Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவுங்கள்
#1
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அவசர வேண்டுகோள்!


நில நடுக்கத்தினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு உடனடியாக உதவுமாறு அனைத்துலக சமூகத்திடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று காலை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு கரையோரப்பகுதிகள் பெரும் கடல் கொந்தளிப்பிற்குள்ளும் வெள்ள அனர்த்தங்களிற்கும் உட்பட்டது.

அம்பாறை மட்டக்களப்பு மூதூர் திருக்கோணமலை வடமாராட்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்களும் நகரங்களும் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் சில கரையோரப் பகுதிகளினுள் மூன்று கிலோமீற்றர் வரை உள்நுழைந்த கடல்நீர்; பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சுமார் 1000 பொதுமக்கள் இதுவரை காணமல் போயுள்ளனர் என்ற தகவல் அப்பகுதி புனர்வாழ்வுக் கழக தொண்டர்களினால் தரப்பட்டுள்ளது. இவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகளவில் அடங்கியுள்ளனர்.

தற்போது இப்பகுதிகளில் துரித மீட்புப் பணிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் புலிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் மக்கள் உயர்வான உட்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலைப் பகுதிகளில் தற்போது வெள்ளம் முற்றாக நீங்கிவிட்டது. இங்குள்ள கரையோரக் கிராம மக்கள் தற்போது ஐமாலியா சென்சேவியர் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை வெள்ளத்தால் கொல்லப்பட்ட 6 உடல்கள் திருமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மூதூர் பகுதியில் இதுவரை 152 சடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இப்பகுதிகளில் எமது தொண்டர்களும் பொதுமக்களும் மீட்பு மற்றும் அவசர உதவிவழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாராட்சி பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கலில் கொல்லப்பட்ட 52 உடல்கள் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சுமார் 300 காயமடைந்த பொதுமக்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக உயர்வான உள்கிராமப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் 250ற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் இவ்வெள்ள அனர்த்தங்கள் தொடர்பான அச்சம் இன்னமும் ஓயாத நிலையில் மக்கள் தத்தமது கிராமங்களுக்கு உடனடியாக செல்லமுடியாத சூழல் நிலவுகின்றது.

தற்போது தற்காலிகமாக வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ள மக்களிற்கு உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணி துரிதமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான பெருமளவு உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அனைத்துலக சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றது.

அனைத்துலக ரீதியாக ரிரிஎன் தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஊடாக இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் நம்பிக்கை ஒளி நிதித்திட்டத்தின் முழு வளங்களும் தற்போது ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குவது என தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முடிவு செய்துள்ளது.

பல்லாயிரம் மக்களின் அவசர தேவை கருதி உடனடியாக செயற்பட்டு நிதிப்பங்களிப்புக்களை வழங்குமாறு புகலிடத்தமிழர்கள் தமிழ் வணிகர்கள் பொதுநிறுவனங்கள்ää ஆலயங்கள் ஆகியோரிடம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பகிரங்கமாக வேண்டி நிற்கின்றது.


தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்கு இலக்கம்

TRO Bank account in Colombo, Sri Lanka:

Bank A/C: 01607837001
Standard Chartered Bank
Wellewatte Branch
Colombo 06
Sri Lanka

TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7

Phone: +94 1 69 32 54
Fax: +94 7 471 65 76
<img src='http://www.tamilnatham.com/advert/tro20041227/tro261204/tro2.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
கனடாவில் தொடர்புகளை மேற்கொள்ளவோ உங்கள்
உதவிகளை வழங்கவோ <b>இங்கே அழுத்தி முழுமையான விபரங்களை பெறுங்கள்</b>
[b][size=18]
Reply
#3
தாயகத்தில் ஏற்ப்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்திற்க்க பலியாகிய எம்மினிய உடன் பிறப்புக்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.....

