02-24-2005, 12:28 PM
ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இருக்கிறதா?
புஷ்சின் விமர்சனத்துக்கு புதின் பதிலடி
"உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வெளிநாடுகளை அனுமதிக்கமாட்டோம்"
பிரஸ்சல்ஸ், பிப். 24_
ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ் செய்த விமர்சனத்துக்கு ரஷிய அதிபர் புதின் பதிலடி கொடுத்து இருக்கிறார். எங்கள் நாட்டு விவகாரங் களில் அன்னிய நாடுகள் தலையிட அனுமதிக்க மாட் டோம்" என்று அவர் கூறி இருக்கிறார்.
மனித உரிமை மீறல்
ரஷிய அதிபராக எல்ட்சின் இருந்தவரையில் அமெரிக்கா வுடன் இணக்கமாக நடந்து கொண்டார். புதின் அதிபராக ஆனதும் இந்த நெருக்கம் கொஞ் சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
செசன்யா தீவிரவாதிகளை ரஷியா ஒடுக்க நடவடிக்கை எடுத்தபோது அமெரிக்கா அதைக் கண்டித்தது. மனித உரிமை மீறப்படுவதாகக் குறை கூறியது. இது ரஷியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
புஷ் குற்றச்சாட்டு
அதன் பிறகு சமீப காலமாக, ரஷியாவில் ஜனநாயக நெறி முறைகள் புறக்கணிக்கப்படுவ தாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது.
ஐரோப்பாவில் சுற்றுப்பய ணம் செய்து வரும் ஜனாதிபதி புஷ், ரஷிய அதிபர் புதின் சர் வாதிகாரப்பாதையில் செல் கிறார் என்று குற்றஞ்சாட்டினார். ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்றும் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.
பதிலடி
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாஸ்கோவில் அதிபர் புதின் கூறியதாவது:_
ரஷியா தனக்கு ஏற்ற மாதிரி யான ஜனநாயகப் பாதையை பின்பற்ற வேண்டும். அன்னிய நாடுகள் ரஷியாவின் உள் விவ காரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்.
மாற்றிக்கொள்ள வேண்டும்
ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளும், அதன் அமைப் புகளும் இன்றைய ரஷியா வாழ்க் கையின் உண்மை நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளப்பட வேண் டும். இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.
இவ்வாறு புதின் கூறினார்.
புதினும், புஷ்சும் இன்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேச இருக்கிறார்கள்.
Dailythanthi
புஷ்சின் விமர்சனத்துக்கு புதின் பதிலடி
"உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வெளிநாடுகளை அனுமதிக்கமாட்டோம்"
பிரஸ்சல்ஸ், பிப். 24_
ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ் செய்த விமர்சனத்துக்கு ரஷிய அதிபர் புதின் பதிலடி கொடுத்து இருக்கிறார். எங்கள் நாட்டு விவகாரங் களில் அன்னிய நாடுகள் தலையிட அனுமதிக்க மாட் டோம்" என்று அவர் கூறி இருக்கிறார்.
மனித உரிமை மீறல்
ரஷிய அதிபராக எல்ட்சின் இருந்தவரையில் அமெரிக்கா வுடன் இணக்கமாக நடந்து கொண்டார். புதின் அதிபராக ஆனதும் இந்த நெருக்கம் கொஞ் சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
செசன்யா தீவிரவாதிகளை ரஷியா ஒடுக்க நடவடிக்கை எடுத்தபோது அமெரிக்கா அதைக் கண்டித்தது. மனித உரிமை மீறப்படுவதாகக் குறை கூறியது. இது ரஷியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
புஷ் குற்றச்சாட்டு
அதன் பிறகு சமீப காலமாக, ரஷியாவில் ஜனநாயக நெறி முறைகள் புறக்கணிக்கப்படுவ தாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது.
ஐரோப்பாவில் சுற்றுப்பய ணம் செய்து வரும் ஜனாதிபதி புஷ், ரஷிய அதிபர் புதின் சர் வாதிகாரப்பாதையில் செல் கிறார் என்று குற்றஞ்சாட்டினார். ரஷியாவில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்றும் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றும் கூறினார்.
பதிலடி
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாஸ்கோவில் அதிபர் புதின் கூறியதாவது:_
ரஷியா தனக்கு ஏற்ற மாதிரி யான ஜனநாயகப் பாதையை பின்பற்ற வேண்டும். அன்னிய நாடுகள் ரஷியாவின் உள் விவ காரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்.
மாற்றிக்கொள்ள வேண்டும்
ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளும், அதன் அமைப் புகளும் இன்றைய ரஷியா வாழ்க் கையின் உண்மை நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளப்பட வேண் டும். இதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.
இவ்வாறு புதின் கூறினார்.
புதினும், புஷ்சும் இன்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேச இருக்கிறார்கள்.
Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

