதன்” திரைப்படத்தின் முக்கிய கரு தவறு செய்யும் பெண்கள்??? (கெட்ட) கொலை செய்யப்படுகின்றார்கள். இது நாயகனின் தீர்ப்பு. புலம்பெயர்ந்து வாழும் எமது பிள்ளைகளுக்கு இக் கரு எந்த அளவிற்குப் புரியப் போகின்றது. (ஒரு வேளை இந்தியா போன்ற நாடுகளின் வாழும் குழந்தைகள் உளவியல் ரீதியான கேள்விக்கு ஆளாகலாம்) ஆனால்; புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளின் அகராதியில் “தவறு செய்யும் பெண்கள்?’ என்று ஒன்று இடம்பெறப் போகின்றதா? “This is my mom’s boy friend” என்று அறிமுகம் செய்யும் கலாச்சாரத்தோடு இணைந்து வாழும் எம் குழந்தைகள் “மன்மதன்” திரைப்படத்தில் பார்த்து ரசிக்கப் போவது சிம்பு ஜோதிகாவின் பாடல் காட்சிகளையும் நடனத்தையும் தான்.
கடந்து வந்த தமிழ் சினிமா எமக்குப் புகட்டிப் போனதெல்லாம் என்ன?
ஒரு பெண் பாலியல் வற்புறுத்தலுக்குள்ளானால் அவள் (அவன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும்) தன்னைத் தொட்டவனைத்தான் திருமணம் செய்வாள் இல்லையேல் தற்கொலை செய்து விடுவாள்.
பெண் வீட்டுக்கு அடக்கமாக இருந்து கொண்டு கணவனுக்கு தனது கடமைகளைச் செய்து இன்புறுவாள். கணவன் தவறு செய்தால் பொறுத்துக் கொண்டு அவனைத் திருத்தி நல்லவனாக்குவாள்.
நான் சின்ன வயதில் பார்த்த திரைப்படம் பெயர் மறந்து போனேன். சிவாஜி எஸ்.எஸ் ஆர் விஜயகுமாரி தேவிகா நடித்த திரைப்படம் இது. கண்பார்வை அற்ற பெண்ணிற்கு சிகிச்சை நடக்கின்றது. திருமண நாள் அன்றே அவளை விட்டுச் சென்ற கணவன் விபத்தில் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. சிகிச்சையின் பின்னர் முதல் முதலில் முகம் காணாத தனது கணவனைத் தான் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசையை நிறைவு செய்ய பின் விளைவுகளை யோசிக்காமல். கணவனின் நண்பனை முன்னே நிறுத்துகிறார் பெண்ணின் தந்தை. நண்பன் பல வழிகளில் அவள் தன்னோடு. தனித்திருப்பதைத் தவிர்க்கின்றான். தனது கணவன் அவன் தான் என்று நம்பி இருந்தவளின் கைகளின் திருமணப் புகைப்படம் ஒன்று கிடைக்கின்றது. தான் மனதால் கணவன் என்று வரிந்து வாழ்பவன் உண்மையில் தனது கணவன் இல்லை என்று தெரிந்த போது கன்னி கழியாத அந்தப் பெண் தற்கொலை செய்கின்றாள். இப்படிப் பட்ட திரைப்படங்கள் கூறாத எந்த விதமான கோழைத் தனத்தை “மன்மதன்” கூறிவிட்டான்?
இப்படியான பெண்களின் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரான திரைப்படங்களையும் இன்னும் தவறு செய்தால் தண்டிக்கலாம் கை காலை வெட்டலாம் பாணிப் படங்களை தானே இந்திய தமிழ் சினிமா காலம் காலமாகத் தந்து கொண்டிருக்கின்றது. இவற்றோடு ஒப்பிடும் போது “மன்மதன்” தரமற்ற திரைப்படமாக இருப்பினும் குரூரமான காட்சிகள் இடம் பெறவில்லை. மாறாக அழகியலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது என் கருத்து.
<span style='font-size:25pt;line-height:100%'>நாம் இப்போது – அதாவது ஈழத்தமிழர்களாகிய புலம்பெயர்ந்த நாம் இப்போது இங்கே வாழும் எமது எதிர்காலச் சந்ததிக்காக முக்கியமாக சிந்திக்க வேண்டியது என்னவெனின் பகைவரை அழிப்போம், துப்பாக்கி தூக்குவோம், எதிரிகளை வெட்டுவோம், கொத்துவோம் போன்ற எமது ஈழத்துப் போராட்டப் பாடல்களை முக்கியமாகத் தடைசெய்ய முயற்சித்தல் வேண்டும். – அதிலும் இப்படியான பாடல்களை தமது குழந்தைகளுக்குப் மனனம் செய்யப் பண்ணி அதனைப் பெருமையாக கலை நிகழ்ச்சிகளிலும் வானொலிகளிலும் பாட வைப்பதும். இப்படியான பாடல்களுக்குச் சிறுமியர் நடனம் ஆடுவதும். (ஒரு வேளை மொழி தெரிந்திருப்பின் கனேடிய சட்டம் இவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கும்) தடை செய்யப்படல் வேண்டும். எவ்வளவு தான் நாட்டுப் பிரச்சனையை எமது குழந்தைகளுக்கு ஊட்டினாலும் அவர்கள் வாழும் தளம் இங்குதான். பெற்றோர்கள் துவக்குத் தூக்கக் கற்றுக்கொள் எனின் அவர்கள் தூக்கப் போவது இங்குதான் ஊரில் அல்ல </span>
நன்றி கறுப்பி........
தங்கள் கருத்து......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->