எதிரியில் படையெடுப்பால் அழிக்கப்பட்ட எம்தேசம் மீண்டும் ஓர் பாரிய அழிவினை இயற்கையினால் சந்தித்திருப்பது. உலகெங்கும் இருக்கும் மக்களை கண்ணீர் மழையில் தவிக்க விட்டுள்ளது. முன்பொரு போதும் இல்லாத இவ்வாற அழிவினை தாயகம் சந்தித்த போது நாம் என்ன செய்யலாம்? கிட்டத்தட்ட 11000 மக்களை பலி கொண்ட இந்த கடலலையின் கொந்தளிப்பை யாராலும் தடுக்க முடியாது அனால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் எமது உறவுகளுக்கு எம்மால் உதவ முடியுமல்லவா? இந்த வேளையிலும் அரசியல் நடத்தும் பஞ்சோந்திகளை அடியோடு விரட்டி விட்டு எம்மால் செய்ய கூடிய இதையாவது எமது மக்களுக்கு செய்ய வேண்டாமா? தனது நாடு ஒருமைப்பாடு என்று பேசும் பேரின வாதிகள் எமக்கு உதவ பின்னிற்க்கிறார்கள்.... எங்கள் கிராமங்களை சல்லடை போட வந்த உலங்கு வானூர்திகள் எம்மை காக்க வரவில்லை... எமது மீன் பிடி படகுகளை அழிக்க வந்த டொராக்களும் எமக்கு உதவ வில்லை.... ஏன்?????? இது எமது நாடு அதனால் தான் இந்த பார பட்சம்.... ஆம் இத தமிழீழ தாய் திர நாட்டில் நடைபெற்ற அழிவு எம்மை நாம் தான் காக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட பகுதியில் வன்னிப்பிரதேசம் தவிர ஏனைய பகுதிகளில் மீட்பப் பணி மந்த கதியில் நடைபெறுவதாய் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன...மற்றப்பகுதிகள் இலங்கை இராணுவத்தின் கட்டப்பாட்டு பகுதி என்பதால் தமிழர் தரப்பால் உடனடி மீட்பப் பணிகளை செய்ய முடியவில்லை..... தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனது பணியை செய்ய நிதியொர் பிரச்சினையாய் இருக்கிறது எனவே... உங்கள் உறவுகளுக்காய் நீங்கள் கொடையளிக்க வாருங்கள்.....

நீங்கள் உங்கள் நிதிகளை ஐ.பி.சி தமிழ் ஆகிய ஊடகங்களுடாக வட அமெரிக்காவிலும் வழங்கலாம் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் உங்கள் பணத்தை சீ.ரீ.ஆர் வானொலிக்கு விசா காட் மூலம் அனுப்பலாம் அவற்றிற்கான இணைப்புக்கள் கீழே தரப்படும்.....

அழிவுகளின் அவலத்தை நிழற்ப்படங்களுடாக காண
http://www.eelavision.com

வட அமெரிக்க மற்றும் சர்வதேச தமிழர்கள் கனடிய தமிழ் வானொலியூடாகவும் நிதி வழங்கலாம்
www.ctr24.com

ஐ.பி.சி தமிழ் ஊடாக நிதி வழங்க விரும்புவோர் அழையுங்கள் 0044 2081 0000 00



உடனடிச் செய்திகளை

தமிழ்நெற்
www.tamilnet.com
புலிகளின் குரல்
www.pulikalinkural.com

நிதர்சனம்
www.nitharsanam.com

புதினம்
www.eelampage.com

ஐ.பி.சி
www.ibctamil.co.uk

சீ.ரி.ஆர்
www.ctr24.com

ஜேர்மன் தமிழ் வானொலி
www.germantamilradio.com

சூரியன் எப்.எம்
www.uthayamfm.com

ஈழத்தமிழ்.கொம்
www.eelatamil.com

ஆகிய ஊடகங்களின் இணையத்தளங்களுடாகவும். நேரடியாகவும் அறிந்து கொள்ளலாம்.......

சோகமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)