01-09-2005, 09:16 AM
சுனாமி தாக்குதலில்
பிரபாகரன் பலியானதாக இலங்கை ரேடியோ புரளி
விடுதலைப்புலிகள் கடும் கண்டனம்
கொழும்பு, ஜன.9-
`சுனாமி' தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உளவுப்படை தலைவர் பொட்டு அம்மானும் பலியாகி விட்டதாக இலங்கை ரேடியோ செய்தி ஒலிப்பரப்பியது. இது வெறும் புரளி, விஷமத்தனமானது என்று விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் மரணம்
கடந்த மாதம் 26_ந் தேதி தாக்கிய `சுனாமி' பேரலையில் இலங்கையில் மரணம் அடைந்தவர்களில் அல்லது காணாமல் போனவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவர்களது உளவுப் படைத் தலைவர் பொட்டு அம்மானும் உண்டு என்று இலங்கை ரேடியோ நேற்று அறிவித்தது.
கடற்படையின் வைஸ் அட்மிரல் தயா காந்தகிரி தெரிவித்ததாக இந்த தகவலை இலங்கை ரேடியோ செய்தி ஒலிப்பரப்பியது.
சவப்பெட்டி
`சுனாமி'யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களுடன், விடுதலைப்புலிகளின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய விடுதலைப்புலி தலைவருக்காக சவப்பெட்டி ஒன்று ரகசியமாக கடத்திச் செல்லப்பட்டது என்று நேற்று ஒரு பத்திரிகையும் செய்தி வெளியிட்டு இருந்தது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இந்தப் பிரச்சினை புதிய மோதலை உருவாக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இதை மறுத்ததுடன், அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இணைய தளத்தில்
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தங்களது அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இலங்கை வானொலி விஷமத்தனமான, கண்டனத்துக்குரிய புரளியை ஒலிபரப்பியுள்ளது. `சுனாமி'யால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இலங்கை வானொலி இப்படிப்பட்ட அவதூறை, துஷ்பிரசாரத்தை, மேற்கொண்டது கண்டனத்துக்குரியது' என்று குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளும், தமிழ் மக்களும் இலங்கை வானொலியின் இந்த அவதூறான நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்க விரும்புகிறார்கள். சிலரின் கற்பனையான இந்தக் கட்டுக்கதையை ஒலிபரப்பும் அளவுக்கு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வானொலி கீழ் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களை குழப்பும் மோசமான செயல் இது என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
© Daily Thanthi
பிரபாகரன் பலியானதாக இலங்கை ரேடியோ புரளி
விடுதலைப்புலிகள் கடும் கண்டனம்
கொழும்பு, ஜன.9-
`சுனாமி' தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உளவுப்படை தலைவர் பொட்டு அம்மானும் பலியாகி விட்டதாக இலங்கை ரேடியோ செய்தி ஒலிப்பரப்பியது. இது வெறும் புரளி, விஷமத்தனமானது என்று விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் மரணம்
கடந்த மாதம் 26_ந் தேதி தாக்கிய `சுனாமி' பேரலையில் இலங்கையில் மரணம் அடைந்தவர்களில் அல்லது காணாமல் போனவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், அவர்களது உளவுப் படைத் தலைவர் பொட்டு அம்மானும் உண்டு என்று இலங்கை ரேடியோ நேற்று அறிவித்தது.
கடற்படையின் வைஸ் அட்மிரல் தயா காந்தகிரி தெரிவித்ததாக இந்த தகவலை இலங்கை ரேடியோ செய்தி ஒலிப்பரப்பியது.
சவப்பெட்டி
`சுனாமி'யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களுடன், விடுதலைப்புலிகளின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய விடுதலைப்புலி தலைவருக்காக சவப்பெட்டி ஒன்று ரகசியமாக கடத்திச் செல்லப்பட்டது என்று நேற்று ஒரு பத்திரிகையும் செய்தி வெளியிட்டு இருந்தது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இந்தப் பிரச்சினை புதிய மோதலை உருவாக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இதை மறுத்ததுடன், அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இணைய தளத்தில்
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தங்களது அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், `இலங்கை வானொலி விஷமத்தனமான, கண்டனத்துக்குரிய புரளியை ஒலிபரப்பியுள்ளது. `சுனாமி'யால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இலங்கை வானொலி இப்படிப்பட்ட அவதூறை, துஷ்பிரசாரத்தை, மேற்கொண்டது கண்டனத்துக்குரியது' என்று குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளும், தமிழ் மக்களும் இலங்கை வானொலியின் இந்த அவதூறான நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்க விரும்புகிறார்கள். சிலரின் கற்பனையான இந்தக் கட்டுக்கதையை ஒலிபரப்பும் அளவுக்கு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வானொலி கீழ் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களை குழப்பும் மோசமான செயல் இது என்றும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
© Daily Thanthi


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ஆச்சே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->