02-22-2005, 05:11 AM
காஷ்மீரில் வரலாறு காணாத பனிச்சரிவு: பனிப்பாறைகளுக்கு அடியில் பல கிராமங்கள் புதையுண்டன
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இருந்திராத வகையில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. திங்கள்கிழமையும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் பனியால் மூடியிருக்கின்றன, ஆயிரக்கணக்கான மக்கள் அதில் சிக்கித் தவிக்கின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பனிச் சரிவில் இறந்தவர்களில் இதுவரை 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் 74 பேரைக் காணவில்லை என்றும் என்.டி.டி.வி. தெரிவிக்கிறது.
ரயில் பாதைகளும் நெடுஞ்சாலைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு பனிப்பாறைகளால் நிரம்பிவிட்டதால் போக்குவரத்து நின்றுவிட்டது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மோசமான வானிலையையும் பொருள்படுத்தாமல் இந்திய விமானப்படையின் சரக்கு விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உணவு, கம்பளி, மருந்துகள் போன்றவற்றை அப்பகுதிகளில் தொடர்ந்து போட்டவண்ணம் உள்ளன.
ஜவகர் சுரங்கப்பாதையில் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன. தொடர்ந்து 3-வது நாளாக போக்குவரத்து இல்லாமல் அதில் சிக்கியிருப்பவர்களுக்கு ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போட்டனர். சுரங்கப் பாதையின் தெற்கு வாசல் வழியாகத்தான் அதைப் பெற முடிகிறது. உள்ளே 300-க்கும் மேற்பட்ட இந்தோ-திபேத்திய படைப்பிரிவைச் சேர்ந்த ஜவான்கள் சிக்கியுள்ளனர்.
இந்திய விமானப்படையினர் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
சண்டீகர், ஜம்மு, ஸ்ரீநகர், லெ ஆகிய நகரங்களுக்கு இடையில் ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்து உதவிகளை அளித்து வருகின்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இருந்திராத வகையில் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. திங்கள்கிழமையும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் பனியால் மூடியிருக்கின்றன, ஆயிரக்கணக்கான மக்கள் அதில் சிக்கித் தவிக்கின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் பனிச் சரிவில் இறந்தவர்களில் இதுவரை 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் 74 பேரைக் காணவில்லை என்றும் என்.டி.டி.வி. தெரிவிக்கிறது.
ரயில் பாதைகளும் நெடுஞ்சாலைகளும் பயன்படுத்த முடியாத அளவுக்கு பனிப்பாறைகளால் நிரம்பிவிட்டதால் போக்குவரத்து நின்றுவிட்டது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மோசமான வானிலையையும் பொருள்படுத்தாமல் இந்திய விமானப்படையின் சரக்கு விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உணவு, கம்பளி, மருந்துகள் போன்றவற்றை அப்பகுதிகளில் தொடர்ந்து போட்டவண்ணம் உள்ளன.
ஜவகர் சுரங்கப்பாதையில் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன. தொடர்ந்து 3-வது நாளாக போக்குவரத்து இல்லாமல் அதில் சிக்கியிருப்பவர்களுக்கு ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போட்டனர். சுரங்கப் பாதையின் தெற்கு வாசல் வழியாகத்தான் அதைப் பெற முடிகிறது. உள்ளே 300-க்கும் மேற்பட்ட இந்தோ-திபேத்திய படைப்பிரிவைச் சேர்ந்த ஜவான்கள் சிக்கியுள்ளனர்.
இந்திய விமானப்படையினர் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
சண்டீகர், ஜம்மு, ஸ்ரீநகர், லெ ஆகிய நகரங்களுக்கு இடையில் ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பறந்து உதவிகளை அளித்து வருகின்றன.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
hock: