01-28-2005, 08:28 AM
அந்தமான்: 24 மணியில் 15 நில நடுக்கங்கள்!
டெல்லி:
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 26ம் தேதி இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அளவிலான இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்றிரவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக நிக்கோபார் தீவில் உள்ள காமோர்ட்டா பகுதியில் நேற்று காலை 09.29, 10.52, மதியம் 12.27, 02.12, பிற்பகல் 03.23, 04.28, மாலை 05.14, இரவு 08.54, 09.05 ஆகிய நேரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.0 லிருந்து 5.8 வரை பதிவாகின.
இதே பகுதியில் நேற்றிரவு 11.11, 12.23, 02.15, 03.28, 04.11 மற்றும் 04.57 ஆகிய நேரங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.1லிருந்து 5.5 வரை பதிவாகின.
லிட்டில் நிக்கோபாரின் வடக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை 09.29க்கு நில நடுக்கம் (5.4 ரிக்டர்) ஏற்பட்டது.
இதே பகுதியில் நேற்றிரவு 01.40 மணியளவில் அடுத்தடுத்து 2 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நில நடுக்கம் 5.1 ரிக்டராகவும், அடுத்த நில நடுக்கம் 5.2 ரிக்டராகவும் பதிவானது.
கார் நிக்கோபாரின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் நேற்று மதியம் 02.07க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. இதேபகுதியில் மாலை 05.14 மணி முதல் இரவு 10.29 வரை அடுத்தடுத்து 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் இவை 5லிருந்து 5.4 வரை பதிவாகின.
நேற்று முன்தினம் இரவு 03.30க்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது.
இந்த இடைவிடாத நில நடுக்கங்களால் அந்தமான் தொடர்ந்து குலுங்கி வருகிறது.
thatstamil
டெல்லி:
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 26ம் தேதி இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அளவிலான இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்றிரவு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக நிக்கோபார் தீவில் உள்ள காமோர்ட்டா பகுதியில் நேற்று காலை 09.29, 10.52, மதியம் 12.27, 02.12, பிற்பகல் 03.23, 04.28, மாலை 05.14, இரவு 08.54, 09.05 ஆகிய நேரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.0 லிருந்து 5.8 வரை பதிவாகின.
இதே பகுதியில் நேற்றிரவு 11.11, 12.23, 02.15, 03.28, 04.11 மற்றும் 04.57 ஆகிய நேரங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.1லிருந்து 5.5 வரை பதிவாகின.
லிட்டில் நிக்கோபாரின் வடக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை 09.29க்கு நில நடுக்கம் (5.4 ரிக்டர்) ஏற்பட்டது.
இதே பகுதியில் நேற்றிரவு 01.40 மணியளவில் அடுத்தடுத்து 2 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நில நடுக்கம் 5.1 ரிக்டராகவும், அடுத்த நில நடுக்கம் 5.2 ரிக்டராகவும் பதிவானது.
கார் நிக்கோபாரின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் நேற்று மதியம் 02.07க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. இதேபகுதியில் மாலை 05.14 மணி முதல் இரவு 10.29 வரை அடுத்தடுத்து 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் இவை 5லிருந்து 5.4 வரை பதிவாகின.
நேற்று முன்தினம் இரவு 03.30க்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது.
இந்த இடைவிடாத நில நடுக்கங்களால் அந்தமான் தொடர்ந்து குலுங்கி வருகிறது.
thatstamil


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->