Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை சிந்து மரணம்
#1
ஜனவரி 07, 2005

சுனாமிக்காக நிதி திரட்டிய நடிகை சிந்து மரணம்

சென்னை:

இணைந்த கைகள் உள்ளிட்ட சில திரைப் படங்களிலும், ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள நடிகை சிந்து மூச்சுத் திணறல் காரணமாக மரணமடைந்தார்.

இவர் நடிகை மஞ்சுளாவின் சகோதரி மகளாவார். இணைந்த கைகள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி, பரம்பரை, சின்னத்தம்பி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

திரைப் படங்களில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். கோகுலம் வீடு, எங்க குடும்பம்,தோழிகள், ஆனந்தம், மெட்டி ஒலி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்தார்.

இந் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுனாமி நிதிக்காக சின்னத்திரை நடிக, நடிகையர் வீதி வீதியாகச் சென்று நிதி வசூல் செய்தனர். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ள சிந்துவும் இதில் கலந்து கொண்டு நிதி சேகரித்தார். நீண்ட தூரம் நடந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

சிந்துவுக்கு வயது 33. கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த சிந்து அவரை பின்னர் விவாகரத்து செய்து விட்டார். அவர் மூலம் சிந்துவுக்கு 9 வயதில் மகள் உள்ளார்.

இந் நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் டிவி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

மறைந்த சிந்துவுக்கு ஏராளமான தொøக்காட்சி நடிகர், நடிகையர்கள் அஞ்சலி செலுத்தினர். மருத்துவமனையில் அவரது உடலை மஞ்சுளாவின் கணவரான நடிகர் விஜய்குமார் குடும்பத்தினர் வந்திருந்தார்.

<b>பழம்பெரும் நடிகர் டி.கே.எஸ். கருப்பையா மரணம்:</b>
பழம் பெரும் நடிகரான டி.கே.எஸ். கருப்பையா மரணடைந்தார்.

எம்ஜிஆரின் பல படங்களில் நடித்த கருப்பையா சமீபத்திய எஜமான், முதல்வன் உள்பட 600க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கலைமாமணி பட்டம் பெற்ற அவர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
Reply
#2
<img src='http://www.thatstamil.com/images26/sindhu230.jpg' border='0' alt='user posted image'>

இவர்தான் சின்னத்திரை நடிகை சிந்து - படம் தற்ஸ்தமிழ்.

நடிகர் நடிகைக்கு கண்ணீர் அஞ்சலிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
கண்ணீர் அஞ்சலி
Reply
#4
மறைந்த நடிகை சிந்துவிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
நல்ல காரியம் செய்ய போன இடத்திலா?? இறைவா.... கண்ணீர் அஞ்சலி..
[size=16][b].
Reply
#6
கண்ணீர் அஞ்சலிகள் Cry
----------
Reply
#7
கண்ணீர் அஞ்சலிகள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#8
கண்ணீர் அஞ்சலிகள்...
Reply
#9
கண்ணீர் அஞ்சலிகள்
Reply
#10
சென்னையில் சுனாமி நிதி வசூல் செய்த போது டி.வி.நடிகை சிந்து நடுரோட்டில் திடீர் என்று சுருண்டு விழுந்த இறந்தார்.

இதுபற்றிய விபரம் பின் வருமாறு-

பிரபல நடிகை மஞ்சுளாவின் அக்கா சியாமளாவின் மகள் சிந்து. வயது 32. இவரது சகோதரர் சஞ்சீவ் சினிமா படங்களிலும், டி.வி தொடர் களிலும் நடித்து வருகிறார்.

ஊர் குருவி, இணைந்த கைகள் உள்பட பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்த சிந்து, பிறகு தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்தார். தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். பரம்பரை, நம்ம வீட்டு கல்யாணம், ஏ.வி.எம் தயாரித்த அன்பே அன்பே உள்பட 60 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். சினிமாவில் நடித்துக் கொண்டே சின்னத்திரை தொடர்களில் பிஸியாக நடிக்க தொடங்கினார். அப்போது டி.வி நடிகர் ரிஷி என்பவருடன் காதல் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். சிந்துவுக்கு 7 வயதில் ஸ்ரேயா என்ற மகள் இருக் கிறாள்.

சமீபத்தில் சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக, கடந்த 2-ந்தேதி சென்னை அண்ணாநகரில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சிந்து ஆர்வமாக கலந்து கொண்டு 10 கி.மீ தூரம் நடந்து சென்று நிதி திரட்டினார்.

அப்போது மதியம் 2 மணி இருக்கும். திடீர் என்று மயங்கி நடுரோட்டில் விழுந்த சிந்து, பேச முடியாமல் தவித்தார். உடனே அவரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

என்றாலும், நேற்று சிந்து உடல் நிலை மோசம் அடைந்து கவலைக்கிடமாக இருந்தார். இரவு 8 மணியளவில் அவரது சகோதரர் சஞ்சீவிடம் பேசிய போது, பதட்டத்துடன் காணப் பட்டார். இந்த நிலையில் 8.30 மணியளவில் சிந்துவுக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது உயிரை காப்பாற்ற முடிய வில்லை. நினைவு திரும்பாமல் சிந்து மரணம் அடைந்தார்.

அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள தெரு ஒன்றில், பாலாஜி அபார்ட் மெண்ட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 5 மணியளவில் பெசன்ட் நகர் சுடுகாட்டில் சிந்து உடல் தகனம் செய்யப்படுகிறது.

மெட்டி ஒலி, அண்ணா மலை, அகல்யா உள்பட புகழ் பெற்ற சின்னத்திரை தொடர் களில் நடித்து வெற்றிகரமாக வலம் கொண்டிருந்த சிந்து திடீர் என்று மரணம் அடைந்த தகவல் சினிமா வட்டாரத் திலும், டி.வி நடிகர்கள் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)