02-19-2005, 11:42 AM
<img src='http://www.dailythanthi.com/images/news/20050219/for1.jpg' border='0' alt='user posted image'>சார்லஸ்_கமீலா ஜோடிக்கு இங்கிலாந்து ராணி தடை
"திருமணத்துக்கு முதல் நாள் ஒரே அறையில் தங்க வேண்டாம்"
லண்டன், பிப். 19_
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் _ கமீலா ஜோடி திருமணத்துக்கு முதல் நாள் தனி அறையில் தங்குவதற்கு இங்கிலாந்து ராணி எலிச பெத் தடை விதித்து இருக் கிறார். இதில் அவர் பிடிவாத மாக இருப்பதைப் பார்த்து விட்டு, சார்லஸ் தன் முடிவை மாற்றிக்கொண் டார்.
காதல் நெருக்கம்
இளவரசர் சார்லஸ், டயானா வைத் திருமணம் செய்து கொள்வ தற்கு முன்பே கமீலா பார்க்கரை காதலித்து வந்தார். டயானா இறந்த பிறகு இந்த காதல் முன்பை விட நெருக்கமானது.
ஏற்கனவே திருமணமான கமீலா, தன் கணவரை விவாக ரத்து செய்து விட்டு, இளவரசர் சார்லசுடன் காதல் வானில் சிறகடித்து பறந்தார்.
மதிப்பு உயர்ந்தது
காதல் வாழ்க்கையில் ஈடுபட்ட போதிலும் தன் மகன்கள் வில்லி யம், ஹாரி இருவரையும் பொறுப் புடன் நன்கு கவனித்துக் கொண் டதால், பொதுமக்களின் மதிப் பீட்டில் அவர் உயர்ந்தார்.
அவர் கமீலாவைத் திருமணம் செய்து கொள்வதற்கும் இங்கி லாந்து மக்கள் ஆதரவு அளித் தனர். இதனால் கமீலாவும் _ சார் லசும் திருமணம் செய்து கொள் வதற்கு தீர்மானித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் தும் ஆதரவு தெரிவித்தார்.
ஏப்ரல் 8_ந்தேதி
வருகிற ஏப்ரல் மாதம் 8_ந்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது. வின்ட்சர் மாளிகையில் இவர்கள் திருமணம் நடப்பதாக அறிவிக் கப்பட்டது.
திருமணம் நடத்துவதற்கான லைசென்ஸ் வின்ட்சர் மாளி கைக்கு இல்லாததால் அங்கு திருமணம் நடக்காது என்றும், அதற்குப் பதிலாக வின்ட்சர் நகர மன்றத்தில் திருமணம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள் ளது.
முதல் நாள் இரவு
திருமணத்துக்கு முதல் நாள் இரவு மணமக்கள் இருவரும் ஒரே அறையில் தங்குவதற்கு விரும்பி னர். இதுபற்றி அறிந்ததும் ராணி எலிசபெத் இதற்குத் தடை விதித்து விட்டார்.
"நாங்கள் காதலர்களாக வாழ்ந்த காலத்தில் எத்தனையோ நாட்கள் ஒரே அறையில் தனி யாகத் தங்கி இருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிந்தது தானே" என்று இளவரசர் சார் பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் ராணியின் தடையை தளர்த்த உதவவில்லை.
இந்த விஷயத்தில் ராணி எலிச பெத் பிடிவாதமாகவும், உறுதி யாகவும் இருந்தார். இதைப் பார்த்தபிறகு மணமக்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர்.
Dailythanthi
"திருமணத்துக்கு முதல் நாள் ஒரே அறையில் தங்க வேண்டாம்"
லண்டன், பிப். 19_
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் _ கமீலா ஜோடி திருமணத்துக்கு முதல் நாள் தனி அறையில் தங்குவதற்கு இங்கிலாந்து ராணி எலிச பெத் தடை விதித்து இருக் கிறார். இதில் அவர் பிடிவாத மாக இருப்பதைப் பார்த்து விட்டு, சார்லஸ் தன் முடிவை மாற்றிக்கொண் டார்.
காதல் நெருக்கம்
இளவரசர் சார்லஸ், டயானா வைத் திருமணம் செய்து கொள்வ தற்கு முன்பே கமீலா பார்க்கரை காதலித்து வந்தார். டயானா இறந்த பிறகு இந்த காதல் முன்பை விட நெருக்கமானது.
ஏற்கனவே திருமணமான கமீலா, தன் கணவரை விவாக ரத்து செய்து விட்டு, இளவரசர் சார்லசுடன் காதல் வானில் சிறகடித்து பறந்தார்.
மதிப்பு உயர்ந்தது
காதல் வாழ்க்கையில் ஈடுபட்ட போதிலும் தன் மகன்கள் வில்லி யம், ஹாரி இருவரையும் பொறுப் புடன் நன்கு கவனித்துக் கொண் டதால், பொதுமக்களின் மதிப் பீட்டில் அவர் உயர்ந்தார்.
அவர் கமீலாவைத் திருமணம் செய்து கொள்வதற்கும் இங்கி லாந்து மக்கள் ஆதரவு அளித் தனர். இதனால் கமீலாவும் _ சார் லசும் திருமணம் செய்து கொள் வதற்கு தீர்மானித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் தும் ஆதரவு தெரிவித்தார்.
ஏப்ரல் 8_ந்தேதி
வருகிற ஏப்ரல் மாதம் 8_ந்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது. வின்ட்சர் மாளிகையில் இவர்கள் திருமணம் நடப்பதாக அறிவிக் கப்பட்டது.
திருமணம் நடத்துவதற்கான லைசென்ஸ் வின்ட்சர் மாளி கைக்கு இல்லாததால் அங்கு திருமணம் நடக்காது என்றும், அதற்குப் பதிலாக வின்ட்சர் நகர மன்றத்தில் திருமணம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள் ளது.
முதல் நாள் இரவு
திருமணத்துக்கு முதல் நாள் இரவு மணமக்கள் இருவரும் ஒரே அறையில் தங்குவதற்கு விரும்பி னர். இதுபற்றி அறிந்ததும் ராணி எலிசபெத் இதற்குத் தடை விதித்து விட்டார்.
"நாங்கள் காதலர்களாக வாழ்ந்த காலத்தில் எத்தனையோ நாட்கள் ஒரே அறையில் தனி யாகத் தங்கி இருக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிந்தது தானே" என்று இளவரசர் சார் பில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் ராணியின் தடையை தளர்த்த உதவவில்லை.
இந்த விஷயத்தில் ராணி எலிச பெத் பிடிவாதமாகவும், உறுதி யாகவும் இருந்தார். இதைப் பார்த்தபிறகு மணமக்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டனர்.
Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

