12-27-2004, 06:07 AM
தேசத்தின் துயர்!
இயற்கையினால் தாயகப் பகுதியில் வரலாறு காணாத பெரும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ் அனர்த்தமானது ஒரு தேசியத் துயர் எனக் கூறும் அளவிற்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்த மக்களை மீண்டும் துயருறும் வகையில் இப்பெரும் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அந்தமான் கடற்பிரதேசத்தில் கடலடியில் ஏற்பட்ட புவியதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் கிராமங்களுக்குள் புகுந்ததினால் இப் பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இவ் அனர்த்தத்தினால் இறந்தவர்கள்ää காயமடைந்தவர்கள் தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர் என்பது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டதொன்றாகவே உள்ளது.
இதேவேளை பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான மக்களின் உடமைகளும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதாவது பெரும்பாலான மக்கள் உயிரை இழந்தது மட்டுமல்ல தமது குடியிருப்புக்கள்ää தொழில் உபகரணங்களää; உடமைகள்ää என்பனவற்றையும் இழந்து நிர்க்கதியானதொரு நிலையை அடைந்துள்ளனர்.
எதிர்வு கூறப்படமுடியாததொரு அனர்த்தமாக இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இவ் அனர்த்தத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்ää சிறுவர்கள்ää பெண்கள் ஆகியோராகவே உள்ளனர். பலர் குடும்பமாகவே பலியாகியுள்ளனர்.
கடந்த இரு தசாப்த கால யுத்தத்தினால் பாதிப்புற்ற தமிழ் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும்ää பெரும் நெருக்கடியின் மத்தியிலுமே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுää புனரமைப்பு பணிகளில் அக்கறை காட்டாத நிலையில் மக்கள் தமது வாழ்விற்காகப் பெரும் போராட்டங்களை நடாத்த வேண்டியதாயிருந்தது.
இந் நிலையில் கிராமங்களில் ஏற்பட்டுள்ளஇவ் அனர்த்தத்திற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் இருந்து எத்தகைய உதவிகள் கிடைக்கப் பெரும் என்பது குறித்து உடனடியாக எதையும்; எதிர்வு கூற முடியாது. ஏனெனில் சிறிலங்கா அரசு மனிதாபிமான உதவிகளைக் கூட இன வேறுபாடு அற்ற முறையில் வழங்கப்படும் எனவும் எதிர்பார்ப்பதற்கில்லை.
இந்நிலையில் தாயகப் பிரதேசத்தில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள எமது மக்களுக்கு செய்யக்கூடிய ஒரே உதவி அவர்களின் துயர் துடைப்பதற்கு எம்மால் ஆன உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதே ஆகும்.
இத் துயரத்தில் இருந்தும் இழப்பில் இருந்தும் மக்கள் மீள்வதென்பதும் இலகுவானதொன்றான காரியமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இது இலகுவில் மீண்டுவிடக் கூடிய துயரமாகவோ அன்றி வெறும் நிவர்த்திக்கப்படக் கூடிய இழப்பாகவே இல்லை.
ஏனெனில் இத் துயரமானது இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமானதல்ல இது எமது தேசத்தின் துயரம.; இதில் இருந்து மீண்டு வர வேண்டுமானால் அனைத்து மக்களுக்குமே இதற்குத் தம்மால் ஆன பங்களிப்பைச் செய்தல் வேண்டும்.
ஆகையினால் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பரந்து வாழும் எமது மக்கள் இத்துயருற்ற மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு உதவியளிக்க முன்வருதல் வேண்டும். ஏனெனில் இவர்களின் துயர் துடைக்கபடுவதாவது எமது தேசத்தின் துயர் துடைக்கப்படுவதற்கு ஒப்பானதாகும்.
நன்றி: ஈழநாதம்
இயற்கையினால் தாயகப் பகுதியில் வரலாறு காணாத பெரும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ் அனர்த்தமானது ஒரு தேசியத் துயர் எனக் கூறும் அளவிற்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்த மக்களை மீண்டும் துயருறும் வகையில் இப்பெரும் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அந்தமான் கடற்பிரதேசத்தில் கடலடியில் ஏற்பட்ட புவியதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் கிராமங்களுக்குள் புகுந்ததினால் இப் பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இவ் அனர்த்தத்தினால் இறந்தவர்கள்ää காயமடைந்தவர்கள் தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர் என்பது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டதொன்றாகவே உள்ளது.
இதேவேளை பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான மக்களின் உடமைகளும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதாவது பெரும்பாலான மக்கள் உயிரை இழந்தது மட்டுமல்ல தமது குடியிருப்புக்கள்ää தொழில் உபகரணங்களää; உடமைகள்ää என்பனவற்றையும் இழந்து நிர்க்கதியானதொரு நிலையை அடைந்துள்ளனர்.
எதிர்வு கூறப்படமுடியாததொரு அனர்த்தமாக இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இவ் அனர்த்தத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்ää சிறுவர்கள்ää பெண்கள் ஆகியோராகவே உள்ளனர். பலர் குடும்பமாகவே பலியாகியுள்ளனர்.
கடந்த இரு தசாப்த கால யுத்தத்தினால் பாதிப்புற்ற தமிழ் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும்ää பெரும் நெருக்கடியின் மத்தியிலுமே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுää புனரமைப்பு பணிகளில் அக்கறை காட்டாத நிலையில் மக்கள் தமது வாழ்விற்காகப் பெரும் போராட்டங்களை நடாத்த வேண்டியதாயிருந்தது.
இந் நிலையில் கிராமங்களில் ஏற்பட்டுள்ளஇவ் அனர்த்தத்திற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் இருந்து எத்தகைய உதவிகள் கிடைக்கப் பெரும் என்பது குறித்து உடனடியாக எதையும்; எதிர்வு கூற முடியாது. ஏனெனில் சிறிலங்கா அரசு மனிதாபிமான உதவிகளைக் கூட இன வேறுபாடு அற்ற முறையில் வழங்கப்படும் எனவும் எதிர்பார்ப்பதற்கில்லை.
இந்நிலையில் தாயகப் பிரதேசத்தில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள எமது மக்களுக்கு செய்யக்கூடிய ஒரே உதவி அவர்களின் துயர் துடைப்பதற்கு எம்மால் ஆன உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதே ஆகும்.
இத் துயரத்தில் இருந்தும் இழப்பில் இருந்தும் மக்கள் மீள்வதென்பதும் இலகுவானதொன்றான காரியமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இது இலகுவில் மீண்டுவிடக் கூடிய துயரமாகவோ அன்றி வெறும் நிவர்த்திக்கப்படக் கூடிய இழப்பாகவே இல்லை.
ஏனெனில் இத் துயரமானது இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமானதல்ல இது எமது தேசத்தின் துயரம.; இதில் இருந்து மீண்டு வர வேண்டுமானால் அனைத்து மக்களுக்குமே இதற்குத் தம்மால் ஆன பங்களிப்பைச் செய்தல் வேண்டும்.
ஆகையினால் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பரந்து வாழும் எமது மக்கள் இத்துயருற்ற மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு உதவியளிக்க முன்வருதல் வேண்டும். ஏனெனில் இவர்களின் துயர் துடைக்கபடுவதாவது எமது தேசத்தின் துயர் துடைக்கப்படுவதற்கு ஒப்பானதாகும்.
நன்றி: ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

