Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய சோதிடருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
#1
இந்திய சோதிடருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
சனிக்கிழமை 19 பெப்ரவரி 2005 நடேசன்
சாத்திரம் கூறுவதாக பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய சோதிடர் கிஷோர் சாஸ்திரி என்பவரை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. இவர் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்து சாத்திரம் கூறிவந்தார். இவருக்கு எதிராக கிடைத்த முறைப்பாடுகளையடுத்து கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இவரிடம் சாத்திரம் கேட்க சாதாரண உடையில் சென்றிருந்தார். அப்போது அவர் அப்பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் முறைகேடாக நடக்க முயலவே அப்பெண் அங்கிருந்து வெளியே வந்து நடந்தவற்றை பொலிஸாருக்கு தெரிவித்தார். இதனையடுத்து இந்த இந்திய சோதிடர் கைது செய்யப்பட்டு கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சோதிடர் பூசை செய்வதற்கு 25 ஆயிரம் ரூபா வரை சிலரிடம் வாங்கியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

Source : http://www.nitharsanam.com/?art=8897
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)